Monday, February 26, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு (தொடர் 3)

சில நாட்களுக்குப் பின் தேவவிரதன் நவசக்தி இதழுக்கு போய்விட்டான்
பூபேனும் வந்காளத்திற்கு சுற்றுப்பயணம் போய்விட்டான்.

இதழை நடத்துகின்ற பெரிய பொறுப்பு என்மீதும் பாரீந்திரன் மீதும் விழுந்தது. நானும் பெரிய மனிதர்களுள் ஒருவனாகிப்போனேன்.

வாழ்வும் சாவும் காலில் கிடக்கும் அடிமை. உள்ளத்தில் கவலை இல்லை என்று ரவீந்திரர் தீட்டிய சித்திரம் அந்தக் காலத்து வங்காளி இளைஞர்களின் சித்திரமாகும்.

உண்மையில் ஒரு நம்பிக்கை ஒளி எங்கள் உள்ளங்களின் ஒளிந்திருந்தது. பிரிட்டிஷ் பீரங்கி வெடிகுண்டு பட்டாளம் இயந்திரத்துப்பாக்கி எல்லாமே வெறும் மாயை. இது ஒரு இந்திரஜாலக்காட்சி சீட்டுக்கட்டால் கட்டப்பட்ட வீடு நாங்கள் ஓர் ஊது ஊதினால் பறந்து போய்விடும்.

எங்கள் எழுத்துக்களைப்படித்து நாங்களே திடுக்கிட்டோம். நாட்டின் ஜீவசக்தி எங்கள் கைகள் மூலமாகத்தான் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தோன்றும்


எங்கள் பத்திரிக்கையின் எண்ணிக்கை 1000 த்திலிருந்து ஒரே ஆண்டில் 20000 ஆக மாறியது ஒரே ஆண்டில். ஆவ்வளவு இதழ்கள் அச்சடிப்போம் என்று நாங்கள் நினைத்துப் பார்த்ததில்லை. எங்கள் அச்சு இயந்திரங்களும் அத்துணை இதழ்கள் அச்சடிப்பதற்கு தகுந்தது இல்லை. எனவே திருட்டுத்தனமாக வேறு அச்சகத்திலும் அச்சிட நேர்ந்தது.


அறையின் மூலையில் உடைந்து போன பெட்டியில் ஜுகாந்தர் விற்ற பணம் இருக்கும். அதைப் பூட்டி யாரும் பார்த்ததில்லை. பணம் எவ்வளவு வந்தது எவ்வளவு செலவாகியது என்று யாருமே கணக்கு பார்ப்பதில்லை. பல இளைஞர்கள் ஜுகாந்தர் அலுவலகம் வந்து இளைப்பாறி சாப்பிடுவதுண்டு. அவர்கள் யார் என்ன என்று கூட விசாரிப்பதில்லை. அவர்கள் சுதேசிகள் ஆகவே எங்களைச் சேர்ந்தவர்கள் என்று மட்டும்தான் தெரியும்.


ஆபிசுக்கு வெளிNயு வரும் போது வாசலில் ஓரிருவர் எப்போதும் நின்று கொண்டிருப்பதைப்பார்ப்போம். எங்களைக் கண்டவுடன் ஒருவர் வானத்தை வெறித்துப்பார்ப்பாh. ஒருவர் டீக்கடைக்குள் நுழைந்து விடுவார். வேறொருவர் சீட்டியடித்துக்கொண்டே அங்கிருந்து நழுவுவார். அவர்கள் சிஐடியின் அனுக்கிரகம் பெற்றவர்கள் என்று கேள்விப்பட்டேன். சிஐடி "ப்பூ அதைப்பற்றி எங்களுக்கென்ன கவலை",

ஒருநாள் அரசாங்கத்திடமிருந்து கடிதம் வந்தது நாங்கள் ராஜதுரோக கட்டுரைகள் எழுதுவதாகவும் உடனே அதனை நிறுத்தவேண்டும் என்றும் மீறினால் சட்டத்தின் பிடியில் அகப்பட்டுக்கொள்வீர்கள் என்றும் எழுதியிருந்தது.
எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சட்டம் என்ன ஐயா? நாங்கள் பாரதத்தின் எதிர்கால ஆட்சியாளர்கள். எங்களுக்கு சட்டம் சொல்லித்தர நீ யார்?

ஒரு நாள் உண்மையில் ஆட்டு மந்தையில் புலி நுழைந்துவிட்டது. இன்ஸ்பெக்டர் பூர்ணலாகிரி சில சிப்பாய்களுடன் ஆபிஸை சோதனையிட வந்தார்.

அவரிடம் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்ட் இருந்தது." யார் ஆசிரியர்" என அவர் கேட்க.."நான்தான் நான்தான்" என்று ஆளாளுக்கு சொல்ல கடைசியில் அவரே கொஞ்சம் உடல் பருமனனாகவும் தாடியுடனும் இருந்த பூபேனை ஆசிரியராக முடிவுசெய்து கைது செய்தார்.
பின் பூபேனை 1 ஆண்டு சிறையில் தள்ளிவிட்டனர். பின் கொஞ்ச நாட்களில் ஜுகாந்தர் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அதனை பதிவிட்ட வசந்தகுமார் சிறை சென்றார்.

இப்படி ஒவ்வொருவராக கைதுசெய்யப்பட்டு வந்தனர். பல இளைஞர்கள் சிறை சென்றுவிட்டனர் . இந்த நிலையில்தான் பாரீந்திரன் சொன்னான்


(தொடரும்)
-ரசிகவ் ஞானியார்

2 comments:

Dubukku said...

நன்றாக எழுதிவருகிறீர்கள் ரசிகவ். இதை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/02/28/uperndranath/

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Dubukku said...
நன்றாக எழுதிவருகிறீர்கள் ரசிகவ். இதை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.//



நன்றி டுபுக்கு...

தேன் கூடு