Friday, March 02, 2007

ஒரு பத்தினி காத்திருக்கின்றாள்

Photobucket - Video and Image Hosting

இருட்டு ,ஆசை, தனிமை, பணம்
இவற்றின் உந்துதலில்
எச்சில் இலைகள் நோக்கி ...
எட்டி சென்றேன் !

சிறு மணற்திட்டில் கால் இடற
தடுக்கி திரும்பி
திடுக்கிட்டேன்...
அது
மணற்திட்டா?
மனைவியின் கர்ப்பப்பையா?

கத்தரிக்காய்க்காக
காலணா குறைக்கப் போராடும் ...
மனைவியின் பேரம் ,
விலைபேசாமல் முடிந்த இந்த
வியாபாரத்தில் ஏனோ உறுத்துகிறது?

விலைமாதுவின் கூந்தலில்
முத்தமிட முயன்றபொழுது ...
மனைவியின் தலையில் சத்தியமிட்ட
முதல் இரவு ஞாபகம் வந்தது!

விலைமாதுவின் பணம் தடவிய
வருடல்கள்.. .
முகம் தடவிய மனைவியின்
மருதாணிக் கைகளுக்கு முன்னால்
நெருடலாகத்தான் இருந்தது!

கலவி கொள்ள முயன்றபொழுது
நேற்று தொலைபேசியில்
"ப்பா..ப.லூ..னு.. "

குழந்தை வாங்கிக் கேட்ட
பலூன் ஞாபகம் வந்தது !

உறுத்தலோடு திரும்பிவிட்டேன்
ஊரில் ஒரு பத்தினி
காத்திருக்கின்றாள்..


- ரசிகவ் ஞானியார்

6 comments:

கவிதா | Kavitha said...

கவிதை அருமை..

ஆனா..தேடலுக்கும், தேவைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது..
தேவையோடு முடிவடையும் எதற்குமே இந்த சிந்தனை கவிதை தேவையிருக்காது..

புரியலனா..விட்டுடுங்க :)))))

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//அது
மணற்திட்டா?
மனைவியின் கர்ப்பப்பையா?

கத்தரிக்காய்க்காக
காலணா குறைக்கப் போராடும் ...
மனைவியின் பேரம் ,
விலைபேசாமல் முடிந்த இந்த
வியாபாரத்தில் ஏனோ உறுத்துகிறது?

விலைமாதுவின் கூந்தலில்
முத்தமிட முயன்றபொழுது ...
மனைவியின் தலையில் சத்தியமிட்ட
முதல் இரவு ஞாபகம் வந்தது!

விலைமாதுவின் பணம் தடவிய
வருடல்கள்.. .
முகம் தடவிய மனைவியின்
மருதாணிக் கைகளுக்கு முன்னால்
நெருடலாகத்தான் இருந்தது!
//

அருமை ரசிகவ். நிறைய காதல் கவிதைகளுக்கு இடையில் இது போன்ற கவிதைகளை காண்பது மகிழ்ச்சி.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// கவிதா said...
கவிதை அருமை..

ஆனா..தேடலுக்கும், தேவைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது..
தேவையோடு முடிவடையும் எதற்குமே இந்த சிந்தனை கவிதை தேவையிருக்காது..//


நன்றி கவிதா

புரியுது ஆனால் புரியல :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அருமை ரசிகவ். நிறைய காதல் கவிதைகளுக்கு இடையில் இது போன்ற கவிதைகளை காண்பது மகிழ்ச்சி. //

தொடர் விமர்சனத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி ரவிசங்கர்

Anonymous said...

\\கத்தரிக்காய்க்காக
காலணா குறைக்கப் போராடும் ...
மனைவியின் பேரம் ,
விலைபேசாமல் முடிந்த இந்த
வியாபாரத்தில் ஏனோ உறுத்துகிறது?

விலைமாதுவின் கூந்தலில்
முத்தமிட முயன்றபொழுது ...
மனைவியின் தலையில் சத்தியமிட்ட
முதல் இரவு ஞாபகம் வந்தது!//
அருமை ,அருமை , அருமை

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி நர்மதா

தேன் கூடு