Thursday, October 20, 2005

காதல் மட்டும் போதுமடி!



உன் கைகளை என்னிடம்
ஒப்படைத்துவிட்டாய்
என்ன செய்வதடி?

விரல்களில்
சொடக்கு எடுக்கவா..?
சொல்லிக்கொடுக்கவா..?

ஜோதிடம் பார்க்கவா..?
மோதிரம் மாற்றவா..?

இடைவெளி நிரப்பவா..?
தலைவலி நீக்கவா..?

அழுக்கை எடுத்து
அன்பை ஒட்டவா..?
நகத்தை நீக்கி
நாணம் வைக்கவா..?

அய்யோ!
என்ன செய்வேனடி தெரியவில்லையே..?
புதுப்பட சிடி கிடைத்த
குருடனைப்போல முழிக்கிறேன்!

பாட வாய்ப்பு கிடைத்த
திக்குவாய்க்காரன் போல
சந்தோஷத்தில் துடிக்கிறது
என் ம..ன..சு..!

எனக்கு உன்
காதல் மட்டும் போதுமடி!
கையெல்லாம் வேண்டாம்..
நீயே வைத்துக்கொள்..

- ரசிகவ் ஞானியார்

2 comments:

நளாயினி said...

அடடாh..சந்தோசம் இத்தனை இளகிய மனசா. வாழ்க உங்கள் காதல்.

தாணு said...

``இதயம் காதலில் தளும்பினாலும்
விரல்களென்னவோ உன்னோடுதான்"
அம்மிணியின் பதில் இப்படித்தான் இருக்கும்

தேன் கூடு