Thursday, January 25, 2007

ஒரு நிஜ எம்டன்

"எனது தந்தை இருக்கின்றாரே அவர் வீரப்பன் மாதிரி. தான் தவறுகள் செய்துவந்தாலும் தன்னை பிடிக்க தேடி வந்த காவலர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தன்மீது தவறு இல்லாதவனாய் காட்டிக்கொண்ட வீரப்பன் போலத்தான் என் தந்தையும். இது சரியல்ல என்று தெரிந்தும் அந்த தவறை தெரிந்தே செய்பவன் "


என்னடா பெற்றெடுத்த தந்தையை ஒருமையில் வெறுப்பில் அழைக்கும் அந்த நபர் யார்?


ஒரு பதிவில் ( ஏதாவது செய்யணும் சார்) மகன்களால் விரட்டப்பட்ட தந்தையின் பரிதாப நிலையைப்பற்றி மனம் வருந்தி எழுதியிருந்தேன். அதற்கு எதிர்மாறாக தனது தந்தையின் கொடுமையாலும் ஆதிக்க மனப்பான்மையாலும் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையோடும் போராடிக்கொண்டிருக்கும் மனிதரைப்பற்றியது இது..?


அவர் பெயர் காஜாமைதீன். வயது 32க்குள் இருக்கும். நல்ல திடகாத்திரமான உடல் அமைப்பு. படிப்பில் ஆர்வமின்றி எட்டாம் வகுப்போடு பள்ளியை முடித்துவிட்டு தந்தையோடு தொழிலில் ஈடுபட்டார். கல்வியறிவுதான் இல்லையென்றாலும் உலக அறிவு அனுபவங்கள் ஏராளம்.


கவிதை இலக்கியத்தில் ஆர்வம் அதிகம். நல்ல கவிதைகளை படித்து பாராட்டும் குணம் உடையவர். மனிதநேயம் பற்றிய கவிதைகள் வாசித்துக் காட்டினால் இவர் கண்களில் கண்ணீர் திரள்கள் வந்துவிடும்


எந்தப்பிரச்சனை என்றாலும் இவரை அணுகினால் அதற்கு ஒரு தீர்வு சொல்லுவார். சட்டரீதியாக எந்த எந்த பிரச்சனைக்கு யார் யார் முறையாக அணுகுவது

அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்யும்பொழுது அதனை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பது

இளைஞர் நல மன்றம் விளையாட்டுத் திடல் சிறுவர் பூங்கா அமைப்பது

இரத்ததான முகாம், இலவச மருத்துவ பரிசோதனை என்று எல்லாவிதமான சமூக சேவைகளும் மக்கள் மனிதநேய அமைப்பு என்ற பெயரில் சமூகத்திற்காக சேவைபுரிந்துகொண்டிருக்கின்றார். இவர் மற்றவர்களுக்கு உதவுகின்ற அளவுக்கு வசதியானவர் அல்ல இருந்தாலும் தன்னால் முடிந்தவரை உதவுபவர்.


யாருக்கேனும் இரத்தம் தேவைப்பட்டால் என்னுடைய தொலைபேசி அழைக்கின்ற முதல் நபர் இவர்தான். உடனே தன்னுடைய குடும்பத்தில் உள்ள அவசரம் போல பம்பரமாய் இயங்குபவர்.


சாலையில் நடந்து செல்லும்பொழுது எந்தப்பகுதியிலாவது அசுத்தமாகி ,துப்புரவு செய்யாமல், கழிவுநீர் ஓடிக்கொண்டிருந்தால், உடனே பேப்பரும் பேனாவும் எடுத்து அதற்குண்டானஅதிகாரிகளிடம் தெரிவிப்பது அல்லது புகைப்படம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு குறையாக சுட்டிக்காட்டி அனுப்பி வைப்பார்


எந்த விசயத்தைப் பற்றி கேட்டாலும் அழகாய் பதிலளிப்பார். இவர் மட்டும் படித்திருந்தால் இவரின் சேவையால் அவரைச்சுற்றியுள்ள சமூகத்திற்கு இதைவிடவும் ஒரு முக்கிய பங்கு கிடைத்திருக்கும்.


இப்படி சுற்றியுள்ள மக்களால் அன்புக்குரியவராக கருதப்படுகின்ற இவர்தான் சொல்கின்றார் தனது தந்தையைப் பற்றி.


"எனது தந்தை வீரப்பன் மாதிரி... .................................."



சுற்றியுள்ள மக்கள் எல்லாரும் மதிக்கின்றார்கள் ஆனால் பெற்றெடுத்த தந்தையால் புரிந்துகொள்ளமுடியவில்லை. தவறு யார் மீது?


பக்கத்தில் உள்ள பொருளின் மதிப்பை நாம் என்றுமே உணர்வதில்லை. அது நம்மை விட்டு விலகிய பிறகுதான் இழப்பின் வலியை உணருவோம்.


தன்னை அடிமையாகவே வளர்க்க ஆசைப்பட்ட தந்தையின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு சுதந்திரமாய் தனிவியாபாரத்தில் ஈடுபட்டு வாழ்க்கையில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருப்பவர்.


"எங்க அப்பா இருக்காரே ஒரு சாடிஸ்ட்..யாரும் சந்தோஷமா இருக்குறது அவருக்கு பிடிக்காது..ஒரு உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோங்க.. "

"எனது தங்கையின் கணவர் வெளிநாடு சென்று விட்டு 2 வருடம் கழித்து வந்திருக்கின்றார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. எனது தங்கையின் குழந்தை என் வீட்டில் இருக்கின்றது. எனது தங்கை கணவர் வீட்டில் இருந்தாள்.அப்பொழுது எனது தந்தை சொல்லுகின்றார்.. :"


"இந்த குழந்தையை கொண்டு போய் அவர்கிட்டேயே போய் விடுங்க..அப்பத்தான் குழந்தை வளர்ப்போட கஷ்டம் அவருக்கும் தெரியும்.. "


"நல்ல தகப்பனா இருந்தா என்னங்க செய்யணும்? சரி 2 வருடம் கழிச்சி மாப்பிள்ளை வந்துறுக்காரே - மகளும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கணும் குழந்தையை கொஞ்சநேரம் நாம வச்சிருப்போங்கிற எண்ணம் வருதா..? "

"யாரும் சந்தோஷமா இருக்குறது அவருக்கு பிடிக்காது.. "

"நம்ம குழந்தை யார் வீட்டு பிள்ளையையோ அடிச்சிட்டு வந்திருக்கு. அடிபட்ட குழந்தையின் சொந்தக்காரங்க வந்தா என்ன பண்ணுவோம் நாம? "

"நம்ம குழந்தையை கண்டிப்போம். இல்லைனா நாம அடிப்போம். இல்லை வலி அதிகம் உணராதபடி அடிப்போம்.ஆனா எங்கப்பன் என்ன பண்ணுனான்னு தெரியுமா.. அடிபட்ட குழந்தைக்கு சொந்தக்காரங்களை விட்டே என்னை அடிக்க வைச்சான்.. இது எங்கேயாவது நடக்குமாங்க..? "


"என்னை இதுநாள் வரைக்கும் ஒரு அடிமைமாதிரிதான் நடத்துனான். எனக்குன்னு ஒரு தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. நல்லதோ கெட்டதோ வியாபாரத்துல அவர் சொல்றபடிதான் கேக்கணும். நான் ஒரு முடிவு சொன்னா அதை அலட்சியப்படுத்திவிடுவார். "

"வியாபார முன்னேற்த்திற்காக நான் சில வழிகள் சொன்னால் அதனை அலட்சியப்படுத்திவிடுவார். "


"எனக்கு கல்யாணமான பிறகு கூட என் பொண்டாட்டிக்கு வடை கூட என்னால வாங்கிக்கொடுக்க முடியாது. அதற்காகவே அவனுக்கு தெரியாம மறைச்சி மறைச்சி கொண்டு வருவேன். மீறி பார்த்துட்டான்னா சத்தம் போட ஆரம்பிச்சுடுவான்.. "


"அது மட்டுமல்ல என்னோட மனைவியை மதிக்கிறதே கிடையாது. வீட்டுக்கு வாழ வந்தவகிட்ட மரியாதையா நடந்துக்க வேண்டாமா..? அவளும் மனுஷிதானுங்க.. "


"இதையெல்லாம் எதிர்த்து கேட்டா வீட்டை விட்டு போகச்சொல்றாரு. நான் ஏன் வீட்டை விட்டு போகணும்? "

"என்னுடைய அம்மாவின் தங்கை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு இவன் ஒரு இடத்தில் இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தான்."

"சரி நல்லதுதான் பண்றானுன்னு பார்த்தா.. கல்யாணம் பண்ணி வச்சிட்டு எனது அம்மாவின் தங்கைக்கு, தற்போதைய கணவர் தந்த வீட்டை தனது பெயருக்கு மாற்ற முயற்சிக்கின்றார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.? "


தந்தையின் தவறான போக்கை எண்ணி மனம் குமுறுகின்றார். தன்னை அடக்கி வைத்த தந்தையின் ஆளுமைக்குள் இருந்து வெளிவரத்துடிப்பவர் தந்தையின் தவறை தட்டிக்கேட்க நினைத்ததால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்.


"நான் செத்து என்னுடைய பாடிதான் இந்த வீட்டை விட்டு போகும். அதுவரைக்கும் இங்கதான் இருப்பேன்னு" ஒரு தடவ ஒரு பையனை விட்டு அவங்க அப்பாகிட்ட சொல்லச்சொன்னாரு.

அந்தப்பையன் போய் சொல்லிட்டு முகம் வெளிறிப்போய் வந்து சொன்னான்


உங்கப்பா சொல்றாரு.:
"செத்தபிறகு வேணுமின்னா உங்க பாடியை வீட்டுக்கு கொண்டுவந்துட்டு அடக்கம் பண்ண அனுப்பலாம்னு சொல்றாருங்க என்று அந்தப்பையன் கூற எனக்கு அவரது தந்தையின் மீது பெரும் வெறுப்பு கிளம்பிற்று. அப்படி என்ன மகன் மீது அந்த அளவிற்கு வெறுப்பு? "
எந்த தந்தையாவது மகனை இப்படிச் சொல்வாங்களாங்க..? என்னு என்னிடம் புலம்பினார் .

உங்க மேல உங்க தந்தைக்கு அப்படியென்னங்க கோவம்?


"என் மேலயா...அய்யய்யோ அவனுடைய குணமே அப்படித்தான்ங்க.. "

"உங்களுக்கு அவனைப்பற்றி தெரியாது "

"என்னை வீட்டை விட்டு போகச்சொன்னான். நான் போகமாட்டேன்னு சொன்னதால எலெக்ட்ரிக் ஆபிஸ் சென்று எங்க வீட்டுல கரண்டை கட் பண்ண வச்சுட்டான்னா பாருங்களேன் எந்த அளவுக்கு மோசமா இருக்கான்னு.? "

ஏன் கரண்ட் போனா அவருக்கும் இடைஞ்சல்தானே..?


"அதான்ங்க..தான் கொசுக்கடியில் இருந்தாலும் சரி நான் சந்தோஷமா இருக்க கூடாது.. அதற்குத்தான் நான் வச்சேன் பாரங்க ஆப்பு.. "

"பக்கத்து வீட்டுல இருந்து என்னுடைய அறைக்கு மட்டும் தனியா கரண்ட் கொடுத்துட்டேன். அது அவனுக்கு எரிச்சலாகி மறுபடியும் புகார் கொடுத்துறுக்கான்.நான் திருட்டுத்தனமா பக்கத்து வீட்டுல இருந்து கரண்ட் எடுக்குறேன்னு.. "

"நான் உடனே எலெக்ட்ரிக் ஆபிஸ் சென்று இது தந்தை - மகன் பிரச்சனைதான் என்று விளக்க வேண்டியதாகிப்போய்விட்டது "


இப்படியெல்லாமாங்க செய்வார் ஒரு தந்தை?


"நிறைய இருக்கு சொல்றதுக்கு. அவர் தீயை பஞ்சை போட்டு அணைக்கும் முயற்சியி-ல் ஈடுபடுறாரு.. தான் போலியாய் வாழ்றதை பெருமையா நினைக்கிறாரு.. "

நான் வேணுமின்னா உங்கப்பாகிட்ட பேசிப்பார்க்கவா..?

"இல்லை வேண்டாம் எனக்காக என்னுடைய நண்பர்கள் அவமானப்படறது எனக்குப்பிடிக்காது "

அவருடை கடைசிகாலத்துல பணத்தை எங்கோ கொண்டுபோகப்போறாரு . நீங்க அவருக்கு ஒரே ஆண்மகன்தானே பின்ன ஏன் இப்படி பண்றாரு?


"அவனுக்கு மகன் தேவையில்லை ஒரு அடிமை தேவை. ஆனால் என்னால் அடிமையாக இருக்க முடியாது. "

என்னை என்னவெல்லாம் சொல்லியிருக்காரு தெரியுமா. ?

"எனக்கு மரியாதை இல்லை. என்னுடைய மனைவிக்கு மரியாதை இல்லை.

அவருடைய ஆளுமைக்குள் அவரைச் சார்ந்து இருக்கிறதால நான் தனியே போய் என்ன பண்ணிறமுடியுமுன்னு கர்வத்துல இருக்காரு. "

"அவர் சொன்ன வார்த்தைகள்தான் என்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. கண்டிப்பா என்னுடைய உழைப்பால நான் முன்னேறிக்காட்டுவேன்" என்று தன் உழைப்பின்மீது உள்ள நம்பிக்கையில் கூறினார்.

அப்பொழுது எனக்கு ஞாபகம் இருந்த பாவிஜய்யின் சில கவிதைகளை சொன்னேன்.


தோல்வியைச் சந்திக்காத யாரையும்

வெற்றிவந்து சந்திக்காது



தோல்வியே அடையாத ஒருவன்

இதுவரை இருந்ததில்லை

தோல்வியோடு மட்டுமே ஒருவன்

இதுவரை இருந்ததில்லை



உனக்குப் பத்துபேரில்

ஒரு எதிரியும் இல்லையென்றால்

நீ முன்னேறவே இல்லை


இந்த தன்னம்பிக்கை வரிகளை நான் எடுத்துச் சொல்லியபொழுது மிகவும் ரசித்தார்.

"போலிஸ்ல போய் புகார் கொடுத்துட்டாரு. அவங்க வந்து என்னய சமாதானப்படுத்தி வீட்டை காலிபண்ணச்சொல்றாங்க.. "

"முன்னாடி ஒரு தடைவை தெரியாத்தனமா பினாமி பெயர்ல வாங்குவதற்குப் பதிலா என் பெயர்ல வீடு வாங்குனதால இப்போ அந்த வீட்டுக்கு நான் போயிட்டேன். "

"இப்போ நான் என் மனைவியையும் என் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியே சென்றாலும் என்னுடைய ரேஷன்கார்டை வைத்து பொருட்கள் வாங்கி விற்று வருகின்றார். என்னுடைய ரேஷன்கார்டை திருப்பி தர மறுக்கிறார். "


"நான் உடனே அந்த ரேஷன் கார்டை அவருக்கு தெரியாமல் எடுத்து கேஸ் சிலிண்டர் எனக்கு கேட்டு எழுதி மண்ணெண்ணெய் வேண்டாம்னு சொல்லிட்டேன். இது கூட அவருக்கு சரியான கடுப்பு "


"என்னுடைய நிலைமை என் குழந்தைக்கு வரக்கூடாது. நான் எனது தந்தையை பார்த்து கேட்ட கேள்விகளை என் பையன் என்னைப்பார்த்து கேட்கக்கூடாது. அப்படித்தான் என்னுடைய பையனை நான் வளர்க்கின்றேன் "


"இப்ப நான் என்னுடைய மனைவிக்கு தைரியமா வடை வாங்கி கொண்டுபோக முடியுது "

"வியாபாரத்துல தனிப்பட்ட முடிவு எடுத்து வெற்றிகரமா கொண்டு செல்ல முடியுது "

"அவர விட்டு வரும்பொழுது என்னுடைய பணம் 0 சதவிகிதம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு வருகின்றேன். "

"உங்களுக்கு தவளை கதை தெரியுமா ?" என்று ஒரு தவளைக் கதையை சொல்ல ஆரும்பித்தார்


இரண்டு தவளைங்க ஒரு பால் கிண்ணத்துல தவறி விழுந்துடுச்சாம். ஒரு தவளை நினைச்சிதாம் நாம அவ்வளவுதான் இதுல இருந்து வெளியே வரவே முடியாது. இதுலேயே இருந்து செத்துறுவோம். அப்படின்னு நினைச்சு நினைச்சே இறந்துபோயிடுச்சாம்.


இன்னொரு தவளை என்ன பண்ணுச்சாம்..? அந்தப்பால்ல தனது கால்களால அடிச்சி அடிச்சி போராடிக்கொண்டிருந்துச்சாம். அது கால்களால் அடிக்க அடிக்க அந்தப் பால் எல்லாம் வெண்ணெயாய் மாற அந்த வெண்ணெயில் ஏறி தப்பிச்சுடுச்சாம்.


"நானும் அந்த இரண்டாவது தவளை மாதிரி.. போராடிக்கொண்டு இருக்கின்றேன். "

என்று ஒரு அருமையான கதையை அவர் சொல்லி முடித்து தன்னுடைய போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தியிருக்கிறார் பாருங்களேன்.

இப்பொழுது இவர் தனது தந்தையின் தொழிலான ஜவுளிக்கடையில் இருந்து பிரிந்து தந்தையின் கடை அருகில் தனியாக ஒரு ஜவுளிக்கடையை நடத்திவருகின்றார்.

"இப்ப கூட என்னை அழைத்து நாம ஒண்ணா தொழில் செய்வோம் வா என்று அழைத்தால் சந்தோஷமாக ஒரு நல்ல மகனா நடந்து பொறுப்பை நான் சுமந்து வியாபாரத்தை பெருக்க என்னால் முடியும். ஆனா அவனுக்கு என்னை அடிமைப்படுத்தாத வாழ்க்கை பிடிக்காது. "

சமீபத்தில் வெளியான எம்டன் மகன் படத்தின் கதையை கேட்டு கூட இவர் ஆதங்கப்பட்டார்.

" நாசர் மாதிரி கதாபாத்திரங்கள் ஏன்தான் இருக்காங்களோ? பெத்த மகனை மத்தவங்களுக்கு முன்னால அவமானப்படுத்துறாங்க. ஏன் இப்படி செய்யுறாங்க..? "

இவருடைய தற்போதைய குறிக்கோள் :வியாபாரம் - வெற்றி - முன்னேற்றம் மட்டும்தான்.

அடிமையாக வாழப்பிடிக்கவில்லை என சுயமரியாதையை விட்டுவிடக்கூடாது என்று வாதிட்டு தந்தையால் விரட்டப்பட்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் காஜா போன்றவர்களின் போராட்டம் மற்ற இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை.

அவர் வாழ்க்கையில் வெற்றிபெற நாமும் பிரார்த்தித்துக் கொள்வோம்.


- ரசிகவ் ஞானியார்

Tuesday, January 23, 2007

இறைவனின் சிறப்புக் குழந்தைகள்

"அட அநாதைப்பயலே.. "

"நீ ஒரு அநாதைடா.. "


என்று சினிமாத்தனமான வசனங்கள் நிறைய கண்டிருக்கின்றோம். ஆனால் அவ்வாறு சொல்லப்படும்பொழுது அந்த அநாதைகளின் மனநிலை எப்படியிருக்கும்?


Photobucket - Video and Image Hosting

பார்த்திபனின் கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை:

இன்னொரு மனிதன்

இருக்கும்வரை

எவனுமே அநாதையில்லை.


இந்த மனிதநேய உணர்வுகள் அனைவருக்கும் வந்துவிட்டால் அநாதைகள் என்ற வார்த்தை அநாதையாகிவிடும்.

தந்தை தாயை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்தேசத்தில் பணிபுரிபவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும் பிரிவின் வலி. வீட்டில் இருக்கும்பொழுது அம்மா சமைத்துக்கொடுப்பதைக் குறைசொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதனை விடவும் திருப்தியில்லாத உணவு கிடைக்கும்பொழுதுதான் அம்மாவின் சமையல் அருமை புரிய ஆரம்பிக்கும்.

குறைசொல்லியே ...
சாப்பிட்ட நான்,
இப்பொழுது
குறைகளை மட்டும்தானம்மா ..
சாப்பிடுகின்றேன்!


கொஞ்சநேரம் அம்மா வீட்டில் இல்லையென்றாலே மனசு என்னவோ மாதிரி இருக்கின்றது. ஆனால் அம்மா அப்பாவே இல்லாத வாழ்க்கை என்பது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று.

இன்று திருவனந்தபுரம் சென்று விட்டு வரும்பொழுது பாதையில் ஒரு மொட்டை மனிதர் வெயிலில் கிழிந்த அழுக்கு ஆடையணிந்து கையில் வெற்று தண்ணீர் பாட்டிலுடன் நடந்து கொண்டிருந்தார்.

பார்ப்பதற்கு பாவமாய் இருந்தது. நண்பனிடம் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த கேக் பொட்டலத்தை அவரிடம் கொடுத்தேன். ஆவலுடன் வாங்கி தின்று கொண்டே அந்த கடும் வெயிலில் நடந்து சென்றார். ஆனால் அடுத்தவேளை உணவுக்கு அவருக்கு யார் கொடுப்பது? எங்கு செல்வார்?

நான் கொஞ்சநேரம் உணவருந்த தாமதமாகிவிட்டாலே அம்மாவின் குரல் ஓங்கி கேட்க ஆரம்பித்துவிடும்

"அங்க என்னடா பண்றே..வந்து சாப்பிடுடா "

"டேய் என்னடா இன்னமுமா சாப்பிடலை.."

நமக்கு பசிக்குமோ, இல்லையோ? நம்முடைய பசியை தாங்கிக்கொள்ளும் சக்தி எந்த தாய்க்கும் கிடையாது.

ஆனால் அந்த மொட்டை மனிதர் சாப்பிட தாமதமாகி விட்டாலோ அல்லது சாப்பாடே கிடைக்கவில்லையெனில் அவருக்கு யார் வந்து கேட்ககூடுமோ..?

"தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்.

இறைவன் தான் எங்கும் வந்துகொண்டிருக்கமுடியாது என்றுதான் அன்னையை படைத்ததாக தாயின் பெருமையைப்பற்றி சிறப்பித்துக் கூறுவார்கள்.

ஆனால் இறைவன் தாயில்லாமல் இருப்பவர்களுக்கு தானே நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கின்றானோ..?

உடல் ஊனமுற்றவர்களை, மாற்றுத்திறன் உடையவர்கள் என்று அழைப்பது போல அநாதைகளை, அநாதைகள் என்று அழைக்காதீர்கள், இறைவனின் சிறப்புக் குழந்தைகள் என்று அழையுங்களேன் ப்ளீஸ்..


"இறைவனின் சிறப்புக்குழந்தைகள் காப்பகம் "

"டேய்! நீ அப்பா அம்மா இல்லாத இறைவனின் சிறப்புக் குழந்தைடா "


என்று சொல்ல ஆரம்பித்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் எண்ணிப்பாருங்கள்.? யாரிடம் முறையிட்டு இவற்றை மாற்றச் சொல்வது?

அது மட்டுமல்ல இதுபோன்ற வெளியில் திரிகின்ற இறைவனின் சிறப்புக் குழந்தைகளை அரசாங்கம் கவனித்து அவர்களுக்கு ஏதேனும் தொழில் கற்றுக்கொடுக்கலாமே..?



-ரசிகவ் ஞானியார்

Sunday, January 21, 2007

ஏதாவது செய்யுங்க அன்புமணி அய்யா..?



Photobucket - Video and Image Hosting
மந்ருந்ந்ந்துந்ச்ந் சீந்ட்ந்டுந்


"என்னடா என்ன எழுதியிருக்கான்னு குழப்பமா இருக்கா? மருந்து சீட்டுங்கிறதான் இப்படி எழுதியிருக்கேன்பா.. "


நேற்று எனது உறவினரின் ஒருவருக்கு மாத்திரைகள் வாங்குவதற்கா மருத்துவர் எழுதிக்கொடுத்த கோழிக்கிறுக்கல்களை எடுத்துக்கொண்டு பார்மஸிக்குச் சென்றேன்.


அவன் பார்த்த உடனையே 2 மாத்திரைகள் எடுத்துக் கொடுத்தான்.


"ஹலோ என்ன தந்திருக்கீங்க "


"குரோசின் சார் அதானே எழுதியிருக்கு "


"குரோசின் இல்லைங்க நல்லா படிச்சுப் பாருங்க..குராடன்" - வேறு ஒரு மருந்து எழுதப்பட்டிருந்தது.


"அய்யோ! சாரி சாரிங்க அவங்க அதுமாதிரிதான் எழுதியிருக்காங்க என்ன செய்ய? "என்று மாத்திக் கொடுத்தார்


னக்கு மருந்து கடைக்காரர் மீது ஆத்திரம் வரவேயில்லை. மாறாக அதனை எழுதிக்கொடுத்த டாக்டர்மீதுதான் கோபமாக வந்தது.

டாக்டர்னா என்னங்க கொம்பா முளைச்சிருக்கு? ஏன் இப்படி கோழி கிறுக்குற மாதிரி கிறுக்குறாங்க.. இல்லை அவங்க மருத்துவ படிப்பில் ஏதேனும் சட்டதிட்டம் இருக்கா..இப்படித்தான் எழுதணும்னு? ஒழுங்கா தெளிவா எழுதுன அவங்க கௌரவம் குறைஞ்சாங்க போயிடும்.

Photobucket - Video and Image Hosting

ல்லை மருத்துவக் கல்லூரிக்கும் கோழிகளுக்கும் கையெழுத்து விசயத்தில் பரஸ்பர ஒப்பந்தம் பண்ணியிருக்காங்களோ..? அல்லது அவங்க எல்கேஜியில எழுத பழகியதை இன்னமும் மறக்காமல் இருக்கின்றார்களா?


ரு டாக்டர் இப்படி எழுதுனா சரி கையெழுத்து அப்படி என்று அவர் தலையெழுத்தை நொந்து கொள்ளலாம் . ஆனால் சொல்லிவைத்தாற்போன்று எல்லா மருத்துவர்களும் இப்படித்தான் எழுதுறாங்க..

து மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விசயங்க..அதனால மருத்துவர்கள் எல்லாம் கவனமா எழுதிக் கொடுக்கணுங்குறதுதான் என்னோட கோரிக்கை..

ரு திரைப்படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவனாக நடித்த விவேக் ஒரு காட்சியில்

"அய்யா என்னய்யா எழுதியிருக்கீங்க ஒண்ணுமே புரியமாட்டேங்குது ? "


"சும்மா விக்ஸ்ங்கிறதத்தான்டா அப்படி சுத்தி சுத்தி
எழுதியிருக்கின்னு."

இது நகைச்சுவையாக அவர் சொன்னாலும் சிந்திக்க வேண்டிய விசயம். அப்படி எழுதுனாத்தான் மக்கள் அவரை ஒரு பக்குவப்பட்ட மருத்துவராக ஏற்றுக்கொள்வார்களோ..?


நான் கூட ஒரு கவிதையில் குறிப்பிட்டிருந்தேன்


மெடிக்கல் ரெப்பின் காதல் கவிதை


கடைசி வரை புரியவேயில்லையடி ...

உனது
காதல் !

அந்த

டாக்டரின் கையெழுத்துப்போலவே !



இப்படி கோழிகிறுக்கல்களினால் என்றேனும் பயங்கர உயிர்ப்பலிகள் நேர்ந்தவுடன்தான் அரசாங்கம் இதனைக் கவனிக்குமோ?


எதுக்கெல்லாமோ போராடுறாங்க..இதுக்கு மக்கள் எல்லாம் ஒன்று கூடி போராடக்கூடாதாங்க..


ஏதாவது செய்யுங்க அன்புமணி அய்யா..?



- ரசிகவ் ஞானியார்.

Thursday, January 18, 2007

தயவுசெய்து வாங்கிக்கோங்க

ன்னோட பதிவுகள் எல்லாம் புடிக்கலைய்யா... அப்படியே கீழே வாங்க....

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

Photobucket - Video and Image Hosting

நல்லாயிருக்குன்னு சொல்லு சொல்லுவியா..சொல்லுவியா...


- ரசிகவ் ஞானியார்

Tuesday, January 16, 2007

எண்(ன்) குழப்பம்


Photobucket - Video and Image Hosting



ன்று வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்று செக்கில் One Hundred Thousand Only (100,000/-) என்று எழுதி அவர்களிடம் கொடுத்தேன். வாங்கிய அதிகாரி ஏதோ நான் கொலைக்குற்றம் செய்தது போல குதிக்கிறார்.

ந்தச் செக்கை பக்கத்தில் உள்ள அதிகாரியிடம் கொடுத்து விவாதிக்கின்றார். அவர் அவருக்கு பக்கத்தில் உள்ள பெண் ஊழியரிடம் காண்பித்த நக்கலாகச் சிரிக்கிறார்.


"இல்லை சார் திருப்பிக் கொடுத்துறுங்க.. "


"இது என்ன இப்படி எழுதியிருக்காங்க" என்று ஆளாளுக்கு சத்தம் போட நான்


"சார்.. சார்ர்ர்.. என்று கத்தினேன்.


என்னடா வங்கியில் இப்படி கத்துகிறார் என்று அவர்கள் திரும்பி பார்க்க.


"வெளிநாடுகளில் எல்லாம் இப்படித்தான் சார் எழுவாங்க..அதான் அப்படி எழுதிட்டேன். "- என்று கூறினேன்


"எந்த நாடு சார்? "


"துபாய்ல .."


"நீங்க இப்ப இந்தியால இருக்கீங்க சார் முதல்ல இந்தியாவுக்கு வாங்க..? "


"அப்படின்னா நான் பணத்தை வங்கியில் போடும்பொழுது இருந்த செக்கில் இப்படித்தானே எழுதியிருந்துச்சு அப்ப யாரும் ஒண்ணுமே சொல்லலையே. பணம் போடும்போது கண்டுக்கமாட்டீங்க..எடுக்கும்போது மட்டும் நக்கலா பார்க்குறீங்க..இது என்ன நியாயம் சார்? "


"அந்த செக் துபாய்ல இருந்து வந்ததுனால அவங்க வழக்கப்படி எழுதியிருக்காங்க.." என்று விளக்கமளித்தார்.


ப்படியோ விவாதத்திற்குப் பிறகு பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். பணத்தைப்பெற்றுக்கொண்டு நக்கலடித்த ஊழியர்களைப் பார்த்து லேசாய் புன்னகை சிந்திவிட்டு நகர்ந்தேன்.


ப்படியே கண்களுக்கு முன்னால் ஒரு கொசுவர்த்தி சுருள் ஒன்று வலம் வருகின்றது. அதான்ங்க ப்ளாஷ்பேக்..

Photobucket - Video and Image Hosting


நான் துபாயில் வேலைக்கு சேர்ந்தபொழுது இதே பிரச்சனை ஏற்பட்டது
யாருக்கோ பணம் கொடுப்பதற்காக சுமார் 2,50,000 பணத்தை Two Lakhs Fifty Thousand என்று எழுதினேன்.


ப்புதல் வாங்குவதற்காக மேலாளரிடம் கொண்டு சென்றபொழுது அந்த எகிப்து மேலாளர் என்னைக் கடிச்சித் துப்பிட்டாருப்பா..


"என்ன எழுதியிருக்கீங்க ?"


" சரியாத்தானே எழுதியிருக்கேன்" என்று மறுபடியும் நான் எழுதியதை சரிபார்த்தேன்.


"இது என்ன Lakhs ..?"என்று விநோதமாய் கேட்டார்


ன்னடா முட்டாப்பசங்களா இருக்காங்க லட்சம்னா என்னன்னு தெரியாதா இவங்களுக்கு என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு 2 லட்சம் என்று விளக்கினேன்.


ஒன்றுமே பேசவில்லை சரியாய் எழுதிவிட்டு வருமாறு கூறினார்.


நான் குழப்பத்துடன் வந்து அமர்ந்தேன். எதைத் திருத்தச் சொல்றார். ஒருவேளை ( , )கமா எதுவும் போடாமல் விட்டுவிட்டோமா என்று பார்த்தேன் சரியாகத்தான் போட்டிருந்தேன்.

னது அலுவலகத்தில் வேலை பார்க்கும் இந்திய நண்பரிடம் கேட்டேன்.
அவர்தான் விளக்கினார். "இவங்க இப்படி எழுதமாட்டாங்க என்று Two Hundred Fifty Thousand என்று எழுதிக்காட்டினார்.


ப்பொழுதான் எனக்கு விளங்கியது அட இவனுங்க லட்சத்தை உபயோகிக்க மாட்டங்க என்று. லட்சத்தையெல்லாம் ஆயிரத்தில் தான் உச்சரிக்கின்றார்கள். லட்சம் என்பது இந்தியாவில் மட்டும்தானா? இல்லை மற்ற நாடுகள் எங்கேனும் கடைப்பிடிக்கின்றார்களா? யாராவது சொல்லுங்களேன்.



- ரசிகவ் ஞானியார்

Friday, January 12, 2007

விடைபெறுகின்றேன்

Photobucket - Video and Image Hosting

ன்
சந்திப்பினால் வருகின்ற
சந்தோஷங்கள் எல்லாம் ...
விடைபெறும் பொழுது
விலகி விடுகின்றது !

வ்வொரு விடைபெறுதலும்
நம் சந்திப்பின்
சாட்சியாக இருப்பதால் ......

ன்னை
சந்திப்பதை காட்டிலும் ...
விடைபெறுதலிலையே
விருப்பம் அதிகம்!

கவே
விடைபெறுகின்றேன்!

- ரசிகவ் ஞானியார்

என் இனிய ஜனநாயக எண்ணெய் வியாபாரியே

Photobucket - Video and Image Hosting

ன் இனிய
ஜனநாயக எண்ணெய் வியாபாரியே!

ன்
கறுப்படைந்த கலாச்சாரத்தில்..
தூக்குதண்டனைதான்
ராஜ உபசாரமா?

ன்
எண்ணெய் வியாபாரத்திற்கு..
இன்னொரு பெயர்
ஜனநாயகமா?

தூக்கிலிடப்பட்டது..
சதாம் மட்டுமல்ல
உன்னுடைய பாதுகாப்பும்தான்!

வன் விளையாடி மகிழ்ந்த
சிறுவயதுக் கோலிக்குண்டுகள்..
உன்
அசுரப்பார்வைக்கு ஏன்..
அணுகுண்டாய் தெரிந்தது?

Photobucket - Video and Image Hosting

ரணத்தை அவன் ..
மகிழ்ச்சியோடு அழைத்தான்!
மரணபயத்தை நீ..
கறுப்புத்துணி அணிந்து
மறைத்தாய்!

வளையை தொண்டைக்குள்
தக்கவைத்த
பாம்பு எப்படி..
பச்சாதாபம் காட்டும்?

ந்த சரித்திரத்தையும்..
ஒரு
மரணம் வந்து
முடித்துவிடாது!

வன்
உயிர் பிரிந்தது
இறப்பு அல்ல!
அது
கண்களுக்கு மறைக்கப்பட்ட
உயிர்பித்தல்!


வன்
மரணிக்கும்பொழுது விட்ட
கடைசி மூச்சுக்காற்று...
இன்னமும்
ஈராக்கில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறதாம்!

னது
சாம்ராஜ்யம்
சமுத்திரமாகிவிட்டதாக நினைக்கின்றாய்!
ஆனால் புரிந்துகொள்
உனது
பாதுகாப்புதான்..
பனித்துளியாகிவிட்டது!


தீவிரவாதி என்று
நீ
பட்டம் சூட்டியவன்..
தியாகியாகிவிட்டான்!

தியாகி போல நடிக்கின்ற ..
நீ
தீவிரவாதியாகிவிட்டாய்!

ப்பாவிகளைக் கொன்றதற்கு
மரணதண்டனையா?
ஒத்துக்கொள்கிறேன்
ஆனால்
உனக்கான தூக்குக்கயிறு
சதாமின்
காலடியில் அல்லவா
கண்டுபிடித்திருக்க வேண்டும்!

ராக்கில் நீ வெட்டிய
ஒவ்வொரு
பதுங்குகுழிக்குப்
பக்கத்திலும்
உனக்கும் ஒரு குழி
தோண்டப்பட்டது ..
உன்
சாட்டிலைட்டுக்கு தெரியவில்லையா?

தாமின்
புதைகுழியில் இருந்து
புறப்படுகின்ற..
புற்களை வெட்டிவிடு!
யாருக்குத் தெரியும்?
அதிலிருந்து கூட உனக்கு
ஆயுதம் தயாராகலாம்!

னக்கு
குண்டு போட்டு
குண்டு போட்டு..
களைத்துவிட்டது!
எங்களுக்கு
செத்து செத்து..
சோர்வாகிவிட்டது!

Photobucket - Video and Image Hosting

புஷ்ஷே!
எந்த புத்தாண்டில் ...
நீ சபதம் எடுக்கப்போகின்றாய்?
மனிதனாய் மாறப்போவதாக!

தாமைப்போலவே
இந்தக் கவிதையும்
முடிந்துவிட்டது
ஆனால்
முற்றுப்பெறவில்லை........


- ரசிகவ் ஞானியார்

Tuesday, January 09, 2007

கொஞ்சும் வலி

Photobucket - Video and Image Hosting

ன்
ஞாபகக்கொசு
கடித்துவிட்டுச் சென்றதில்
என் இதயமெல்லாம்
காதல் என்னும்
சிக்கன் குனியா..

- ரசிகவ் ஞானியார்

Friday, January 05, 2007

ஏதாவது செய்யணும் சார்..?



"ம்பி கோர்ட்டுக்கு எப்படி போகணும்..?"

சுமார் 70 வயது இருக்கும் அந்தப் பெரியவர்க்கு. அழுக்கு ஆடையணிந்தாலும் கண்ணியமான தோற்றம். கையில் ஒரு பாலிதீன் பை.

"ந்த ரோட்டுல நேராக போனீங்கன்னா ஒரு ரோடு வரும். அங்கிருந்து பஸ்ல போகணும்..பக்கம்தான் ரெண்டு ஸ்டாப்புக்கு பிறகு இறங்கிருங்க.. "

என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே தனது பெரிய பாலிதீன் பையை சரிப்படுத்திக்கொண்டு நான் கூறியதை காதில் வாங்கியும், வாங்காததுமாய் நான் சுட்டிக்காட்டிய திசையைநோக்கி மெதுவாய் நடக்க ஆரம்பித்தார்

டக்க முடியாமல் அவர் விந்தி நடக்கின்றதைப்பார்த்து இதயம் லேசாய் சிந்தியது உடனே அவரை அழைத்தேன்..

"லோ என் வண்டியில வாங்க நான் உங்களை அந்த ஸ்டாப்புல இறக்கி விடுறேன்" என்று நான் அவரை அழைத்தேன்..

ப்படி யாராவது சொல்ல மாட்டார்களா? என்று ஏங்கியது போல் ஒரு பார்வை பார்த்து தனது வயதுக்குண்டான முக சுருக்கங்களில் மலர்ச்சி அரும்ப என்னை நோக்கி வந்தார்

பார்ப்பதற்கு பாவமான தோற்றம். முகத்தினில் அனுபவம் கலந்த முதிர்ச்சி. பார்வையில் ஒரு விதமான ஏக்கம்.

என் அருகே வந்து எனது வண்டியில் ஏறிக்கொண்டார். கண்களில் லேசாய் திரண்டிருக்கும் நீர்த்துளிகளோடு

"ம்பி ரொம்ப நன்றிப்பா.. என்னால உங்களுக்கு தொந்தரவு..
நான் சங்கரன்கோவிலில் இருந்து வருகின்றேன்.."
என்றார்

"ம்.."என்றேன்;.

"நான் நல்லா வாழ்ந்தவன்பா..இப்படியெல்லாம் வாழணும்னு தலை விதி"
என்று அவர் நொந்து புலம்பும்பொழுதே தெரிந்துகொண்டேன். அவர் மனதில் ஆழமாய் ஏதோ ஒரு சோகம் ஓடிக்கொண்டிருக்கின்றது.

"ஏன் என்ன ஆச்சுங்க..?" மெல்ல கேட்டேன்

"ன்னுடைய பசங்களால இப்படி ஆயிட்டேன். யாருமே என்னை கவனிக்கறது இல்லைப்பா.." அழுகுற தொனியில் கூறினார்

"ங்க பசங்க என்ன பண்றாங்க..?" ஆறுதலாய் கேட்டேன்

"ம் பொறுப்பத்த பயலுவ.. மனுசங்களா அவங்க.." என்று திட்டினார்

நான் இதனை எதிர்பார்த்தேன்.
"ஏன்..? அவங்க உதவுறது இல்லையா..? "

"வங்கவங்க நல்லா வாழுறானுங்க..என்னைய தனியா விட்டுட்டானுங்க.." என்று ஏக்கத்தோடும் ஒருவிதமான சலிப்போடும் கூறியபடி தொடர்ந்தார்

"நான் டிப்ளமோ சிவில் படிச்சேன்..பெங்களுர்ல நல்ல வேலை -கை நிறைய சம்பளம் அதுமட்டுமல்ல மிலிட்டரியில வேற கொஞ்ச நாள் சர்வீஸ் பண்ணினேன்..
நான். நடந்ததே இல்லைப்பா எங்கே போனாலும் கார்தான்....இப்ப பாவிங்க நடக்க வச்சுட்டானுங்க.."

புரிந்துகொண்டேன் ஒரு காலத்தில் நல்லா வாழ்ந்தவர். இப்போ வயதானவுடன் மகன்களின் ஆதரவு கிடைக்காமல் துரத்திவிடப்பட்டவர் என்று.

"எதுக்கு கோர்ட்டுக்கு போறீங்க..?"

"ரு வழக்கு சம்பந்தமாக மனு ஒன்று கேட்டேன். அனுப்புறேன்னு சொன்னவங்க இழுத்தடிக்குறாங்கப்பா அதான் நேர்ல வந்து பார்க்கலாம்னு வந்தேன்.."

ன்ன வழக்கு என்று சொல்ல மறுக்கின்றார். சரி எதற்கு நோண்டி நோண்டி கேட்க வேண்டும் என விட்டுவிட்டேன். பின் அவர் இறங்க வேண்டிய இடம் நெருங்கும்பொழுது

"ப்பா..யப்பா.. இப்படி பண்ணிட்டாங்களே நல்லா வாழ்ந்தேனே" என்று புலம்பிக்கொண்டே வந்தார். ஒருவித ஏக்கத்தில் குரல் பிசிறிப்போய் அவர் அப்படி கூறியது எனக்கு மனசே சரியில்லாமல் போனது..

வரைப் பார்க்கின்ற வழிப்போக்கர்கள் கூட பரிதாப்பட்டு அவருக்கு ஏதாவது உதவவேண்டும் என்று நினைப்பார்கள். அந்த அளவிற்கு அமைதியான முகம். ஆனால் அவருடைய மகன்களுக்கு எப்படி மனசு வந்தது இவரை அநாதையாக்குவதற்கு? அவரின் மகன்களின் மீது கோபம் கோபமாய் வந்தது.

"ங்கே இறங்கிக்கோங்க..தூத்துக்குடி வண்டி வரும் அதில ஏறி நீதிமன்றம்னு சொல்லுங்க இறக்கி விட்டுறுவாங்க.."என்று சொன்னேன்..

அவரும் மெதுவாய் இறங்கினார்.

"கால் விளங்காம போயிடுச்சுப்பா அதான் இறங்குவதற்கு சிரமமா இருக்கு" என்று சொல்லியபடி மெதுவாய் இறங்கினார்..

திரும்பி பார்த்தேன்
விந்தி விந்தி நடக்கின்றது
அவருடைய
கால்களும் கனவுகளும்.


விளங்காமல் போனது அவருடைய கால்கள் அல்ல, அவருடைய மகன்கள்தான் என்று மனசுக்குள் எண்ணிக்கொண்டு அப்பொழுது கடந்து போன மணல்லாரியை விடவும் அதிகமான மனபாரத்தோடு விடைபெற்றேன்.

ந்தப்பெரியவரைப்போல எத்தனையோ பேர் சொந்த மகன்களால் துரத்தப்பட்டு வீதியில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

ரு காலத்தில் நன்றாக வாழ்ந்து, குழந்தைகளை கள்ளம் கபடமில்லாமல் கொஞ்சி மகிழ்ந்து , தன்னுடைய வருமானத்தில் முக்கால்வாசியை குழந்தைகளின் படிப்புக்காய் செலவிட்டு, அவர்களை முன்னேறவிட்டுவிட்ட பிறகு கடைசிகாலங்களில் அவர்கள் தங்களை காப்பாற்றுவார்கள் என்று எண்ணிய அவர்களது கனவுகளில் மண்ணை அள்ளி வீசுகின்றார்கள் மகன்கள்.

வனுங்கள எல்லாம் தேசத்துரோகிகள் என்று தூக்குத்தண்டனை கொடுத்தால்தான் என்ன..?

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்....



னைவியை அடித்தால் தண்டனை என்ற சட்டத்தைப்போல தந்தையை அல்லது தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்களுக்கும் தண்டனை தரவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றக்கூடாதா..?

கண்டிப்பா ஏதாவது செய்யணும் சார்?



- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு