Tuesday, September 13, 2005

நீ எனக்கு வேண்டாமடி!

சைனாவுக்கு போகவேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும்
என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும் ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

நான் செலவுக்கு
பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவைக்கும்
நீ எனக்கு வேண்டாமடி!

- ரசிகவ் ஞானியார்

4 comments:

Anonymous said...

Enna Gnani anna rendavathu thabba post panni irukeenga

லதா said...

இது இரண்டாவது அவளுக்காக எழுதப்பட்டதா? :-)

Anonymous said...

super...... super point

Anonymous said...

Gnaniyaareyyyyy ennavay appadi solli potteeru....

தேன் கூடு