Thursday, July 17, 2008

தமிழுக்கு தமிழ் என்றே பெயர்



"நீங்க தமிழா?
நீங்க தமிழா?"

மொழி தெரியாத ஊரின்
பேருந்து நிலையத்தில்,
காற்று தத்தெடுத்து என்
காதுக்குள் அனுப்பியது!
வரிசையாய் விசாரித்து வரும்
அந்தக் குரலை!

சொந்த ஊரில் மிதித்துவிட்டு...
வந்த ஊரின் தமிழ்கேட்டு
மெச்சிப்போய்,
தமிழை வரவேற்க ஆயத்தமானேன்.

"ஊருக்குப் போக காசில்லை
பணம் தாங்க சார்"
- தமிழ் கண்ணீர் சிந்தியது

"க்யா, க்யா
தமிழ் நகி மாலும்"
- ஏதோ என்னால் தமிழுக்கு முடிந்த உதவி

தமிழ் தலைகுனிந்து சென்றது

- ரசிகவ் ஞானியார்

3 comments:

Aruna said...

//தமிழ் தலைகுனிந்து சென்றது//

ரொம்பக் கஷ்டமாக இருந்தது...
அன்புடன் அருணா

thamizh said...

selvee said

thamizh ini mellach chaakum
---makakavi.

thamizh said...

thmizh ini mellach chaakum
endra mahakaviyin varikalthaan gnabakam varukirathu

தேன் கூடு