Wednesday, March 05, 2008

சுயத்தின் திமிர்





சாதாரண இருக்கைக்காக
என்னுடன்..
சண்டையிடும்
சக பயணியே..
உனக்குத் தெரியுமா?

நேரத்திற்கு மேல்
வேலைப்பளு தருகின்ற...
மேலதிகாரிக்காவது தெரியுமா..?

எனக்கு
தேநீர் தருவதற்கு
தாமதமாக்குகின்ற...
கடைக்காரனுக்குத் தெரியுமா?

என்னிடம் வந்து..
பயணச்சீட்டு சோதிக்கும்
பரிசோதகருக்காவது தெரியுமா?

என்
யதேச்சைப் பார்வைக்குக் கூட,
முறைத்துப்பார்க்கும்..
பெண்டிர்கள் அறிவார்களா?

நான் ஒரு கவிஞன் என்று?

- ரசிகவ் ஞானியார்

9 comments:

Anonymous said...

simply superb rasikow....!

Hats of... Keep it up!!!!!!

Nanum pala neyrangalil nenaithathundu.....

Anonymous said...

simply superb rasikow....!

Hats of... Keep it up!!!!!!

Nanum pala neyrangalil nenaithathundu.....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//karl marxi said...
simply superb rasikow....!

Hats of... Keep it up!!!!!!

Nanum pala neyrangalil nenaithathundu.....
//

ம் நன்றி நண்பா...இதுபான்ற கர்வம் பலருக்கு வருவதுண்டு

Aruna said...

நிறைய நேரங்களில் நாமே நம்மைப் பற்றி மறந்து விடுகிற நேரங்களில் மற்றவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது நம்மைப் பற்றி??
அன்புடன் அருணா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//aruna said...
நிறைய நேரங்களில் நாமே நம்மைப் பற்றி மறந்து விடுகிற நேரங்களில் மற்றவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது நம்மைப் பற்றி??
அன்புடன் அருணா

March 10, 2008 7:45 PM
//

தெரிய வேண்டிய அவசியம் இல்லையே அருணா...

ஆனால் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பது நமது கர்வம்...இல்லையா?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//aruna said...
நிறைய நேரங்களில் நாமே நம்மைப் பற்றி மறந்து விடுகிற நேரங்களில் மற்றவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது நம்மைப் பற்றி??
அன்புடன் அருணா

March 10, 2008 7:45 PM
//

தெரிய வேண்டிய அவசியம் இல்லையே அருணா...

ஆனால் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பது நமது கர்வம்...இல்லையா?

cheena (சீனா) said...

கவிஞன் சாதாரணமாக அறியப் / புரியப் படுபவன் அல்ல. அவனைப் புரிந்து / அறிந்து கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்குத் தெரியும் அவன் கவிஞன் என்று.

Unknown said...

தெரிந்து விட்டால் அவர்கள் தரும் அவற்றில் அழுத்தம் கூடலாம். அறியப்படாதிருப்பதே நலம்.

Anonymous said...

nalla iriukku... Kavignanukku andha garvam eppovume irukkanum... ana mathavangalukku ungala pathi therijirukkanum nu ethir pakkarathu sari illa...

தேன் கூடு