Saturday, April 05, 2008

ஒட்டகச்சவாரி







அவ்வப்போது
என்
கனவுகளுக்குள் வந்து ...
கள்ளிச்செடியை மேய்கிறது!

உனது பிரவேசம்
இல்லையெனில்,
எனது பிரதேசத்தில் ...
ஒட்டகங்கள் உலவியிருக்கும் !

புலிச்சவாரிக்கு...
ஓட்டகச்சவாரி ...
எவ்வளவோ தேவலதான் !

புலியை விரும்பும்
கிளிக்காக ...
ஒட்டகத்தை நான்
ஒதுக்கி விட்டேன் !

அவ்வப்போது
என்
கனவுகளுக்குள் வந்து
கள்ளிச்செடியை மேய்கிறது

- ரசிகவ் ஞானியார்

5 comments:

Anonymous said...

என்னோட தமிழ் அறிவுக்கு இந்த கவிதை புரியலை..மீண்டும் படித்து பார்க்கிறேன்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Thooya said...
என்னோட தமிழ் அறிவுக்கு இந்த கவிதை புரியலை..மீண்டும் படித்து பார்க்கிறேன்...
//

துபாய் -ஒட்டகம்
இந்தியா புலி

புரிகிறதா?

Anonymous said...

nalla irukku Rasikow. athu yarunga puliyai virumbum kili ? :-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Ezhilanbu said...

nalla irukku Rasikow. athu yarunga puliyai virumbum kili ? :-)//

கிளியைச் சொல்லுவேன் ஆனால் புலி நானல்ல..
:)

Anonymous said...

oh... sari sari...

தேன் கூடு