Wednesday, July 23, 2008

திண்ணையர்கள்


அந்த
வீடுகளில் எல்லாம்
பெரும்பாலும்
நிசப்தங்கள் மட்டுமே
வாழுகின்றன

கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள்
திண்ணையில் யாரோ
முனகிக்கொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் ஒரு காலத்தில்
அப்பா அம்மாக்களாய்
வாழ்ந்தார்களாம்

- ரசிகவ் ஞானியார்

10 comments:

சந்தனமுல்லை said...

செம ட்ச்சிங்!!
நல்லாயிருக்கு கவிதையும், போட்டோவும்!!

சகாதேவன் said...

முன்னே வழிப்போக்கர்கள் இளைப்பாறவும் இரவில் தூங்கவும் திண்ணை கட்டினார்கள். இப்போது எல்லாம் ஃப்ளாட் ஆனதால் திண்ணைக்கே இடமில்லை. ஒருகாலத்தில் அப்பா அம்மாவாக வாழ்ந்தவர்கள் இனி எங்கு செல்வார்கள்.
சகாதேவன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// சந்தனமுல்லை said...

செம ட்ச்சிங்!!
நல்லாயிருக்கு கவிதையும், போட்டோவும்!!//

நன்றி சந்தன முல்லை...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// சகாதேவன் said...

முன்னே வழிப்போக்கர்கள் இளைப்பாறவும் இரவில் தூங்கவும் திண்ணை கட்டினார்கள். இப்போது எல்லாம் ஃப்ளாட் ஆனதால் திண்ணைக்கே இடமில்லை. ஒருகாலத்தில் அப்பா அம்மாவாக வாழ்ந்தவர்கள் இனி எங்கு செல்வார்கள்.
சகாதேவன்//


இது தொடர்ந்தால் இந்தியாவே முதியோர் இல்லங்களாக மாறிவிடும் அபாயம்

இந்'த நிலையை இன்றைய தலைமுறைகள் மாற்ற வேண்டும்
நன்றி விமர்சனத்திற்கு சகாதேவன்

Anonymous said...

உண்மை பல நேரங்களில் கசக்காத்தான் செய்கிறது.

ராமலக்ஷ்மி said...

சித்திரமாய் ஒரு கவிதை-அதிலே
ரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கும்
செய்தி சிந்திக்க வைக்கட்டும் பலரை!

ராமலக்ஷ்மி said...

http://blog.balabharathi.net/திண்ணை/

அல்லது

http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-05-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-2008/

சென்று, "திண்ணையர்கள்" பதிவைப் பதிந்திட வேண்டுகிறேன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// எழிலன்பு said...

உண்மை பல நேரங்களில் கசக்காத்தான் செய்கிறது.//

நன்றி எழில்அன்பு

ம் முதன்முறையாக தமிழில் வாழ்த்துக்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ராமலக்ஷ்மி said...

http://blog.balabharathi.net/திண்ணை/

அல்லது

http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-05-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-2008/

பதிந்தாகிவிட்டது நன்றி...

சென்று, "திண்ணையர்கள்" பதிவைப் பதிந்திட வேண்டுகிறேன்.//

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கவிதையான படம் மேலே..
நல்ல கவிதை படத்தின் மேலும்..:)

தேன் கூடு