Friday, February 15, 2008

உதிக்காமல் மறையும் சூரியன்






இதோ இவரைப் பார்த்தால் இந்தியன் கமல் ஞாபகம் வருகின்றதா..? பெங்களுர் சாலைகளில் இந்த மனிதரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். சைக்கிளின் முன்னாலும் பின்னாலும் பத்திரிக்கைகளை நிரப்பிக்கொண்டு செய்திகளைச் சுடச்சுடத் தந்தவரே இப்பொழுது செய்தியாகியிருக்கின்றார்.

1950 ம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு இவர் வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டிருக்கின்றார் என்றால் பாருங்களேன்.

அட அப்படிப்பட்ட மனிதருக்கு இன்று என்ன நேர்ந்தது? ஏன் சாலைகளில் பத்திரிக்கை விற்றுக் கொண்டிருக்கின்றார் என்று உங்கள் மனதிற்குள் எழும் ஆச்சர்யங்கள் எனக்குள்ளும் எழுந்தது, இதோ அவரைப் பற்றிய சுவாரசியங்கள்

இவருடைய பெயர் உதய் பிரகாஷ் குப்தா. வயது 50 ஐ தாண்டியிருக்கும். தினமும் அதிகாலையில் பனிபொழியும் பெங்களுர் வீதியினில் 4.30 மணிக்கு விடிந்தும் விடியாத அரையிருட்டில் பத்திரிக்கை விற்பவர்.

பத்திரிக்கைகளை
இருட்டில் விற்றவர்…
பத்திரிக்கை மூலம்
வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றார்!
ஆனால் அவர் வாழ்க்கை
இன்னமும் இருட்டுக்குள்தான்!



வீடு வீடாக விற்று போக மீதமுள்ள பத்திரிக்கைகளை மார்க்கெட் பகுதிகளுக்குச் சென்றும் சாலையினில் சென்றும் அன்றைய முக்கியமான செய்தியை உரக்க சப்தமிட்டு விற்கத் தொடங்கிடுவார். இந்த வேலையில் தனக்கு முழு திருப்தியிருப்பதாக கூறுகின்றார்.

தன்னுடைய தந்தை நேர்மை நாணயம் தவறாமல் வாழ்ந்து வந்ததால் தனக்காக எங்கேயும் சிபாரிசு செய்த அவர் விரும்பவில்லை. தன்னுடைய மகன் யாருடைய சிபாரிசுமின்றி சொந்த திறமையில் வேலை தேடிக்கொள்ளவேண்டும் என நினைத்ததால் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று புலம்புகின்றார்.

அப்படி சிபாரிசு செய்கின்ற அளவுக்கு அவர் தந்தை பெரிய பதவி வகித்தவரா..?

ம.;… அவர் தந்தை மோகன்லால் குப்தா …1960 ம் ஆண்டு பீகாரில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் …

"அந்த நேரத்தில் மோட்டார் மெக்கானிக் வேலைக்காக டீளுசுவுஊ பீகார் டிரான்ஸ்போர்ட்டில் சிபாரிசு செய்யுமாறு என்னுடைய தந்தையை கேட்டேன்.

எனக்கு அதற்கு உண்டான தகுதி இருந்தது. ஆனால் அதிகாரிகள் 20000 ரூ லஞ்சமாக கேட்டதால் என்னுடைய தந்தை மறுத்துவிட்டார். திறமைக்கு கிடைக்காத வேலை லஞ்சத்திற்கு கிடைக்கவேண்டுமா என்று பிடிவாதமாய் இருந்துவிட்டார். பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும்தான் வேலை கிடைத்தது."
என்று சிரித்துக்கொண்டே சொல்கின்றார் உதய்.

பிரதமர் ஜவஹர்லால் நேரு உட்பட பல விடுதலைப் போராட்ட தலைவர்கள் தன்னுடைய வீட்டிற்கு வந்து சென்றதாக நினைவு கூறுகின்றார்.

மகனுக்கு சிபாரிசு செய்ய முடியாத தந்தையின் பிடிவாதத்தை குறை சொல்வதா? இல்லை அவருடைய நேர்மையை பாராட்டுவதா?

திறமையை நம்பாமல் சிபாரிசை நம்பிய உதய்யைக் குறை சொல்வதா? லஞ்சம் கொடுத்து சேரும் வேலை வேண்டாமென உதறிவிட்டு பத்திரிக்கை விற்று பிழைக்கும் உதய்யை பாராட்டுவதா?

ஒரு தலைமுறையின் வளர்ச்சினையே லஞ்சம் அழித்துவிட்டதே? தாத்தாக்கள் வேண்டாம் வருங்கால இளைஞர்கள் மூலமாகவாவது அவைகள் ஒழிக்கப்பட்டுவிடுமா?

உதய்யின் வீட்டிற்கு விடுதலைப் போராட்ட வீரர்கள் எல்லாம் வந்து சென்று என்ன புண்ணியம்? இன்னமும் விடுதலை வந்து சேரவில்லையே அவருக்கும் இந்தியாவிற்கும்.!

பஞ்சத்தின் பிடியில் பாரதமே கிடக்கும் ஆனால்
லஞ்ச ஊழல் மட்டும் லாவகமாய் நடக்கும்
மனிதனை மதிக்கின்ற தேசம் வேண்டும் - இனி
தேசத்தை மதிக்காத மனிதன் வேண்டாம்



- ரசிகவ் ஞானியார்

5 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

dear friend


that is not happened because of u visit my blog.....may be some viruses in your system...

anyhow sorry for happening.... try to backup all the data..and format the system....

- Rasikow

Anonymous said...

naermaiku kidaikkum kooli yaemarttam
- avarai paarattuvatha... samayosithathai thavaravittuvittar entru sovatha..
ithanal paathipu yarukku... oru nalla citizen nukku
பஞ்சத்தின் பிடியில் பாரதமே கிடக்கும் ஆனால்
லஞ்ச ஊழல் மட்டும் லாவகமாய் நடக்கும்
மனிதனை மதிக்கின்ற தேசம் வேண்டும் - இனி
தேசத்தை மதிக்காத மனிதன் வேண்டாம்

kavithai nantaga irukirathu.. i know ungalukku humanity undu..
so intha pathivu illaiya..
ungkal therintha nanbanthan...

சின்னப் பையன் said...

இந்த மாதிரி சில பேர் இருக்காங்க... உங்க இடைச்செருகல்கள் அருமை....:-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ச்சின்னப் பையன் said...
இந்த மாதிரி சில பேர் இருக்காங்க... உங்க இடைச்செருகல்கள் அருமை....:-)
//

நன்றி சின்னப்பையன்... சிலரோ..இப்படி பலபேர் வறட்டு பிடிவாதத்தில் இருக்கின்றார்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//kavithai nantaga irukirathu.. i know ungalukku humanity undu..
so intha pathivu illaiya..
ungkal therintha nanbanthan...//

நன்றி எனக்குத் தெரிந்த நண்பரே! :)

...யாருன்னா சொன்னா தெரிஞ்சுக்குவேன்...

தேன் கூடு