Friday, May 27, 2005

கடலை செய்யும் நேரம் இது

2001 ம் ஆண்டு எம்.சி. ஏ இண்டாம் ஆண்டில் நான் கடைசி பெஞ்சில் இருந்து ஒரு கவிதை எழுதி அனுப்ப அதனை எல்லோரும் படித்துவிட்டு சிரிப்புகளுடனும் விமர்சனங்களுடனும் கவிதையை திருப்பி அனுப்பிவிடுவார்கள்;. இதோ ஒரு கவிதை

-------------------------
-------------------------
-------------------------
-------------------------
நீண்ட மௌனங்களின்...
எதிரி!


காற்றே புகாத இடத்தில்...
நீரே இல்லாத நாட்டில்...
கடலைக்கு மட்டும்...
அனுமதி கொடுங்கள்!
காற்றும் நீரும்
முக்கியமாய் படாது!


-கடலை
மூன்றே எழுத்துகளில்
முப்பதாயிரம் அர்த்தங்கள்!

-கடலை
கல்லூரி மாணவர்களின்
தேசியகீதம்!

இதயத்தின்
அடிப்பாகத்தினிலே
அமிழ்ந்து கிடக்கின்ற
தூங்கிக் கொண்டிருக்கிற...
சந்தோஷத்தை
தண்ணீர் தெளித்து எழுப்புகிறது!


கல்லூரியின்
செலபஸ்ஸை விடவும்
சிறப்பு வாய்ந்த பாடம்
இந்த
வார்த்தைக்குள்ளே
வழிந்துகொண்டிருக்கிறது!

கழுத்துப்பக்கம்
கடப்பாறையை நீட்டினாலும்...
கடலையை நிறுத்தமுடியாது!

Kadalai is
injurious to health

பாம் வைத்து...
பிரிக்க நினைத்தாலும்
வெடித்த பிறகும்
வறுக்கப்படும்!

கல்லூரி காலத்தை
நினைத்துப்பார்க்கின்ற
எல்லா மாணவர்களின்
மனசுக்குள்ளும் வந்துபோகின்ற...
முதல்வார்த்தை!

கடலை ஒரு
வித்தியாசமான அணு!

ஆக்கலாம்
அழிக்கலாம்
ஒருவகை கடலையை
இன்னொருவகை கடலையாக
மாற்றலாம்!

மாணவர்களின்
ஓய்வு நேரத்தைப் பார்த்து
ஓடிவரும்!

என்டரன்ஸ் எழுதாமலேயே...
கோட்டா கொடுக்காமலேயே...
ஆர்ட்ஸ்-என்சினியரிங்
மெடிக்கல் கல்லூரியில் வந்து...
மெதுவாய் இடம் பிடித்துக்கொள்ளும்!

உணவு
உடை
இருப்பிடம்
கடலை!

-கடலை-
மேகமூட்டம்(புகை) இருந்தாலும்
மழைவராத
வித்தியாசமான
இயற்கை சூழ்நிலை!


கடலை பற்றி எழுதினால் - இந்த
காகிதம் பத்தாது!
மன்னித்துக்கொள்ளுங்கள்
முடித்துக்கொள்கிறேன்!


இந்த நேரத்தில் கூட
வறுபட்டுக்கொண்டிருக்கும் கடலைக்கு
இந்த
கவிதையை சமர்ப்பித்துவிட்டு
கிளம்பிவிட்டேன்
"கடலை செய்யும் நேரம் இது!"

____________________________



முன்பெஞ்சு - பக்கத்து பெஞ்சு கமெண்ட்ஸ்



கடலலை வந்தாலும் ஓயாது இந்தக் கடலை
(ஷ்யாம் - எம்.சி.ஏ ஏ குரூப்)


ஆதலால் கடலை சாகுபடி செய்வீர்
பயன் பெறுவீர்
(எவனோ)


கடலை போட்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் புகைந்து சாவார்
(எவளோ)


அறிவிப்பு - மன்றக்கூட்டம்

கடலை சாகுபடி பற்றிய ஒரு சிறு விளக்க உரையை அளிக்க வருகிறார்கள் நமது கல்லூரியின் கடலை மன்னர்கள்.

நேரம் : காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும்

- மணி
எம்.சி.ஏ ஏ குரூப்

கடலை போடாதீர்கள் காளையர்களே
கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்
இல்லையேல் கடத்தப்படுவீர்கள்

இப்படிக்கு

நீ கடலை போடும் பெண்ணின் அண்ணன்
(பொன் சுப்பிரமணி
எம்.சி.ஏ பி குரூப்)


அலை அலையென வரும் கடலையை
அடக்காதே
அது உன்னை
அடக்கி விடும்
அவர்களின் மத்தியில்
(கண்ணா -எம்.சி.ஏ ஏ குரூப்)

கடலை
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அது
முடிந்து விட்டாலும் என் பேச்சிருக்கும்
(ரபீக் -எம்.சி.ஏ பி குரூப்)

கடலைக்குண்டோ அடைக்குந்தாழ் அடைத்துவிட்டால்
கேட்டில் ஏறி வறுப்பர்
(ஞானி (நான்தானுங்கோ))


இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

2 comments:

Ganesh Gopalasubramanian said...

வறுக்கும் பொழுது சுடாமல்
வருத்தபின் நினைக்கையிலே
சுடுமாம் கரிப்பிடித்த கடலை

Narayanan Venkitu said...

sameeba kaalangalil indha Kadalayai pattri romba ezhudhugirargal Blogs il.

engal kaalathil kadalai kidayathu! Actualla...eppidi solluvohmnu marandhae pochu.!!

Ungal Blog Pramadham. First time enakku.

தேன் கூடு