Wednesday, October 08, 2008

அழகான பிரிவு





நீ மறைத்தாலும் வெளிபட்டுவிடுகின்ற...
பிரிவின் துயரினை,
நடிக்கத் தெரியாத
கண்ணீரையெல்லாம்...
ஏன் உடன் சுமந்து வருகின்றாய்?

அன்பின் திரவவடிவமான
அந்த
நீர்த் திவலைக்களுக்காகவாவது,

கிளம்புவதற்கான விநாடிகள்
கணக்கிடப்படும் தருவாயில்
பாம்பின் பின்னலையொத்த
விரல்களின் ஸ்பரிசத்திற்காகவாவது...

பேருந்து புறப்பட்டுவிட்ட பொழுதிலும்
வழித்தடங்களில்..
நின்று கொண்டு
எனக்காக நீ காட்டுகின்ற
டாட்டாக்களுக்காகவாவது,

அதுபோன்றதொரு
அழகான பிரிவினை
எதிர்பார்க்கின்றேன்

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு