Wednesday, October 08, 2008

அழகான பிரிவு





நீ மறைத்தாலும் வெளிபட்டுவிடுகின்ற...
பிரிவின் துயரினை,
நடிக்கத் தெரியாத
கண்ணீரையெல்லாம்...
ஏன் உடன் சுமந்து வருகின்றாய்?

அன்பின் திரவவடிவமான
அந்த
நீர்த் திவலைக்களுக்காகவாவது,

கிளம்புவதற்கான விநாடிகள்
கணக்கிடப்படும் தருவாயில்
பாம்பின் பின்னலையொத்த
விரல்களின் ஸ்பரிசத்திற்காகவாவது...

பேருந்து புறப்பட்டுவிட்ட பொழுதிலும்
வழித்தடங்களில்..
நின்று கொண்டு
எனக்காக நீ காட்டுகின்ற
டாட்டாக்களுக்காகவாவது,

அதுபோன்றதொரு
அழகான பிரிவினை
எதிர்பார்க்கின்றேன்

- ரசிகவ் ஞானியார்

9 comments:

ILA (a) இளா said...

ஹ்ம்ம்,,, எதிர்பார்க்கலாம்

ஜியா said...

arumaiyaana kavithai ngyaani

அமிர்தவர்ஷினி அம்மா said...

அதுபோன்றதொரு
அழகான பிரிவினை
எதிர்பார்க்கின்றேன்

பிரிவை
இவ்வளவு
அழகாக்க முடியுமா?

மிகவும் நன்றாய் இருக்கிறது.

ரகசிய சிநேகிதி said...

அழகு இந்த அழகான பிரிவு :-) வாழ்த்துகள்.. தொடருங்கள் ஞானி.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அழகான பிரிவை விமர்சித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்

நட்புடன் ஜமால் said...

//பேருந்து புறப்பட்டுவிட்ட பொழுதிலும்
வழித்தடங்களில்..
நின்று கொண்டு
எனக்காக நீ காட்டுகின்ற
டாட்டாக்களுக்காகவாவது,//

பல முறை ஏங்கியதுண்டு.

நட்புடன் ஜமால் said...

பல முறை ஏங்கியதுண்டு. பெற்றுக்கொண்டதுமுண்டு

Anonymous said...

Azhakuthan.. anthe pirivu'kuude azhakanathu endal..

nice brother..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

பின்னூட்டத்திற்கு நன்றி நித்தியா மற்றும் அதிரை ஜமால்...

தேன் கூடு