Wednesday, September 14, 2005

இதுவரை எவளும்...



இதுவரை
எவளுடைய
விழிகளையும் கண்டும் – நான்
விமர்சனம் எழுதியது கிடையாது
ஆனால்
உன் விழிக்காக...


இதுவரை
எவள்
பார்த்ததற்காகவும் நண்பர்களுக்கு
பார்ட்டி வைத்ததில்லை!
ஆனால்
நீ பார்த்ததற்காக..

இதுவரை
எவள்
கடந்து சென்றதை பார்த்தும் என்
கழுத்து சுளுக்கியதில்லை?
ஆனால்
நீ கடந்ததற்காய்...


இதுவரை
இந்த இதயம்
எவள்
அழகை கண்டும்
ஆக்ஸிடெண்ட் ஆனதில்லை
ஆனால்
உன் அழகை கண்டு...


இதுவரை
இந்த இதயம்
எவள்
சிரித்ததற்காகவும்
செத்துப்பிழைத்தது கிடையாது?
ஆனால்
நீ சிரித்தற்காக..


இதுவரை
இந்த இதயத்தை
எவள்
வசிப்பதற்கும்..
வாடகைக்கு விட்டதில்லை?
நீ வசிப்பதற்காக...

இதுவரை எவள்
முகத்தை கண்டும் நான்
மகாபாரதம் எழுதியதில்லை
ஆனால்
உன் முகத்தை கண்டு…


இதுவரை
எவள் சென்ற
பாதச்சுவட்டிலும் - நான்
படுத்து புலம்பியதில்லை!
ஆனால்
நீ சென்ற திசையிலே…

இதுவரை
எவளை கண்டும்
நான்
ஆகாரமில்லாமல்
அலைந்ததில்லை!
ஆனால்
உன்னைக்கண்டு!


இதுவரை
எவளுக்காகவும்
………………
………………
………………
இப்படி
வரிகள் தெரியாமல்
விழித்தது கிடையாது!
ஆனால்
உனக்காக..


இதுவரை
எந்த வீரப்பியும்
என்
இதயத்தை
கடத்தி சென்று
காதல் காட்டில் விட்டதில்லை?
ஆனால் நீ..

இதுவரை
எவளும் என்
இதயத்தை
ஆசையாய் எட்டிப்பார்த்துவிட்டு
ஆசிட் ஊற்றியதில்லை!

ஆனால்
நீ மட்டும்தானடி..




-ரசிகவ் ஞானியார் -

1 comment:

தாணு said...

இத்தனைக் கொடுமைகாரிக்காக மனசைத் தளர விடாதீங்க, ஊர்ப் பக்கம் நல்ல நாட்டுக் கட்டையா பார்க்கச் சொல்லலாம்!!

தேன் கூடு