Monday, September 05, 2005

காதல் வேண்டும்



காவியமாய் எழுதப்படும் காதல் வேண்டும் - உனக்காக
காத்திருந்து காத்திருந்தே சாதல் வேண்டும்!
செவியெல்லாம் உன்பெயரை ஓதல் வேண்டும் - நீ
செல்லமாய் சிணுங்கிவிடும் மோதல் வேண்டும்!

உறங்காமல் நினைக்கின்ற முத்தம் வேண்டும் - உன்
உயிர்ஜீவன் அவையனைத்தும் மொத்தம் வேண்டும்!
கடைவிழியில் கரைகின்ற பித்தம் வேண்டும் - உண்மை
காதலுக்கு நிச்சயமாய் யுத்தம் வேண்டும்!

தெரியாமல் பார்க்கின்ற கள்ளம் வேண்டும் - காதல்
தெரிவிக்கத் திடப்படும் உள்ளம் வேண்டும்!
அறியாமல் பூக்கின்ற பூக்கள் வேண்டும் - உனை
அறிந்தறிந்து கவியெழுதும் பாக்கள் வேண்டும்!

வெகுநேரம் உன்னழகை ரசிக்க வேண்டும் - நாம்
வெண்ணிலவில் தனியாக வசிக்க வேண்டும்!
உணவிருந்தும் தினம்வயிறு பசிக்க வேண்டும் - நீ
ஊட்டிவிட்டால் விஷம் கூட ருசிக்க வேண்டும்!

உன்னோடு மட்டுமென் உறவு வேண்டும் - இனி
உனக்காகவே நான் உருக வேண்டும்!
விடியாமல் போகின்ற இரவு வேண்டும் - மடி
வீற்றிருக்கும்போதே நான் இறக்க வேண்டும்!


- ரசிகவ் ஞானியார் -

6 comments:

Ramya Nageswaran said...

என்னா ரசிகவ்? காதல் வந்திருச்சா?? ரொம்ப உருக்கமா எழுதியிருக்கீங்க?

தாணு said...

காதல் வந்துவிட்டால் பித்து பிடித்தும் அலைய வேண்டும்.
கொலையும் செய்வாள் பத்தினின்னு சொல்ல வர்றீங்களா- விஷம் ஊட்டச் சொல்றீங்களே!

Anonymous said...

neena aen cinemaakku paattezhutha try panna koodaathu?

-mookku podi

Anonymous said...

காதல் வந்தால் இவை எல்லாமே வரும் என்பதை சொல்லாமலே சொல்லியிருக்கிறீர்கள்.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பன்(சரா) said...

nice rempa nalla irukku

உங்கள் நண்பன்(சரா) said...

nice and real

தேன் கூடு