Thursday, September 29, 2005

கல்லறைக்கவிதைகள் - III

விவசாயியின் கல்லறை

அறுவடைக்கு
ஆளில்லையே..?


கிரிக்கெட் வீரனின் கல்லறை

இவன் இறந்துவிட்டதை
ரீபிளே (Replay) செய்தெல்லாம்
பார்க்க முடியாது

தமிழனின் கல்லறை

எமனிடம்
ஆங்கிலம் பேசி
அகப்பட்டுக்கொண்டான்

காந்தியின் கல்லறை

ஆறடிக்குள்
ஒரு தேசம்


பாரதியின் கல்லறை

கத்திப்பேசாதீரகள்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறான்.


நேருவின் கல்லறை

எப்படி வந்தது
இந்தக்கல்லறையிலிலிருந்து மட்டும்
ரோஜா வாசம்..?

அன்னை தெரசாவின் கல்லறை

ஒரு
மனிதநேயம் இங்கே
மௌனம் அனுஷ்டிக்கிறது.
யாரும் அழுதுவிடாதீரகள்
அரவணைக்க வந்திடுவாள்

டயானாவின் கல்லறை

டோடுயோடு சென்று
வாடிப்போய்விட்டாள்


ராணுவவீரனின் கல்லறை

எதிரிநாட்டுப்பெயரை யாரும்
உச்சரித்துவிடாதீர்கள்
எழுந்துவிடப்போகிறான்

குடிகாரனின் கல்லறை

பட்டை அடித்தவன்
பாடையில் போகிறான்

பால் வியாபாரியின் கல்லறை

இவன் வாயில் ஊற்றிய
கடைசி நேர பாலில்
கலப்படம் இல்லை


செய்தி வாசிப்பாளரின் கல்லறை

வாழ்க்கை இத்துடன்
முடிவடைகிறது
வணக்கம்

-ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு