Thursday, September 08, 2005

பெட்ரோல்...பெற்றோர் திருடா..?



ஏவுகணைச்சப்தத்தில்
தாயின் கருப்பையிலிருந்து
வெடித்து விழுந்தேன்
விழித்துப்பார்க்கையில்;...
நான்விளையாடி மகிழ..
என்னைச்சுற்றி...
ஏவுகணைகள்!

தாலாட்டுக்குப்பதிலாக ...
ஒப்பாரிச்சப்தம்!

பாக்தாத் வீதியில் -உணவு
பொட்டலம் வாங்கச்சென்றதால்
பாட்டிமட்டும் உயிரோடு!

பெட்ரோலுக்காக வந்து- என்
தாய்ப்பாலை ஏன் ...
தட்டிப்பறித்தீர்கள்?

பெட்ரோலையும் என்...
பெற்றோரையும் திருடியது போதும்.!

இதோ
வீசுகிறோம்.....
வெள்ளைக்கொடி!
போரையும் எங்கள்...
பசியையும் நிறுத்துங்களேன்.........?


-ரசிகவ் ஞானியார்

1 comment:

Chandravathanaa said...

கருத்தான கவிதை

தேன் கூடு