Saturday, May 27, 2006

துபாய் மாப்பிள்ளை




(மக்கள் உரிமை என்ற இஸ்லாமிய வார இதழில் வந்த மனதை மிகவும் பாதித்த சிறுகதை ஒன்றை இங்கு பதிவிடுகின்றேன்.)


துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்


அன்புள்ள மனைவிக்கு,

நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..


என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது

அன்புள்ள கணவனுக்கு

தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.

நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களைப்போல ஆடம்பரமாக இருக்கலாம்.


மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.

பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்


அன்புள்ள மனைவிக்கு,

நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.


உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.

கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,

அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.

புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது

மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குரானின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று.


- நன்றி - மக்கள் உரிமை


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

12 comments:

துபாய் ராஜா said...

"மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் ".

உண்மயான உண்மை.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Raja said...
உண்மயான உண்மை. //



நன்றி ராஜா..

இது மதவேறுபாடு இல்லாமல் எல்லா மனிதர்களின் இயல்பு.

பொன்ஸ்~~Poorna said...

//மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள்//

:((((

(கொஞ்சம் ஏமாற்றம், ஞானியார் டச் இல்லை..:( )

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// பொன்ஸ் said...
(கொஞ்சம் ஏமாற்றம், ஞானியார் டச் இல்லை..:( ) //


ம் நன்றி பொன்ஸ்.. என்னுடைய கதையில்தானே என்னுடைய டச்சிங் இருக்கும்..இது என்னுடைய கதையல்ல என்று குறிப்பிட்டிருக்கின்றேன். கவனிக்கவில்லையா..?

ஆமா எனக்கே தெரியலை..அது என்ன ஞானியாரோட டச்..? :)

நெல்லைக் கிறுக்கன் said...

ரொம்ப அருமையான சிறுகதை. இத மாதிரியே குமுதமா, விகடனான்னு தெரியல போன வாரம் ஒரு கத வந்திருந்தது. அதுலயும் இப்படித்தான், புதுசா கல்யாணம் ஆன ஒரு தம்பதி, கனவன் வெளிநாடு போவான் பணம் சம்பாதிக்க, அவன் போய் 5 வருசம் ஆனதுக்கு அப்புறம் திரும்ப சொந்த நாட்டுக்கு வரலாம்னு முடிவு பண்ணும் போது அவனுடைய அம்மா இன்னும் 5 வருசம் அங்க இருந்து சம்பாதித்து விட்டு வா அப்ப தான் நம்ம கடனயெல்லாம் அடைக்க முடியும்னு சொல்லி விடுவாள். அந்த கதய படிச்சுப் பாத்தீரா நீரு?

Radha N said...

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகு said...
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து //

தேவைகள் பெருக பெருக ஆசைகளும் அதிகரிக்கின்றது. இந்தப் பழமொழியை யாரும் கடைபிடிப்பதாய் தெரியவில்லை.

நன்றி நாகு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நெல்லைகிறுக்கன் said...
ரொம்ப அருமையான சிறுகதை. இத மாதிரியே குமுதமா, விகடனான்னு தெரியல போன வாரம் ஒரு கத வந்திருந்தது.//


நன்றி நெல்லைக்கிறுக்கன்.
( அய்யோ இப்படி சொல்றது திட்டுற மாதிரியே இருக்குதுப்பா..)

ஆனந்த விகடன் அல்லது குமுதத்தில் வந்த கதையை நான் படிக்கவில்லை. அதனை மக்கள் உரிமை வார இதழில் மரியம் குமரன் என்பவர் எழுதியிருந்தார்;..என் மனதை மிகவும் பாதித்ததால் இங்கு இட்டேன்..

நெல்லைக் கிறுக்கன் said...

வே நீரு சதக்கத்துல்லா அப்பா கல்லூரியா? நான் தூய யோவான் கல்லூரி(அதான் நம்ம ஜான்ஸ் காலேஜ்)வே.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//வே நீரு சதக்கத்துல்லா அப்பா கல்லூரியா? நான் தூய யோவான் கல்லூரி(அதான் நம்ம ஜான்ஸ் காலேஜ்)வே. //



அட கிட்ட வந்துட்டோம்ல மக்கா..

உங்க பேச்சை வச்சே கண்டுபிடிச்சிட்டேன்ல நீரு ஜான்ஸ் காலேஜ்னு.. நீங்க எந்த வருசம்..

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

நெல்லைக் கிறுக்கன் said...

நான் 96 கம்ப்யூட்டர் சயின்ஸ் மக்கா. உமக்கு ஜான்ஸ் காலேஜ்ல யாராவது தெரியுமா? நீரு எந்த வருசம் வே?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நான் 96 கம்ப்யூட்டர் சயின்ஸ் மக்கா. உமக்கு ஜான்ஸ் காலேஜ்ல யாராவது தெரியுமா? நீரு எந்த வருசம் வே? //



நானும் 96 தான் சதக்ல.. எனக்கு ஜான்ஸ்ல நிறைய மாணவர்களைத்தெரியும்..

இதில்வேண்டாம் நண்பா..முடிந்தால் தனிமடலுக்குள் வாருங்களேன்..

தேன் கூடு