Thursday, December 08, 2005

நண்பனின் தோல்வி- தோழியின் கேள்வி






மாலைநேரம் நானும், மஸ்தானும் கல்லூரி முடிந்து கடலையின் ஜீவிதத்தை உயிர்ப்பிக்க சுலோச்சனாவிடம் பேசிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறோம்

கடலலை எழுந்தாலும்
கடலை அழியாது


அந்த நெல்லை தூத்துக்குடி சாலை கல்லூரி முடிந்து தங்களுடைய பிகர்களை கோட்டை விட்டு விடக்கூடாதே என்று வருகின்ற மாணவர்களின் துடிப்ப்போடு மிகவும் பரபரப்பாய் இருக்கின்றது.


நாங்கள் சதக் கல்லூரியை தாண்டி உள்ள சட்டக்கல்லூரியை நெருங்கும்போது எங்களின் முன்னால் பிகாம் பிரபாகர் வந்து நிற்கின்றான். அவனுக்கு பின்னால் அவன் க்ளாஸ் மாணவர்கள் சிலர் நிற்கிறாhர்கள்

என்னடா எல்லோரும் இங்க நிற்கிறீங்க - நான்

வழக்கமாக அவர்கள் அங்கே நிற்க மாட்டார்கள். கல்லூரி முடிந்ததும் அந்த சாமிக்கடை என்ற டீக்கடையில்தான் நிற்பார்கள்.
(இரயில் விடுவதற்காகவும் (?) எல்லா பிகர்களையும் ஒரே புள்ளியில் இருந்து ரசிப்பதற்காகவும் )

(வாத்தியார் வந்தா கூட அணைக்க மாட்டாங்க. ஆனா தெரிஞ்ச பிகர் வந்தா மட்டும் சிகரெட்டை அப்படியே அணைத்துவிடுகிறார்கள். எதற்கு இந்த போலித்தனமான மரியாதையை எதிர்பார்க்கிறார்கள்? )

இல்லைடா சும்மாதான்..நீங்க கொஞ்சம் நில்லுங்க என்று என்னையும் நண்பன் மஸ்தானையும் நிறுத்தினான்

சுலோச்சனா கொஞ்ச நேரம் நின்றுவிட்டு நாங்கள் அவனிடம் ஏதோ பர்ஸனலாக பேசுகிறோம் எனத் தெரிந்ததும் அவள் கண்களால் விடைபெற்றுவிட்டு பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள்.

என்னடா ஏதாவது பிரச்சனையா?- மஸ்தான்

உங்க அண்ணன் எப்படி இருக்கார்..இன்னிக்கு சாயங்காலம் வந்தா வீட்டுல இருப்பாரா - அந்த பிகாம் பிரபாகருக்கு என் அண்ணனை தெரியும் ஆகவே பேச்சை மாற்றும் விதமாக கேட்டான்

கொஞ்சநேரம் எங்களிடம் ஏதேதோ உளறி பேச்சை மாற்றிமாற்றிப் பேசினாhன்.

எனக்கு உடனே பொறி தட்டியது. சட்டென்று தூரத்தில் சென்றுகொண்டிருக்கும் சுலோச்சனாவை பார்த்தேன். அவளிடம் பிகாம்மை சேர்ந்த இன்னொரு மாணவன் குமார் பேசிக்கொண்டிருக்கிறான்.

எனக்கு உடனே விசயம் புரிந்துவிட்டது. அட லவ்வு மேட்டர்தான்

(வாகனத்தில் செல்பவளை விரட்டிபடி ஒரு காதல் கடிதம் கொடுத்தவன்..

நடந்து செல்பவளிடம் காதல் கடிதம் கொடுத்துவிட்டு பைக்கில் பறந்தவன்..

பேருந்தில் செல்பவளிடம் காதல் கடிதம் கொடுத்துவிட்டு நிறுத்தம் வரும் முன்னரே இறங்கி ஓடியவன்..

காதலைச் சொல்லாமலையே கடைசிவரை ஒருதலையாய்க் காதலித்தவன்..(?)

காதலைச் சொல்லிவிட்டு காதலியை கை நழுவ விட்டவன்...

நேரப்போக்குக்கு காதலித்தவன்..

என்று கல்லூரியில் ஏகப்பட்ட காதலப்பா..இது எல்லா கல்லூரிகளுக்கும் பொருந்தும். இவன் எத்தனை தடவை வேண்டுமானாலும் அவளைப் பார்ப்பான் சிரிப்பான்..ஆனால் மீண்டும் அவள் பார்த்துவிட்டால் போதும்..டேய் மச்சி அவ உன்னய லவ் பண்றாடா என்று ஆரம்பித்துவிடுவார்கள். )


நான் மஸ்தான் காதினில் சொன்னேன்.

டேய் குமார் சுலோச்சனா கூட பேசிக்கிட்டு இருக்கான் பாரேன்

( தன்னுடைய தோழி மற்ற வகுப்பு நண்பர்களோடு பேசிக்கொண்டிருப்பதை பார்த்து வயிற்றெரிச்சல் படும் மற்ற மாணவர்களைபோலவே எங்களுக்கும் வயிற்றெரிச்சலாக இருந்தது )

எனக்கு ஏற்கனவே தெரியுன்டா அவன் சுலோச்சனாவை லைன் விட்டுகிட்டு இருக்கான்.. - மஸ்தான் வயிறிறிலிருந்து புகை கிளம்பியது

அதான பார்த்தேன்..என்னடா அவன் பிகாம் நம்ம கூட வந்து ஒட்டி பழகுறானேன்னு பார்த்தேன்..

நான் பிரபாகரை பார்த்து சிரித்துக்கொண்டே

டேய் விடுடா நாங்க போறோம் ..நீங்க எதுக்காக வழிமறிச்சீங்கன்னு எனக்குத் தெரியும்..சும்மா நடிக்காத என்ன..



அந்த குமார் தூரத்தில் அவளிடம் பேசிவிட்டு கிளம்பிவிட்டான்.

நாங்கள் பேருந்து நிலையம் வந்து சேருகிறோம். சுலோச்சனா தனியாக கண்களில் கண்ணீர்த்துளிகள் திரள முகம் சிவந்து போய் நின்று கொண்டிருக்கிறாள்.

நானும் மஸ்தானும் அங்கு பேருந்துக்காக காத்திருக்கின்ற நண்பர்கள் கூட்டத்தோடு இணைந்து கொண்டோம்.

டேய் அவகிட்ட போய் என்னன்னு கேளுடா - நான்

இல்ல வேண்டாம் இப்ப எல்லாரும் நிற்கிறாங்க இப்ப கேட்டா நல்லாயிருக்காது. நான் போன் பண்ணி கேட்டுக்கறேன்.நீயும் இந்த விசயத்தை யாரிடமும் சொல்லிவிடாதே

என்ன நடந்தது என்றால் அந்த குமார் எங்க க்ளாஸ்மேட் சுலோச்சனாவை ரொம்ப நாளாகவே லைன் விட்டுக்கொண்டு இருந்திருக்கிறான்.

அவள் லைப்ரேரி பக்கம் வரும்போது அவனும் வந்து புத்தகம் எடுப்பதுபோல் அவளை ரசிப்பது

காலையில் அவள் கடந்து செல்கின்ற வராண்டாவில் வந்து நிற்பது..

என்று அவள் கண்படும்படியாகவும் மறைந்து இருந்தும் ரசித்துக்கொண்டிருப்பான்.

இன்று அவளிடம் காதல் கடிதத்தை கொடுத்துவிடுவது என்று தீர்மானித்து உடன் படிக்கும் மாணவர்களை துணைக்கு அழைத்து அவள் கடந்து போகும் பாதையில் நின்றிருக்கின்றான்

தினமும் கல்லூரி முடிந்தவுடன் சுலோச்சனாவும் அவள் தோழிகளும் முன்னால் செல்ல நான் மஸ்தான் மற்றும் நண்பர்கள் இணைந்து பேருந்து நிலையம் வரை கிண்டல் பேலி செய்து கொண்டு பேசிக்கொண்டேச் செல்வோம்.


இது அவர்களுக்கு ஒரு இடைஞ்சலாக இருந்தது ஏனென்றால் இன்று குமார் அவளிடம் காதல் கடிதத்தை கொடுக்கப்போவதாக கூறியிருப்பதால் எங்களை வழியில் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.


(கடலையை சிதைத்து
காதலை வாழவைக்க வந்தவர்கள்
)

மறுநாள் சுலோச்சனா கல்லூரிக்கு வருகிறாள். அவள் பார்வை வித்தியாசமாய் எங்களை பார்த்தது.

உங்க கூட தானேடா வந்தேன்..அவன் வந்து லவ் லட்டர் கொடுக்கும்போது நீங்க ஒண்ணும் செய்யாம வேடிக்கைதானேடா பார்த்தீங்க என்று அவள் பார்வையில் எங்களை சுட்டெரித்து எங்களை பார்ப்பது போல தெரிந்தது எங்களுக்கு

(நண்பனின் தோல்வி
தோழியின் கேள்வி என்ன செய்வதோ..?
)

நான் உடனே மஸ்தானிடம் டேய் என்னடா நீ கேட்டியா சுலோச்சனாகிட்ட அவன் வந்து லவ் லட்டர்தானே கொடுத்தான் என கேட்க

அவனோ ஆமாடா ஆனா இவ வாங்கிட்டு அழுதுகிட்டே போயிருக்கா..அவன்கிட்ட நான் அதுமாதிரியான ஆள் இல்ல..எனக்கு படிப்புதான் முக்கியமுன்னு சொல்லியிருக்கா அவன் வந்து லவ் லட்டர் கொடுக்கும்போது இவ பயந்துபோயி அழுதுட்டாளாம் ..
அவ சொல்லல ஆனா அவளுக்கு நம்ம மேலயும் ஒரு வருத்தம்தான்..


டேய் அவன் வந்து முறைதவறியா நடந்துகிட்டான் இல்லையே..தனக்கு புடிக்குதுன்னு சொல்லி லவ் லட்டர் கொடுத்திருக்கான் அவ்வளவுதானே..நம்ம மட்டும் நம்ம க்ளாஸ்மேட் அந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பொண்ணை லவ் பண்றான்னு சொல்லி ஹெல்ப் பண்ணலயா..

இல்லடா சுலோச்சனாவுக்கு விருப்பமில்லை அவனோட காதல்ல ..அந்த குமார் இவ பின்னால சுத்துறது இவளுக்கு புடிக்கல..

சரி அப்படின்னா நம்ம குமார்கிட்ட சொல்லுவோம் சரியா..இதுல நம்ம மேல வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லைடா..

( அந்தக் குமாரும் எங்களுக்கு நண்பன்தான் . சுலோச்சனாவும் எங்களுக்கு தோழிதான்..அவன் அவளிடம் காதல் கடிதம் கொடுக்க வந்ததை நாங்கள் எப்படி தடுக்க முடியும். அதனை தடுக்க எங்களுக்கு உரிமை இல்லையே..

தடுத்தால் அவன் என்ன சொல்லியிருப்பான்

உனக்கு என்னடா..உன் வேலையைப்பார்த்துட்டு போ..நான் அவள லவ் பண்றேன்..அவகிட்ட லட்டர் கொடுக்கிறேன்..அவளுக்கு பிடிக்கலைன்னா அவ சொல்லட்டும்..நீயென்ன வக்காலத்தா? என்று கேட்பான்

நானே அந்த குமாரின் நிலையில் இருந்தாலும் அப்படித்தான் கேட்பேன். ஆனா எனக்கு குமாரின் நிலை இதுவரை கிட்டியதில்லை....:) )

அந்தகுமாரை மதிய இடைவேளையில் சந்தித்து டேய் குமார் நேத்து நீங்க எங்களை வழிமறிச்சதுன்னு எதுக்குன்னு எங்களுக்கு தெரியும்..நீ அவகிட்ட லவ் லட்டர் கொடுத்திருக்க..அது ஒண்ணும் தப்பில்ல..ஆனா அவளுக்கு புடிக்கலையாம்..அதனால் உன்னைய பின் தொடர வேண்டாம்னு சொல்லச்சொன்னா.. என்று கூறிவிட்டு

டேய் எங்க மேல தப்பா நினைச்சுக்காதடா..அவ சொன்னதைதான் சொன்னோம்..

( காதலித்துப்பார்
நண்பர்களையெல்லாம்
அனுமனாக்குவாய்
)

அவனோ மிகவும் நாகரீகமாக..சாரிடா..எனக்கு பிடிச்சதுன்னு நான் லவ் லட்டர் கொடுத்தேன்..அவளுக்கு புடிக்கலைன்னா விட்டர்றேன்டா..அவகிட்ட சாரி சொன்னேன்னு சொல்லு என்று கூறி விட்டான்.

எனக்கு அவன் பேசியது மிகவும் நாகரீகமாக தெரிந்தது. காதலித்தவள் காதலை மறுத்து விட்டால் அவள் மீது ஆசிட் ஊற்றுதல் அவளை அவமானப்படுத்துதல் என்ற செய்கைகளை செய்யும் மிருகங்களுக்கு மத்தியில் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் எத்தனை பேருக்கு வரும்?


குமாரின் காதலை மறுத்ததால் சுலோச்சனா கொடுத்துவைக்காதவளா..? இல்லை
குமார் கொடுத்துவைக்காதவனா..? தெரியவில்லை..இப்பொழுது சுலோச்சனாவிற்கும் கல்யாணம் முடிஞ்சு போச்சு.. சந்தோசமாக இருக்கிறாள் அவள்.

இவனுக்கும் கல்யாணம் முடிந்து திருநெல்வேலியில் சந்தோசமாய் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

கடவுள் அமைத்துவைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னாருக்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று


ரசிகவ் ஞானியார்

2 comments:

யாத்ரீகன் said...

நிலவு நண்பரே..

அத காதல்னு சொல்றதா.. இனக்கவர்ச்சினு சொல்றதா :-)

சரி அத விடுங்க..

இப்படி ஒரு கோணத்துல உணர்ச்சிவசப்படாம யோசிச்சிருக்கீங்க.. அதோட.. நீங்க சொன்னத நல்லபடியா எடுத்துகிட்ட நண்பரும் கலக்கிட்டாரு.. அவுங்க ரெண்டுபேரும் நண்பர்களாவது ஆகிருக்கலாம்.. :-)

-
செந்தில்/Senthil

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அத காதல்னு சொல்றதா.. இனக்கவர்ச்சினு சொல்றதா :-)
//

இனக்கவர்ச்சியில ஆரம்பிச்சு காதல்ல முடீஞ்சதன்னு வச்சுக்கலாமே..

//அவுங்க ரெண்டுபேரும் நண்பர்களாவது ஆகிருக்கலாம்.. :-)
//

ம் நண்பர்களாகவாவது ஆகியிருக்கலாம்..அவங்க விதி என்ன செய்ய..?

தேன் கூடு