Thursday, September 14, 2006

குடிகாரனின் காதல் கவிதை


நெப்போலியனை விடவும் - போதையாய்
நெஞ்சைத் தொட்டவளே
என்
கவிதையே - கழுதையே!

முட்டாளைக் காதலித்த
முழுநிலவே..?

நீ என்னைக்
காதலிக்கவில்லை என்றாலும்
என்னைக்காதலி!

நான் உன்னைக்
காதலிக்காவிட்டாலும்
உன்னைக் காதலிப்பேன்..


போதை இறங்கும் முன்
ஒரு உண்மைச் சொல்லட்டுமா

நீ இல்லையென்றால்
வேறு யாரையும் காதலித்திருப்பேன்..




- ரசிகவ் ஞானியார்

1 comment:

Anonymous said...

tanni adichikireya?

தேன் கூடு