Monday, February 26, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு (தொடர் 1)

வங்காளத்திலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டவர்கள் அரசு ஆவணங்களிலும் ஆங்கிலேயப் பத்திரிக்கைகளிலும் அராஜகவாதிகள் என்று குறிப்பிடப்பட்டார்கள்.

இப்படி ஒரு குழு இந்தியாவில் இருந்ததா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. அடிமைநாடுகளில் சுதந்திர வேட்கை மிகுந்தால் அங்கு இரகசிய சங்கங்கள் தோன்றுவது சகஜம்தான்.

வங்காளிகளின் தன்மானங்கள் ஆட்சியாளர்களின் நடத்தையால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதால் ஆங்கிலேய ஆட்சியில் அவர்கள் மனிதர்களாக வாழுகின்ற வாய்ப்பு இல்லாததாலும் அவர்கள் தங்கள் சக்தி முழுவதையும் திரட்டி எதிர்க்கத் தயாராகினர்.

இந்த நாட்டு புரட்சிவாதிகள் அராஜவாதிகள் அல்ல என்று சொல்வதே என் நோக்கம்.

1906 ம் ஆண்டின் குளிர்காலம் அது. ஆங்காங்கே கச்சேரிகள் சூடுபிடித்துக்கொண்டிருந்தது
நாட்டில் எதிர்ப்பு அலைகள் உருவாகிக்கொண்டிருந்தது. நாடு முழவதும் புதிதாய் எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

நான் அப்பொழுதுதான் என்னுடைய துறவற வாழ்க்கையை விட்டுவிட்டு வாத்தியார் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

ஒருநாள் "வந்தேமாதரம்" இதழ் என் கைக்கு கிடைத்தது. அதில் இந்தியாவின் அரசியல் இலட்சியத்தைப் பற்றி ஒருவர் எழுதியிருந்தார். நாம் வேண்டுவது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலும் விடுபட்ட சுயாட்சி.

இந்தக் காலத்தில் இந்தச் சொற்றொடர் தெருவுக்கு தெரு பேசப்படும் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது

அந்த நேரத்தில் அரசியல்வாதிகள் சுய ஆட்சியைப் பற்றி உரையாற்றும் பொழுது அந்த சொல்லுக்கு முன்னால் காலனி என்ற சொல்லையும் சேர்த்து உச்சரிப்பாhர்கள். அப்படிப்பேசினால்தான் சட்டப்படி ஆபத்து வராது. கைதட்டலும் கிடைத்துவிடும்
ஆனால் நான் ரொம்ப துரதிருஷ்டசாலி. அந்த வார்த்தைகள் என்னுடைய காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. அடிக்கடி எனக்குள் ஏதோ ஒன்று தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது. எழுந்திரு எழுந்திரு நேரம் வந்துவிட்டது.

இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளா அல்லது இதன் ஆழத்தில் வேறு ஏதேனும் இருக்கின்றதா என்று எண்ணிக்கொண்டிருந்தவேளையில் நான் கேட்ட வதந்திகள் என்னை திடுக்கிட வைத்தது.

ஏதோ ஒரு மலை இடுக்கில் இரண்டு லட்சம் நாகர் வீரர்கள் கத்திகளைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். ஆயுதங்கள் எல்லாம் தயாராம். நாட்டின் மற்ற பகுதிகளும் தயாராம் ஆனால் வங்காளம் மட்டும் பின்தங்கியிருப்பதால் போர் தொடங்க தாமதமாம். இருக்கலாம்.

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு