Wednesday, April 20, 2005

திரும்புமா நிலாக்காலம்....?


( ஈராக் போரில் இரு கை இழந்து பாதிக்கப்பட்ட
ஒரு சிறுவனின் அழுகுரல்)
அன்புள்ள ஜார்ஜ்புஷ்
அங்கிளுக்கு
பாதிக்கப்பட்டவன் எழுதும்...
மன்னித்துக் கொள்ளுங்கள்
எழுதமுடியாமல்...
அழுகின்ற கடிதம் இதோ

எங்கள் ஏழை வீட்டுக்கேன் ...
ஏவுகணையை அனுப்பினீர்கள் ?
எங்கள்ரத்தத்திலா......
ரசாயான ஆயுதம் தேடுவது?

திருப்பித்தரமுடியுமா அங்கிள்...?
என் தாயின்
கழுத்தைதழுவியபடி தூங்க...

வேலைக்குச் செல்லும்
தந்தைக்குடாட்டா காட்ட...

ஒவ்வொரு ரம்ஜானிலும்
மருதாணி போட...

கடற்கரையில் தங்கையின்
மணல்வீட்டை கலைக்க...

வாரவிடுமுறையில்...
கிரிக்கெட் விளையாட...

டாக்டர் கனவுகளை எண்ணி
கையெழுத்துப்போட்டு கிறுக்க...

எனது கைகளை......
திருப்பித்தருவீர்களா அங்கிள்?

அதுசரி
கைகள் திரும்பவந்தால்கூட
டாட்டா காட்ட தந்தையோ...
கழுத்தைசுற்றி விளையாட தாயோ...
மணல்வீடு கட்ட தங்கையோ...
உயிரோடு இல்லையே...?

எனக்கு மீண்டும்
அந்தநிலாக்காலத்தை...
திருப்பித்தருவீர்களா அங்கிள்?
- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு