Thursday, June 28, 2007

புள்ளைய போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை

Photo Sharing and Video Hosting at Photobucket


தோ முட்செடிகளாக அடர்ந்திருக்கும் இந்த ஓடைப்பகுதியானது திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் 1 கி.மீ தூரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே அறிவியல் மையத்திற்கு எதிர்ப்புறமாக உள்ளது

ன்ன ஆயிற்று இந்த ஓடைக்கு என்கின்றீர்களா..?

நேற்று ஒரு ஏழைப் பெண்மணி தனது கைக்குழந்தையுடன் இந்த ஓடையில் நீர் குடிக்க இறங்கிய பொழுது இந்த ஓடையில் எந்த மரத்திலிருந்தோ ஒரு பலாப்பழம் விழுவதைக் கண்டு கையிலிருந்த குழந்தையை அப்படியே தண்ணீரில் போட்டுவிட்டு பலாப்பழத்தை எடுக்கச் சென்றுவிட்டாள்.

பாவம் குழந்தை தண்ணீரில் மூழ்கிப்போனது. குழந்தையைப் போட்டுவிட்டு பலாப்பழத்தை எடுக்கச் சென்றிருக்கிறாள் என்றால் எந்த அளவிற்கு பசியோடிருப்பாள் என்று நினைத்துப் பாருங்கள். குழந்தையை விடவும் அவளுக்கு பாலப்பழம்தான் அந்த நேரத்தில் முக்கியமாய் தெரிந்திருக்கிறது.

தனால்தான் இந்த ஓடைக்கு வித்தியாசமான பெயர். என்ன தெரியுமா?

புள்ளைய போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை

ன்னடா நேற்று நடந்திருக்கிறது எந்தப்பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சி செய்திகளிலும் வரவில்லை என்கின்றீர்களா? நான் நேற்று என்று சொன்னது சுமார் 50 வருடங்களுக்கு முந்தைய நேற்றுங்க.. .. இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது கற்பனையா என்றெல்லாம் தெரியாது. ஆனால் வட்டார மக்களால் இந்தக் கதை பரவலாக பேசப்படுகின்றது

தான்ங்க ஒரு பழமொழி சொல்வாங்க பசி வந்தால் பத்தும் பறந்தும் போகும் என்று. ஊரில் நடக்கின்ற திருட்டு கொலை கொள்ளைக்கெல்லாம் முக்கிய காரணம் இந்தப் பசிதாங்க. இறைவன் மட்டும் பசிக்காத வயிறொன்றை படைத்துவிட்டால் இவ்வுலகம் அமைதியாய் இருக்குமோ..?

ந்த ஓடையைக் கடக்கும் பொழுதெல்லாம் எனக்கு பலாப்பழம் ஞாபகம் வருகின்றதோ இல்லையோ மூழ்கிப்போனதாகச் சொல்லப்படும் அந்தக் குழந்தைதான் ஞாபகத்தில் வரும்.

நீங்க திருநெல்வேலிப் பக்கம் வந்தீங்கன்னா இந்த ஓடையை கண்டிப்பா பார்த்துட்டுப் போங்க..? அந்தப் புள்ளை ஞாபகம் வருமோ இல்லையோ என் ஞாபகம் வரும்ல..


- ரசிகவ் ஞானியார்

3 comments:

Anonymous said...

Kandippa unga gyabagam varum rasigav. Next naan pogum pothu kandippa paapen :) ammu

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
Kandippa unga gyabagam varum rasigav. Next naan pogum pothu kandippa paapen :) ammu //


நன்றி..உங்க ஒருத்தருக்காவது ஞாபகம் வந்துச்சே

ILA (a) இளா said...

//அந்தப் புள்ளை ஞாபகம் வருமோ இல்லையோ என் ஞாபகம் வரும்ல..//
கண்டிப்பாங்க. ஆமா இப்போ அந்த ஓடையில தண்ணி இருக்கா? இல்லே குப்பை போடுற இடமாகிருச்சா?

தேன் கூடு