Saturday, December 10, 2005

எலா சௌக்கியமா..?


( காதலியின் வாக்குக்காக காசு சம்பாதிக்க சென்ற காதலன் பழைய நினைவுகளோடு காதலியைத் தேடி வருகின்றான்)




நேசமணி பேருந்துக்குள்ளே
நெருக்கியடிச்சி உக்காந்தேன்!
நெருக்கத்தோடு நெஞ்சில
நேசம்கொண்ட பொட்டப்புள்ள!


காடு கழனி எல்லாமே
கண்முன்னே ஓடிவருது!
கண்ணுக்குள்ளே சின்னப்பொண்ணு
காவிரியப்போல தேடிவருது !

ஆசைவச்சேன் அன்புவச்சேன்
அவமேல என் உசிரவச்சேன்.!
கண்ணே மணியே என்று ...
கவிதையில் உருகவச்சேன் !

என்னருமை காதலியே..
எனக்காக காத்திருடி!
ஊருக்குப் போயிநான்
உருப்படியா திரும்பிவரேன்!

காத்திருடி காத்திருடி...
காலமொன்று வருமென்று
கைப்பிடிச்சி சொல்லிவிட்டு
கையசைச்சி சென்றுவிட்டேன் !

உசுருக்குள்ளே அவளவச்சு
உருகி உருகி உழைச்சேன்!
கண்ணீர ரத்தமாக்கி ...
காதலியத்தான் நினைச்சேன் !

கொஞ்சகொஞ்சம் பணம்சேர்த்து
கோபுரமாய் ஆனேன்!
கோபுரத்தில் நிலவில்லை
கூட்டிவரப்போனேன்!

பஸ்ஸ விட்டிறங்கி ..
பாதையிலே சென்றேன்!
பாதையில அவளோட...
பழைய நினைவால நின்றேன்!

செல்லுகின்ற வழியிலே ...
செவ்வந்திப்பூ பார்த்தேன் !
செவத்த புள்ள கேப்பாளென்று ...
சேகரித்து நான் வச்சேன் !

எனக்காக பூத்திருப்பா ...
ஏக்கத்தோட காத்திருப்பா...
பார்த்தவுடன் நெஞ்சில ...
பாசத்தோட அழுதிடுவா!

சின்னப்பையன் உள்ளம்போல ...
சிறகடிச்சி ஓடினேன்!
இதோ அவள் வீடு ...
இதயத்தால தேடினான்.!

தாவணித்தேர் அவள்
சேலையோடு வந்தாள் ...
சேலைக்குள்ள மறைச்சி வச்ச
தாலியோடும் வந்தாள்!

ஒண்ணுமே தெரியாத..
குருடனின் காட்சி!
எவனுக்கோ வாக்கப்பட்டாள்..
தாலிதான் சாட்சி!

செல்லம் என்றழைத்தவனை ...
செல்லாம ஆக்கிப்புட்டா!
பாக்கெட்டுல காசு இருக்கு
பாழுங்கிணத்துல காதல் கிடக்கு!


நேசமணி பேருந்துக்குள்ளே ...
நெருக்கியடிச்சி உக்காந்தேன்!
நெருக்கத்தோடு நெருக்கமா...
நெஞ்சுக்குள்ள நெறிஞ்சிமுள்!

இஷ்டப்பட்ட அவளால ...
நெஞ்சுக்குள்ள கஷ்டப்பட்டேன் !
இலவுகாத்த கிளி நான் ...
நஞ்சு குடிச்சி நஷ்டப்பட்டேன்.

- ரசிகவ் ஞானியார் -

2 comments:

Anonymous said...

nalla yekkamaana kavithai nanba..

vazhththkkal..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி பெயர் சொல்லாத புண்ணியவான் அவர்களே..

தேன் கூடு