Wednesday, May 11, 2005

பெற்றவளுக்கும் பிணம் நாறும்


பணம் பிதுங்கி வெளியே வருகிறது
சேமிக்க பீரோக்கள் இல்லை !
செலவழிக்க இதயமும் இல்லை !

பணத்தின் குவியலில் புரளுகிறேன்!

"ஏழைகள் எவனும்
எட்டிப்பார்க்காதீர்கள் "

-----------

ஞாயிற்றுக்கிழமை நடனம் !
கண்ட பெண்களுடன் உறவு !

மூத்திரம் சரியாய்ப் போனால்கூட
முந்நூறு பேருக்கு விருந்து !

"ஆத்திரம் கொண்டு பார்க்காதீர்கள் - நான்
ஆடம்பரத்தில் அலைகிறேன் போங்கடா "

-----------
பிச்சைக்காரன் சத்தம் கேட்டு ...
காதைப் பொத்துவேன் !
எச்சில் தின்னும் கூட்டம் கண்டால் ...
எக்காளமிடுவேன் !
"அட இவர்களும் மனிதர்களா"
-----------
நான்
வளர்ந்த விதம் தேவையில்லை...
வந்தபாதை மறந்துவிட்டேன்!
உதவியவனை உதறித்தள்ளு ...
நன்றியா? அதை நாயுடன் கட்டு!
-----------

"தலைக்கணம் - ஆணவம் - ஆடம்பரம் "

என்ன சொன்னால் எனக்கென்ன?

திருப்பி துப்ப நேரமில்லை ...
உலகம் எல்லாம் எனக்குடா?
-----------
இப்படி
தலைக்கணத்தோடு ...
திமிராய் பேச வெட்கமாயிருக்கிறது !

நான்
இறந்தபிறகு
புதைக்காமல் வைத்தால்
பெற்றவள் கூட
மூக்கைப் பொத்துவாள்

பெற்றவளுக்கும் பிணம் நாறும் !

-----------
ஆம்
ஓருநாள் நானும்
செத்துப்போவேனே..?

ஆகவே
இப்படி
தலைக்கணத்தோடு ...
திமிராய் பேச வெட்கமாயிருக்கிறது !

-----------

- ரசிகவ் ஞானியார்

2 comments:

Anonymous said...

ஞானியாரே,

அடிக்கடி சைக்ளோன்,யார்க் போவீர் போல ,

Unknown said...

கவிதை நன்றாக உள்ளது!

தேன் கூடு