Thursday, March 01, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 6)

இதன்பிறகு நாற்புரமும் பரபரப்பு உண்டாகிற்று. சிறிது சிறிதாகப் புதிய தொண்டர்கள் சேர ஆரம்பித்தனர்.. ஆனால் கூடவே போலிஸ் கண்காணிப்பும் அதிகரிக்கத் தொடங்கியது.

தொண்டர்களை தனித்தனியே பிரித்து வௌ;வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான முயற்சி செய்தோம். ஆனால் அவ்வளவு இடங்களை வாடகைக்கு எடுக்க காசு?

அவர்களுக்கு சாப்போடு போடுவதற்கு உண்டான பணத்தை புரட்டுவதற்கே சிரமப்படுகின்றோம்.


மாணிக்தலா தோட்டத்தை புதிய தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடமான ஆக்கிவிட்டு தேவ்கருக்கருகில் ஒரு மைதானத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குண்டு தயாரிக்கும்

தொழிலைக் கொண்டு சென்றோம் குண்டு தயாரிக்கும் தொழிலில் உல்லாஸ்கர் போய் உட்கார்ந்து கொண்டான். நான் கண்ணாம்பூச்சி விளையாட்டில்தாய்ச்சி போல் தோட்டத்தில் தொண்டர்களை கவனித்துக் கொண்டேன்


பாரீன் எப்பொழுதுமே செயல்வீரன். எல்லா இயக்க மையங்களையும் மேற்பார்வை செய்வதற்காக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.


இந்த சமயத்தில் எங்கள் சகாக்களில் ஒருவன் குண்டு வெடித்து இறந்து போனான். ஆவன் மிகுந்த புத்திசாலி. எல்லாரும் அவன் மீது பாசமாய் இருந்தார்கள். அவனுடைய சாவுச் செய்தி கேட்டதும் ஓர் அதிர்ச்சி தலையிலிருந்து முதகெலும்பு வழியே இடுப்பு வழர ஊடுருவிப்போயிற்று.ஒரு குருட்டுக் கோபமும் வருத்தமும் உள்ளத்தை நிறைத்தது. மனம் ஓலமிட்டுக்கொண்டே அரற்றியது எல்லாம் நாசமாய் போகட்டும் எல்லாம் நாசமாய் போகட்டும்



என் மனதுக்குள் பலவீனத்தை உணரத் தொடங்கினேன். முழபட்டினி அரைப்பட்டினி எதிர்நோக்கும் ஆபத்துகள் அன்புக்குரியவர்களின் பயங்கரச்சாவுகள் இவற்றை எதிர்கொண்டு கடினமான பாதையைக் கடக்கத்தான் வேண்டும்


இந்தக் கரையில்லா பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றேனே. இதற்கு முடிவு எங்கே? நாங்கள் எவ்வளவு இளைஞர்களை சாவின் வாயிற்குள் படிப்படியாக தள்ளிக்கொண்டிருக்கின்றோம். மரணபயத்தை எங்கள் உள்ளத்திலிருந்து படிப்படியாக துடைத்தெறிந்து விட்டோமா? இல்லையெனில் குருட்டுத்தனமாக இந்தப்பையன்களை எங்கே தள்ளிக்கொண்டு போகின்றோம். பாதைகள் எங்கள் பார்வைக்கே கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டிக் கொண்டு வந்தது.


எதற்கும் தளர்ந்து போகாத பாரீன் கூட ஆறுதலுக்காக தனக்கு தீட்சையளித்த சாதுவுக்கு கடிதமெழுதினான் ஒரு தடைவ வங்காளத்திற்கு வந்து செல்ல வேண்டுமென்று.


அவரும் 1908 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாணிக்தலா தோட்டத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் எங்களின் செயல்முறைகளை பார்த்துவிட்டு


நீங்க மேற்கொண்டுள்ள வழி சரியில்லை உள்ளத்தை சுத்தப்படுத்திக்காம இந்தக்காரியத்துல ஈடுபட்டால் அனாவசியமாக ரத்தக்களறிதான் ஏற்படும்.

இந்த நிலைமையிலே நாட்டுக்குத் தலைமை அளிக்க விரும்புறவங்க குருட்டுத்தனமாச் செயல்படறதிலே பிரயோசனமில்லை. எதிரி;காலத்தை மறைச்சிட்டிருக்கிற திரை யார் கண்களிலேயிருந்து ஓரளவுக்காவது விலகியிருக்கோ – யார் கடவுள்கிட்டயிரந்து உத்திரவு வாங்கிக்கிட்டிருக்காங்களோ அவங்களாலதான் இந்தக்காரியத்தை சாதிக்க முடியும்.

நாடு சுதந்திரம் அடையறதுக்கு கொஞ்சம் இரத்தம் சிந்தித்தான் ஆகணும்னு நினைக்கிறது தவறாயிருக்கலாம்


ரத்தம் சிந்தாமல் நாட்டை விடுவிக்கலாம் என்பது எங்களுக்கு அரபுக்கதை மாதிரி தோன்றியது. நாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள் போல சிரித்துக்கொண்டோம். அவரைக்கேட்டோம் இது நடக்கிற காரியமா?


சாது மீண்டும் உபதேசங்கள் செய்தார்.


பாரீன் கழுத்தை சாய்த்துக்கொண்டு சொன்னான் முடியாது ஒருக்காலும் முடியாது நான் என் வேலையை விடமாட்டேன். ரத்தம் சிந்தாம நாடு விடுதலையாறதா? இது அவரோட நினைப்புதான்.


சாதுவின் பேச்சு எனக்கு பிடித்திருந்ததால் நான் இரண்டொரு பையன்களை அழைத்துக்கொண்டு அவர் பின்னே போக தயாராகிவிட்டேன்


சாது பாரீனுக்கு மீண்டும் அறிவுரை கூறினார். பாருங்க நீங்க இந்த வழியைக் கைவிடாம இருந்தா இன்னும் சில நாளிலே உங்களுக்கு ஒரு பெரிய ஆபத்து நிச்சயம் ஏற்படும்


பாரீன் கைகளை ஆட்டிக்கொண்டு சொன்னான் என்ன அயிடும்? பிடிச்த் தூக்கிலே போடவாங்க அவ்வளவுதானே அதுக்கு நான் தயாராகத்தான் இருக்கேன்.


சாது திரும்பி போகும் நாள் வந்தது. ஆனால் என் கால் தோட்டத்தை விட்டு நகர ஆரம்பித்தது. மனைவி, பிள்ளை , விடு, வாசலைத் துறந்து வந்தது கூட அவ்வளவு பெரிய விசயமாகத் தெரியவில்லை எனக்கு. ஆனால் எங்களைப் பார்த்து தங்கள் பெற்றோரின் பரிவு எதிர்பாலம் பற்றி நம்பிக்கை அதோடு உயிரின் மேல் ஆசையைக் கூட துறந்துவிட்டு வந்திருப்பவர்களை விட்டுவிட்டு எங்கே ஓடிப்போவேன்? பல நம்பிக்கைகள் ஆசைகள் அன்புகள் ஆர்வங்கள் இந்தத் தோட்டத்தோடு பிணைந்திருக்கின்றன. இதையெல்லாம் விட்டுவிட்டு எந்த நாட்டுக்கு என் குறிக்கோளைத் தேடிக்கொண்டு போவேன்.


சாது சென்ற பிறகு உடைந்த உள்ளத்தை மீண்டும் ஒட்டி எங்கள் வேலையைச் செய்ய ஆரம்பித்தோம். ஆனால் தொண்டர்கள் பெருக பெருக பணத்தட்டுப்பாடு வர ஆரம்பித்தது.


தொலைவில் உள்ள ஒரு இலட்சியத்தை குறிவைத்து அவமானத்தையும் கொடுமையையும் மௌனமாக பொறுத்துக்கொண்டிருப்பது எவ்வளவு கடினமான காரியம் என்பதை அதை அனுபவித்தவர்களைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ளமுடியாது.


நிதிச் சேர்ப்பது கடினமாகிவிட்டது. யாராவது ஒரு பணக்கார புரவலரை பிடிக்காவிட்டால் வேலையைத் தொடர்ந்து நடத்த முடியாது.

போக்குவரத்து செலவைக் குறைப்பதற்காக குண்டு தொழிற்சாலையையும் கல்கத்தாவிற்கு கொண்டு வரப்பட்டது. தொண்டர்களை இன்னொரு இடத்தில் தங்கவைத்துவிட்டு புதிய தொண்டர்களை தோட்டத்தில் தங்க வைத்தோம்.


ஆயினும் போலிஸ் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியவில்லை. தோட்டத்தின் அக்கம் பக்கமெல்லாம் பரிச்சயமில்லாத முகங்கள் தென்பட ஆரம்பித்தன. தெருவில் செல்லும்பொழுது எங்களை சிலர் பின்தொடர்ந்தனர். சட்டென்று பின்னால் திரும்பி பார்த்தால் ஒரு ஜோடி பிருமாண்டமான மீசைக்கு மேல் இரண்டு உருண்டைக்கண்கள் என்னைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. நான் கூட்டத்துக்குள் புகந்து எப்படியோ சனியன் பார்வையிலிருந்து தப்பித்துவிட்டேன்.


இவ்வாறு ஒரு மாதம் கழிந்தது இறுதியில் முஸபர்பூரில் குண்டு வெடித்ததோடு எங்கள் தோட்டத்தின் ஆயுளும் முடிவுற்றது

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு