Wednesday, October 05, 2005

கணவனே கண்கண்ட தெய்வம்

நேற்று துபாய் டெய்ராவில் உள்ள சப்கா பஸ் நிலையம் அருகே நண்பரோடு வந்துகொண்டிருந்தபோது கண்ட காட்சி ஒன்று மனதை மிகவும் வருத்தியது.

ஒரு பெண்ணும் அவரது கணவரும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..துபாயில் பிச்சைக்காரர்களா என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கும். இங்கே ஆப்கான் ஈராக் மற்றும் மற்ற அரபுநாடுகளிலிருந்து அகதிகளாய் வந்திருக்கின்றவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்கள்..

எனக்கு அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் மீது வருகின்ற பரிதாபத்தை விடவும் உலக அரக்கன் புஷ்ஷின் மீது ஆத்திரம்தான் உருவாகும்.அவன்தான் இவர்களின் நிலைக்கு முழு முதல் காரணம்.

சரி பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் அந்த தம்பதியருக்கு வருவோம். அவர்கள் இருவரில் அந்த கணவன் கொஞ்சம் திடகாத்திரமாக ஆனால் கால் ஊனமாக ஒரு தள்ளு வண்டியில் உட்கார்ந்திருந்தான்..ஆனால் அவன் மனைவியோ..பார்த்து அதிர்ந்து போய்விட்டேன்..

சுமார் இரண்டரை அடிதான் இருக்கும் இல்லை இல்லை
அதை விடவும் குறைவான உயரம்தான் ..
மன அல்லது முக வளரச்சி 40 வயதை ஒத்தது ஆனால் உயரம் குழந்தையைப் போல..

ஒரு குழந்தையைப்போல கணவனின் தள்ளுவண்டியில் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள்..

தள்ளுவண்டியின் ஓரத்தில் அமரவைக்கிற அளவுதான் அவர்களின் உடல்வளர்ச்சி என்றால் எப்படியிருக்கும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்...?

எனக்கு பார்த்துவிட்டு அன்று இரவு முழுவதும் அதைப்பற்றிய நினைப்புதான்..ஒரு நிமிசம் என்னை கடந்து சென்றதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறதே..ஆனால் அந்தபெண்ணோடு வாழ்க்கை நடத்துகின்ற அந்த கணவன் உண்மையில் மிகப்பெரிய தியாகிதான்...

கணவனே கண்கண்ட தெய்வம் என்று குடித்துவிட்டு வந்து அடிக்கிற கணவனுக்கெல்லாம் தமிழ்ப்பெண்கள் மரியாதை வைத்திருக்கிறார்கள்.ஆனால் இவன்தான்யா உண்மையிலேயே அந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன்..
பார்த்தவுடன் என் நண்பரிடம் கூறினேன்..

"அங்க பாரேன் அந்தபெண்ணை கட்டிக்கிட்ட அந்த கணவனை பாராட்டியே தீரவேண்டும்.."

"டேய் போடா எங்க ஊர்ல இப்படித்தான் என் நண்பனோட தங்கைகக்கு இதுபோலத்தான் ஊனம் . ஆனால் அவள கட்டிகிறத்துக்கு ஒன்றரை லட்சம் கேட்டாங்க தெரியுமா.." - நண்பர்

இப்ப கை கால் எல்லாம் நல்லா இருக்கிற பொண்ணுக்கே அப்படி கேட்கிறாங்க..அதுவும் ஊனமுள்ள பொண்ணுண்ணா கேட்கவாடா வேணும்..?

கணவனாகப்போகிறவன் என்னதான் பணம் வாங்கியிருந்தாலும் அந்தபொண்ணுடன் காலமெல்லாம் வாழ்க்கை நடத்தப்போகிறவன் செய்தது தியாகம்தானே என்று தோன்றியது எனக்கு.

எல்லோரையும் போல மனைவியை சினிமாஇ பார்க்இ பீச் இ ஷாப்பிங் என்று வெளியே அழைத்துச் செல்ல முடியாத நிலைதானே அந்தக் கணவனுக்கும்..அப்படியே மீறி அழைத்துப்போனாலும் ஒரு காட்சிப்பொருளாகத்தானே எல்லோரும் வேடிக்கைப்பார்ப்பார்கள்.

ச்சே என்ன ஒரு கொடுமை பாருங்கள்..சரி அந்த கணவனின் மனநிலையை விடுங்கள்..அந்த பெண்ணின் உணர்வுகள் எப்படியிருந்திருக்கும்.. ? நம்மை இறைவன் இப்படிப்படைத்துவிட்டானே என்ற வேதனையை விடவும் நம்மை முன்வந்து கட்டிக்கொண்ட இந்த கணவனுக்கு ஒரு முழுமையான மனதிருப்தியை கொடுக்க முடியவில்லையே என்ற கவலைதான் அவளுக்கு அதிகமாய் இருக்கும்..


மனிதநேயம் பற்றிய நான் கவிதையெல்லாம் எழுதினால் கூட என்னிடமெல்லாம் யாராவது அளவுக்கு அதிகமாய் பணம்கொடுத்து அதுபோன்ற ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ளச்சொன்னால் கண்டிப்பாய் மறுத்திடுவேன்.. இது தவறா இல்லை சரியா என தெரியவில்லை..எனக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகள் என்று இருக்கிறது அல்லவா..?


ம்ம்..ம். அந்தகாட்சியை விட்டு கண்கள் அகல மறுத்தது எனக்கு..அந்த தம்பதிகள் ஒரு சுழற்சியை என் மனதுக்குள் ஏற்படுத்தி சென்றுவிட்டனர்; ..புயலில் தத்தளிக்கும் மயிலிறகு போல..

இதயம் நெருடலுடன்

ரசிகவ் ஞானியார்

3 comments:

Anonymous said...

hai nanba...

rombe kastama irunthichi athai padikkumpothu...great...

- raja -

G.Ragavan said...

நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி.

Anonymous said...

நேர்மையான கருத்துக்களுக்கு பாராட்டுக்கள்...

தேன் கூடு