Saturday, April 23, 2005

துரோகம்


என்மீது
ப்ரியம் உள்ளவள் போல நடித்த...
ப்ரியமில்லாதவளுக்கு...
இதயமில்லாதவன் எழுதும்...
இரங்கற்பா !

என்
முதுகெலும்பை முற்றிலுமாய்
ஒடித்துவிட்டு
நான் சாய்ந்து உட்கார...
சாய்வு நாற்காலி தருகிறாயே...?

உன் பிறந்தநாளில்
அஸ்திவாரம் போட்ட
நம் காதல்
உன் திருமணநாளில்
அஸ்தியாகிவட்டது!

உன்னை கல்லூரியின்
தூண் மறைத்தால்கூட...
துடித்துப்போகும் என்னை
ஏன் மறந்தாய் பெண்ணே...?

வீட்டில் ஆளில்லாதபோது...
வரச்சொல்லியிருந்தாய் !
ஆனால்
இதயத்தில் ...
ஆளை வைத்துவிட்டு
விரட்டிவிட்டுவிட்டாய்!

உன் வீட்டின்
அடுப்படிவரை
அனுமதித்துவிட்டு...

உன் இதயத்தின்
அடி படியிலையே
நிறுத்திவிட்டாயே...?

உனக்காக
புத்தகத்தின் அட்டையை மாற்றி...
சட்டையை மாற்றி...
தலைமுடி மாற்றி...
தேகம் மாற்றி...
இப்படி எல்லாம் மாற்றி
கடைசியில் நீயும் ஏமாற்றி...

எனக்கு
எதையெல்லாமோ
கற்றுக்கொடுத்தாய்!
ஏழையாய் வாழ...
தாடி வளர...
கவிதை எழுத...
அவமானப்பட...

அதற்கு
குருதட்சணையாகத்தான்
என்
காதலை பறித்துக்கொண்டாயோ...?

மௌனம் சம்மதத்தின் அறிகுறி!
ஆனால்
உன் மௌனமோ
என்...
காதலின் சவக்குழி!

ஒரு
மாலைவேளையில் என்
மடிசாய்ந்து நீ கேட்டது
ஞாபகமிருக்கிறதா...?
நமக்கு குழந்தை பிறந்தால்
என்ன பெயர் வைக்கலாம் ?

இப்படி கேட்டவளா
துரோகம் செய்தாய்...?

நீ என்றேனும்
இந்த கவிதையை
பார்க்க நேர்ந்தால்...
உன்பெயர் குறிப்பிடாமல்...
மெயில் அனுப்பு!
எனக்கு துரோகம் செய்த காரணத்தை...

- ரசிகவ் ஞானியார்

2 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Slice Of Life said...
ungal kavithai varigal ellam anupaviththu eluthinathu pol ulladhu.
interesting lines
uma //


எல்லாக் கவிதைகளும் அனுபவமின்றி வருவதில்லை

தனிப்பட்ட அனுபவம் மட்டும் கவிதைக்கு காரணமல்ல சிலநேரம்
சூழல்களின் பாதிப்பு கூட இவ்வாறு எழுதத் தூண்டும்


நன்றி உமா

saran said...

ungalin varikalil ulla vali enkku purikirathu yenenral nanum athai unarnthiruppathal....

தேன் கூடு