Sunday, January 29, 2006

எங்களை சாக விட்டுடாதீங்க அங்கிள்




இதோ இந்தப் படத்தில் காணும் இரண்டு குழந்தைகளையும் பாருங்களேன். என்ன பள்ளிக்கு டாட்டா காட்டிச் சென்ற உங்கள் வீட்டுக் குழந்தைகள் ஞாபகம் வருகின்றதா?

மேலிருக்கும் சிறுவனின் பெயர் செய்யது தனிஷ் வயது 13 அவனது சகோதரியின் பெயர் மரியம் செய்யது வயது 10 அவர்கள் இருவரும் IISR ( International Indian School in Riyadh ) ல் சிறந்த மாணவர்களாக விளங்குகிறார்கள்.

தனிஷ் அந்தப்பள்ளியில் படிப்பில் 7வது இடத்திலும் அவனது தங்கை மரியம் 6 வது இடத்தில் இருக்கின்றாள்.அதுமட்டுமல்ல மரியம் பள்ளியின் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கோல்டு மெடலிஸ்ட் வேறு.

அதுவல்ல இங்கு பிரச்சனை. அந்தப் பெருமை அவர்களுக்கு எப்போதுமே கிடைக்குமா என்பதுதான் பிரச்சனை

தினமும் காலையில் இந்த இரண்டு குழந்தைகளும் பதறிப்போய்தான் படுக்கையைவிட்டு எழுந்திருக்கிறார்கள். இவர்கள் காலையில் உணவு இல்லாமல் பள்ளிக்குச் செல்லக்கூடும். ஆனால் ஒரு ஊசி போடாமல் செல்வதில்லை. அந்த ஊசியை மறந்து பள்ளிக்குச் சென்றால் அவர்களுக்கு மரணம்தான் நேரிடும்.

அதுபோல மாலையில் பள்ளி முடிந்ததும் சிட்டுகளாய் பறவைகளாய் மகிழ்ச்சியாய் ஓடிவரும் மற்ற குழந்தைகளை போல இல்லை. ஊசி பயத்தில்தான் வருகிறார்கள். இரவு படுக்கைக்கு செல்லும் முன் அவர்களின் வயிற்றில் ஒரு ஊசி ஏற்றப்படுகிறது.

காலை எழுந்ததும் ஊசி
கனிவு இழக்கும் உடல்வலி
மாலை வந்ததும் ஊசி
மகிழ்ச்சி மறந்த தூக்கம்


என்று பாரதி இருந்திருந்தால் இவர்களுக்காய் மாற்றி பாடியிருப்பான்

உடலுக்குள் தினமிரண்டு
ஊசி - இவர்களின்
பருவத்தில் பிடித்ததப்பா
பாசி?


வலிகளுடைய அந்த இரண்டு ஊசிகள்தான் அவர்கள் உயிர்வாழ தினமும் தேவையான காரணிகள். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களின் வயிற்றில் அந்த ஊசி செலுத்தப்படாவிடில் அவர்களுக்கு மரணம் நேரிடும். என்ன இதயத்தை யாரோ புடுங்கி எரிமலையில் எறிவது போன்ற உணர்வு தோன்றுகிறதா..? ஆமாம் அவர்கள் மரணத்தோடு தொட்டு பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சியாய் குழந்தைகளை முத்தமிடலாம். மரணம் முத்தமிட விடலாமா..?

தனிஷ் மற்றும் மரியம் இருவரும் தலசீமியா ( Thalassemia) என்ற நோயினால் பிறவியிலிருந்தே பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஹீமோகுளோபினைப் பாதிக்கும் இந்த பிறவி நோய் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை முழுங்கிவிடும்.

ஒவ்வொரு நாளும் அந்தக்குழந்தைகள் மற்ற குழந்தைகளைப்போல பள்ளியில் விளையாடுவதற்குதான் ஆசைப்படுகின்றன. ஆனால் தலசீமியா நோயிலிருந்து தங்களை காத்துக்கொள்ள செலுத்தப்படுகின்ற டெஸ்பிரல் என்ற உயிர்காக்கும் அந்த ஊசி யினால் அவர்களால் மற்ற குழந்தைகள் போல இருக்க முடியாது என்று கவலையோடு சவுதி பத்திரிக்கைக்கு ( Saudi Gazette) பேட்டி அளித்துள்ளார் அந்தக்குழந்தைகளின் தாயார் ஜெய்ரின் ஹாபிஷ் .

8 மணி நேரம் தாக்குபிடிக்கும் அந்த ஊசி செலுத்தப்படும் முறையினைப்பற்றி தெரிந்துகொள்ள மாதக்கணக்காய் பயிற்சி எடுத்து இருக்கிறார் அந்தத் தாய் ஜெய்ரீன்.

நம் குழந்தைகள் வருடத்திற்கு ஒருமுறை தடுப்பு ஊசி போடுவதற்கே அவர்கள் செய்கின்ற சேட்டைகள் - அடம்பிடித்தல், இத்தனையும் மீறி அவர்களை தடுப்பு ஊசி செலுத்தப்படும் இடத்திற்கு அழைத்துச்சென்று கை ,கால்களை உதைத்து திமிரும் குழந்தைகளுக்கு ஊசி செலுத்த எத்துணை போராட்டங்கள்? நாம் மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது.

ஆனால் அந்தத் தாயின் நிலைமையை நினைத்துப்பாருங்கள் தினமும் இரவு அவர்கள் போராட வேண்டியதிருக்கிறது. தினமும் அந்த குழந்தைகள் இரவு நெருங்க நெருங்க தனக்கு ஊசி செலுத்தப்படும் நேரம் நெருங்கிவிட்டதை அறிந்து கடிகாரத்தை பீதியோடு பார்ப்பதை கண்டு வேதனையடைந்து கொண்டிருக்கிறாள் அந்தத்தாய்.

ம்மா ம்மா வேண்டாம்மா ப்ளீஸ்மா ..இன்னைக்கு மட்டும் போட வேண்டாம்மா ..வலிக்குதும்மா என்று கதறும் குழந்தைகளின் கெஞ்சல்களை பொருட்படுத்தாமல் அவர்களின் வயிறு அல்லது கை அல்லது கால்களின் வழியாக அந்த ஊசியைச் செலுத்துகிறாள் அந்தத்தாய்.

அவளுக்குத் தெரியும் குழந்தைகளின் கெஞ்சலுக்காக மனமிரங்கி அந்த ஒருநாள் செலுத்தாவிடில் என்றைக்குமே செலுத்த முடியாது என்று.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அந்தக் குழந்தைகளுக்கு அந்த ஊசி செலுத்தினால்தான் அவர்களின் உயிரக்கு உத்திரவாதம். இது அவர்களின் தற்காலிக தீர்வுதான். ஆனால் நிரந்தர தீர்வுக்கு ஒரே வழி bone-marrow transplant அறுவைச்சிகிச்சைதான் .

ஆனால் இந்த அறுவைச்சிகிச்சைக்குண்டான செலவு மிகவும் அதிகம் . அந்தக்குழந்தைகளின் தந்தை செய்யது ஹாபிஷ் ஜன்னல் திரைகள் தயாரிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். மாதம் சவுதி ரியால் 2000 சம்பாதிக்கின்ற ஒரு சிறு வியாபாரி. அவரால் அந்தச் செலவுகளை ஈடுகட்ட முடியாது

அந்த அறுவைச்சிகிச்சைக்கு சவுதி ரியால் மதிப்பு 170000 (இந்திய மதிப்பு சுமார் 2 மில்லியன் ரூ ) தேவைப்படும். அந்தத் தந்தையினால் இந்த ஊசிக்குண்டான செலவுகளையே ஈடுகட்ட முடியவில்லை

ரியாத்தில் உள்ள ஆர்எம்சி மருத்துவமனையில் ஒருதடவை இலவசமாக அந்த ஊசியும் மற்றும் blood Transfusion ம் நடந்தது. அதன்பிறகு மற்ற நாட்டுக்காரர்களுக்கு இலவசமாக அந்தச்சிகிச்சையை அவர்கள் அளிக்க மறுத்துவிட்டனர்.

மகாராஷ்டிராவைச் சோர்ந்த ஹாபிஷ் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவிகள் மூலமாகத்தான் தன் குழந்தைகளுக்கு அந்த உயிர் காக்கும் ஊசியை செலுத்திக்கொண்டிருக்கிறார். உதவிசெய்த நண்பர்கள் எவ்வளவு காலம்தான் உதவிசெய்யக்கூடும். ?

ஆகவே அவர்கள் இப்போது கேரளாவில் உள்ள சில பொது நல அமைப்புகளையும் அவர்களது குழந்தைகள் படித்த IISR பள்ளியையும் அனுகி நாடியுள்ளார்கள். 10000 மாணவர்கள் படிக்கின்ற அந்தப் பள்ளியில் ஒவ்வொரு குழந்தையும் சவுதி ரியால் 20 கொடுத்தால் கூட தங்களது குழந்தைகளின் அறுவைச்சிகிச்சைக்கு பணம் சேர்த்துவிடலாம் என்று பள்ளி நிர்வாகத்திடமும் குழந்தைகளின் பெற்றோர்களிடமும் சில சமூக அமைப்புகள் மூலமாக கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.

சமூக அமைப்புகள் அந்தக் குழந்தைகளை மருத்துவச் செலவு மிகவும் குறைவாக உள்ள வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்திருக்கிறார்கள்.

நீங்களும் யாராவது இந்தக்குழந்தைகளின் துயரத்தில் பங்கு கொள்ள விரும்புகிறீர்களா. இதோ இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

செல்பேசி - 0507910906 ( ஹாபிஷ்)
வீட்டு எண் : 01-2135062.
தங்களது பண உதவியை இதோ இந்த கீழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம்

Syed Hafiz,
The Saudi British Bank
A/C No. 009017195150,
Sanayah branch, Riyadh.

Or

Syed Hafiz,
ICICI Bank,
A/C No. 00040144156,
Mumbai branch, India.

மேலே குறிப்பிட்டுள்ள நபர் எனக்கு சொந்தமோ நண்பரோ இல்லைப்பா..அவரின் முகம் கூட எனக்குத் தெரியாது. அவருக்கும் எனக்கும் உள்ள ஒரே உறவு முறை அவரும் நானும் மனித வர்க்கம் என்ற நெருங்கிய பந்தம்தான்.

இவருக்கு செய்கின்ற உதவியினால் எனக்கு கிடைக்கின்ற லாபம் என்ன..? எனது இறைவன் சொர்க்கம் கொடுப்பானோ இல்லையோ அந்தக்குழந்தைகளுக்கு இதன் மூலம் கிடைக்கின்ற உதவிகளில் என்னுடைய மனதிருப்தி இருக்கின்றது.

நீங்கள் விழி வைத்தால் அந்த குழந்தைகளின் வலி போகும்.
விழி வைத்து வழி கொடுப்பீர்களா? இல்லை
அழ வைத்து வலி கொடுப்பீர்களா?

வாடகை வீடாம் பூமியிலே
மனிதநேயம் ஒரு கதவு
பாடையிலே நீ போகுமுன்னே
பத்துபேருக்கு உதவு


- ரசிகவ் ஞானியார்

10 comments:

Anonymous said...

சவுதி அரசு சிகிச்சை அழிக்க மறுத்தது வருந்ததக்கது!!!

Anonymous said...

எல்லா விஷயங்களையும் அலசுகிறீர்கள் ரசிகவ். நல்ல மனிதநேயப் பதிவு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சவுதி அரசு சிகிச்சை அழிக்க மறுத்தது வருந்ததக்கது!!! //



ஆமா அவங்க நினைச்சா உதவியிருக்கலாம்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//எல்லா விஷயங்களையும் அலசுகிறீர்கள் ரசிகவ். நல்ல மனிதநேயப் பதிவு //

நல்ல மனிதநேய விமர்சனம் நண்பரே

Deiva said...

This is showing up under "Nagaichuvai/Naiyandi". Please classify it under appropriate title

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வகைப்படுத்தல் நகைச்சுவை என்று இருக்கிறது. மாற்ற முயலுங்கள். குழந்தைகள் குணம் பெற வேண்டுகிறேன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Deiva said...
This is showing up under "Nagaichuvai/Naiyandi". Please classify it under appropriate title //


//ரவிசங்கர் said...
வகைப்படுத்தல் நகைச்சுவை என்று இருக்கிறது. மாற்ற முயலுங்கள். குழந்தைகள் குணம் பெற வேண்டுகிறேன் //


அதனை எவ்வாறு மாற்ற வேண்டும் எனத் தெரியவில்லை நண்பா..

சிலநேரம் மாற்ற முடிகிறது ..சில நேரம் மாற்ற முடிவதில்லை..என்ன காரணமாக இருக்கும் யாராவது கூறுங்களேன்

Anonymous said...

kandippa saahe vida maattoem rasikov

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//kandippa saahe vida maattoem rasikov //

அதற்குத்தான் எழுதியது நண்பரே நன்றி

Anonymous said...

The ICICI A/C number is not a valid one it seems.

தேன் கூடு