Wednesday, April 20, 2005

துபாய் விசா - புலிக்கதை

ஆப்ரிக்காவில் உள்ள ஒரு வறுமையான மிருககாட்சிசாலையில் உள்ள ஒரு புலி மிகவும் சோகமாகவும் கண்ணீரோடும் பசியோடும் இங்குமங்கும் திரிந்துகொண்டிருந்தது. அது வயிற்றுவலியால் அவதிப்பட்டது. ஏனென்றால் அதற்கு தேவையான அளவு கறி அதற்கு வழங்கப்படவில்லை. அது உருகிப்போய் பிராரத்தனை செய்ததில் ஒரு பலன் கிடைத்தது. துபாய் மிருககாட்சிசாலையிலிருந்து அந்நாட்டின் மிருககாட்சிசாலையை பார்வையிட வந்தவர்கள் இப்புலியின் நிலைகண்டு அதனை தனது நாட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிக்கொள்ள அனுமதி கிடைத்துவிட்டது.

தான் துபாய் போனால் தினமும் இரண்டு ஆட்டிறைச்சிகளை ஏசி அறைக்குள் இருந்துகொண்டு உண்ணலாம் மேலும் அங்கே தங்குவதற்கான நிரந்தர விசாவும் கிடைத்துவிடும் என்கிற மகிழ்ச்சியில் புலி தலைகால் புரியாமல் ஆடியது.

புpறகு துபாய் சென்று அடைந்தவுடன் முதல்நாள் அதனுடைய கூண்டினுள் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய பொட்டலம் ஒன்று வைக்கப்பட்டது. அதனை ஆர்வத்தில் திறந்து பார்த்த புலி அதிர்ச்சி அடைந்தது. அதனுள் பருப்பு கொட்டைகள் மட்டும்தான் இருந்தது.
பின் சுதாரித்து நினைத்துக்கொண்டது தான் வயிற்றுவலியால் அவதிப்பட்டதாலும் தான் ஆப்ரிக்காவிலிருந்து வந்த புதிய விருந்தினர் என்பதாலும் தன்மீது கொண்ட அக்கறையின் காரணமாகத்தான் அவர்கள் முதல் நாள் பருப்புகொட்டைகளை கொடுத்துள்ளார்கள் என நினைத்தது.

பின்னர் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் என் அதே பருப்புகொட்டைகள் வந்துகொண்டேயிருக்க புலி கடுப்பாகிவிட்டது.

"நான்தான் காட்டின் ராஜாவாகிய புலி . நான் இறைச்சி மட்டும்தான் சாப்பிடுவேன் என தெரியாதா? ஏன்ன ஆயிற்று உங்களுக்கு? இது என்ன முட்டாள்தனமாக இருக்கிறது ? ஏன் தினமும் பருப்பு கொட்டைகளை கொடுக்கிறீர்கள்.?"

மிகுந்த கோபத்துடன் உணவுப்பொட்டலம் வைக்க வந்தவனிடம் கடுமையாக கேட்டது.

பின்னர் அந்த உணவு வழங்குபவன் அமைதியாக கூறினான். :

"புலியாரே! நீங்களதான்; காட்டின் ராஜா - நீங்கள் இறைச்சி மட்டும்தான் சாப்பிடுவீர்கள் எனவும் எனக்குத்தெரியும். ஆனால்......
நீங்கள் இங்கே வந்திருப்பது குரங்கு விசாவில் அல்லவா ?"

1 comment:

தேன் கூடு