Monday, July 04, 2005

ஓடுவதற்கு முன் ஒரு நிமிஷம்

சைனாவுக்கு போகவேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
---

தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

---

அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும்
ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

---

நான்
செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

---

கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்...
அழுகையை அடக்கி கொள்வானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

---

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவகை;கும்
நீ எனக்கு
வேண்டாமடி!

---

* - ரசிகவ் ஞானியார்

3 comments:

cholai said...

கலக்கல்ஸ் ரசிகவ்!! கொன்னுட்டீங்க !

Anonymous said...

Ayya! Kavithaila poi solvangannu theriyum.Athu yeppadinga ayya attai poiyya kavithainnu solreenga? ennamo ponga.

பத்ம ப்ரியா said...

No.. nallaayillai intha poem.. kavithaila poy irukkalaam , but kavithaiyee poyyaa irukka kuudaathu.
kaathali thaayanbaiyum tharamudium
but amma thaayanbai mattumthaan tharamudiyum.

தேன் கூடு