Monday, November 26, 2007

கடலையில் கூட காதல் ஒளிந்திருக்கலாம்

சிறு துரும்பும் பல்குத்த உதவும்னு சொல்வாங்க. இந்தப் பழமொழி எந்தப் பொருளையும் வீணாக்ககூடாதுன்கிற நோக்கத்தில் சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை என்று கடலை பொரிந்த காகிதம் மூலமாக உணர்ந்தேன்.

ஆமாங்க இரண்டு நாட்கள் முன்பு அலுவலகம் முடிந்து பெங்களுர் லால்பார்க் அருகே வந்துகொண்டிருந்த பொழுது ஆங்காங்கே வறுபட்டுக் கொண்டிருக்கும் கடலைகளுக்கு ஊடே (?) ஒரு வேர்க்கடலை வண்டிக்காரரிடம் இருந்து, நானும் - நண்பரும், கடலை வாங்கிக் கொறித்துவிட்டு, காகிதத்தை கசக்கி வீசப்போகிற நேரத்தில், காதல் என்று எங்கோ எழுதப்பட்டிருக்கின்ற வார்த்தை என்னைக் கவர கூர்ந்து பார்த்தேன்.

அது ஆனந்தவிகடனில் பிரகாஷ்ராஜ் எழுதுகின்ற சொல்வதெல்லாம் உண்மை என்கிற தொடர்.

திரையில் வில்லத்தனமாக தோன்றினாலும் நிஜத்தில் அவருடை ஆழ் மனதைப் பிரதிபலிக்கின்றது இந்தத் தொடர்கள். அவருடைய அனுபவங்கள் நமக்கு நிறைய கற்றுத்தருகின்றன. ஆனந்த விகடன் வாங்கினால் முதலில் படிப்பது இந்த தொடர்தான்.

நான் கையில் வைத்திருக்கும் காகிதத்தில் உள்ள இந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்தது.

"ஒரு கிழவனும் கிழவியும் தள்ளாடுற வயசுல இருக்காங்க சாகப்போற நேரத்துக்கு முன்னால
கிழவன் தன்னோட கிழவியிடம் ஒரு வேண்டுகோள் வைப்பான்

அந்த இருட்டுக்
குடிசையில் ஒரேயொரு விளக்கை மட்டும் ஏத்தச் சொல்றான். எரிகிற தீபத்திற்குப்
பக்கத்தில் அவளோட முகத்தை வைக்கச் சொல்றான். கிழவனுக்குக் கிறுக்குப்
பிடிச்சிருச்சின்னு பிள்ளைங்க சொன்னாலும் கிழவன் சொன்னபடி செய்றா கிழவி.

வெளிச்சத்தில் அவளோட முகத்தைப் பார்த்ததும் கிழவன் முகத்தில் ஒரு வெளிச்சம் வருது இவளும் நானும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணோம். வீடு உறவு ஊரன்னு எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி கல்யாணம் பண்ணினோம். நாற்பது வருச வாழ்க்கை. இதோ இப்போ நான் சாகப்போறேன்.

இத்தனை வருஷ வாழ்க்கையில் என்னைக் காதலிச்ச காரணத்தால தன்னோட வருத்தங்களைக் கூட இவ என்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம். நான் இவகூட எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்தேன்னு என் மனசாட்சிக்கு நல்லா தெரியும். அவ என்னோட எப்படி வாழ்ந்தான்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டேன். "

இருட்டுக்கு நடுவில் எரிகிற விளக்கு பிரகாசமா இருக்கு. விளக்கு பக்கத்தில் என் காதலியின் முகம் அதைவிடப் பிரகாசமா இருக்கு. என்னோட அவளும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்திருக்கா.
இந்தச் சந்தோஷத்தோடு இனிமேல் நான் செத்துப்போவேன்னு கிழவன் சொல்றதா கதை முடியும்.

அப்படி ஒரு கிழவனா வாழக்கிடைக்கறதுதான் ஆசிர்வாதம்.

சாகப்போகிற இறுதி தருணத்தில் கூட தான் வாழுகின்ற காலத்தில் தன் மனைவிக்கு உண்மையான சந்தோஷத்தைதான் தந்திருக்கின்றோமா? என்று எண்ணுகின்ற கணவன் கிடைக்கப்பெற்ற பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.

இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் கடலையில் கூட காதல் ஒளிந்திருக்கலாம். ஆகவே எதையும் அலட்சியப்படுத்திவிடாதீர்கள்.

இந்தப் பதிவுக்கு கரு கொடுத்த பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் காகிதம் கொடுத்த கடலை வியாபாரிக்கும் எனது நன்றிகள்

- ரசிகவ் ஞானியார்

2 comments:

cheena (சீனா) said...

ரசிகவ், ரசித்தேன். உண்மை - அப்படிப்பட்ட கணவன் கிடைத்த பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆமா கடல தானே காதலின் அடிப்படை ஆரம்பம்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//cheena (சீனா) said...
ரசிகவ், ரசித்தேன். உண்மை - அப்படிப்பட்ட கணவன் கிடைத்த பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆமா கடல தானே காதலின் அடிப்படை ஆரம்பம்//

நன்றி நண்பா..

வார்த்தைகள் இத்தனை தெளிவாக வருகிறதைப் பார்த்தால் ம் கடலையில் நிறைய அனுபவம் இருக்கு போல உங்களுக்கு.. :)

தேன் கூடு