Thursday, March 08, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 15 )

ஞாயிற்றுக்கிழமை கூட வேலைக்கு ஓய்வில்லை. தரையை சுத்தமாக தேய்த்துக் கழுவவேண்டும்.

ஒருநாள் வேறு வழியில்லாமல் தெளிவாகச் சொல்லிவிட்டேன்

"நான் செக்கிழுக்க மாட்டேன் உன்னால் முடிஞ்சதைச் செஞ்சிக்கோ "


ஜெயிலருக்கு சரியான கோபம். என்னை தனியறையில் கைவிலங்கு பூட்டி அமர்த்திவிட்டார். மறுநாள் தேங்காய் நார் உரிக்கும் வேலைக்கு அமர்த்தப்பட்டேன். ஆனால் அங்கேயும் ஆளுமைச் சக்திகளின் கொடுமைகள் இருந்தன.


ஒருநாள் அறைக்குள் தேங்காய் மட்டையை அடித்துக்கொண்டிருக்கின்றேன். தலை முதல் கால்வரை வியர்வை பெருக்கெடுக்க வாசலில் நின்ற காவலாளியிடம் தேங்காய் மட்டையை நனைக்க தண்ணீர் கேட்டேன்


அவன் பற்களைக் கடித்துக்கொண்டே சொன்னான். தண்ணி தரமாட்டேன் அந்த காய்ஞ்ச மட்டையைத்தான் அடிக்கணும்


எனக்கு கோபம் தலைக்கேறிவிட்டது

தண்ணி தராவிட்டால் போ ஆனால் எதுக்கு இப்படி பல்லைக் கடிக்கிற


என்ன அதிகப் பிரசங்கித்தனம் செய்யறியா? அவன் உறுமினான்


இனிமேல் பின்வாங்குவது இல்லை என்று எனக்குத் தோன்றியது ஏன் நீ பெரிய நவாபோ என்று கேட்டேன்.


அவன் கோவப்பட்டு ஜன்னல்வழியே என் தiலை இழுத்து கம்பிகளில் மோதினான் அப்போது எனக்கு வந்து கோவத்துக்கு அவன் அறைக்குள் இருந்தால் மட்டையால் மண்டையை பிளந்திருப்பேன். ஆனால் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற ஆத்திரத்தில் அவன் கையை இரத்தம் வரும்வரை கடித்துவிட்டேன்.


அவன் ஆபிஸரிடம் புகார் செய்ய ஓடிச்செல்லும் வழியில் இன்னொரு இந்து காவலாளி அவனை பயமுறுத்தி சமாதானம் செய்து வைத்தான்.



இதில் சிறைக்குள் இந்து முஸ்லிம் வேற்றுமை வேறு வந்தது. முஸ்லிம்கள் இந்துக்களை மதம் மாற்ற முயற்சிப்பதும் ஆரிய சமாஜக்காரர்களும் இந்து மதத்தை பிரச்சாரம் செய்வதும் அதிகரித்து விட்டது.

பின் நாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்தோம்

நாங்கள் இந்துக்களுமில்லை முஸ்லிம்களுமில்லை வங்காளிகள் என்று. பின் அரசியல் கைதிகள் அனைவருக்குமே வங்காளிகள் என்ற பொதுப்பெயர் வந்தது

(தொடரும்)





- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு