Saturday, October 21, 2006

தீபா'வலி'




தயவுசெய்து
தீபாவளிக்கு யாரும்...
வெடிகளை வெடிக்காதீர்கள்!

வெடித்துச்சிதறும்...
வெடிகள் எல்லாம் எனக்கு
வேறு எதையோ...
ஞாபகப்படுத்துகிறது!

ஆகவே
தீபாவளி கொண்டாட...
தைரியம் வரவில்லை !
அடுத்தவீட்டு
அடுப்பு நெருப்புகூட...
எனக்கு
ஆப்கானையும்...
அமெரிக்காவையும்...
நினைவுக்குகொண்டு வருகிறது!

பொம்மை ராக்கெட்டே
பயமுறுத்திச் செல்லும்போது,
எங்கையோ
உண்மை ராக்கெட்டுக்கள்...
உலாப்போகிறதாமே?

வாய்க்காலில்
'டைவ்' அடித்துக்குளித்த...
தைரியசாலிகளை பார்க்கும்போது,
எனக்கு
வர்த்தகமையத்தின்
மாடியிலிருந்து குதித்த
மனிதமுகங்களின் ஞாபகம்!

மாடியிலிருந்து குதித்தது
மனிதர்கள் மட்டுமல்ல...
மனிதநேயமும்தான்!

கார்ப்பரேஷன் குழிகள்
கண்ணில்பட்டால்கூட...
எனக்கு
பதுங்குகுழி மனிதர்களை நினைத்து...
பரிதாப்படவேண்டியிருக்கிறது!


"எவர்
பொட்டையும் பறித்துவிடுமோ...?"
நான்
பொட்டுவெடிகூட வெடிக்கமாட்டேன் !

ஆகவே
தீபாவளி கொண்டாட..
தைரியம் வரவில்லை!

சின்னவயசில்...
விமானம் பறப்பதை
விழிகள் கண்டால்,
சந்தோஷத்தில்...
சப்தமிட்டுக்கொண்டே ஓடுவோம்!

இப்பொழுது
விமானம் விழுவதை..
வீதிகளில்கண்டு,
கண்ணீரோடு...
கதறிக்கொண்டே ஓடுகிறார்கள்!

ஆகவே
இந்தத் தீபாவளியில்
பொம்மை ராக்கெட்டை கூட...
புறக்கணித்து விடுங்கள் !

இனிமேல்
கைதட்டல் ஒலிகள்கூட...
காதுகளில் விழக்கூடாது!
ஆம்
கைகள்கூட...
ஒன்றுடன்ஒன்று மோதக்கூடாது!


துப்பாக்கியிலியிருந்து புறப்படும்
தோட்டாக்கள் எல்லாம்...
தோட்டத்துப்பூக்களாகட்டும் !

இனிமேல்
துப்பாக்கி ரவைகளை...
உப்புமா கிண்ட மட்டும்
உபயோகப்படுத்துவோம்!

துப்பாக்கியிலிருந்து
புல்லட்டுக்கள் அல்ல...
புறாக்கள் பறக்கட்டும் !

இரண்டுநாட்டு எல்லைகளிலும்
வீரர்களின் கைகளில்...
துப்பாக்கிக்குப் பதிலாக
ரோஜாக்களை பரிசளிப்போம் !

இனிமேல்
உள்ளுர் தீபாவளியென்ன...
உலகத்தீபாவளியே
கொண்டாடுவோம்!

அதுவரை
தயவுசெய்து
தீபாவளிக்கு யாரும்...
வெடிகளை வெடிக்காதீர்கள் !


- ரசிகவ் ஞானியார்

Thursday, October 12, 2006

உங்க சின்னம்.. பட்டை நாமம்



உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்கள் ஒவ்வொரு தெருமுனைகளிலும் ஆட்டோ ஆட்களோடு வெகு வேகமாய் நடந்து கொண்டிருக்கின்றது.

உங்கள்.. வீட்டுப்.. பிள்ளை.. என்று ஆரம்பித்து .................

காலில் வணங்கி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ---------- சின்னத்தில் ஓட்டு போடுங்கள். என்று முடிக்கும் வரையிலும் எல்லாருமே குறிப்பிட்ட வசனங்களை பயன்படுத்துவதால் அதனைக் கேட்டு கேட்டு புளித்துப் போய்விட்டது

எங்கள் வார்டில் ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். பாவம் அவருடைய கணவரின் கட்டளையின் பெயரில் நிற்கின்றார்கள். அந்த பெண்மணிக்கு அரசியல் அணுகுமுறைகளும் பொது அறிவும் மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொண்டேன்.

திணறி திணறி எங்களுக்கு ஓட்டுப் போடுங்க..நாங்க..நாங்க சட்டசபையில் இந்த வார்டைப்பற்றி பேசுவேன் என்று கூற

எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அவர்களிடம் இல்லைம்மா நீங்க பேசவேண்டியது சட்டசபை இல்லை மாநகராட்சிக் கூட்டம்தான்..

ம்..ஆமா ஆமா மாநகராட்சி கூட்டத்துல நம்ம வார்டைப்பற்றி பேசுவேன். குறைகளைத் தீர்ப்பேன்..நம்ம பகுதிக்கு சீராக தண்ணீர் கொண்டு வருவேன்.. என்று கூற

நான் அவர்களிடம் இப்பத்தான் தண்ணி ஒழுங்கா வருதே..

இல்லை இல்லை..நான் ரோடு போட உதவி செய்வேன்..என்றார்கள்

ஏற்கனவே ரோடு போடுகின்ற வேலை நடந்துகிட்டுதானே இருக்கு என்க

அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..ஓட்டுப் போடுப்பா..நாங்க வந்தவுன்ன நம்ம பகுதிக்கு நல்ல வசதிகள் செய்து கொடுப்போம் என்று உடன் வந்த குட்டி குட்டி ஜால்ராக்களும் கையெடுத்து கும்பிட்டு ஓட்டு சேகரித்தபடி சென்றனர்.

பாருங்கப்பா சட்டசபைக்கு போகணுமா இல்லை மாநகராட்சி கூட்டத்திற்கு போகணுமாங்கிறது கூட தெரியாம ஒரு வேட்பாளர்.

இதுல என்ன வேடிக்கைன்னா ஏதோ அவர்கள் முதலமைச்சர் ஆகப்போகிற மாதிரி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றர்கள்.


"மணல் கொள்ளையைத் தடுக்குவோம்"

"ஏழைகளுக்கு உதவி செய்வோம்."

"பெண்களுக்கு சுய உதவி குழு வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு நிதி வழங்குவோம்"

"எங்கள் குடும்பத்தையே சமுதாய சேவைக்காக அர்ப்பணிப்போம்"



ஆகவே எங்களுக்கு இந்தச் சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள் என்று கத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதான ஒரு சின்ன கற்பனை :

"மணல் காண்டிராக்டர்களின் கமிஷன் எனக்கும் கிடைக்க வேண்டும். ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"எப்பொழுதுதான் நானும் எனது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவது? ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"சாதாரணமாய் வீதிகளில் திரிகின்ற நான் பத்திரிக்கைகள் மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் எப்படி இடம் பிடிப்பதாம்? ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"வறுமையில் இருக்கும் உங்களது கஷ்டங்களை போக்குகின்றேனோ இல்லையோ எனது குடும்பத்தின் வறுமையை விலக்க விரும்புகின்றேன். ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"எனது வீட்டிற்கு முன்னால் ஒரு அடி பம்பு அமைக்க நீண்ட நாளாக ஆசை. ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"கட்டிய டெபாசிட் 2000 த்தை பன் மடங்காக உயர்த்த உங்கள் வீட்டுப்பிள்ளை பட்டை நாமம் சின்னத்தில் ஓட்டு கேட்டபடி வந்து கொண்டிருக்கின்றார்."


அவரைக் கடைசியாய் நீங்கள் பார்க்கின்ற நாள் தேர்தல் நாள்தான்

அவர் கையெடுத்து கெஞ்சுகின்ற இந்த அரிய காட்சி இனிமேல் நிச்சமாய் கிடைக்காது. அவருக்கு ஓட்டுப் போட்டு இளிச்சவாயன் என்று நீங்கள் முகத்தில் முத்திரை இட்டுக்கொள்ள அவருக்கு பட்டை நாமம் சின்னத்தில் முத்திரை இடுங்கள்.



- ரசிகவ் ஞானியார்


தீவிரவாதி எம்.பி.பி.எஸ்

நெல்லையில் கிளினிக் வைத்திருக்கும் பிரபல டாக்டர்கள் சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் ஹரிசங்கர் ஆகியோர்கள் பற்றி ஒரு அதிர்ச்சியான தகவல்கள் தாங்க முடியாத தகவல்கள் சிக்கியுள்ளன.

Photobucket - Video and Image Hosting

டாக்டர் சிவராமகிருஷ்ணன் இருதயநோய் சிகிச்சை அளிப்பதிலும் மற்றும் பைபாஸ் அறுவைச்சிகிச்சையிலும் வல்லுனராக திகழ்ந்ததால் இவரைத்தேடி சுற்றுவட்டாரங்கள் மற்றும் பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் பலர் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.

"இருதய அறுவைச்சிகிச்சையா..அட நம்ம சிவராமன்கிட்ட போப்பா..நல்ல டாக்டர்."

என்று சொல்லுமளவிற்கு புகழ் வாய்ந்தவர் இந்த டாக்டர்.

இவரைப் பார்க்க வேண்டுமானால் முன் கூட்டியே அனுமதி வாங்கி டோக்கன் வாங்க வேண்டும் அந்த அளவிற்கு புகழ்பெற்ற இந்த கஸ்மாலம் செய்த வேலை என்ன தெரியுமா..?

சொல்றேன் கேளுங்க.. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நம்பிராஜன் என்பவர் உடல்நலம் குறைவு காரணமாக இவரைத்தேடி திருநெல்வேலிக்கு வந்திருக்கிறார். இவர் மட்டும் தனியாக வந்தால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் தனது மனைவியையையும் துணைக்கு அழைத்து வந்திருக்கின்றார்.

Photobucket - Video and Image Hosting

இந்த சூழ்நிலையில்தான் டாக்டர் சிவராமகிருஷ்ணனின் குறுக்குப் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. நம்பிராஜனின் மனைவி கிருஷ்ணவேணி மீது மோகம் கொண்டு அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கின்றார்.

இதயத்தொடர்பு வைக்கச்சொன்னால்
ஏன்டா
கள்ளத்தொடர்பு வைத்தாய்?



ஒருநாள் நெஞ்சு வலி அதிகமாகி நம்பிராஜன் இறந்து போய்விடவே ( யாருக்குத் தெரியும் சிகிச்சை சரியாக கொடுக்காமல் அவனே கொன்றிருக்கக் கூடும் ) அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் டாக்டர் சிவராம கிருஷ்ணன். தினமும் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்குச் சென்று நம்பிராஜனின் மனைவிக்கு ஆறுதல் அளிப்பதுபோல சிகிச்சை அளிப்பதுபோல நடித்திருக்கின்றார்.


கணவன் இல்லாத அந்த மனைவியின் மீது பாசம் காட்டுவது போலவும் அவர்களின் குடும்பம் மீது பரிவு காட்டுவது போலவும் நடித்து கிருஷ்ணவேணியையும் அவளது மகள் 8 வயது வித்யாவையும் தூத்துக்குடியில் இருந்து இடம்மாற்றி நெல்லையில் டவுணில் தங்க வைத்துள்ளார். இவர்களுடைய தொடர்பும் சமூகத்திற்கு தெரியாமல் தொடர்ந்திருக்கின்றது.

அடேய் சிவராமகிருஷ்ணா..!
நோயைக் கொல்வாயென்று
நம்பி வந்தால்,

என் கணவன்
நம்பிராஜனையல்லவா
கொன்றுவிட்டாய்?

சிவன் இராமன் கிருஷ்ணன் என்று
இத்தனை கடவுள் பெயர்தாங்கிய
உன்னை
எந்தக் கடவுள் வந்து தண்டிப்பானோ?

மக்களுக்கு மட்டுமல்ல..
கடவுளுக்கே நீ எதிரியானாய்!

ஆம்..
சிவனுக்கு நீ அரக்கன்
இராமனுக்கு நீ இராவணன்
கிருஷ்ணனுக்கு நீ நரகாசுரன்



இந்நிலையில் கிருஷ்ணவேணியின் மகள் வித்யா தனது 13 வது வயதில் வயதுக்கு வந்துவிட அந்த டாக்டர் என்னும் அரக்கனின் காமப்பார்வை வித்யாவின் மீதும் விழுந்தது. தாயையும் மகளையும் சோர்த்து அந்த நாய் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கின்றான்.

Photobucket - Video and Image Hosting

இந்த நிலையில் டாக்டரின் மகன் ஹரிசங்கர் அந்த நாயும் ஒரு டாக்டர்தான். அந்த ஹரிசங்கருக்கு தந்தையின் கள்ள உறவு தெரிய வர அதனைத் தடுக்க முற்படாமல் அவனும் கிருஷ்ணவேணியின் மகள் வித்யாவை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டான் ( பின்னே சைத்தானுக்கு பிறந்தது எப்படி இருக்கும்? )



நீ பெற்ற
மருத்துவப் பட்டத்தை
கழிவறையின்
காகிதத்தோடு மாட்டிவிடு.

அது
அதற்குத்தான் லாயக்கு!

ஹரிசங்கரா
முகத்தில் கரி பூசிக்கொள்ளடா!


வித்யாவும் தனது நிலையை யாரிடமும் சொல்ல வெட்கப்பட்டு தவித்துக் கொண்டிருந்திருக்கின்றாள். சமுதாயத்தில் பணபலமும் ஆட்பலமும் புகழும் இருக்கின்ற இந்த டாக்டர்களைப்பற்றி சொன்னால் தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து நடுங்கி போயிருக்கின்றாள்.

இந்த விசயம் கிருஷ்ணவேணியின் மகன் ராஜாவுக்கு ( இவன் நம்பிராஜனின் முதல் மனைவிக்கு பிறந்தவன்) தெரிய வர அவன் அவமானம் தாங்கமுடியாமல் வித்யாவிடமும் கிருஷ்ணவேணியிடமும் அறிவுரை கூறி வாருங்கள் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என்று வற்புறுத்தி வர இந்த நிலையில் அவனும் உடல் நலம் சரியில்லாமல் இறந்து போய்விட்டான். அவனுக்கு வைத்தியம் பார்த்தது டாக்டர் சிவராமகிருஷ்ணன்தான்..என்ன சந்தேகப்படுகின்றீர்களா..? இருக்கலாம் ஒருவேளை அந்த டாக்டரே அந்த ராஜாவைக் கொன்றிருக்கலாம். யாருக்குத் தெரியும்.?

13 வயதிலிருந்து வித்யாவை இப்பொழுது 21 வயது வரையிலும் அந்த டாக்டர் சிவராமகிருஷ்னண் என்ற நாயும் அவனுக்குப்பிறந்த ஹரிசங்கர் என்ற நாயும் அனுபவித்து வந்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் இன்னொரு பகீர் தகவல்கள் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதாவது
இத்தனை ஆண்டுகளாக அவர்களது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்ற அழகான பெண் நோயாளிகளை மயக்க மருந்து ஊசி போட்டு பாலியல் கொடுமைகள் செய்திருப்பதாக புகார் வந்திருக்கின்றது. இவர்கள் மட்டுமல்ல இவர்களது நண்பர்களுக்கும் பெண்களை அனுபவிக்க ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் இந்த மாமாப் பயலுகள்.


இதயத்தை
சோதனையிடச் சொன்னால்
சோகம் இட்டுவிட்டாயடா..?

எனக்கு ஒரு சந்தேகம்
நீ இதயம் பொருத்துவதற்கு படித்தாயா
இல்லை
இதயம் பெயர்ப்பதற்கு படித்தாயா..?

ஒன்று தெரிந்து கொள்
நீ
மயக்க மருந்து கொடுத்தது
நோயாளிகளுக்கல்ல..

உன் மருத்துவத்தொழிலுக்கு!


அந்த நாய்கள்இப்பொழும் மும்பைக்கு தப்பிச் சென்றுவிட்டதாம். மும்பையில் யாரேனும் பார்த்தால் தயவுசெய்து நாய் பிடிக்கும் வாகனத்திற்கு தொலைபேசி செய்யுங்கள்.

அந்த மருத்துவமனைகளை இப்பொழுது சீல் வைத்து விட்டார்கள். அங்குள்ள நர்சுகள் எல்லாம் இப்பொழுது வேலை வேண்டாம் கற்பு போதும் என்று ஓட்டம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மருத்துவர்களை முழுவதுமாய் நம்பி தன்னுடைய உடலையே அவர்களிடம் பரிசோதிக்க ஒப்படைக்கின்றார்கள் மக்கள். ஆனால் அவர்கள் செய்கின்ற இந்த துரோகம் மனித கலாச்சாரத்திற்கே கேவலமான செயல்.

பிறந்த குழந்தையை பார்க்கின்ற பார்வையில் அந்த டாக்டர்களின் பார்வை மற்ற நோயாளிகளின் மீது வேண்டும்.

திருநெல்வேலி மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களில் இந்த டாக்டர்களிடம் சென்று சிகிச்சை எடுத்த எல்லாரும் இப்பொழுது வெளியில் வருவதற்கே வெட்கப்படுகின்றார்கள். இந்த மருத்துவனிடம் தானும் சிகிச்சை எடுத்தோமே என்று அவமானப்பட்டு துடிக்கின்றார்கள்.

எவ்வளவு பிரபலமாய் இருந்த இந்த டாக்டர்களா இப்படிச் செய்தார்கள் என்று திருநெல்வேலி மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். திருநெல்வேலி முழவதும் இப்பொழுது இந்த நாய்கள் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

இங்குள்ள மக்களால் இந்த விசயத்தை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. கொதித்துப்போயிருக்கின்றனர் திருநெல்வேலி மக்கள்.

புனிதமான மருத்துவத்தொழிலைக் கேவலப்படுத்திய இந்த நாய்களை என்னங்க பண்ணலாம்.?

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இந்த மருத்துவத்தொழிலின் புனிதத்தை பற்றி விளக்கி வகுப்புகள் எடுக்கவேண்டும். சும்மா பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது..

ஆனால் இப்பொழுது மருத்துவத்தொழிலில் பணம் மட்டுமே முக்கிய பிரதானமாக கொண்டு இயங்கி வருகின்றது. இந்த நிலைகள் மாறவேண்டும். உயிர் காக்கின்ற செயல்களில் மருத்துவர்கள் ஈடுபடுவதால் அவர்களை மக்கள் மிகப்பெரிய கண்ணியத்திற்கு உயர்த்தியிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் செய்கின்ற துரோகம் மன்னிக்க முடியாதது.

இந்த மருத்துவர்கள் அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தி தந்துவிட்டார்கள்.

இனிமேல் எந்த நம்பிக்கையில் மருத்துவர்களை நாடிச் செல்வார்கள் மக்கள்.?

ஆகவே உடல் ரீதியான சோதனைகள் நடைபெறும்பொழுது அந்த பெண் நோயாளியுடன் இன்னொருவர் துணைக்குச் செல்ல வேண்டும்.

அல்லது

பெண் நோயாளிகள் ஆண் மருத்துவர்களிடம் செல்வதை முற்றிலுமாய் தவிர்ப்பதுதான் இதற்கு சிறந்த வழி.

பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் மற்றும் நகரங்களில் உள்ளவர்கள் மருத்துவர்கள் மீது மடத்தனமாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். மருத்துவர்களும் சாதாரண உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்ட மனிதர்கள்தான் என்பதை உணராமல் அவர்களை கடவுள் அளவிற்கு உயர்த்தி வைத்திருக்கின்றார்கள்.


சட்டம் இந்த மருத்துவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். இதுபோன்று வருங்காலத்தில் யாரும் இப்படி செய்யக்கூடாது அந்த அளவிற்கு இவர்களது தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும்

இவர்களை சாதாரணமாய் சிறையில் அடைத்துவிடக்கூடாது. பின் என்ன செய்யலாம்?

இதுவரை அந்த டாக்டர்கள் மருத்துத் தொழிலில் சம்பாதித்த அனைத்துச் சொத்துக்களையும் முடக்க வேண்டும்

அந்த டாக்டர்களின் மருத்துவச் சான்றிதழை பல்கலைக்கழகங்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் - மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பேருந்து மற்றும் இரயில்வே நிலையங்களில் அவர்களது புகைப்படங்களை பிரசுரித்து இந்த டாக்டர்களிடம் உஷாராக இருக்கவேண்டும் என்று விழிப்புணர்வு செய்யவேண்டும்.

அவர்களது பாஸ்போர்ட்களை முடக்கி அவர்கள் வேறு நாட்டிற்குச் சென்று தொழில் புரியாமல் செய்து தடுக்கவேண்டும்.

ஒவ்வொரு சீரியல்கள் மத்தியிலும் அந்த மருத்துவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து அவர்களது குற்றங்களைப் பற்றி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

அவர்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்தச் சொத்தையும் விற்கவோ வாங்கவோ அனுமதியளிக்க கூடாது.

எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் இவர்களைப்பற்றிய ஒரு பாடத்தை வைத்து மற்ற மருத்துவ மாணவர்களின் மனதில் ஒரு பயத்தை தோற்றுவிக்கவேண்டும்.

இதுதான் அவர்களுக்கு சிறந்த தண்டனையாக இருக்க முடியும். ஒவ்வொரு நொடியும் அவர்கள் மனதுக்குள் புழுங்கி சாக வேண்டும்.

( தவறு அந்த மருத்துவன் மீது மட்டுமல்ல. கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு கள்ள உறவு கொண்ட அந்த கிருஷ்ணவேணி என்ற விபச்சாரிக்கும் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்)

இதனை வாசிக்கின்ற மருத்துவர்களே மருத்துவக் கல்லூரி மாணவர்களே..
பணம் ஈட்டுதலையும் தாண்டி தங்களது தொழிலின் புனிதத்தை உணர்ந்து செயல்படுங்கள்.
மருத்துமனைகளில் வேலைபார்க்கும் செவிலியர்களை சிஸ்டர் என்று மக்களால் பிரியமாக அழைக்கின்றார்கள்
.

கடவுள் எல்லா இடங்களுக்கும் எல்லா நோய்களுக்கும் இறங்கி வந்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்க முடியாததால்தான் மருத்துவர்களின் மூலமாக தன் கடவுள்தன்மையை நிருபித்துக் கொண்டிருக்கின்றான் என்று மக்களால் நம்பப்படுகின்ற அளவிற்கு அவர்கள் தங்கள் மீது கண்ணியத்தை வைத்துள்ளார்கள். தயவுசெய்து அந்த கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்.

ஒவ்வொரு நோயாளியும் தன்னுடைய குழந்தையாக நினைக்கவேண்டும் மருத்துவர்கள்.


கடவுள் வந்து
காலி செய்யட்டும் இந்த
பாலியல் மோசடி மருத்துவர்களை!


- ரசிகவ் ஞானியார்

Tuesday, October 10, 2006

சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு



TAFAREG குழுமத்தில் இருக்கின்ற நண்பர் லக்கி ஷாஜகான் அவர்கள் எனக்கு அனுப்பிய என்னை மிகவும் பாதித்த இந்த நிகழ்ச்சியை விழிப்புணர்க்காக வலைப்பதிவர்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு...
-


நாலைந்து வாரத்திற்கு முந்தைய ஒரு வியாழக்கிழமை .. இரவு 12 மணிக்கு டீவியில் படம் பார்த்துக் கொண்டே தூக்கத்துக்கு முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில் இருந்தபோது செல்பேசி அழைத்தது. இந்நேரத்துக்கு யாராக இருக்கும் என்று பார்த்தால் அழைப்பில் இருந்தது சித்தப்பா...

"யாரோ ஒரு தமிழகத்துப் பெண்மணி - சௌதிக்கு வேலைக்கு வந்தவர் என்ன பிரச்னைகளோ தெரியவில்லை , வேலை பார்க்கும் அரபி வீட்டிலிருந்து ஓடி வந்து பத்தாவில் அந்தப் பெண்மணியின் உறவினர் வீட்டில் அடைக்கலம் ஆகியிருப்பதாகவும், அந்த உறவினர் சித்தப்பாவை சந்தித்து, அந்தப் பெண்மணியை ஊருக்கு அனுப்பி வைக்க என்ன வழி என்று கேட்க, தூதரகத்தை அணுக ஆலோசனை கூறிவிட்டு உதவிக்கு என்னை கைக்காட்டியிருப்பதாகவும் நாளை அவர்களைப் போய் சந்திக்கும்படியும் சொல்ல" மறுநாளே நண்பர் ஒருவருடன் நான் அந்தப் பெண்மணியை அவர் உறவினர் வீட்டில் வைத்து சந்தித்தேன் .
* * *

பொதுவாகவே வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக சௌதி அரேபியாவிற்கு தமிழகத்தை சேர்ந்த பெண் மணிகள் வேலைக்கு வருவதில்லை.

விசா வழங்கப்படுவதில்லையா அல்லது நம் தாய்க்குலங்கள் விரும்புவதில்லையா என்று நெடுநாளாகவே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு . திருநெல்வேலியை சேர்ந்த ஃபாத்திமா பீவிக்கு( பெயர் மாற்றியிருக்கிறேன் ) கல்யாண வயதில் இரண்டு பெண்கள். எந்தவித அனுசரணையும் உறவுகளிடம் பெரிதான அளவில் உதவிகளும் கிடைக்கப் பெறாத ஒரு வறட்சியான தருணத்தில் சௌதியில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை - டிராவல்ஸில் விசா இருக்கிறது என்று கேள்விப்பட்டு அதீதமாய் தகுதிக்கு மீறிய கடன் சுமையோடு பணம் கட்டி சௌதி வந்து இறங்கி விட்டார் ஐம்பது வயதான ஃபாத்திமாபீவி.

இது போல் வீட்டு வேலை செய்ய வந்த பெண்களை சௌதி பாஷையில் "ஹத்தம்மா " என்று அழைக்கிறார்கள். வேலைக்கு வந்த சௌதி வீட்டில் அந்த சௌதியின் மகள் திருமணம் வரை ஃபாத்திமா பீவி வேலை பார்த்திருக்கிறார் .பின்பு அந்த சௌதி அவரை தன் சகோதரி வீட்டில் வேலை பார்க்க கொண்டு போய் விட அந்த புதிய வீட்டில் ஏற்கனவே இன்னும் நான்கு பணிப்பெண்கள் . கென்யா, ஃபிலிப்பைன் , இந்தோனேஷியா,இலங்கை என்ற நான்கும் நான்கு தேசம் .இதல்லாது நம் தமிழத்தை சேர்ந்த ஓட்டுனர் வேலை பார்க்கும் இளைஞரும் ஒருவர் .

பத்து வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் வேலை பார்த்து வரும் மூத்த - சீனியர் கிரேடு - வேலைக்கார அம்மணி-இந்தோனேஷிய பெண்மணிக்கு ஃபாத்திமா பீவியை கண்டாலே ஆவதில்லை . நாயை வேலை சொன்னால் அது வேறெதையோ வேலை ஏவுமாம் என்று சொல்வது போல் அந்த சௌதி பெண்மணி சொல்லும் வேலைகளை ஃபாத்திமா பீவியிடம் செய்ய சொல்லிவிட்டு ஹாயாக இருந்திருக்கிறார் இந்தோனேஷியப் பெண்மணி .

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் என்ற விதிமுறையில் ஃபாத்திமாபீவிக்கு முன்பு வேலை பார்த்த இடத்தில் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது .. ஆனால் இங்கு வந்த பிறகு அது மூன்று மாதத்திற்கு ஒரு முறை சில போது நினைத்துக் கொண்டால் தருவது என்றெல்லாம் சம்பளம் அலைக்கழிக்கப்படிருக்கிறது .

சௌதி பெண்மணியும் - ஃபாத்திமா பீவியும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டு தானே எஜமானி போல் அதிகாரம் செய்து வந்திருக்கிற இந்தோனேஷிய பெண்மணிக்கும் - நம்மூர் ட்ரைவருக்கும் ஏதோ Understand இருந்திருக்கிறது (கஷ்டம்டா சாமி.. ) . அதனால் அந்த ட்ரைவரும் ஃபாத்திமா பீவியை இந்தியர்தானே - தமிழ்நாடுதானே என்றெல்லாம் பார்க்காமல் ஃபாத்திமா பீவியை ஏமாற்றவும் ஆரம்பித்திருக்கிறார் .

அவரிடம் ஃபாத்திமா பீவி தான் வாங்கிய சம்பளத்தை கொடுத்து ஊருக்கு அனுப்ப சொல்ல முதல் தடவை மட்டும் அந்தப் பணம் வீட்டுக்குப் போயிருக்கிறது . அதற்குப் பின் அனுப்பியவை என்ன ஆனதென்றே தெரியவில்லை. நான் பணம் அனுப்பி வைத்தேன்.. கிடைக்காததுக்கு நான் என்ன பண்ண முடியும் என்ற ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறார் அந்த ட்ரைவர் .வெளி நாட்டில் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .. அந்த ட்ரைவர் நிரூபித்திருக்கிறான்.

ஒரு காலகட்டத்துக்கு அப்பால் ஃபாத்திமா பீவிக்கு தொந்தரவுகள் அதிகமாக ஆரம்பித்திருக்கிறது

சாப்பிடும் உணவில் குளோரக்ஸ் ஊற்றித் தந்து சாப்பிடச் சொல்லியது அதில் ஒரு உச்சபட்ச கொடுமை . இதற்கிடையே அந்த சௌதி பெண்மணியின் பெண் குழந்தைகளை பள்ளியில் விட்டு அழைத்து வருவது அந்த ட்ரைவரின் கடமைகளில் ஒன்று . அந்த குழந்தைகளிடம் இவன் ஏதோ பாலியல் தொந்தரவு செய்ய முயன்றிருக்கிறான். அதை குழந்தைகள் வந்து சொல்ல அவனை கண்காணிக்க அந்த சிறுமிகளுடன் ஃபாத்திமா பீவியையும் குழந்தைகளுடன் சேர்த்து அனுப்பி வைக்க கடுப்பான ட்ரைவர் சிறுமிகளை விட்டு வரும்போது காரை கன்னாபின்னாவென்று ஓட்டி கண்டபடி பயம் காட்டி இனிமே நான் போகவில்லை என்று ஃபாத்திமா பீவி கதறிக் கொண்டு சௌதி பெண்மணியிடம் சொல்லுமளவிற்கு செய்திருக்கிறான் .

இதைப் புரிந்து கொள்ளாத சௌதி பெண்மணியும் நான் சொன்ன வேலையை செய்ய முடியாதா என்று அடித்து அவள் பங்குக்கும் காயப்படுத்தியிருக்கிறாள் . முன்னைவிட ஃபாத்திமா பீவி மீதான தாக்குதல்கள் வலுப்பெற தொடங்கியிருக்கின்றன .
எதேச்சையாக ஒரு நாள் தன் அத்தை வீட்டுக்கு வந்த முன்னாள் சௌதியின் மகள்

- ஃபாத்திமா பீவியைப் பார்த்து அவர் நிலை கண்டு பரிதாபப்பட்டு மறுநாளே தந்தை வீட்டிலிருந்து ஃபாத்திமாபீவியின் பாஸ்போர்ட்டை எடுத்து வந்து தந்து அங்கிருந்து எப்படியாவது போய்விடுமாறு சொல்லி உதவி செய்து விட்டு போக அந்த வீட்டிலிருந்த மற்றொரு இலங்கை தேசத்து பணிப்பெண் அந்த வீட்டை விட்டு வெளியேற கையிலிருந்த காசு தந்து உதவி செய்ய ஃபாத்திமா பீவி டாக்ஸி ஏறி பத்தா வந்து விட்டார் .
* * *

முகத்தில் கிழிக்கப்பட்ட காயங்களுடனும்,தூக்கங்கள் பார்த்து வெகு நாளான, சோர்ந்து போயிருந்த ஃபாத்திமா பீவியைப் பார்க்க மனம் வேதனையில் கசிந்து போனது .. என் அம்மா வயது பெண்மணி.. சம்பாதிக்கும் பொருட்டு வந்து இப்போது ஊருக்கு போனால் போதும் என்றிருக்கிறார் . அவரின் பாஸ்போர்ட்டை வாங்கி பரிசோதித்தேன். அப்போதுதான் இன்னொரு திகைப்பான தகவலும் தெரிந்தது.. அவர் வந்து இரண்டு வருடங்கள் முடிவடைந்தும் இன்னும் இக்காமாவே அடித்து தரவில்லையாம் ..

எந்த ஏரியாவில் வேலை பார்த்தார் என்று எந்த விபரமும் சொல்லத் தெரியவில்லை .டாக்ஸியில் ஏறி இங்கு வந்து சேர டாக்ஸி ட்ரைவர் ஐம்பது ரூபாய் பெற்றுக் கொண்டதாக சொன்னார். ஒரு மணி நேரம் பயணித்த தூரம் இருக்கலாம் என்றார்..இதை தவிர என்னால் வேறெந்த தகவலும் அவரிடமிருந்து பெற முடியவில்லை .
உடனே இது தொடர்பாய் பணிகளை செய்து கொண்டிருக்கும் மூத்த நண்பர் ஒருவரை செல்பேசியில் தொடர்பு கொண்டு ஆலோசித்தேன்.

அவர் வழிகாட்டியதன் பேரில் காரியத்தில் இறங்க மளமளவென்று வேலைகள் நடக்க ஆரம்பித்தது . இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு இது போல் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரியிடம் பேசினேன் . அவர் ஆலோசனையின் படி இந்தியத் தூதரகத்துக்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து வரச் சொல்ல அதே போல் நண்பர் ஒருவரின் காரில் அவரை அழைத்து செல்ல அங்கு காத்திருந்த இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஃபாத்திமா பீவியை ஒப்படைக்க அவர்கள் அவரை தம் வாகனத்தில் ஏற்றி இந்திய தூதரகம் கொண்டு சென்றார்கள் .

அங்கு நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் சட்டப்படி வேகமாய் நடைபெறத் தொடங்கியது. இந்திய தூதரகத்தில் சரணடைந்த ஒரு மாதத்துக்குள் நிச்சயம் ஊர் போய் சேர்ந்து விடலாம் என ஒரு அதிகாரி உறுதியளித்தார் .பத்தா வந்து எந்த இடத்தில் ஃபாத்திமா பீவி அடைக்கலமானாரோ அந்த இரக்கமுள்ள மனிதர்களே அவருக்கு விமான பயண சீட்டும் எடுத்து தந்திருந்தார்கள் . அதை ஃபாத்திமா பீவி நன்றியுடன் நினைவு கூறும்போதுதான் இன்னொரு விவரமும் தெரிந்தது .. அடைக்கலம் கொடுத்த அந்த குடும்பம் அவருக்கு உறவினர்கள் இல்லையாம்..

பத்தாவில் வந்து இறங்கிய இடம் அந்தவீட்டுக்கு எதிரே என்பதால் விவரம் கேட்கப் போய் ஆறுதலாய் அரவணைக்கப்பட்டு - உபசரிக்கப்பட்டு - உதவி செய்யப்பட்டிருக்கிறார் ஃபாத்திமா பீவி. யாதும் ஊரே யாவரும் கேளிர்.

தற்போது இந்திய தூதரகத்தின் விசாரணையிலும் , ஊருக்கு அனுப்பபடும் முன்னேற்பாட்டிலும் இருக்கும் ஃபாத்திமா பீவி நலமுடன் அவர்கள் வசம் இருந்தாலும் , ஊருக்கு சென்ற பின்பு அவர் எதிர்கொள்ளவிருக்கும் கடன் போன்ற பிரச்னைகள் ஏராளம் . காசு வாங்கி ஆளை ஏற்றிவிட்டால் சரி என இருக்கும் ஏஜென்ஸிகள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் செயல்பட்டிருந்தால் இந்த பிரச்னைகளை எல்லாம் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது . இனியாவது பொருளீட்ட அரபு தேசம் வரும் நம் தாய்நாட்டு சகோதரிகள் இது குறித்து சிந்திப்பார்களா ..?

பின்னுரையாய் சில சங்கடங்கள்

.
1. இகாமா அடிக்காமலேயே இரண்டு வருடங்கள் வேலை பார்த்தாலும் ஊர் திரும்ப இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .எனவே ஃபாத்திமா பீவி சம்பிரதாய விசாரணை முடிந்து ஊர் திரும்ப ஒரு மாதமாகலாம் என தெரிகிறது. நாங்கள் ஃபாத்திமா பீவியை ஒப்படைத்த போது குறைந்த பட்சம் அவர் மாற்று உடை கூட எடுத்து வரவில்லை.ஒரு மாத காலம் எப்படி இருக்கப் போகிறார் என்று தெரியவில்லை .

2. தமிழ் சினிமாவின் சாகஸ கிளைமாக்ஸ் போல் ஃபாத்திமா பீவியை அழைத்துக் கொண்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கும் வரை நானும் நண்பரும் ஒரு பெரும் அவஸ்தைக்குள்ளானோம் . வழியில் எங்கேனும் காவல்துறை குறுக்கிட்டால் என்ன சொல்வது அல்லது நாங்கள் சொல்லும் காரணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கமே காரணம் .. நிறைய பேர் இது போன்ற நிலைப்பாடு உள்ளவர்களுக்கு உதவி செய்ய மனமிருந்தும் ஒதுங்கிப் போவது இதனால் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது .

3. நேபாளிப் பெண் கொலை வழக்கில் கொலையாவதற்கு முன் அந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக டாக்டர் ஒருவரும் ,அவர் மனைவியும் தற்போது சிறையில் இருப்பது அனேகமாய் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம் . இதற்குப் பின் எப்படி எல்லோருக்கும் இது போன்று ஓடி வந்த நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய முன் வர முடியும்..?

4.இந்திய தூதரகம் வசம் இருக்கும் ஃபாத்திமா பீவி தன் வீட்டுக்கு போன் செய்து வர இன்னும் ஒரு மாதமாகும் என சொல்ல அவர்களின் பிள்ளைகள் இங்கு அவர் தங்கியிருந்த வீட்டினர்க்கு போன் போட்டு சீக்கிரம் வர ஏற்பாடு செய்யுங்கள் என நச்சரிக்க அவர்கள் என்னை அழைத்து எப்போது போவார்கள் ..எப்போது போவார்கள் என கேட்க ஏண்டா இதில் இறங்கினோம் சாமி என்றாகி விட்டது.. வேலியில் போன ஓணானை........

5.ஃபாத்திமா பீவியை இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கும் அன்று ஹுஸைன் மரைக்காயர் இறப்பு சான்றிதழ் பெறுதல் உள்ளாக மேலும் மூன்று பொது சேவைக்காய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததை பார்க்க அங்குள்ள சில பணியாளர்கள் காசுக்காக வேலை செய்யும் ஏஜெண்டாக என்னை நினைத்து 'ட்ரீட்' செய்தது கொஞ்சம் மனதை வலிக்க செய்தது . பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் மனதை தேற்றிக் கொண்டு வேலை முடிந்தால் சரி என்று வந்து விட்டேன் .
* * *

அரபுதேசம் முழுக்க இது போல் ஆயிரத்தெட்டு பிரச்னைகள்.. பிரச்னைகளுடனே இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் என இந்திய தூதரகம் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் ஏராளமிருப்பதாகவும், நிறைய பிரச்னைகள் எந்த முடிவையும் நோக்கிப் போகாமல் இழுவையிலேயே இருப்பதாகவும் இந்திய தூதரகம் தொடர்புடைய நண்பர்கள் சிலர் சொல்ல வருத்தமாய் இருக்கிறது. எல்லாம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புவோம்.
ஃபாத்திமா பீவி நல்ல முறையில் விமானம் ஏறி தாயகம் இறங்கிவிட்டார் என்ற நல்ல செய்திக்குப் பின்னால் உடனடியாக நான் செய்தது- இந்த பதிவிடும் வேலைதான்....

சம்பளப் பிடித்தம் உறுதியான மூன்று காலை நேரங்கள், ஆங்காங்கே செல் பேசிய செலவுகள் என பொருளாதார ரீதியாய் எனக்கும் கொஞ்சம் இழப்புகள் இருந்தும் சில கண்ணீர் துளிகள் துடைக்கப்படும் பின்பு ஏற்படும் சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் முன்னால் அதெல்லாம் பெரிதாய் தெரியவே இல்லை .சக மனிதர்க்கு பரஸ்பர உதவி செய்யும் வாய்ப்பை பெறுவதற்கு இன்னும் எவ்வளவு ரிஸ்க் வேண்டுமென்றாலும் எடுக்க தயாராகவே இருக்கிறேன் நான் ...இறைவன் போதுமானவன் .
* * * * * * *

தேன் கூடு