Wednesday, July 16, 2008

கிட்டப்பார்வை




என்றேனும்
விசாரித்திக்கின்றீர்களா
இரயில் பயணத்தின்
சக பயணியை?

உங்கள் வீட்டிற்கு
பால்போடுபவனின்
பெயர் தெரியுமா?

பக்கத்து வீட்டுக்காரனின்
விசும்பலுக்கு
காரணம் என்ன?

பெற்றோர்களின்
பிறந்த நாள்
கேட்டதுண்டா?

நாளைக்கு காலையில்
நாஷ்டாவுக்கு
காசு இருக்கிறதா?

நீ பேசிக்கொண்டேயிரு
அணுசக்தி ஒப்பந்தம் பற்றியும்
..........................
.......................


- ரசிகவ் ஞானியார்

4 comments:

ரகசிய சிநேகிதி said...

உண்மையான வரிகள்.. மறைந்து கொண்டிருக்கும் மனித நேயத்தை உணர்த்தியதற்கு நன்றி ஞானி! அருமையான தலைப்பு... Keep it up..

MyFriend said...

super...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

விமர்சனத்திற்கு நன்றி MyFriend மற்றும் meha...

Aruna said...

//பெற்றோர்களின்
பிறந்த நாள்
கேட்டதுண்டா?//

இன்னும் இதை மறக்கவில்லை...ஆனாலும் யதார்த்தமான கவிதை..
அன்புடன் அருணா

தேன் கூடு