Wednesday, September 27, 2006

சில நொடிகளில் உலகம் அழியப்போகிறதா..?

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting




தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்..

பாரதியே நீதான கூறினாய்..

அப்படியென்றால்
இன்னும் சில நிமிடங்களில்
உலகம் அழியப்போகிறதா..?


- ரசிகவ் ஞானியார்

Saturday, September 23, 2006

இப்படி பண்ணிட்டியே ஜோ!



நண்பர் மூர்த்தி அவரகள் சூர்யாவுக்குத் தெரியாமல் ஜோதிகாவுக்கு ஒரு கவிதை ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.


வெட்கத்தால் சிவந்து கிடந்தன
என் கண்ணப் பகுதிகள்
ஆசைகளால் நிரம்பிக் கிடந்தது
என் இதயம்...
அடிக்கடி தொட்டுப் பேசி
கட்டிப்பிடிக்க நினைத்தது
என் மனசு...
துள்ளும் என் இளமைக்கு
நேரம் காலம் தெரிவதில்லை..
இரவு வந்தால் போதும்
தறிகெட்டுப் பாயும்
எல்லாம் வயசுக் கோளாறு..
இத்தனை நாள் பரவாயில்லை
இனிமேல் தகாது
இன்னொருவன் மனைவியை
ஏறெடுத்துப் பார்த்தல் பாவமாம்!
வெட்கத்தை உடுத்திக்கொண்டு
நீயே என் கனவில்
வரலாமென்றாலும்
சூர்யாவுக்கு நீ செய்யும்
துரோகமல்லவா!
பூவும் மலருமாய்
கனியும் சுவையுமாய்
நீவிருவரும்
இணைந்து வாழ
முத்தமிழ் மன்றத்தின்
அன்பு வாழ்த்துக்கள்.


- மூர்த்தி

இதைப்பார்த்து சூர்யாவுக்கு தான் எழுதுவதுபோல ஒரு கவிதை எழுதிக் கேட்ட அன்புடன் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கவிதை.

சட்டென்று
செப்டம்பரில் கரைந்துபோன
என் கண்ணாளா..

நேருக்கு நேர் வந்து
எங்கள் இதயம் பதிந்தாய்!
பேரழகனாய்
பெண்கள் மனதில் விழுந்தாய்!
சில்லென்று ஒரு
சிலையின் நெஞ்சத்தில் ஏறினாய்!
ஆரெம்கேவி
சேலையின் வியாபாரம் இறக்கினாய்!


ரஜினி வாழ்த்துப்பெற்ற
கஜினியே!

செப்டம்பர் 11 ல்
பெண்கள் மனதை உடைத்தாய்!
நட்சத்திரத்தை கைபிடித்து
நிலவுக்கே வெட்கம் கொடுத்தாய்
உன்
கல்யாண நாள்தான் - எங்களின்
கணவர்களுக்கு நிம்மதி நாளானது! ( ?)


உன்னை
வசீகரப்படுத்திக்கொள்ள
விருப்பம்தான்!
ஆயினும்
ஜோதிகாவை
கோபமூட்டவும் - எங்கள்
கணவர்களுக்கு
கிறுக்குப்பிடிக்க வைக்கவும்..
எங்களுக்கு சம்மதமில்லை

ஆகவே
மேக்கப்பை கலைத்துவிட்டு
ஜோவை மட்டும் காதலி!

- ரசிகவ் ஞானியார்

Friday, September 15, 2006

வலைப்பதிவாளனின் காதல் கவிதை

என் ப்ரியமே
ப்ளாக்ஸ்பாட்டே


உன்
மௌனப்பார்வைகள் எனக்கு
மறுமொழிகளைத் தருகின்றது
நீ பேசாமல் இருந்தால் கூட - எனக்கது
பழமொழியாய்த் தெரிகின்றது

நீ
திட்டி மறுமொழிந்தாலும் பரவாயில்லை
அன்பே தயவுசெய்து
அனானியாகி விடாதே
என்னை
அனாதையாக்கி விடாதே!

சிலையே வலையே
மழலைத் தமிழாகி
மணமாகி
தமிழ்மணத்தில் என்றும் வருவதற்கு..

இதயத்தில்
காதல் வலை பதிந்து விடு!


இனி
நம் காதலைத் தடுக்க - போலி
டோண்டு வந்தாலும்..
உன்னையே இதயத்தில்
ஆண்டு நிற்பேனடி!

- ரசிகவ் ஞானியார்

நம்புங்கப்பா இவரும் பிரதமர்தான்






இவர் ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாத்

இந்தப் படத்திற்கு வசனம் தேவையில்லை

- ரசிகவ் ஞானியார்

Thursday, September 14, 2006

குடிகாரனின் காதல் கவிதை


நெப்போலியனை விடவும் - போதையாய்
நெஞ்சைத் தொட்டவளே
என்
கவிதையே - கழுதையே!

முட்டாளைக் காதலித்த
முழுநிலவே..?

நீ என்னைக்
காதலிக்கவில்லை என்றாலும்
என்னைக்காதலி!

நான் உன்னைக்
காதலிக்காவிட்டாலும்
உன்னைக் காதலிப்பேன்..


போதை இறங்கும் முன்
ஒரு உண்மைச் சொல்லட்டுமா

நீ இல்லையென்றால்
வேறு யாரையும் காதலித்திருப்பேன்..




- ரசிகவ் ஞானியார்

Friday, September 08, 2006

தனியொருவனுக்கு செல்போன் இல்லையெனில்



உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாசியத்தேவைகளோடு இப்பொழுது அடம்பிடித்து இடம்பிடித்துக் கொண்டது செல்போன்.

தகவல் பரிமாற்றங்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றது. யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் அவர்கள் சுவிட்ச் ஆப் செய்யாதவரை.

இப்பொழுது இரண்டே இரண்டு வகை மனிதர்கள்தான் இருக்கின்றார்கள்

தொடர்பு வெளிக்கு அப்பால் இருப்பவர்
தொடர்பு எல்கைக்குள் இருப்பவர்


எனக்கு செல்போன் பரிச்சயமானது 1999 ம் ஆண்டு பிஎஸ்ஸி முடித்தவுடன் எர்செல் நிறுவனத்தில் பணிபுரியும்பொழுது எனக்கு செல்போன் தரப்பட்டது.

கைகளில் உலகமே வந்து விட்டதைப்போல குதித்தேன். ஆனால் நமக்கே தெரியாமல் நம்முடைய சுதந்திரத்தை பறிப்பதில் இந்த செல்போன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். பின்னர் எம்சிஏ கிடைத்தவுடன் அந்தப் பணியை விட்டவுடன் செல்போனோடு எனது தொடர்பு முடிந்துபோனது.

பின்னர் பணி நிமித்தமாக 2002 ம் ஆண்டு சூன் மாதம் துபாய் சென்றபொழுது எனது தங்கையின் கணவர் செல்போன் பரிசளித்தார். அது 3310 நோக்கியா மாடல்.

பின்னர் வாய்ஸ் ரெக்கார்டிங் மற்றும் எப் எம் வசதி உள்ள இன்னொரு நோக்கியா மொபைல் வாங்கினேன். பின்னர் 6600 வாங்கினேன். அதுவும் ப்ளுடூத்தின் வழியாக எந்தப் பொறாமைப்பிடித்தவனோ வைரஸ் பாய்ச்சிவிட அதனையும் மாற்றி தற்பொழுதுவரை 6310 என்ற மொபைல்தான் கைக்குள் அடக்கமாயிருக்கின்றது.


துபாயில் நல்ல வேலையில் இருக்கும் எனது நண்பன் ஒருவன் நீண்ட நாளாக செல்போன் வாங்காமல் இருந்து 6 மாதங்களுக்கு முன்புதான் செல்போன் வாங்கினான்.

அவனிடம்

"சாதாரண கூலித்தொழிலாளி கூட செல்போன் வைத்திருக்கின்றான். ஆனால் நீ இன்னும் வாங்கவில்லையே ஏன் ?" என்று கேட்டபொழுது,

அவன் கூறினான்.

"செல்போன் வைத்திருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நான் எங்கே இருந்தாலும் எனது முதலாளி அழைக்கக் கூடும்.
நாம் எப்போதும் யாருடைய கண்காணிப்பில் இருப்பது போல தோன்றுகிறது. நமது சுதந்திரம் பறிபோனது போல உணர்கின்றேன். நிம்மதியாய் இருக்கமுடியாது"

அதுவும் ஒருவகையில் உண்மைதான். கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் செல்போன் கழுத்தை மட்டுமல்ல நம்மையும் ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடுகின்றது. இது சிலருக்கு வளர்ச்சியாகவும் சிலருக்கு தொந்தரவாகவும் தெரிகின்றது.

இப்பொழுது நீங்கள் வரும்பொழுது கூட சாலையில் கவனித்திருக்க கூடும். யாராவது ஒருவர் தலையை ஒருக்களித்தபடி செல்போனில் பேசியபடி பைக்கில் பயணம் செய்வதை.

அது பந்தான்னு சொல்றதா இல்லை அவசரம்னு சொல்றதா தெரியவில்லை.

இப்பொழுதெல்லாம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தால்
செல்லக்கிறுக்கனா அல்லது
செல் கிறுக்கனா?
என்பதைக் கண்டறிவது கஷ்டம்தான்.

அப்புறம் இந்த மிஸ்கால் சமாச்சாரம்.

"டேய் நான் அந்த இடத்திற்கு வந்தவுடன் மிஸ்கால் கொடுக்கிறேன். நீயும் வந்திடு "

"சரிடா அப்படின்னா நான் ஆபிஸை விட்டுக் கிளம்பும்பொழுது மிஸ்கால் கொடுக்கின்றேன் "

என்று காசை மிச்சப்படுத்த எங்கேயும் எப்போதும் மிஸ்கால் கொடுத்தே தகவல்கள் பரிமாறப்பட்டது.

சாப்பிடும் முன் - உறங்கும் முன் - கல்லூரிக்குள் நுழைவதற்குமுன் - கல்லூரியை விட்டு வெளியே வரும்பொழுது - வீடு வந்து சேரும்பொழுது என்றுடிபொழுது - அதிகமாய் காதலர்கள் மிஸ்காலை பரிமாறிக் கொள்கின்றார்கள்.

இப்படி மாத்திரை சாப்பிடுவது போல சாப்பிடும் முன் - சாப்பிட்ட பின் என்று நேரம் காலம் இல்லாமல் மிஸ் கால் கொடுக்கின்ற பெருமை காதலர்களைச் சாரும்.

காதலித்துப்பார்
முதல் மிஸ்டு காலும் அவள்தான்
முதல் டயல்டு காலும் அவள்தான்



புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கும் இதுபோன்ற மிஸ்கால் வர ஆரம்பிக்கும். அது உண்மையில் மிஸ்கால் அல்ல மிஸஸ்கால்.

துபாயில் எனது அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்த்த பாகிஸ்தானிய நண்பன் சாஜித் என்பவன் எனக்கு அடிக்கடி மிஸ்கால் கொடுத்து தொந்தரவு செய்து கொண்டே இருப்பான். நான் அவனை பலமுறை எச்சரித்திருக்கின்றேன். ஆனால் அவன் கேட்பதாய் தெரியவில்லை.

நாளடைவில் மிஸ்காலின் தொந்தரவுகள் அதிகமாகியது. நான் மேனேஜரோடு அவரது அறையில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது , சில சமயம் மீட்டிங் நேரத்தில் என்று அடிக்கடி மிஸ்கால் கொடுக்க ஆரம்பித்தான். நான் எரிச்சலுற்று அவனிடம் ,

"சாஜித் வேண்டாம் மிஸ்கால் கொடுக்காதே..மேனேஜர் எரிச்சல் அடைகிறார்..
அவர் அறைக்கு செல்லும் போது மட்டுமாவது மிஸ்கால் கொடுக்காம இரேண்டா " என்க

அவன் எனது பேச்சினை அலட்சியப்படுத்தினான்..

"அடிக்கடி மிஸ்கால் கொடுக்காதே அப்புறம் நீ வருத்தப்படுவே "என்று கடைசியாய் எச்சரித்தேன். அவன் கண்டு கொள்ளவே இல்லை. நான் என்ன செய்துவிட முடியும் என்ற தைரியத்தில் இருந்து விட்டான்

நான் ஒருநாள் மாலையில் Yahoo சாட்டிங்கில் சென்று அவனது செல்நம்பரை குறிப்பிட்டு "நான் 22 வயது அழகி..துபாயில் தனியாக இருக்கின்றேன்..எனக்கு யாராவது கம்பெனி கொடுங்கள்" என்று அடிக்கடி டைப் செய்து அனுப்பினேன்.

அன்று இரவிலிருந்து அவனுக்கு போன் வர ஆரம்பித்துவிட்டது. நான் தினமும் அவனுடைய தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு , மறுபடியும் மறுபடியும் சாட்டிங்கில் எழுத ஆரம்பிக்க, அவனுக்கு உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் தொந்தரவு செய்து கால்கள் வர ஆரம்பித்துவிட்டன.

சில சமயம் அலுவலகத்தில் இருக்கும்பொழுது கூட அவனுக்கு போன் வர ஆரம்பிக்க, அவன் கடைசியாய் எரிச்சலுற்று செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டான்.

பின் அவனக்கு நிலைமை புரிந்து விட்டது .அதற்கு காரணம் நான்தான் என்று.

என்னிடம் வந்து கோபமுற்றான். என்னிடம் சரியாய் பேசவும் மாட்டான். பின்னர் அவனாகவே வந்து மன்னிப்பு கேட்டான்.

"நான் கிண்டலுக்தானடா மிஸ்கால் கொடுத்தேன் நீ ஏண்டா இப்பஎடி பண்ணின" என்று ஒரு நாள் என்னிடம் வந்து கேட்க,

" நானும் கிண்டலுக்குத்தான்டா பண்ணினேன்" என்று சமாதானமாகிப்போனோம்.

அந்தச் சம்பவத்திற்குப்பிறகு என்னுடைய தொலைபேசியில் மிஸ்கால் பகுதியில் அவனுடைய எண்ணை நான் இதுவரை கண்டதே இல்லை.

சில அறுவை ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்க செல்போனில் ரிங்டோனை ஆன் செய்து போன் வருவது போல பாசாங்கு செய்து தப்பிவிடுவது என்னுடைய வழக்கம்.


இன்றைய கால ஓட்டத்தில் அவசர தகவல் பரிமாற்ற சாதனமாக செல்போன்கள் விளங்குகின்றது. ஆள் பாதி, ஆடை பாதி என்பது போல செல் போன் இல்லாத மனிதனை காணுவது அரிதாக இருக்கின்றது.

அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யவே கஷ்டப்படுகின்ற ஒருவன் கூட ஒருநாளாவது செல்போன் வாங்க மாட்டோமா என்றுதான் லட்சியங்கள் வைத்திருக்கின்றான்.

பாரதி இருந்திருந்தால்,

தனியொருவனுக்கு செல்போன் இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாடலை இக்காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றிப் பாடியிருப்பான்.

செல்போன்கள் உலகத்தை சுருக்குவது மட்டுமின்றி நமது சுதந்திரத்தையும் சுருக்குகின்றது என்பது உண்மைதான். இனி வரும் காலத்தில் மனிதனின் பெயர்களுக்குப் பதிலாக எண்களே பெயர்களாக மாறப்போகிறது நிச்சயம்.

"ஹலோ நீங்க 98420xxx423 "

"நேத்து 98421xxx109 ஐ பார்த்தேன்டா 98420xxx845 யோடு போய்கிட்டு இருக்கான். அவனை 98420xxx786 இடம் சொல்லிக்கொடுக்கப் போறேன் பாரேன்.. "

அப்படின்னு பேசுகின்ற காலம் வரத்தான் போகிறது பாருங்களேன்.




தூரத்தில்
கழுத்தில் பட்டையடிக்கப்பட்ட
நாய் ஒன்றினை
அழைத்து செல்கின்றான் ஒருவன்

ஏதோ உறுத்தவே ...
உற்று நோக்குகின்றேன்
கழுத்தில் செல்போன்.





-ரசிகவ் ஞானியார்

Thursday, September 07, 2006

கௌதமின் "சில்லுன்னு ஒரு போட்டி"

நேற்று 06.09.06 நண்பர் கௌதம் அவர்கள் தனது வலைப்பதிவில் தடாலடி பரிசுப்போட்டி என்ற ஒரு வித்தியாசமான புகைப்படத்தை பிரசுரித்து போட்டி நடத்தினார். 4 மணிக்குள் அந்தப் புகைப்படத்திற்கு ஒரு வரியில் கமெண்ட் அனுப்பவேண்டும். சிறந்த கமெண்டுக்கு பரிசாக சில்லுன்னு ஒரு காதல் படம் பார்க்க வாய்ப்பு என்று அறிவித்த உடனையே மள மளவென்று கமெண்டுகள் வர ஆரம்பித்துவிட்டன.

சத்தமில்லாமல் ஒரு சாதனையையும் செய்து முடித்திருக்கின்றார் என்பதை யாருமே கவனிக்கவில்லை. மதியம் 1.19 க்கு அந்தப் பரிசுப்போட்டியை அவர் ஆரம்பித்திருந்தார். 4 மணிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் வந்து சேர்ந்தன. குறைவான நேரத்தில் அதிகமான மறுமொழிகள் பெற்றார் என்ற பெருமையை தட்டிச் சென்றிருக்கின்றார். அதற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அவற்றைப்பற்றிய எனது தனிப்பட்ட பார்வைகளைத் தரலாமென்று விருப்பப்படவே இந்தப்பதிவு தோன்றிற்று.

போட்டிக்கான புகைப்படம் இதோ :






4 மணிவரைதான் போட்டி என்று அறிவித்திருந்தார். 4. 17 மணிக்கு போட்டி முடிந்துவிட்டதாக அறிவித்துவிட்டதால் கமெண்டுகளின் வருகைகள் அதன்பிறகு குறைந்துவிட்டன. ஆனாலும் 5.27 வரை கமெண்டுகள் வந்து கொண்டே இருந்தன.

ஒருவரே எத்தனை கமெண்டுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்று அறிவித்திருந்ததால் ஒருவரே அதிகமான எண்ணிக்கையில் கமெண்டுகளை அனுப்பியிருந்தனர்.

நான் அனுப்பிய மற்றும் எனக்குப் பிடித்த கமெண்டுகளை இங்கே தருகின்றேன்.

நான் முதலில் ஒரே ஒரு கமெண்டு அனுப்பிவிட்டு பின்னர் எத்தனை கமெண்டு வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற விதிமுறையைக் கண்டு தொடர்ந்து அனுப்ப ஆரம்பித்தேன்.

என்னுடைய கமெண்டுகள்:

கண்கள் கள்ளடித்துவிட்டதா என்ன?

நீ தலைவியா? தலைவலியா?

எந்தத் திருவள்ளுவனின் படைப்பு நீ?

நெற்றிக்கண்ணால் இடஒதுக்கீடு வாங்கிவிடுவாயோ?

நீ தூங்கும் நேரத்தில் நீ முழிப்பாய்

போதை மருந்து பிடிபட்டது - இப்படிக்கு - இலாகா

இரண்டும் நீயாக இரண்டு காதலி வேண்டும்

லிதகா னிவக ல்நி

ஒன்றும் ஒன்றும் ஒன்று

கோடீசுவரியா? கேடீசுவரியா?

நீ இறைவனின் இலக்கணப்பிழையா?
தலை கண பிழையா?

சாப்ட்வேர் சாத்தான்களின் சாபமா நீ?

4 மணிவரை காதலி

ஆச்சர்யம் ஒரே வானம் இரண்டு நிலவு

பேதை நீ பார்க்க போதை எனக்கா?

விழிகள் விமர்சனமாகின்றது

காதலோ? கள்ளோ?

நான் அனுப்பியவற்றில் எனக்குப் பிடித்தது :

கண்கள் கள்ளடித்துவிட்டதா என்ன?

நீ தலைவியா? தலைவலியா?

சாப்ட்வேர் சாத்தான்களின் சாபமா நீ?

நீ இறைவனின் இலக்கணப்பிழையா?
தலை கண பிழையா?

கொஞ்சம் கர்வப்பட்டேன். எப்படியாவது இவற்றுள் ஒன்று தேர்வு செய்யப்பட்டு விடும் என்று. ஆனால் லக்கிலுக் முந்திக்கிட்டாருங்க. என்ன செய்ய நம்ம காசுல டிக்கெட் எடுத்து பார்க்க வேண்டியதுதான்.

நான் ரசித்த மற்றவர்களின் கமெண்டுகள் :

RAANA MONAA :


நீ குவளைக் குமரியா? இல்லை
குவார்ட்டர் குமரியா?

சார் டிக்கட்டை யார்க்கு வேணா அனுப்புங்க
ஆனா அந்தப்பொண்ணோட ஜாதகத்தை எங்க அம்மாவுக்கு அனுப்புங்க



வலைஞன்


மயங்குகிறாள் ஒரு மாது

பார்வைகள் பலவிதம்


Dev

மவனே சிக்குன தனியா
அவ்வளவுதான் சிக்கன் குன்யா

கண்ணோடு காண்பதெல்லாம்
கண்களுக்குச் சொந்தமில்லை


விழியன்

கே. எஸ். ரவிக்குமார்கிட்ட இந்தப்படத்தைக்
காட்டிடாதீங்க. அடுத்த படத்துல
ஜோதிகாவுக்கு நாலு கண்ணுவச்சு ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு போட்டுற போறாரு


என் சுரேஷ்

இப்பவே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி


மதுமிதா

கேமிராவுக்கே போதையா

லக்கிலுக்

கிர்ர்ர்ருன்னு ஒரு காதல்

பிரம்மனின் சிஸ்டத்தில் வைரஸ் அட்டாக்

இவளிடம் லிப் டு லிப்
கிஸ் அடிப்பது எப்படி?


நிலா ரசிகன்

நான்கு விழியால் காதல் கொலை

தலைசுற்ற வைத்து பின் இதயம் சுற்றச் செய்

மின்னுது மின்னல்

Error 404

ஜெஸிலா

தலைவலி மருந்தே தலைவலியானால்

அருட்பெருட்கோ

முத்தம் ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்

அம்புடன் 4 கண்கள்

டுபுக்கு

இதென்ன ஆடித்தள்ளுபடியா
எதை விடுவது எதை எடுப்பது?


இவற்றுள் இறுதியாக 3 தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டது லக்கிலுக் எழுதிய "கிர்ர்ர்ருன்னு ஒரு காதல் " பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசு சம்பந்தமாகவே அவருடைய கமெண்டும் ரசிக்கும்படி இருந்ததால் அவருடையது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கின்றேன். ஆகவே லக்கிலுக் அவர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கமெண்டுகளையும் தந்திருந்தால் கொஞ்சம் உற்சாகமாக இருந்திருக்கும். கௌதம் சொல்லுவாரா?

எத்தனை பேர்களின் எண்ணங்களிலிருந்தும் எத்தனை விதமான கமெண்டுகள் பாருங்களேன். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கின்றது.




இந்த போட்டியில் நீங்கள் நடுவராக இருந்தால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கமெண்டுகளில் இருந்து எதனைத் தேர்ந்தெடுத்து இருப்பீர்கள் கொஞ்சம் சொல்லிட்டுப்போங்கப்பா ப்ளீஸ்..

நீங்க சொன்னதில இருந்து என் மனசுல உள்ள அந்தப் பரிசுக்குரிய கமெண்ட் பொருத்தமாக இருந்தால், உங்களை சூர்யா - ஜோதிகா வின் கல்யாணத்திற்கு அழைத்துச் செல்கின்றேன்.

எனக்கும் சூர்யா - ஜோதிகா அழைப்பிதழ் வந்துச்சுப்பா.."வேண்டாம் சார் நீங்க பிஸியா இருப்பீங்கன்னு" சொன்னாலும் கேட்காம அடம்பிடிச்சு அனுப்பி வச்சுட்டார் சூர்யா.



- ரசிகவ் ஞானியார்

Wednesday, September 06, 2006

இவர்கள் காதலித்தால் V

கணக்கு வாத்தியாரின் காதல் கவிதை



கடந்து செல்லும்பொழுது
326 முறை
முறைத்துப் பார்த்தாய்

3 முறை
செருப்பெடுத்துக் காட்டினாய்

64 முறை
அன்பாக பார்த்தாய்

42 முறை
சிரித்தாய்

காதலைச்சொல்ல..
76 முறை
தயங்கி தயங்கி திரும்பினேன்

83 முறை வெட்கப்பட்டாய்

இவ்வளவும் செய்துவிட்டு
பாடம் நடத்தும்போது
படுத்துறங்கும் மாணவன் போல
நான்
காதல் சொல்லியும்
கண்மூடிச்செல்கிறாயா..?

என் அன்பே..
அல்ஜிப்ராவே!
ஜாமட்ரிக் பூவே!

உன்
கண்கள் எனக்கு
கால்குலஸ்!

உன்
சிரிப்பு எனக்கு
Statistics!

கரும்பலகையில் மட்டும்
தைரியமாய்
கணக்கு எழுத வருகிறது!

உன்
மனப்பலகையில் எழுத வந்தாலோ
சாக்பீஸ் கூட ...
சங்கடப்படுகிறது!

கஷ்டங்களை கழித்துவிட்டு
காதலைக் கூட்டிக் கொள்வோம்..
தலைமுறைகளை பெருக்குவதற்காய்
பாதைகளை வகுப்போம்
வா வா வா


- ரசிகவ் ஞானியார்

Tuesday, September 05, 2006

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதாவது ஒரு படியாக அல்லது எல்லாப் படிகளிலும் ஒரு ஆசிரியர் அமர்ந்திருக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி காலக்கட்டத்தில் என்னைக் கவர்ந்த ஆசிரியர்கள் நிறைய பேர்.

கல்லூரிக் காலக்கட்டத்தில் என்னைக் கவர்ந்த ஆசிரியர்களில் ஒருவர் பேராசிரியர் இராமய்யா. அவரைப்பற்றிய பதிவு இதோ..


என்னைக்கவர்ந்தவர்கள்

சென்ற வருடம் நான் எழுதிய ஆசிரியர் தினக் கவிதை ஒன்றையும் இங்கே மறுபதிவிடுகின்றேன்.

ஒரு ஆசிரியர் ஒளிந்திருக்கிறார்




எனக்கு
"அ..ஆ.." போட கற்றுக்கொடுத்த - நான்
"ஆய்" போட்டதை கையிலெடுத்த
அந்த ஆசிரியர்கள்
ஞாபகம் வந்து போகிறார்கள்...
தூரத்தில்
புள்ளியாய் ஊர்ந்து போகின்ற
வாகனங்களைப்போல..

ஒரு
காலைநேரத்து கண்மூடிய
கடவுள் வாழ்த்துப்பாடலின்போது....
நானும் காதரும்
சாக்பீஸை திருட
குனிந்து வந்ததைக் கண்டு..
டவுசரில் தூசி கிளம்ப அடித்த
பெயர் மறந்து போன
அரக்கி என்று பட்டப்பெயரின் சொந்தக்காரி
ஐந்தாம் வகுப்பு ஆசிரியை!

எப்பொழுதும்
பிரம்பை வைத்திருப்பார்
ஆனால்
ஈக்களின் இடப்பெயர்ச்சிக்குத்தான்
பெரும்பாலும்
பிரம்பை பயன்படுத்தியிருக்கிறார்!

எப்பொழுதாவது வந்து போகும்
கார்ப்பரேஷன் தண்ணீரைப்போல...
நினைவில் வந்து போகின்ற
ஆறாம் வகுப்பு ஜோதி மிஸ்!



கையை மறந்தாலும்..
குடையை மறக்காமல் வருகின்ற
வெள்ளையனின் ஆங்கிலத்தை மட்டும்
விரட்டாமல் வைத்திருக்கும் ...
ஏழாம்வகுப்பு சுப்பிரமணி வாத்தியார்!

"பேசாதீங்கடா
பேசாதீங்கடா" என்று
உயிர் கொடுத்து கத்தி

"கண்ணாடியை தூக்கி
எறிஞ்சிறுவேன்
பேசாதீங்கடா "

"நாலணா தரேண்டா
பேசாதீங்கடா"
என்று கெஞ்சி கெஞ்சி கோபப்படும்
எட்டாம் வகுப்பு இபுறாகீம் வாத்தியார்!

கொட்டாவி விட்டால்
கோபப்படுவார் எனத்தெரிந்தே..
கொட்டாவி விட்டுக்கொண்டே
நாங்கள் பாடம் கவனிக்க...
"கொட்டாவி ஒரு கெட்ட ஆவி" என
தத்துவம் உதிர்த்தபடியே...
பொறுமையாய் பாடம் நடத்திய
ஒன்பதாம் வகுப்பு சித்திக் வாத்தியார்!

நான்
செண்டம் வாங்குவேன் என நம்பியிருந்து
இடைத்தேர்வில் நான்
பூஜ்யம் எடுத்து..
தெண்டமாய் போய்விட்டதை
தாங்கமுடியாமல் தனியே அழைத்து
"யாரையாவது லவ் பண்றியா"
என்று உரிமையாய் கேட்ட
பத்தாம் வகுப்பு சகுந்தலா மிஸ்!

தத்து பித்து என்று
ஏதோ எழுதிக்கொடுத்ததை பார்த்து..
"இது கவிதை இல்லடா.."
இதுதான் கவிதை என்று
கம்பன் - பாரதி
இளங்கோவடிகள் கவிதைகளை
இலக்கியநயத்தோடு விவரித்த
பதினோராம் வகுப்பு பிரபாவதி மிஸ்!

"வேதிச்சமன்பாடு என்றால் என்ன?"

என்று கேள்விகள் கேட்டபடி
தனது கைக்குட்டையால்
உதடு துடைத்தபடி..
கீச்சுக்குரலில் பாடம் நடத்தும்
இரண்டு மாணவர்களை
காதல் கடிதம் கொடுக்கத் தூண்டிய அழகாய்
அந்த
பன்னிரெண்டாம் வகுப்பு
பிர்லா ஜெயந்தி மிஸ்!

இப்படி
எல்லோருமே ..
என் அறிவின் கூட்டுப்புழுக்கள்!

ஆசிரியர்களின்
ஆசிர்வாதம் இல்லாவிட்டால்
நான்
கவிதை எழுதியிருக்கமாட்டேன்!
பலசரக்கு கடையில்...
கணக்குதான் எழுதிகொண்டிருப்பேன்!

என் கவிதைகளில்
ஒவ்வொரு வரிகளிலும்..
ஒரு ஆசிரியர்
ஒளிந்திருக்கிறார்!

அவர்கள் மட்டும்
"அ" போட கற்றுத்தராவிட்டால்...
எல்லோரும் என்னை
"சீ" போட்டிருப்பார்கள்!

அவர்கள் இல்லையென்றால்..
நான்
ரசிகவும் ஆகியிருக்கமாட்டேன் - யாரும்
ரசிக்கும்படியும் ஆகியிருக்கமாட்டேன்!


இருந்தாலும்
மனசுக்குள்
நெருடிக்கொண்டேயிருக்கிறது.....


நாங்கள்
உலகமெல்லாம் சுற்றி
பயணித்து வந்தாலும்
உலகம் கற்றுகொடுத்த நீங்களோ
இன்னமும் அந்த
பள்ளி சுவர்களுக்குள்ளேயே...

"ஒரு இரண்டு இரண்டு
இரு ரெண்டு நாலு
மூவிரண்டு ஆறு
நாலிரண்டு எட்டு"

என்று
கத்திக்கொண்டிருப்பதை காணும்போதும்


"எம் பையனுக்கு
ஏதாவது
வேலை வாங்கி கொடுப்பா!"
என்று
எங்களிடமே கெஞ்சும்போதும்

சாலையில் எங்கேனும்
சந்தித்துக்கொள்ளும் போது
பைக்கில் இருந்துகொண்டே
நாங்கள் சொல்கின்ற
அலட்சியமான வணக்கத்திற்கும்
பதறிப்போய்
தனது சைக்கிள் விட்டு இறங்கி
பதில் சொல்லும் மரியாதையை
நினைக்கும்போதும்...

மனசுக்குள்
நெருடத்தான் செய்கிறது!
பால்கார பையனை
ஏக்கத்தோடு பார்க்கின்ற...
முதியோர் இல்லவாசிகள் போல...



நீங்களும் சட்டென்று கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யாராவது ஒருவரை நினைத்துக்கொள்ளுங்கள்.



- ரசிகவ் ஞானியார

Monday, September 04, 2006

இவர்கள் காதலித்தால் IV

அரசியல்வாதியின் காதல்கவிதை



என் தொகுதியைச் சார்ந்த
காதலியே!


என்னைக் காதலித்தால்

ஆயுள் முழுவதும்
அன்பை
இலவசமாக தருகின்றேன் ...

உனக்கு மட்டும்
எப்பொழுதும்
இதயத்தில் இட ஒதுக்கீடு ...


இது
தேர்தல் வாக்குறுதி அல்ல
ஒரு
தேவதைக்கான வாக்குறுதி !

நீ
பாட்டணியில் அரியர்ஸ் வைத்தாலும்
பரவாயில்லையடி !
நம்
கூட்டணியை மட்டும்
கலைத்துவிடாதே !

தோளோடு தோளிடித்து பழகிவிட்டு
வைகோவைப்போல..
விட்டுப்போய்விடாதே!

எதிர்கட்சியோடுயெல்லாம்
எதிர்த்துப்பேசுகின்றேன்
நீ
எதிரில் வந்தால்தான்
எதுவுமே பேசமுடிவதில்லை

தயவுசெய்து
சட்டசபையில் வந்து
எனக்கு முன்னால் அமருவாயா.. ?

நான் என்
காதலைச் சொல்கின்றேன்

- ரசிகவ் ஞானியார்

Friday, September 01, 2006

இவர்கள் காதலித்தால் III

இவர்கள் காதலித்தால் I

இவர்கள் காதலித்தால் II



கிரிக்கெட் வீரனின் காதல் கவிதை




நீ பார்வையாளராக
வந்தாலே போதுமடி எனக்கு
பார்வையே தேவையில்லை

உன்
காதலன் என்ற
கேப்டன் பொறுப்பை ஏற்றபிறகு
டார்லிங்கே நான்
டக்அவுட் ஆகிவிடுகின்றேன்

நன்றாக
கிரிக்கெட் விளையாடத் தெரிந்தாலும்
உன்
கண்கள் வீசும்
பந்து வீச்சில் மட்டும்
நான்
அவுட் ஆகிவிடுகின்றேனடி

உனது
ஒவ்வொரு சிரிப்புக்கும்
சதம் அடிப்பேன்..

நீ
பிரிந்துவிட்டால் என்னால்
4 கூட அடிக்கமுடியாது.

நம் காதலுக்கு
தடைபோடுவது உன்
தந்தையாக இருந்தாலும்
சிக்ஸர் அடித்துவிடுவேன்.


நம்
விழியிரண்டும்
விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது ,
நோபால் சொல்லி
நோகடித்த
உன் தந்தையென்ன
அம்பெயரா?

பெண்ணே
கிரிக்கெட் வீரனை
கிறுக்குபிடிக்க வைத்துவிடாதே!
மைதானத்தில் ஓடியவனை
மயானத்தில் படுக்க வைத்துவிடாதே!


என்னைக்
கழட்டிவிட்டுவிடாதே கண்ணே நான்
கங்குலி அல்ல..

ஒண்டே மேட்ச்சில்
தோற்றாலும் பரவாயில்லை
பெண்ணே கிடைக்குமா?
காதல் என்னும்
வேர்ல்டு கப்..



- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு