Sunday, July 22, 2007
நீங்க ஹாரிபாட்டர் வாங்கியாச்சா..?
"இன்று ஒரே நாளில் பல லட்சம் புத்தகங்கள் விற்று தீர்ந்தன "
"கடைகளின் வாசலில் மக்களின் கூட்டம் "
"நெல்லையில் இன்று வந்த 300க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தீர்ந்து போயின.. "
வேற ஒண்ணுமில்லை ஹாரிபாட்டரைத்தான்ப்பா சொல்றேன். பிறமொழிப் புத்தகங்களை விரும்பி படிக்கின்ற அளவுக்கு தமிழ்க் கலாச்சாரம் இப்படி முன்னேறிவிட்டதா..?
"ஹாரிபாட்டர் நான் வாங்கிட்டேன்..? நீ வாங்கியாச்சா..? "என்று வாங்கிய குழந்தை வாங்காத குழந்தைகளிடம் மார்க்கெட்டிங் செய்கின்றது. அப்படி குழந்தைகளை கவரும் வண்ணம் தொடர்ந்து 7 வது பதிப்புகளாக வந்து வெற்றிபெற்றுக்கொண்டிருக்கின்றது . பாராட்டக்கூடிய விசயம்தான். ஆனால் புத்தகம் புடிக்கிறதோ இல்லையோ? அதில் உள்ள கதை விளங்குகிறதோ இல்லையோ? ஆனால் வாங்குவது பணக்காரத்தனமாகிவிடுகின்றது.
ஹாரிபாட்டருக்கு உலகம் முழவதும் கிடைக்கின்ற வரவேற்பில் மயங்கியும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கி தனது வீட்டில் வைத்திருப்பதை பெருமையாகவும் கருதுகின்றனர் புத்தகம் பற்றி ஒன்றுமே தெரியாத பணக்காரர்கள்.
புத்தகம் எல்லாம் விற்றுத்தீர்ந்த அந்தக்கடைக்குச் சென்று, "ஹலோ ஹாரிபாட்டர் புத்தகம் இருக்கிறதா?" என்று சும்மாக்காட்டியும் வெட்டிப் பந்தாவுக்கு கேட்டுவிட்டு வரலாமா என்று நினைக்கின்றேன்.
அதற்கு கிடைக்கின்ற இவ்வளவு வரவேற்பைப் பார்த்து எனக்கும் ஹாரிபாட்டர் படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது.
மாயாஜாலங்கள் நிறைந்த கதை என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால் குழந்தைகளை இந்த அளவுக்கு வசியப்படுத்துவதற்கு அந்த கதையில் அப்படி என்னதான் இருக்கின்றது? புத்தகம் படித்தவர்கள் யாரேனும் சொல்லுங்களேன்ப்பா..ப்ளீஸ்..
பணக்காரத்துவத்திற்காக ஹாரிபாட்டர் வாங்கப்போகும் பொழுது சாலையில் இவர்களைக் கண்டால் அடுத்தவேளை உணவுக்கு வழிசெய்துட்டு போங்கப்பா.. ப்ளீஸ்..
செவிக்குணவில்லாதபொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
- ரசிகவ் ஞானியார்
ஹைக்கூ
வரதட்சணை
பிச்சை எடுப்பது
குற்றமென்று அறிவித்துவிட்டால்
குற்றவாளிகளாய்
மாப்பிள்ளைகள்தான் நிறைய
மாட்டக்கூடும்!
தமிழ்ப்பற்று
தமிழ்தான் மூச்சு
தமிழ்தான் பேச்சு
தமிழ்தான் ஊற்று
தமிழ்தான் காற்று
"அட
ஆங்கிலம் புரியலப்பா! "
ஏழை
மகள் பூப்பெய்திவிட்டாள்
தாய்க்கும் இனி...
தாவணிதான்
சகுனம்
பூனை செத்துவிட்டது!
எந்த மனிதன்...
குறுக்கெ சென்றானோ?
- ரசிகவ் ஞானியார்
பிச்சை எடுப்பது
குற்றமென்று அறிவித்துவிட்டால்
குற்றவாளிகளாய்
மாப்பிள்ளைகள்தான் நிறைய
மாட்டக்கூடும்!
தமிழ்ப்பற்று
தமிழ்தான் மூச்சு
தமிழ்தான் பேச்சு
தமிழ்தான் ஊற்று
தமிழ்தான் காற்று
"அட
ஆங்கிலம் புரியலப்பா! "
ஏழை
மகள் பூப்பெய்திவிட்டாள்
தாய்க்கும் இனி...
தாவணிதான்
சகுனம்
பூனை செத்துவிட்டது!
எந்த மனிதன்...
குறுக்கெ சென்றானோ?
- ரசிகவ் ஞானியார்
Friday, July 06, 2007
இரசாயன இதயம்
அன்பின் பீரங்கியே!
அழகின் ஆயுதமே!
நான் தெருமுனைக்குச் சென்றாலே...
தவித்துக் கொண்டிருப்பாய்!
இப்பொழுது
போர்முனைக்கு வந்திருக்கின்றேன்!
எப்படியிருக்கிறாயடி?
எதிரிகளின்
தாக்குதலுக்கு துடிக்கின்ற
துடிப்பை விடவும்
உன்
தபாலுக்குத்தான் ...
அதிகமாய் துடித்திருப்பேன்!
"உனக்கு தைரியமிருந்தால்
எனக்கு பூ வாங்கி வா
பயமாயிருந்தால்
போரிடப்போ"
என்று எழுதியிருக்கின்றாய்!
கலவரங்கள் மண்ணில்
தோன்றிடுமோவெனப் பயந்து..
போரிடவே போய்விட்டேனடி!
இனி என் மண்ணில்
தைரியமாக இருக்கலாம் நீ!
என் காயங்களுக்கு
தரப்படுகின்ற
மருந்து மட்டுமல்ல...
உன்
கடிதமும்
சாப்பாட்டுக்கு முன்
சாப்பாட்டுக்கு பின் என்றாகிவிட்டது!
தீவிரவாதிகளை...
தோட்டாக்களால் விரட்டினேன்!
எனக்குள் காமம் வந்து...
தீவிரவாதியாகியானது!
உன்
விழித்தோட்டாவில்...
நான்
விழப்போவது எப்போது?
உன் நினைவுகள் ஒரு கோழை!
ஆம்
நான் உறங்கும்பொழுது...
ஓடி வந்து தாக்குகிறது!
இனி
கடித முனைகளை
முத்தமிட்டு ஒட்டு!
கடிதங்களுக்குள்
ஆக்சிஜன் நிரப்பி அனுப்பு!
நச்சுக் காற்றுகளுக்கு நடுவே...
உன்
நா காற்றில் நான் சுவாசிக்க!
வெங்காயம் வெட்டும்போது...
விரல் கீறியதாய் சொன்னாயடி
எப்படியிருக்கிறது?
கொஞ்சம் பொறு!
டுமீல்! டுமீல்!
ம்! சொல்!
வெங்காயம் வெட்டும்போது...
விரல் கீறியதாய் சொன்னாயடி
எப்படியிருக்கிறது?
- ரசிகவ் ஞானியார்
அம்மா என்றொரு அநாதை
அனுப்புனர்:
அம்மா என்றொரு அநாதை,
முதியோர் இல்லம்.
பெறுநர் :
நன்றி மறந்த மகன்,
நான் வாழ்ந்த இல்லம்
பொருள் : பொருள் மட்டுமே பொருள்
ஞாபகமிருக்கிறதா மகனே?
இன்று
அன்னையர் தினமாம்!
உனக்கு
அன்னையை விட்ட தினம்தான் ...
ஞாபகத்திலிருக்கும்!
நீ என்
விரல்பிடித்து நடந்தநாட்களை
கொஞ்சூண்டாவது உணர்கிறாயா?
என்னை விட்டுச்சென்ற
இந்த நாளில்...
நான் உணர்கின்றேனடா...
என்னைப் பிடித்து நடைபயின்ற
அதே விரல்கள்தான் ...
என்னை
இங்கேயும் அழைத்து வந்ததை
நான் உணர்கின்றேனடா...
பள்ளி வாகனம்
கண்விட்டு மறையும் வரையிலும்,
உன்னை
வழியனுப்பும் ...
விழிகளுக்குச் சொந்தக்காரி நான்!
இப்பொழுதோ உனது
புதிய வாகனத்தில்
நான் கண்விட்டு மறையவேண்டுமென...
இங்கே
விட்டுச் சென்றது நியாயமா?
நீ கல்லூரி செல்லும்பொழுதும்
வாசல் வரை வந்து
ஊட்டிவிட்ட ...
விரல்களுக்குச் சொந்தக்காரி நான்!
இங்கே
வயிறாற கிடைத்தாலும்...
வரிசைச் சாப்பாடுதான்!
சௌக்கியமா மகனே..?
வருகிறவர்களெல்லாம் ...
பரிதாபப்படுகிறார்கள்!
பரிதாபப்படவேண்டிய நீயோ
வர மறுக்கிறாய்!
உயிலோடு இருக்கும்போது வந்தாய்
உயிரோடு இருக்கும்போது வருவாயா?
உனக்காய் எழுதி வைத்த
சொத்துக்களை ...
திருப்பிக் கேட்கமாட்டேன்!
நான் செத்தால் ..
என் சாம்பல் கேட்கவேனும் வா!
என் சாம்பல்
ஈரப்பதமாய் இருந்தால் ...
பயந்து விடாதே!
அது நான் விட்ட
கண்ணீர்களின் கலவை
அவ்வளவுதான்..!
ஒரு வேண்டுகோள் மகனே!
தயவுசெய்து
உன் மகனை ...
துணைக்கு அழைத்து வராதே!
என் மகனுக்காவது
கடைசிவரை ...
தனிமையே கிடைக்க கூடாது !
மரணம் தவிர,
இப்படிக்கு,
அம்மா என்றொரு அநாதை
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Posts (Atom)