Thursday, September 22, 2005

தலைப்பை தேடும் கவிதைகள்




இப்பொழுதும் எங்கோ ஓர் மூலையில்
இடிந்துகொண்டுதானிருக்கிறது!
இடிந்துபோனவர்களின்
இதயத்திலே
காதுவைத்துக்கேட்டேன்..
காதுகளிலும் கண்ணீர் வருகிறது!


பூமியே!
நீ எங்களை..
கைப்பிடித்து அழைத்துவந்தாய்!
இங்கே பார்
இது எஙகளை
இதயமொடித்து அழித்துச்செல்கிறதே!


எத்தனைமுறையும் வரும்
வந்தபிறகு
வீதிகள் வெறிச்சோடும்..
சாதிகள் செத்து ஓடும்..

இதனுடைய
ஒற்றை நடுக்கத்தில்..
வாசமாகிப்போனவர்களை விட
நாசமாகிப்போனவர்கள்தான் அதிகம்!

ஒருவகையில் இதனை பாராட்டலாம்
இது பிரிவனையெல்லாம் பார்க்காது
ஆம்
குஜராத்தை மட்டும்தான்..
குறி வைத்து தாக்கும்!
தமிழ்நாட்டை மட்டும்தான்..
தடுமாறச்செய்யும்!

இப்படி
பிரிவினைப் பார்த்தெல்லாம்..
பயணப்படாது!
இந்தியா முழுவதும்
எங்கு வேண்டுமானாலும் வரலாம்!
இமயத்து மக்களையும்
இரண்டே நிமிடத்தில்
குமரிக்ககடலில்
குப்புற வீழச்செய்யும்!

வீடில்லாமல்..
சட்டை கிழிசலோடு..
பிளாட்பாரத்திலே
அகதிகளாக..
அனாதைகளாக..
மற்றும்
இதயமில்லாமலும்
எத்தனை எத்தனை பேர்?
இப்படி மயக்கி விட்டதே!

மீளவும்முடியவில்லை
மீண்டலர்கள்..
வாழவும் முடியவில்லை!


இதுவும் ஒருவகையில் போர்தான்
எதிர்த்து வந்தவர்கள்
எல்லோரையும்
நிராயுதபாணிகளாக..
நிற்கவைத்துவிடும்!

இதை நிறுத்தவே முடியாதா..?
ஒருவேளை
கதவுகள் அடைத்துவைத்திருந்தால்
காப்பாற்றப்படுவோமோ?
இல்லை இல்லை
அரண் கட்டி வாழ்ந்தாலும்
அடிச்சுவட்டை பெயர்த்துவிடும்!

பள்ளி மாணவர்களின்
பாடப்புத்தகங்கள் கூட
இப்பொழுது
இதனடியில் சிக்கிக்கொண்டது!

பொறுமையாயிருக்கிறாய் - வாழ்க்கையை
கருமையாக்கிவிடுகிறாய்!
உன்னை..
இருட்டு என அழைக்கட்டுமா?

வாழவும் வைக்கிறாய் - இதயத்தை
வீழவும் வைக்கிறாய்!
உன்னை..
வீழ்ச்சி என அழைக்கட்டுமா?

அழகையும் தருகிறாய் - எங்களுக்கு
அழுகையும் தருகிறாய்!
உன்னை..
சோகம் எனச் சொல்லட்டுமா..?


அடுக்குமாடியிலும் குடியேற்றுகிறாய் - சிலநேரம்
அஸதிவாரத்தையும் ஆட்டுகிறாய்1
உன்னை..
அஸ்தி என அழைக்கட்டுமா?

நீ
உயிர்களுக்கு
உத்திரவாதம் அளிக்க மறுக்கிறாய்!

நீ
மனசை சிலநேரம்
மரணமாக்குகிறாய்!

நீ
சோகங்களை மட்டும்
சொந்தக்காரனாக்குகிறாய்!

இங்கே
மனிதர்கள்
மனிதர்களை தேடுகிறார்கள்!

இங்கே
முனகல் சப்தம் கூட
முக்கியத்தவம் பெறுகிறது!

இதை
நினைத்துப்பார்த்தால்
கனவுகளுக்குக் கூட..
காய்ச்சல் வருகிறது!


இந்தச் சீற்றத்தால்
அழிந்துபோயிருக்கும்..
அழிந்துகொண்டிருக்கும்..
அழியப்போகும்..
அத்தனைப்பேருக்கும்..
நிவாரணநிதியாக அந்த
கவிதையை..
கண்ணீரஞ்சலி செய்கிறேன்!

இதயங்களையெல்லாம் இப்படி..
இடித்துக்கொண்டிருக்கும் இந்தப்
பாழாய்ப்போன காதலுக்கும்..
பூகம்பம் என பெயரிட்டுவிட்டு
கவிதையை முடிக்கிறேன்!

வித்தியாசமாய் இருக்கட்டுமென
முடித்தபிறகு ஒரு..
முன்னுரை:
குஜராத் பூகம்பத்திற்கும்
இந்தக் கவிதைக்கும்..
எந்தச் சம்பந்தமும் இல்லை!

-ரசிகவ் ஞானியார்

2 comments:

தாணு said...

காதல் போயின் சாதல் என்பதும், கடலருகே போயின் சாதல் என்பதும் பிரிதுணரமுடியா பேரவலங்களே!

Anonymous said...

"kaanbathai ellam pilai endru kondaal vaala mudiyaathu nanba...."

ethirpaarpugal theernthupogum pulliyil;
emaatramum arthamatru pogum;

தேன் கூடு