Monday, August 15, 2005

கானல்



விளம்பரப்படுத்தினாலும்
கண்டுபிடிக்க முடியாத...
வீதிகளைக்கொண்ட கிராமத்தில்
எந்த டீக்கடையிலிருந்தோ
ஒலித்துக்கொண்டிருக்கிறது...
தேசியகீதம்!

குப்பன் முதல்
வேலுச்சாமி வரை
வேட்டி அசையாமல் நின்றனர்!

அட!
இந்திய வரைபடத்தில்
தேடியும் கிடைக்காத
கிராமத்தில்கூட
தேசபக்தியா?
பாரதம் பரவாயில்லை!

தேசியகீதம் முடிகிறது
கூட்டம் கலைகிறது
சல்யூட் அடித்துவிட்டு திருமிபினேன்.

வேலுச்சாமிக்கு
வெள்ளிதட்டு!

குப்பனுக்கு
தனி டம்ளரில்
தண்ணீர்!

யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்
ஒரு நகைச்சுவை:

இந்தியாவுக்கு
ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் கிடைத்ததாம்



-ரசிகவ் ஞானியார் -

No comments:

தேன் கூடு