Sunday, September 28, 2008

பெங்களுரு புகைப்படக் கண்காட்சி

பெங்களுரில் பாரதீய வித்யாபவனில் கடந்த 3 நாட்களாக 26-27-28 குழும நண்பர் இலட்சுமணன் மற்றும் அவருடைய நண்பர்களான பிவி - அருள் ஜெகதீஷ் - சுரேந்தர் ஆகியோர்களின் புகைப்படக் கண்காட்சி திலீப் என்ற நண்பரின் உறுதுணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சாப்ட்வேர் துறைகளில் இருந்தாலும் இந்த இளைஞர்களுக்கு எப்படி இந்த அளவுக்கு புகைப்பட ஆர்வம் இருக்கின்றது என்பது ஆச்சர்யமாக இருக்கின்றது. கைதேர்ந்த புகைப்படக் கலைஞரை ஒத்த புகைப்படங்களை இவர்களகது கேமிராக்கள் படம்பிடித்துள்ளன்.

புகைப்படங்களுக்காக ஒவ்வொரு இடமாய் தேடிச் சென்று இவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றது. நம் கண்களுக்கு வெறும் காட்சியாய் தெரிபவைகள் இவர்களுக்கு கலைகளாகத் தெரிகின்றது.

இந்த இளைஞர்களின் முயற்சிகள் வெற்றி பெற பாராட்டுக்கள். அவர்களது புகைப்படங்களுள் சில:

படம் 1



விழித்திரையின் அடியில்
குழுமியிருக்கும் நீர்த்துளிகள்
இந்தப் புன்னகையை
போலியாக்குகின்றது


படம் 2




இந்தப் புன்னகைக்கு
குடிசையும் தெரியாது
கோபுரமும் தெரியாது


படம் 3



பட்டாம்பூச்சிகளின்
பாதுகாவலில்
பாம்புகள் மேய்ந்துகொண்டிருக்கின்றது


படம் 4



மாட மாளிகைகளில்
வசித்தாலும்
இறுதிப் பயணத்தில்
ஒரு செங்கலைக் கூட
கொண்டு செல்ல முடியாது


படம் 5



எதிர்கொள்ளாதவரை
பிரச்சனைகள்
பிரச்சனைகளாகவே இருக்கின்றன


-ரசிகவ் ஞானியார்

Sunday, September 21, 2008

மென்தமிழ் - புரட்டாசி - 2008

வணக்கம் நண்பர்களே,

புதிதாய் துவங்கிய இதழுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த ஊக்கம் எங்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதோ இந்த மாதத்திற்கான இதழ்.உங்கள் மேலான விமர்சனங்களுக்கு காத்திருக்கின்றோம்.

மென் தமிழ் ஆசிரியர் குழுவிற்காக

(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா,எழிலன்பு)

Saturday, September 20, 2008

வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா?




வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?

எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.

யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?


பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?


அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.


இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.


'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்'
- ரோகஸ் நாக்பால், ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா


'தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.'
- விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.


ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.

இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

- ரசிகவ் ஞானியார்

Thursday, September 11, 2008

அன்பென்றே பெயர்


என் மீது படர்ந்திருக்கும்
உன் கோபங்கள்...
எப்பொழுதாகினும் விலகிவிடும்!
விலகும்வரை
நீயிருக்கும் பட்டினிதான்
நம் காதலின் வெற்றி!

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு