Saturday, August 12, 2006

சின்னச் சின்னச் சுவாரசியங்கள் - II

மனைவியுடன் கிண்டலாக விளையாடப்போய் உயிரை விட்ட ஒரு கணவனின் உண்மைக் கதை இது. 1985 ம் ஆண்டு மார்ச் 15 ம் நாள் யூகோஸ்லேவியாவைச்சேர்ந்த இளைஞன் ஒருவன் வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பும்பொழுது வழியில் ஒரு முகமூடி கடையைப் பார்த்தபொழுது அவனுக்குள் ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஆந்த முகமூடியை மாட்டிக்கொண்டு தனது மனைவியை பயமுறுத்திப் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டான்.

பயங்கரமான தோற்றமுடைய ஒரு முகமூடியை வாங்கிக்கொண்டு வீட்டை நெருங்கினாhன். அடிக்கடி வீட்டின் காலிங்பெல்லை அழுத்திவிட்டு வீட்டைச்சுற்றி அங்குமிங்கும் நடந்து கொண்டும் வீட்டைச் சுற்றி சுற்றியும் வந்தான்.

இதனைக்கண்ட அவனது மனைவி மிகவும் பயந்து விட்டாள் யாரோ ஒரு திருடன்தான் வீட்டை கொள்ளையடிக்க நோட்டமிடுகின்றான் என நினைத்துவிட்டாள். உடனே கைத்துப்பாக்கியை எடுத்து அந்த முகமூடிக்காரனை நோக்கி சுட்டாள்.. குண்டு தலையில் பாய்ந்து அவன் அதே இடத்தில் இறந்து போனான். பின் அந்த முகமுடிக்காரன்தான் தன் கணவன் என்று அவளுக்கு தெரிந்து கதறி அழ ஆரம்பித்தாள். ஆனால் அழுது என்ன பயன்..? அவன் போய் சேர்ந்திட்டானே..?

இது யார்மீது தவறு விளையாட நினைத்த கணவன் மீதா இல்லை விளையாட்டு எனத் தெரியாமல் சுட்டுக்கொன்ற மனைவி மீதா..? அதனால சொல்றேன்பா மனைவியை பயம் காட்டுறேன்னு சொல்லிகிட்டு கோமாளித்தனமா ஏதும் செய்திடாதீங்க..

___________________

செப்டம்பர் 11 - அமெரிக்காவில் நடைபெற்ற சம்பவம் அனைவருக்கும் தெரியும். ஆதேபோல 1911 ம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி நடைபெற்ற சம்பவம் உங்களுக்கு தெரியுமா..?


அமெரிக்காவில் நியுயார்க் மாநகரில் உள்ள மான் ஹாட்டனி;ல் ஒரு பத்து மாடிக்கட்டிடம் ஒன்றில் 8 மற்றும் 9 வது மாடியில் சட்டைகள் தைக்கும் நிறுவனம் ஒன்று இருந்தது.

1911 ல் மார்ச் 11 ம் தேதி திடீரென்று அங்கு தீப்பற்றிக்கொண்டது. அங்கு 145 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வந்தனர் இதில் பெருன்பான்மையானோர் 13 வயது முதல் 19 வயது வரை உள்ள இளம் பெண்கள். தீப்பிடித்ததும் அவர்களுக்கு என்ன செய்வதென்று எங்கு ஓடுவதென்று தெரியவில்லை.

சிலர் தீயிலிருந்து தப்பிக்க ஸன்னல் வழியாக 85 அடி உயரத்திலிருந்து குதிக்க ஆரம்பித்தனர். குதித்தவர்கள் அனைவருமே படுகாயமடைந்து இறந்து போயினர். பலர் புகை மூட்டத்தில் தட்டு தடுமாறி தீயில் அகப்பட்டுக் கொண்டு உடல் கருகி இறந்து போயினர்.

தீ விபத்து ஏற்பட்ட உடனையே தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களிடம் 10 வது மாடி வரை செல்ல ஏணிப்படிகளோ - நீர்ப்பீச்சுக்குழாயோ இல்லை. 18 நிமிடங்களில் 133 பேர் உயிரிழந்தனர். 12 பெண்கள் மட்டுமே உயிர்ப்பிழைத்தனர்.

___________________

இமெயில் இன்டர்நெட் வளர்ச்சிகளால் இப்பொழுதெல்லாம் கடிதப்போக்குவரத்துக்கள் பெரும்பாலும் குறைந்து விட்டன். வுருங்கால தலைமுறையினர்கள் தபால் என்றால் என்ன,? என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

கடிதம் அனுப்பிவிட்டு இரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரங்கள் அது போய்ச்சேரும் வரை கவலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். போராட்டங்கள் அல்லது சில எதிர்பாராத காரணங்களால் கடிதம் போய்ச்சேர தாமதமாகலாம்.

ஆனால் 219 ஆண்டுகள் கழித்து தாமதமாய் போய்ச்சேர்ந்த கடிதம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? 1761 ம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் 1980 ம் ஆண்டு போய்ச்சேர்ந்திருக்கின்றது. ஸ்வீடன் மன்னர் 12ம் சார்லஸின் படையைச் சார்ந்த ஒரு வீரர் டாமின். 1711 ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மெயர்ஸட்டா எனும் ஊரில் வசித்து வந்த தன் சகோதரி திருமதி நில்ஸ்டாட்டருக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் போட்டாhர்.

அந்தக் கடிதம் டென்மார்க்கிலுள்ள கோபன்ஹேகன் வந்து சேர்ந்தது. அப்போது டென்மார்க்- ஸ்வீடன் போர் நடந்து கொண்டிருந்தமையால் அந்தக் கடிதத்தை அவர்கள் அப்படியே நிறுத்தி வைத்துவிட்டார்கள்.

1980 ம் ஆண்டு பழைய பைல்களை நோண்டும்பொழுது இக்கடிதம் டென்மார்க் ஆவணக் காப்பகத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடனே அக்கடிதம் உரிய முகவரிக்கு அனுப்பப்பட்டது. அங்குள்ள தபால்காரர் அந்தக்கடிதத்தை சேர்க்க அந்தப்பெண்ணின் வாரிசுகளைத் தேடி அலையோ அலையோ என அலைந்திருக்கின்றார். அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பின்னர் அந்நகர நிர்வாகியிடம் அக்கடிதத்தை அந்த தபால் காரர் கொண்டு சேர்த்து விட்டார்.

ஆனால் நமது ஊரில் எல்லாம் இப்பொழுது கடிதங்களை உரிய நேரத்தில் சேர்த்துவிடுகிறார்கள் என்று கேள்வி.(?) தபால்துறை ஊழியர்கள் அந்த அளவிற்கு பொறுப்பாக வேலைபார்க்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.

___________________

2 comments:

Anonymous said...

very nice and different matters rasikav.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

nanri nanpa....

தேன் கூடு