Tuesday, May 16, 2006

பயம்





முதியோர் இல்லங்களின்
வாசல்தாண்டி
பயணப்படும்பொழுதெல்லாம் ...

அனிச்சை செயலாய்
மகனின் கைகளை ...
அழுத்திப்பிடிக்கிறது கரங்கள்!

- ரசிகவ் ஞானியார்

26 comments:

ப்ரியன் said...

ரசிகவ் இக்கவிதை மிகவும் ரசித்தேன்...

சொற்சிக்கனமும் வார்த்தை பிரயொகமும் அழகு

இதையெல்லாம் தாண்டி சொல்ல வந்த கருத்து நச்...

நவகிரகங்களைச் சுற்றுகையில் எல்லாம் எண்ணிக்கையில் மனம் இலயித்துவிடும் எனப் பொருள்படும்படியான ஆ.வியில் படித்த கவிதை ஒன்று நியாபகத்திற்கு வரும் நான் நவகிரகங்களைச் சுற்றுகையில்

இனி உங்களின் 'பயம்' கவிதை நினைவுக்கு வரும் முதியோர் இல்லங்களைக் கடக்கையில்...

பாராட்டுக்கள் ரசிகவ்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//jansi said...
Padathukku thaguntharpol Kavithai ezhuthareengala.....illa......Kavithaikku thaguntharpol....padam podareengala......epdi irundalum....Kavithai , Padangal.......irandume.....arumai.... //




படத்துக்கு தகுந்தாற்போல கவிதையோ
கவிதைக்கு தகுந்தாற்போன்ற படமோ தெரியாது ஜான்ஸி
ஆனால் கவிதைக்கு தகுந்தாற்போன்று விமர்சனம் தந்தமைக்கு நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

/jansi said...
Nalla sindhanai. //




நன்றி ஜான்ஸி..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இனி உங்களின் 'பயம்' கவிதை நினைவுக்கு வரும் முதியோர் இல்லங்களைக் கடக்கையில்...

பாராட்டுக்கள் ரசிகவ்... //

நன்றி பரியன்.. முதியோர் இல்லங்களை கடக்கும்பொழுது உங்களுக்கு "பயம்" ஞாபகம் வந்தால் உங்கள் பெற்றோர்கள் பயமின்றி இருப்பார்கள்..

- யெஸ்.பாலபாரதி said...

அழகான பதிவு..
நீங்க நம்ம க.பி.கழகத்தில் சேரவேண்டுமாய் அழைக்கிறேன்.
ஓகேதானே?

Unknown said...

Yov..Nee Periya kavignan yaa.

Manasu valikuthu naina

Anonymous said...

ம்ம்!!வருங்காலத்தை நினைத்து இப்போதே வரும் இந்த பயம் நியாயமானதுதான்!!!!!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
ம்ம்!!வருங்காலத்தை நினைத்து இப்போதே வரும் இந்த பயம் நியாயமானதுதான்!!!!!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.

//

நன்றி துபாய் ராஜா

உங்களுக்கு அந்த பயம் இருக்கான்னு தெரியாது ஆனால்
உங்க பெற்றோர்களுக்கு இருக்காதுன்னு நம்புகின்றேன்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Dev said...
Yov..Nee Periya kavignan yaa.

Manasu valikuthu naina

//

நன்றி தேவ்..

கவலைப்படாதே மக்கா.. உங்க அம்மாவின் அன்பு மடியில் சென்று சிறிதுநேரம் தலைசாயுங்கள் எல்லாம் சரியாகி விடும்..

அம்மாவின் அரவணைப்பில்
பாசம் என்ற
வேதிப்பொருட்கள் அதிகம் உண்டு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
எஸ்.பாலபாரதி said...
அழகான பதிவு..
நீங்க நம்ம க.பி.கழகத்தில் சேரவேண்டுமாய் அழைக்கிறேன்.
ஓகேதானே? ///



நன்றி பாலபாரதி..

அது என்னப்பா க.பி கழகம்? கலக்கமா இருக்கே.. :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// காசி (Kasi) said...
தள்ளிவிட்ருவானோ என்ற பயம்தான்!

நல்ல கவிதை! ///

நன்றி காசி..
நமக்கு அந்த பயமெல்லாம் இல்லைபப்பா..

Radha N said...

உங்கள் படம் மட்டுமே கவிதை உணர்த்தி விட்டது. பின் கவிதை விளக்கவுரை மாதிரித்தான்.

எனக்கு நியுட்டனின் (மூன்றாவது?) விதிதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்செயல் உண்டு.

- யெஸ்.பாலபாரதி said...

க(ல்யாணமாகும்வரை) பி(ரம்சச்சாரிகள்)கழகம் -இது தான் முழுப்பேர்.. ஓகேயா?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகு said...
உங்கள் படம் மட்டுமே கவிதை உணர்த்தி விட்டது. பின் கவிதை விளக்கவுரை மாதிரித்தான்.

எனக்கு நியுட்டனின் (மூன்றாவது?) விதிதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்செயல் உண்டு. ///




ம் நன்றி நாகு..

நியுட்டன் மூன்றாவது விதியைச் சொல்லி அசத்திட்டீங்க போங்க..நீங்க எப்படி கையை அழுத்திப் பிடிப்பீங்களா..?

Anonymous said...

கனமான கவிதை..

நேசமுடன்..
-நித்தியா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நித்தியா said...
கனமான கவிதை..

நேசமுடன்..
-நித்தியா //



நன்றி நித்தியா..

எத்தனை கிலோ..?

மாதங்கி said...

படமே கவிதையாய் இருக்கு; அட கவிதைக்கு ஒரு கவிதை!
வாழ்த்துக்கள்

ILA (a) இளா said...

மனசுல கணம்
(ps:அதெப்புடிங்க சரியா மனச டச் பண்றா மாதிரி உங்களுக்கு எழுத வருது? )

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//படமே கவிதையாய் இருக்கு; அட கவிதைக்கு ஒரு கவிதை!//


நன்றி மாதங்கி..

விமர்சனமே கவிதை மாதிரி இருக்கே..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//எல்லாம் நம்ம கையில என்ன இருக்கு நண்பா..மேல ஒருத்தன் இருக்கானே அவன் பார்த்துக்கிடுவான்..//


நன்றி இளா

எல்லாம் நம்ம கையில என்ன இருக்கு நண்பா..மேல ஒருத்தன் இருக்கானே அவன் பார்த்துக்கிடுவான்..

Priya said...

/மகனின் கைகளை ...
அழுத்திப்பிடிக்கிறது கரங்கள்/

The pressure he holds is not out of love, but the value he treasured all his life.
That pressure is meant for aging, caring and living life which is lost when his/her son leaves them behind the four walls.
"Lost" forever!!!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//priya said...

That pressure is meant for aging, caring and living life which is lost when his/her son leaves them behind the four walls.
"Lost" forever!!!!! //



நன்றி ப்ரியா..

அழுத்தங்களின் காரணம் பயமாகவும் இருக்கலாம். பாசமாகவும் இருக்கலாம். ஆனர்ல நமக்கெல்லாம் படிப்பினை..

கைப்புள்ள said...

அநியாயத்துக்கு வெயிட்டா இருக்குதுங்க. மனித மனங்களைப் படித்து புனைந்த அருமையான கவிதை.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// கைப்புள்ள said...
அநியாயத்துக்கு வெயிட்டா இருக்குதுங்க. மனித மனங்களைப் படித்து புனைந்த அருமையான கவிதை. //



கனத்த இதயத்துடன் வாசித்ததற்கு நன்றி கைப்புள்ள..

உங்கள் நண்பன்(சரா) said...

நல்ல பதிவு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// உங்கள் நண்பன் said...
நல்ல பதிவு //


நன்றி நண்பா..

தேன் கூடு