Sunday, August 21, 2005

பல்லி விட்ட குரங்கு



அந்தப்பையன் இன்று அவமானப்படப்போகிறான் எனத் தெரியாமல் இன்று வழக்கம் போலவே கல்லூரி ஆரம்பித்தது.

1998 ம் வருடம் ஒரு மதிய வேளை வகுப்பறை...வருகிறார் வழக்கமான தனக்கே உரிய தாடியும் ஜிப்பாவுமாக கம்பீரமாக வருகிறாhர் ஜாபர் சார்.. பராக் பராக்

ஸ்டேடிஸ்டிக்ஸ் - ல் ஒரு தலைப்பை கரும்பலகையில் எழுதிவிட்டு ஒரு கணக்கை எழுதிக்கொண்டிருக்கிறார்..

"ஷ்ஷ்..அசன்...ஷ்ஷ்..அசன்...ஷ்ஷ்.. டேய்! டேய்! நாயே! எவ்வளவு நேரண்டா கத்துறது? "- கடைசி பெஞ்சிலிருந்து முன் பெஞ்சிலிருந்த அசனை அழைத்தேன்

லேசாக பயந்த படியே ஜாபர் சார் கவனித்துவிடுவாரோ என்ற பயத்தில் திரும்பினான்.

"சத்தம் போடாதடா பார்த்தா கத்துவார் என்னடா வேணும்-" கூட்டுக்குடும்பத்தில் புதிதாய் திருமணம் ஆன தம்பதிகள் கிசுகிசுப்பதைப்போல கிசுகிசுத்தான்

கையிலிருந்த இரப்பர் பல்லியை அசனிடம்; கொடுத்தேன். அது அப்படியே அசல் பல்லியை போலவே இருந்தது.

"எதுக்குடா எங்கிட்ட கொடுக்கிற?" - மறுபடியும் கிசுகிசுத்தான்

"என்னப்பா சத்தம் ...போசாதீங்கபா ஒழுங்கா எழுதுங்க" - ஜாபர் சார் எழுதியபடியே அதட்டுகிறார்


"டேய் அந்தப் பல்லிய முதல் பெஞ்சில இருக்கிற முரளி பக்கத்தில் வச்சிருடா வேற ஒண்ணும் பண்ண வேண்டாம் - " கொள்ளைக்கூட்டக்காரனாய் திட்டமிட்டேன்.

"சரி சரி "- வேண்டா வெறுப்பாய் கூறினாhன்

மெதுவாய் அதை அதோ அப்பாவியாய் எழுதிக்கொண்டிருக்கும் முரளியின் நோட்டு அருகே அவனுக்கு தெரியாமல் வைத்துவிட்டு அவனும் எழுதத் தொடங்கி விட்டான்.நானும் எழுதத்தொடங்கி விட்டேன்

அமைதியாய் போகிறது சில நொடிகள்.

தட் தட் தட் சத்தம் வேகமாய் கேட்கிறது

என்னடா என்று திரும்பி பார்த்தால் ஜாபர் சாரேதான் அந்த பல்லியை நிஜப்பல்லி என நினைத்து வேகமாக அடித்துக்கொண்டிருக்கிறார் ( எதிர்பார்த்ததுதானே..? )

தலைதூக்கி பார்த்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் எல்லோரும் நிலை உணர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்..

மாணவிகளும் சிரிக்க ஆரம்பித்தவுடன் அவருக்கு கோபம் தலைக்கு ஏறியது.

தான் ஏமாளியாக்கப்பட்டுவிட்டோமே என்ற கோபத்தில் யார் பக்கத்தில்; அந்த பல்லி இருந்ததோ அந்த பையனை பார்த்து திரும்பினாhர்

"டேய் எழுந்திருடா.." - அவனோ நிலைமை தெரியாமல் அவனும் அந்த காட்சியைகண்டு சிரித்துக்கொண்டிருந்தவன் திடுக்கிட்டான்

"வெளிய போடா க்ளாஸை விட்டு வெளிய போடா முதல்ல" - கத்தினார்

"சார் சார்.." - கெஞ்சாத குறையாக அவன்


"க்ளாஸை விட்டு வெளிய போடா..அப்புறமா வந்து என்னை டிபார்ட்மெண்ட்ல வந்து பாரு" -அவரின் அந்த கோபத்தை இதுவரை பார்க்கவில்லை

அந்தகோபத்தில் அவர் கத்தும் போது அவனால் எதிர்த்து எதுவுமே பேச முடியவில்லை.

முரளி அவமானப்பட்டு கறுத்த முகத்தோடு என்னை காட்டிக் கொடுக்காமல் வெளியேறினான்.

நண்பா!
நீ
கறுத்த முகத்தோடு சென்றாயே..?
அதில்தானடா
நம் நட்பு ...
வெளிச்சமானது!


அவரிடம் சென்று அவன்தான் மன்னிப்பு கேட்டானே தவிர என்னை காட்டி கொடுக்கவேயில்லை.

ஏனோ தெரியவில்லை அந்த சூழ்நிலையில் கிண்டலாக தெரிந்ததெல்லாம் இப்பொழுது ஞாபகப்படுத்தி பார்க்கும் போது வலிக்கத்தான் செய்கிறது. காலம் கடந்த வலி.




- ரசிகவ் ஞானியார் -

No comments:

தேன் கூடு