
இந்திய விடுதலைக்காக போராடிய எண்ணற்ற தியாகிகள் சத்தமில்லாமல் எங்கோ புதைக்கப்பட்டு சரித்திரத்தின் சுவடுகளில் எட்டிப்பார்க்காமலையே இருந்துவிட்டனர். நாம் இன்று சுதந்திரமாய் வாழுகிறோம் என்றால் நமக்காக போராடியவர்களின் உயிர்களின் மீதுதான் நாம் உலவிக்கொண்டிருக்கின்றோம்.
விடுதலைக்காக போராடிய ஒரு புரட்சிவீரன் தான் உபேந்திரநாத். இவர் வங்காளதேசத்தைச் ஹ{க்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
துறவறத்தின் மீது ஆர்வம் கொண்டு பின் விடுதலைக்காகப் போராடி புரட்சி இயக்கத்தில் இணைந்து 12 ஆண்டுகளாய் நாடு கடத்தப்பட்டு அந்த வீரனின் சோகம் நிறைந்த கதையை அவரே தன் வரலாறாக ஆங்காங்கே கிண்டல்களுடன் எழுதியிருக்கின்றார். அவரது நூலை நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு என்று தமிழில் மொழிபெயர்த்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி.
விடுதலைப்போராட்டத்தின் போது பல ஆண்டு காலங்கள் வீட்டைப் பிரிந்து நட்டைப்பிரிந்து திரும்பி வரமுடியுமா உயிர்பிழைப்போமா என்ற அச்சத்தில் வாழ்க்கையை இழந்த எத்தனை இளைஞர்கள் வரலாற்றில் இருந்து காணாமல் போயிருக்கின்றார்கள்.
அப்படிக் காணாமல் போன ஒரு நாடு கடத்தப்பட்டவனின் சோகத்தை விளக்கப்போகின்றேன்.
மொழிபெயர்க்கப்பட்டாலும் அப்படியே வங்காளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ள சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வார்த்தைகளை கொஞ்சம் கடினமாக கையாண்டிருக்கின்றார்.
ஆகவே எனக்கு புரிந்த மாதிரி படித்து நான் படிப்பது போன்ற நடையில் உங்களுக்கும் அந்த சோகத்தை உபேந்திரநாத் சொல்வது போலவே தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
-ரசிகவ் ஞானியார்
No comments:
Post a Comment