Sunday, June 26, 2005

எம் சி ஏ - ஆட்டோகிராப்

[எம் சி ஏ படித்துக்கொண்டிருக்கும்போது கல்லூரி இறுதி ஆண்டில் நண்பர்களுக்கு சும்மா தமாஷாக எழுதிய ஆட்டோகிராப்..டைரியை புரட்டி எடுத்து வந்தது]


என் இனிய கிராமத்து
மாணவர்களே!

ஒரு
ஆர்ப்பாட்டத்தோடு
கல்லூரிக்குள் நுழைந்த
என் இதயம்
இந்த
ஆட்டோகிராப் டைரிக்குள்
அமைதியோடு நுiர்கிறது
(நம்ப முடியலையே)

மீண்டும் எந்தஇடத்தில்
சந்தித்துக் கொள்வோமோ?
தெரியாது,
ஆனால்
இபபொழுது பிரியப்போகிறோம்

நம்பவேமுடியவில்லை
நேற்றுதான்
சேவியர் கல்லூரியில்
தயங்கி தயங்கி
நுழைவுத்தேர்வு எழுத வந்தது போலிருக்கிறது
ஆனால் அதற்குள்
பேர்வெல்....
ஆட்டோகிராப்...
ச்சே ரொம்ப வலிக்குதுப்பா
(என்ன காலில் முள் குத்திடுச்சா)

நாம்
றநநம-நனெ ல் சந்தித்துக்கொண்டாலும் இது
ளுவசழபெ ஆன நட்பஜதான்
(ஏன் லைட்டான நட்பில்லையா
நீயென்ன டீக்கடையிலையாடா
வேலை பார்க்கிற)


ஒவ்வொரு வாரமும் நமக்கு ரம்சான்
ஒவ்வொரு வாரமும் நமக்கு தீபாவளி
ஒவ்வொரு வாரமும் நமக்கு கிறிஸ்துமஸ்
இப்படி
வருஷப்பண்டிகை அல்ல
வாரப்பண்டிகைதான் நமக்கு

எதை நினைத்துப்பார்ப்பது,
கடைசி பெஞ்சு கலாட்டக்கள்.
விதைக்காமலையே முளைத்த கடலைகள்.
கிண்டலுடனே கடந்த பீரியடு.
சில காதலின் வளர்ச்சிகள்.
பள்ளி வராண்டாவில் தேங்காய் உடைத்தது.
ஜோசப்புக்கு பெண் பார்த்தது
ஜன்னலொரம் கடப்பவர்களை கிண்டலடித்தது.
டீக்கடை பெஞ்ச்.
யாருடைய திருமணத்திலும் அழைப்;பிதழ் இல்லாமல்
வி எம் எஸ் சாப்பிட்ட சாப்பாடு
ப்ராக்டிகல் ருமில் செய்த லூட்டி
ரவுண்டானாவில் அடித்த ரவுண்ட்
செமினார்கிளாசில் சேட்டைகள்
கல்லூரி விழாவில் தோப்புக்கரணம்
ஜெராக்ஸ்; வாங்கிவிட்டு
ஏமாற்றியவர்கள்.
டூர் செல்லும் இரவில் சீட்டுவிளையாட்டு.
பாரீனரோடு எடுத்த போடNடொ.
பாத்ரூமூக்குள் ஆடிய டான்ஸ்
கிழிந்தாலு போட்டுவந்த ஜீன்ஸ்
டூரில் ல் யார் யாரோ ஜோடியோடு
நான் மட்டும் தனியே.
இப்படி
எல்லாமே கனவாகப்போகிறது
(நினைச்சுடாதீங்கப்பா,)

இனிமேல்
குடும்பம- குழந்தை
வேலை-பணம்
என்று
சாதாரண மனிதவாழ்க்கைக்குள்
நுழையப்போகிறோம்
(கவலைப்படாத நைனா)

மீண்டும் சந்திப்போம் என்று
நம்பிக்கையோடு கூறினாலும்
சூழ்;நிலைகள் எப்படியிருக்குமோ,



என்றாவது ஒருநாள்
இந்த டைரியை
படிக்கும்பொழுது
என் ஞாபகம் இருக்குமா,
(கண்டிப்பா இருக்காது)

என் பெயர் சொல்லி
யாராவது அழைத்தால்
என் ஞாபகம் இருக்குமா,
(ரொம்ப அலட்டாதடா)

பத்திரிக்கையில் வரும்; என்
கவிதையைக் கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,

குரங்குசேட்டை செய்யும்
யாரையாவது கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,
(குரங்குன்னு ஒத்துகிட்டா சரி)

ஆனால்
நான் உங்களையெல்லாம்
ஞாபகப்படுத்தியே
பார்க்கமாட்டேன்
ஏனெனில் என்னையே
நான் எப்படி ஞாபகப்படுத்துவது,
(ஹைய்யா ஐஸ் ஐஸ் ))


- Hide quoted text -
அயர்ன் செய்த சட்டை
கூட்ட நெரிசலில் கசங்கிப்போவதைப்போல

இந்த
- Hide quoted text -

கடைசிநேரப்பிரிவில் இதயம்
கசங்கிவிட்டது
(யப்பா என்ன சென்டிமென்ட்)

- Hide quoted text -
கூட்டம்கூட்டமாய் பழகிவிட்டு
தனித்தனியே பிரியப்போகிறோம்
(சிலபேர் ஜோடியா பிரியறாங்க)

எங்கையோ பிறந்து
பள்ளிவாழ்;க்கை எங்கையோ படித்து
கல்லூரி வாழ்க்கையில்
நம்மை நண்பர்களாக்கிய
இறைவனுக்கு நன்றி
(இறைவா மாட்டிவிட்டுட்டியே)

இஙகே நாம்
சந்தித்துக்கொள்ளவேண்டுமென
இறைவன் கட்டளை
சந்தித்துவிட்டோம்
(அரியர்ஸ் வச்சதும்
அவனோட கட்டளையா,)

இப்பொழுது இந்தநேரம்;
பிரியவேண்டுமென
இறைவன் கட்டளை
பிரியப்போகிறோம்
(யப்பா சனியன் ஒழிஞ்சது)


உன்னுடைய திருமணத்திற்கு
எல்லோருக்கும்
அழைப்பிதழ் அனுப்பு
மீண்டும்
அனைவரும் சந்தித்துக்கொள்வோம்
(யப்பா வந்துடாதீங்கடா)

இனிமெல்
எந்த வீதிகளில்
எந்த இரயில்வேஸ்டேஷனில்
எந்த பிளாட்பாரத்தில்
எந்த பஸ்டாண்டில்
எந்த ஊரில்
எந்த நாட்டில்
எந்த சாப்ட்வேர் கம்பெனியில்
எந்த சூழ்நிலையில்
மீண்டும் சந்திப்போமோ

அந்தச் சூழ்நிலையில்
நீ பணக்காரனாகவோஃஃ
நீ தொழிpலதிபராகவோஃஃ
நீ அதிகாரியாகவோஃஃ
எப்படியிருந்தாலும்
பதவிகளை எறிந்துவிட்டு முதலில்
பழைய நண்பனாய் வா
(வரமாட்டேன் போடா)

நாளைக்கும் நிலவு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(ஆமா பெரிய தத்துவம்)

நாளைக்கும் சனி ஞாயிறு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(சரியான லுசுப்பா)

இனியொரு ஜென்மமிருந்தால்
இதே கல்லூரியில்
இதே நண்பர்களாய்
சந்திப்போம் என்று
சங்கடத்தோடு பிரிகிறேன்
(யப்பா முடிஞ்சுது)



ரசிகவ் ஞானியார்

2 comments:

குழலி / Kuzhali said...

ரசிகவ் ஞானியார் தங்களுடைய தூக்கம் விற்ற காசுகள் படைப்பு எங்களது அலுவலகத்தில் சுற்றிக்கொண்டுள்ளது, வலைப்பதியாத பலருக்கும் உமது இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன், ஹி ஹி எதுனா கமிஷன் குடுத்துடு பா...

கவிதைகளில் உமது சொல்லாளுமை வியக்க வைக்கின்றது.
இன்னும் நிறைய படையுங்கள்.

Anonymous said...

Hi

Oru thalai raagam padam paarthathu pol irukku..
Good.
M. Padmapriya

தேன் கூடு