Saturday, October 21, 2006

தீபா'வலி'




தயவுசெய்து
தீபாவளிக்கு யாரும்...
வெடிகளை வெடிக்காதீர்கள்!

வெடித்துச்சிதறும்...
வெடிகள் எல்லாம் எனக்கு
வேறு எதையோ...
ஞாபகப்படுத்துகிறது!

ஆகவே
தீபாவளி கொண்டாட...
தைரியம் வரவில்லை !
அடுத்தவீட்டு
அடுப்பு நெருப்புகூட...
எனக்கு
ஆப்கானையும்...
அமெரிக்காவையும்...
நினைவுக்குகொண்டு வருகிறது!

பொம்மை ராக்கெட்டே
பயமுறுத்திச் செல்லும்போது,
எங்கையோ
உண்மை ராக்கெட்டுக்கள்...
உலாப்போகிறதாமே?

வாய்க்காலில்
'டைவ்' அடித்துக்குளித்த...
தைரியசாலிகளை பார்க்கும்போது,
எனக்கு
வர்த்தகமையத்தின்
மாடியிலிருந்து குதித்த
மனிதமுகங்களின் ஞாபகம்!

மாடியிலிருந்து குதித்தது
மனிதர்கள் மட்டுமல்ல...
மனிதநேயமும்தான்!

கார்ப்பரேஷன் குழிகள்
கண்ணில்பட்டால்கூட...
எனக்கு
பதுங்குகுழி மனிதர்களை நினைத்து...
பரிதாப்படவேண்டியிருக்கிறது!


"எவர்
பொட்டையும் பறித்துவிடுமோ...?"
நான்
பொட்டுவெடிகூட வெடிக்கமாட்டேன் !

ஆகவே
தீபாவளி கொண்டாட..
தைரியம் வரவில்லை!

சின்னவயசில்...
விமானம் பறப்பதை
விழிகள் கண்டால்,
சந்தோஷத்தில்...
சப்தமிட்டுக்கொண்டே ஓடுவோம்!

இப்பொழுது
விமானம் விழுவதை..
வீதிகளில்கண்டு,
கண்ணீரோடு...
கதறிக்கொண்டே ஓடுகிறார்கள்!

ஆகவே
இந்தத் தீபாவளியில்
பொம்மை ராக்கெட்டை கூட...
புறக்கணித்து விடுங்கள் !

இனிமேல்
கைதட்டல் ஒலிகள்கூட...
காதுகளில் விழக்கூடாது!
ஆம்
கைகள்கூட...
ஒன்றுடன்ஒன்று மோதக்கூடாது!


துப்பாக்கியிலியிருந்து புறப்படும்
தோட்டாக்கள் எல்லாம்...
தோட்டத்துப்பூக்களாகட்டும் !

இனிமேல்
துப்பாக்கி ரவைகளை...
உப்புமா கிண்ட மட்டும்
உபயோகப்படுத்துவோம்!

துப்பாக்கியிலிருந்து
புல்லட்டுக்கள் அல்ல...
புறாக்கள் பறக்கட்டும் !

இரண்டுநாட்டு எல்லைகளிலும்
வீரர்களின் கைகளில்...
துப்பாக்கிக்குப் பதிலாக
ரோஜாக்களை பரிசளிப்போம் !

இனிமேல்
உள்ளுர் தீபாவளியென்ன...
உலகத்தீபாவளியே
கொண்டாடுவோம்!

அதுவரை
தயவுசெய்து
தீபாவளிக்கு யாரும்...
வெடிகளை வெடிக்காதீர்கள் !


- ரசிகவ் ஞானியார்

5 comments:

Anonymous said...

what a different idea?
congrats rasikav

Anonymous said...

Vaazhtugal.. In fact our government banned it.

Anonymous said...

Sinthikka vaikkum kavithai Rasikow..!

Jay said...

Good Writings Man!!!
I really enjoyed it..
It's maching to Sri Lankan Tamil Context

Anonymous said...

wow.. great thought rasikow...
nanum deepavali -ku edi vedikkarathu illa... ana athuku vera reason... vedi factory la naraiya chinna kuzhandaigala velaikki vachi avanga life spoil panranga.. atha encourage panna vendamnu nan vittutten...

தேன் கூடு