Saturday, May 07, 2005

ஆ ஆ ஆ பா..ம்..பு

1998 ம் வருடம் நான் படித்த சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் ஆலமர நிழலில் ( போதிமரம் ) ஒரு மதிய இடைவேளைக்கு முன் பீரியடை கட் அடித்துவிட்டு நான், பசுலுத்தீன் என்ற எனது நண்பன் மற்றும் நண்பர்களுடனும் உலக பொருளாதாரத்தைப்பற்றி ( வெட்டிப்பேச்சு ) பேசிக்கொண்டிருந்தபொழுது ,

ஒரு பாம்பு ஒன்று புதரிலிருந்து வெளியேவர எல்லோரும் பதறி எழுந்து பின் சுதாரித்து கீழே கிடந்த கல்லெடுத்து அடித்தே கொன்றுவிட்டோம்.

"டேய் இந்த பாம்பை எடுடா " இது பசுலுத்தீன்

'எதுக்குடா " நான்

"டேய் அவ வண்டி கேரியரில வைப்போண்டா.. இப்ப அந்த பொண்ணு சாப்பாடு டிபனை எடுக்க வர்ற நேரம் ..சீக்கிரண்டா!"

உடனே அந்த செத்துபோன பாம்பை எடுத்து அந்த பெண்ணின் வாகனத்தின் கேரியரில் வைத்துவிட்டோம்.
" டிரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் "

இதோ மதிய இடைவேளை மணி அடித்துவிட்டது. ஒவ்வொருவராய் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள். அந்தப்பெண்ணும் வருகின்றாள் கூடவே தோழிகளும்.
நாங்கள் கவனிப்பதை கண்டவுடன் அந்தப்பெண் மேலும் பேச்சின் சுவாரஸ்யத்தையும் சிரிப்பையும் அதிகப்படுத்திக்கொண்டே கொஞ்சம் சிரித்து விழிகளை உருட்டி
( அட வழக்கமான பந்தாதாங்க )தனது வாகனத்தின் அருகே வந்துவிட ..
நாங்கள் க்ளைமாக்ஸை எதிர்பார்த்துக்கொண்டே இருந்தோம்..
கையிலிருந்த சாவியை கேரியரின் பக்கம் கொண்டுசெல்கின்ற சமயம் கவனித்துவிட்டாள் அவளது தோழி ...

"ஏய் பாம்புடி" அலறினாள்

"ஆ ஆ ஆ பா..ம்..பு"

உடனே இவள் பதறிபோய் பயத்தில் கத்திவிட்டாள்.
அவளது விழியெல்லாம் வெளிறிப்போய்விட்டது
மதிய இடைவேளையில் வெளியேறிக்கொண்டிருந்த ஆசிரியர்கள் - மாணவர்கள் எல்லோரும் சத்தம் வந்த திசையை நோக்க,

உடனே நாங்களும் இதுதான் சமயம் என்று ஓடிப்போய் யாரும் அது செத்தபாம்பு என கவனிக்கும் முன் பசுலுத்தீன் அதனை எடுத்து ஒரு சுழற்று சுழற்றி ( ஹீரோதனத்தை காட்றானுங்கோ) பக்கத்தில் உள்ள முட்புதருக்குள் வீச பின் எல்லோரும் சேர்ந்து கல் வீசத்தொடங்கினோம்.

பாம்பு செத்துவிட்டது ( ஹி ஹி ஹி இரண்டாம் முறையாக )
உடனே அந்தப்பெண் பயத்தில் நெருங்கி வந்து "தேங்க்யு" சொல்ல

"ஜெயிச்சுட்டோமுங்கோ " ( கத்த வேண்டும் போல இருந்தது )
" யாரும் சிரிச்சி தொலைச்சிறாதீங்கடா ...மானம் போயிரும்டா"
எங்களுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. அவ்வளவு பந்தாக பேசிக்கொண்டு வந்த அந்த பிகர் பயந்து போய் அலறியது ரொம்ப சிரிப்பாக இருந்தது( இதுவரைக்கும் அந்த பெண்ணுக்கு உண்மை தெரியாதுங்கோ இந்த பகுதியை அவளோ இல்லை அவளது தோழிகளோ பார்த்தால் தொலைந்தோம் நாங்கள்
- அட யாரும் போட்டு கொடுத்திறாதீங்கப்பா )
- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு