Saturday, September 10, 2005

பசி




தூரத்தில்
குப்பைப் பொறுக்கும் சிறுமி!

ஏதாவது கவிதை வருமா ..?
யோசித்து பார்த்தேன்..

கவிதை
இலக்கியப்பசியை தீர்க்கலாம்..
இவள் பசியை தீர்க்குமா?

கவிதை எழுத வைத்திருந்த..
காகிதங்களை கசக்கி எறிந்தேன்!
நம்பிக்கையிருக்கிறது..
அவள் வயிற்று பசி தீர்க்கும்.!


-ரசிகவ் ஞானியார்

2 comments:

தாணு said...

பசிக்காக பிச்சையெடுக்காமல் பேப்பர் பொறுக்கும் தன்னம்பிக்கையைப் பாராட்டலாம்

Anonymous said...

pakkanggalil illa nee enniya varigal;
pakkanggalaai nee kodutha pakkuvam sonnathu...vaalga

தேன் கூடு