Wednesday, September 27, 2006

சில நொடிகளில் உலகம் அழியப்போகிறதா..?

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting




தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்..

பாரதியே நீதான கூறினாய்..

அப்படியென்றால்
இன்னும் சில நிமிடங்களில்
உலகம் அழியப்போகிறதா..?


- ரசிகவ் ஞானியார்

Saturday, September 23, 2006

இப்படி பண்ணிட்டியே ஜோ!



நண்பர் மூர்த்தி அவரகள் சூர்யாவுக்குத் தெரியாமல் ஜோதிகாவுக்கு ஒரு கவிதை ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.


வெட்கத்தால் சிவந்து கிடந்தன
என் கண்ணப் பகுதிகள்
ஆசைகளால் நிரம்பிக் கிடந்தது
என் இதயம்...
அடிக்கடி தொட்டுப் பேசி
கட்டிப்பிடிக்க நினைத்தது
என் மனசு...
துள்ளும் என் இளமைக்கு
நேரம் காலம் தெரிவதில்லை..
இரவு வந்தால் போதும்
தறிகெட்டுப் பாயும்
எல்லாம் வயசுக் கோளாறு..
இத்தனை நாள் பரவாயில்லை
இனிமேல் தகாது
இன்னொருவன் மனைவியை
ஏறெடுத்துப் பார்த்தல் பாவமாம்!
வெட்கத்தை உடுத்திக்கொண்டு
நீயே என் கனவில்
வரலாமென்றாலும்
சூர்யாவுக்கு நீ செய்யும்
துரோகமல்லவா!
பூவும் மலருமாய்
கனியும் சுவையுமாய்
நீவிருவரும்
இணைந்து வாழ
முத்தமிழ் மன்றத்தின்
அன்பு வாழ்த்துக்கள்.


- மூர்த்தி

இதைப்பார்த்து சூர்யாவுக்கு தான் எழுதுவதுபோல ஒரு கவிதை எழுதிக் கேட்ட அன்புடன் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கவிதை.

சட்டென்று
செப்டம்பரில் கரைந்துபோன
என் கண்ணாளா..

நேருக்கு நேர் வந்து
எங்கள் இதயம் பதிந்தாய்!
பேரழகனாய்
பெண்கள் மனதில் விழுந்தாய்!
சில்லென்று ஒரு
சிலையின் நெஞ்சத்தில் ஏறினாய்!
ஆரெம்கேவி
சேலையின் வியாபாரம் இறக்கினாய்!


ரஜினி வாழ்த்துப்பெற்ற
கஜினியே!

செப்டம்பர் 11 ல்
பெண்கள் மனதை உடைத்தாய்!
நட்சத்திரத்தை கைபிடித்து
நிலவுக்கே வெட்கம் கொடுத்தாய்
உன்
கல்யாண நாள்தான் - எங்களின்
கணவர்களுக்கு நிம்மதி நாளானது! ( ?)


உன்னை
வசீகரப்படுத்திக்கொள்ள
விருப்பம்தான்!
ஆயினும்
ஜோதிகாவை
கோபமூட்டவும் - எங்கள்
கணவர்களுக்கு
கிறுக்குப்பிடிக்க வைக்கவும்..
எங்களுக்கு சம்மதமில்லை

ஆகவே
மேக்கப்பை கலைத்துவிட்டு
ஜோவை மட்டும் காதலி!

- ரசிகவ் ஞானியார்

Friday, September 15, 2006

வலைப்பதிவாளனின் காதல் கவிதை

என் ப்ரியமே
ப்ளாக்ஸ்பாட்டே


உன்
மௌனப்பார்வைகள் எனக்கு
மறுமொழிகளைத் தருகின்றது
நீ பேசாமல் இருந்தால் கூட - எனக்கது
பழமொழியாய்த் தெரிகின்றது

நீ
திட்டி மறுமொழிந்தாலும் பரவாயில்லை
அன்பே தயவுசெய்து
அனானியாகி விடாதே
என்னை
அனாதையாக்கி விடாதே!

சிலையே வலையே
மழலைத் தமிழாகி
மணமாகி
தமிழ்மணத்தில் என்றும் வருவதற்கு..

இதயத்தில்
காதல் வலை பதிந்து விடு!


இனி
நம் காதலைத் தடுக்க - போலி
டோண்டு வந்தாலும்..
உன்னையே இதயத்தில்
ஆண்டு நிற்பேனடி!

- ரசிகவ் ஞானியார்

நம்புங்கப்பா இவரும் பிரதமர்தான்






இவர் ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாத்

இந்தப் படத்திற்கு வசனம் தேவையில்லை

- ரசிகவ் ஞானியார்

Thursday, September 14, 2006

குடிகாரனின் காதல் கவிதை


நெப்போலியனை விடவும் - போதையாய்
நெஞ்சைத் தொட்டவளே
என்
கவிதையே - கழுதையே!

முட்டாளைக் காதலித்த
முழுநிலவே..?

நீ என்னைக்
காதலிக்கவில்லை என்றாலும்
என்னைக்காதலி!

நான் உன்னைக்
காதலிக்காவிட்டாலும்
உன்னைக் காதலிப்பேன்..


போதை இறங்கும் முன்
ஒரு உண்மைச் சொல்லட்டுமா

நீ இல்லையென்றால்
வேறு யாரையும் காதலித்திருப்பேன்..




- ரசிகவ் ஞானியார்

Friday, September 08, 2006

தனியொருவனுக்கு செல்போன் இல்லையெனில்



உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாசியத்தேவைகளோடு இப்பொழுது அடம்பிடித்து இடம்பிடித்துக் கொண்டது செல்போன்.

தகவல் பரிமாற்றங்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றது. யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் அவர்கள் சுவிட்ச் ஆப் செய்யாதவரை.

இப்பொழுது இரண்டே இரண்டு வகை மனிதர்கள்தான் இருக்கின்றார்கள்

தொடர்பு வெளிக்கு அப்பால் இருப்பவர்
தொடர்பு எல்கைக்குள் இருப்பவர்


எனக்கு செல்போன் பரிச்சயமானது 1999 ம் ஆண்டு பிஎஸ்ஸி முடித்தவுடன் எர்செல் நிறுவனத்தில் பணிபுரியும்பொழுது எனக்கு செல்போன் தரப்பட்டது.

கைகளில் உலகமே வந்து விட்டதைப்போல குதித்தேன். ஆனால் நமக்கே தெரியாமல் நம்முடைய சுதந்திரத்தை பறிப்பதில் இந்த செல்போன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். பின்னர் எம்சிஏ கிடைத்தவுடன் அந்தப் பணியை விட்டவுடன் செல்போனோடு எனது தொடர்பு முடிந்துபோனது.

பின்னர் பணி நிமித்தமாக 2002 ம் ஆண்டு சூன் மாதம் துபாய் சென்றபொழுது எனது தங்கையின் கணவர் செல்போன் பரிசளித்தார். அது 3310 நோக்கியா மாடல்.

பின்னர் வாய்ஸ் ரெக்கார்டிங் மற்றும் எப் எம் வசதி உள்ள இன்னொரு நோக்கியா மொபைல் வாங்கினேன். பின்னர் 6600 வாங்கினேன். அதுவும் ப்ளுடூத்தின் வழியாக எந்தப் பொறாமைப்பிடித்தவனோ வைரஸ் பாய்ச்சிவிட அதனையும் மாற்றி தற்பொழுதுவரை 6310 என்ற மொபைல்தான் கைக்குள் அடக்கமாயிருக்கின்றது.


துபாயில் நல்ல வேலையில் இருக்கும் எனது நண்பன் ஒருவன் நீண்ட நாளாக செல்போன் வாங்காமல் இருந்து 6 மாதங்களுக்கு முன்புதான் செல்போன் வாங்கினான்.

அவனிடம்

"சாதாரண கூலித்தொழிலாளி கூட செல்போன் வைத்திருக்கின்றான். ஆனால் நீ இன்னும் வாங்கவில்லையே ஏன் ?" என்று கேட்டபொழுது,

அவன் கூறினான்.

"செல்போன் வைத்திருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நான் எங்கே இருந்தாலும் எனது முதலாளி அழைக்கக் கூடும்.
நாம் எப்போதும் யாருடைய கண்காணிப்பில் இருப்பது போல தோன்றுகிறது. நமது சுதந்திரம் பறிபோனது போல உணர்கின்றேன். நிம்மதியாய் இருக்கமுடியாது"

அதுவும் ஒருவகையில் உண்மைதான். கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் செல்போன் கழுத்தை மட்டுமல்ல நம்மையும் ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடுகின்றது. இது சிலருக்கு வளர்ச்சியாகவும் சிலருக்கு தொந்தரவாகவும் தெரிகின்றது.

இப்பொழுது நீங்கள் வரும்பொழுது கூட சாலையில் கவனித்திருக்க கூடும். யாராவது ஒருவர் தலையை ஒருக்களித்தபடி செல்போனில் பேசியபடி பைக்கில் பயணம் செய்வதை.

அது பந்தான்னு சொல்றதா இல்லை அவசரம்னு சொல்றதா தெரியவில்லை.

இப்பொழுதெல்லாம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தால்
செல்லக்கிறுக்கனா அல்லது
செல் கிறுக்கனா?
என்பதைக் கண்டறிவது கஷ்டம்தான்.

அப்புறம் இந்த மிஸ்கால் சமாச்சாரம்.

"டேய் நான் அந்த இடத்திற்கு வந்தவுடன் மிஸ்கால் கொடுக்கிறேன். நீயும் வந்திடு "

"சரிடா அப்படின்னா நான் ஆபிஸை விட்டுக் கிளம்பும்பொழுது மிஸ்கால் கொடுக்கின்றேன் "

என்று காசை மிச்சப்படுத்த எங்கேயும் எப்போதும் மிஸ்கால் கொடுத்தே தகவல்கள் பரிமாறப்பட்டது.

சாப்பிடும் முன் - உறங்கும் முன் - கல்லூரிக்குள் நுழைவதற்குமுன் - கல்லூரியை விட்டு வெளியே வரும்பொழுது - வீடு வந்து சேரும்பொழுது என்றுடிபொழுது - அதிகமாய் காதலர்கள் மிஸ்காலை பரிமாறிக் கொள்கின்றார்கள்.

இப்படி மாத்திரை சாப்பிடுவது போல சாப்பிடும் முன் - சாப்பிட்ட பின் என்று நேரம் காலம் இல்லாமல் மிஸ் கால் கொடுக்கின்ற பெருமை காதலர்களைச் சாரும்.

காதலித்துப்பார்
முதல் மிஸ்டு காலும் அவள்தான்
முதல் டயல்டு காலும் அவள்தான்



புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கும் இதுபோன்ற மிஸ்கால் வர ஆரம்பிக்கும். அது உண்மையில் மிஸ்கால் அல்ல மிஸஸ்கால்.

துபாயில் எனது அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்த்த பாகிஸ்தானிய நண்பன் சாஜித் என்பவன் எனக்கு அடிக்கடி மிஸ்கால் கொடுத்து தொந்தரவு செய்து கொண்டே இருப்பான். நான் அவனை பலமுறை எச்சரித்திருக்கின்றேன். ஆனால் அவன் கேட்பதாய் தெரியவில்லை.

நாளடைவில் மிஸ்காலின் தொந்தரவுகள் அதிகமாகியது. நான் மேனேஜரோடு அவரது அறையில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது , சில சமயம் மீட்டிங் நேரத்தில் என்று அடிக்கடி மிஸ்கால் கொடுக்க ஆரம்பித்தான். நான் எரிச்சலுற்று அவனிடம் ,

"சாஜித் வேண்டாம் மிஸ்கால் கொடுக்காதே..மேனேஜர் எரிச்சல் அடைகிறார்..
அவர் அறைக்கு செல்லும் போது மட்டுமாவது மிஸ்கால் கொடுக்காம இரேண்டா " என்க

அவன் எனது பேச்சினை அலட்சியப்படுத்தினான்..

"அடிக்கடி மிஸ்கால் கொடுக்காதே அப்புறம் நீ வருத்தப்படுவே "என்று கடைசியாய் எச்சரித்தேன். அவன் கண்டு கொள்ளவே இல்லை. நான் என்ன செய்துவிட முடியும் என்ற தைரியத்தில் இருந்து விட்டான்

நான் ஒருநாள் மாலையில் Yahoo சாட்டிங்கில் சென்று அவனது செல்நம்பரை குறிப்பிட்டு "நான் 22 வயது அழகி..துபாயில் தனியாக இருக்கின்றேன்..எனக்கு யாராவது கம்பெனி கொடுங்கள்" என்று அடிக்கடி டைப் செய்து அனுப்பினேன்.

அன்று இரவிலிருந்து அவனுக்கு போன் வர ஆரம்பித்துவிட்டது. நான் தினமும் அவனுடைய தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு , மறுபடியும் மறுபடியும் சாட்டிங்கில் எழுத ஆரம்பிக்க, அவனுக்கு உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் தொந்தரவு செய்து கால்கள் வர ஆரம்பித்துவிட்டன.

சில சமயம் அலுவலகத்தில் இருக்கும்பொழுது கூட அவனுக்கு போன் வர ஆரம்பிக்க, அவன் கடைசியாய் எரிச்சலுற்று செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டான்.

பின் அவனக்கு நிலைமை புரிந்து விட்டது .அதற்கு காரணம் நான்தான் என்று.

என்னிடம் வந்து கோபமுற்றான். என்னிடம் சரியாய் பேசவும் மாட்டான். பின்னர் அவனாகவே வந்து மன்னிப்பு கேட்டான்.

"நான் கிண்டலுக்தானடா மிஸ்கால் கொடுத்தேன் நீ ஏண்டா இப்பஎடி பண்ணின" என்று ஒரு நாள் என்னிடம் வந்து கேட்க,

" நானும் கிண்டலுக்குத்தான்டா பண்ணினேன்" என்று சமாதானமாகிப்போனோம்.

அந்தச் சம்பவத்திற்குப்பிறகு என்னுடைய தொலைபேசியில் மிஸ்கால் பகுதியில் அவனுடைய எண்ணை நான் இதுவரை கண்டதே இல்லை.

சில அறுவை ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்க செல்போனில் ரிங்டோனை ஆன் செய்து போன் வருவது போல பாசாங்கு செய்து தப்பிவிடுவது என்னுடைய வழக்கம்.


இன்றைய கால ஓட்டத்தில் அவசர தகவல் பரிமாற்ற சாதனமாக செல்போன்கள் விளங்குகின்றது. ஆள் பாதி, ஆடை பாதி என்பது போல செல் போன் இல்லாத மனிதனை காணுவது அரிதாக இருக்கின்றது.

அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யவே கஷ்டப்படுகின்ற ஒருவன் கூட ஒருநாளாவது செல்போன் வாங்க மாட்டோமா என்றுதான் லட்சியங்கள் வைத்திருக்கின்றான்.

பாரதி இருந்திருந்தால்,

தனியொருவனுக்கு செல்போன் இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாடலை இக்காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றிப் பாடியிருப்பான்.

செல்போன்கள் உலகத்தை சுருக்குவது மட்டுமின்றி நமது சுதந்திரத்தையும் சுருக்குகின்றது என்பது உண்மைதான். இனி வரும் காலத்தில் மனிதனின் பெயர்களுக்குப் பதிலாக எண்களே பெயர்களாக மாறப்போகிறது நிச்சயம்.

"ஹலோ நீங்க 98420xxx423 "

"நேத்து 98421xxx109 ஐ பார்த்தேன்டா 98420xxx845 யோடு போய்கிட்டு இருக்கான். அவனை 98420xxx786 இடம் சொல்லிக்கொடுக்கப் போறேன் பாரேன்.. "

அப்படின்னு பேசுகின்ற காலம் வரத்தான் போகிறது பாருங்களேன்.




தூரத்தில்
கழுத்தில் பட்டையடிக்கப்பட்ட
நாய் ஒன்றினை
அழைத்து செல்கின்றான் ஒருவன்

ஏதோ உறுத்தவே ...
உற்று நோக்குகின்றேன்
கழுத்தில் செல்போன்.





-ரசிகவ் ஞானியார்

Thursday, September 07, 2006

கௌதமின் "சில்லுன்னு ஒரு போட்டி"

நேற்று 06.09.06 நண்பர் கௌதம் அவர்கள் தனது வலைப்பதிவில் தடாலடி பரிசுப்போட்டி என்ற ஒரு வித்தியாசமான புகைப்படத்தை பிரசுரித்து போட்டி நடத்தினார். 4 மணிக்குள் அந்தப் புகைப்படத்திற்கு ஒரு வரியில் கமெண்ட் அனுப்பவேண்டும். சிறந்த கமெண்டுக்கு பரிசாக சில்லுன்னு ஒரு காதல் படம் பார்க்க வாய்ப்பு என்று அறிவித்த உடனையே மள மளவென்று கமெண்டுகள் வர ஆரம்பித்துவிட்டன.

சத்தமில்லாமல் ஒரு சாதனையையும் செய்து முடித்திருக்கின்றார் என்பதை யாருமே கவனிக்கவில்லை. மதியம் 1.19 க்கு அந்தப் பரிசுப்போட்டியை அவர் ஆரம்பித்திருந்தார். 4 மணிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் வந்து சேர்ந்தன. குறைவான நேரத்தில் அதிகமான மறுமொழிகள் பெற்றார் என்ற பெருமையை தட்டிச் சென்றிருக்கின்றார். அதற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அவற்றைப்பற்றிய எனது தனிப்பட்ட பார்வைகளைத் தரலாமென்று விருப்பப்படவே இந்தப்பதிவு தோன்றிற்று.

போட்டிக்கான புகைப்படம் இதோ :






4 மணிவரைதான் போட்டி என்று அறிவித்திருந்தார். 4. 17 மணிக்கு போட்டி முடிந்துவிட்டதாக அறிவித்துவிட்டதால் கமெண்டுகளின் வருகைகள் அதன்பிறகு குறைந்துவிட்டன. ஆனாலும் 5.27 வரை கமெண்டுகள் வந்து கொண்டே இருந்தன.

ஒருவரே எத்தனை கமெண்டுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்று அறிவித்திருந்ததால் ஒருவரே அதிகமான எண்ணிக்கையில் கமெண்டுகளை அனுப்பியிருந்தனர்.

நான் அனுப்பிய மற்றும் எனக்குப் பிடித்த கமெண்டுகளை இங்கே தருகின்றேன்.

நான் முதலில் ஒரே ஒரு கமெண்டு அனுப்பிவிட்டு பின்னர் எத்தனை கமெண்டு வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற விதிமுறையைக் கண்டு தொடர்ந்து அனுப்ப ஆரம்பித்தேன்.

என்னுடைய கமெண்டுகள்:

கண்கள் கள்ளடித்துவிட்டதா என்ன?

நீ தலைவியா? தலைவலியா?

எந்தத் திருவள்ளுவனின் படைப்பு நீ?

நெற்றிக்கண்ணால் இடஒதுக்கீடு வாங்கிவிடுவாயோ?

நீ தூங்கும் நேரத்தில் நீ முழிப்பாய்

போதை மருந்து பிடிபட்டது - இப்படிக்கு - இலாகா

இரண்டும் நீயாக இரண்டு காதலி வேண்டும்

லிதகா னிவக ல்நி

ஒன்றும் ஒன்றும் ஒன்று

கோடீசுவரியா? கேடீசுவரியா?

நீ இறைவனின் இலக்கணப்பிழையா?
தலை கண பிழையா?

சாப்ட்வேர் சாத்தான்களின் சாபமா நீ?

4 மணிவரை காதலி

ஆச்சர்யம் ஒரே வானம் இரண்டு நிலவு

பேதை நீ பார்க்க போதை எனக்கா?

விழிகள் விமர்சனமாகின்றது

காதலோ? கள்ளோ?

நான் அனுப்பியவற்றில் எனக்குப் பிடித்தது :

கண்கள் கள்ளடித்துவிட்டதா என்ன?

நீ தலைவியா? தலைவலியா?

சாப்ட்வேர் சாத்தான்களின் சாபமா நீ?

நீ இறைவனின் இலக்கணப்பிழையா?
தலை கண பிழையா?

கொஞ்சம் கர்வப்பட்டேன். எப்படியாவது இவற்றுள் ஒன்று தேர்வு செய்யப்பட்டு விடும் என்று. ஆனால் லக்கிலுக் முந்திக்கிட்டாருங்க. என்ன செய்ய நம்ம காசுல டிக்கெட் எடுத்து பார்க்க வேண்டியதுதான்.

நான் ரசித்த மற்றவர்களின் கமெண்டுகள் :

RAANA MONAA :


நீ குவளைக் குமரியா? இல்லை
குவார்ட்டர் குமரியா?

சார் டிக்கட்டை யார்க்கு வேணா அனுப்புங்க
ஆனா அந்தப்பொண்ணோட ஜாதகத்தை எங்க அம்மாவுக்கு அனுப்புங்க



வலைஞன்


மயங்குகிறாள் ஒரு மாது

பார்வைகள் பலவிதம்


Dev

மவனே சிக்குன தனியா
அவ்வளவுதான் சிக்கன் குன்யா

கண்ணோடு காண்பதெல்லாம்
கண்களுக்குச் சொந்தமில்லை


விழியன்

கே. எஸ். ரவிக்குமார்கிட்ட இந்தப்படத்தைக்
காட்டிடாதீங்க. அடுத்த படத்துல
ஜோதிகாவுக்கு நாலு கண்ணுவச்சு ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு போட்டுற போறாரு


என் சுரேஷ்

இப்பவே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி


மதுமிதா

கேமிராவுக்கே போதையா

லக்கிலுக்

கிர்ர்ர்ருன்னு ஒரு காதல்

பிரம்மனின் சிஸ்டத்தில் வைரஸ் அட்டாக்

இவளிடம் லிப் டு லிப்
கிஸ் அடிப்பது எப்படி?


நிலா ரசிகன்

நான்கு விழியால் காதல் கொலை

தலைசுற்ற வைத்து பின் இதயம் சுற்றச் செய்

மின்னுது மின்னல்

Error 404

ஜெஸிலா

தலைவலி மருந்தே தலைவலியானால்

அருட்பெருட்கோ

முத்தம் ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்

அம்புடன் 4 கண்கள்

டுபுக்கு

இதென்ன ஆடித்தள்ளுபடியா
எதை விடுவது எதை எடுப்பது?


இவற்றுள் இறுதியாக 3 தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டது லக்கிலுக் எழுதிய "கிர்ர்ர்ருன்னு ஒரு காதல் " பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசு சம்பந்தமாகவே அவருடைய கமெண்டும் ரசிக்கும்படி இருந்ததால் அவருடையது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கின்றேன். ஆகவே லக்கிலுக் அவர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கமெண்டுகளையும் தந்திருந்தால் கொஞ்சம் உற்சாகமாக இருந்திருக்கும். கௌதம் சொல்லுவாரா?

எத்தனை பேர்களின் எண்ணங்களிலிருந்தும் எத்தனை விதமான கமெண்டுகள் பாருங்களேன். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கின்றது.




இந்த போட்டியில் நீங்கள் நடுவராக இருந்தால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கமெண்டுகளில் இருந்து எதனைத் தேர்ந்தெடுத்து இருப்பீர்கள் கொஞ்சம் சொல்லிட்டுப்போங்கப்பா ப்ளீஸ்..

நீங்க சொன்னதில இருந்து என் மனசுல உள்ள அந்தப் பரிசுக்குரிய கமெண்ட் பொருத்தமாக இருந்தால், உங்களை சூர்யா - ஜோதிகா வின் கல்யாணத்திற்கு அழைத்துச் செல்கின்றேன்.

எனக்கும் சூர்யா - ஜோதிகா அழைப்பிதழ் வந்துச்சுப்பா.."வேண்டாம் சார் நீங்க பிஸியா இருப்பீங்கன்னு" சொன்னாலும் கேட்காம அடம்பிடிச்சு அனுப்பி வச்சுட்டார் சூர்யா.



- ரசிகவ் ஞானியார்

Wednesday, September 06, 2006

இவர்கள் காதலித்தால் V

கணக்கு வாத்தியாரின் காதல் கவிதை



கடந்து செல்லும்பொழுது
326 முறை
முறைத்துப் பார்த்தாய்

3 முறை
செருப்பெடுத்துக் காட்டினாய்

64 முறை
அன்பாக பார்த்தாய்

42 முறை
சிரித்தாய்

காதலைச்சொல்ல..
76 முறை
தயங்கி தயங்கி திரும்பினேன்

83 முறை வெட்கப்பட்டாய்

இவ்வளவும் செய்துவிட்டு
பாடம் நடத்தும்போது
படுத்துறங்கும் மாணவன் போல
நான்
காதல் சொல்லியும்
கண்மூடிச்செல்கிறாயா..?

என் அன்பே..
அல்ஜிப்ராவே!
ஜாமட்ரிக் பூவே!

உன்
கண்கள் எனக்கு
கால்குலஸ்!

உன்
சிரிப்பு எனக்கு
Statistics!

கரும்பலகையில் மட்டும்
தைரியமாய்
கணக்கு எழுத வருகிறது!

உன்
மனப்பலகையில் எழுத வந்தாலோ
சாக்பீஸ் கூட ...
சங்கடப்படுகிறது!

கஷ்டங்களை கழித்துவிட்டு
காதலைக் கூட்டிக் கொள்வோம்..
தலைமுறைகளை பெருக்குவதற்காய்
பாதைகளை வகுப்போம்
வா வா வா


- ரசிகவ் ஞானியார்

Tuesday, September 05, 2006

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதாவது ஒரு படியாக அல்லது எல்லாப் படிகளிலும் ஒரு ஆசிரியர் அமர்ந்திருக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி காலக்கட்டத்தில் என்னைக் கவர்ந்த ஆசிரியர்கள் நிறைய பேர்.

கல்லூரிக் காலக்கட்டத்தில் என்னைக் கவர்ந்த ஆசிரியர்களில் ஒருவர் பேராசிரியர் இராமய்யா. அவரைப்பற்றிய பதிவு இதோ..


என்னைக்கவர்ந்தவர்கள்

சென்ற வருடம் நான் எழுதிய ஆசிரியர் தினக் கவிதை ஒன்றையும் இங்கே மறுபதிவிடுகின்றேன்.

ஒரு ஆசிரியர் ஒளிந்திருக்கிறார்




எனக்கு
"அ..ஆ.." போட கற்றுக்கொடுத்த - நான்
"ஆய்" போட்டதை கையிலெடுத்த
அந்த ஆசிரியர்கள்
ஞாபகம் வந்து போகிறார்கள்...
தூரத்தில்
புள்ளியாய் ஊர்ந்து போகின்ற
வாகனங்களைப்போல..

ஒரு
காலைநேரத்து கண்மூடிய
கடவுள் வாழ்த்துப்பாடலின்போது....
நானும் காதரும்
சாக்பீஸை திருட
குனிந்து வந்ததைக் கண்டு..
டவுசரில் தூசி கிளம்ப அடித்த
பெயர் மறந்து போன
அரக்கி என்று பட்டப்பெயரின் சொந்தக்காரி
ஐந்தாம் வகுப்பு ஆசிரியை!

எப்பொழுதும்
பிரம்பை வைத்திருப்பார்
ஆனால்
ஈக்களின் இடப்பெயர்ச்சிக்குத்தான்
பெரும்பாலும்
பிரம்பை பயன்படுத்தியிருக்கிறார்!

எப்பொழுதாவது வந்து போகும்
கார்ப்பரேஷன் தண்ணீரைப்போல...
நினைவில் வந்து போகின்ற
ஆறாம் வகுப்பு ஜோதி மிஸ்!



கையை மறந்தாலும்..
குடையை மறக்காமல் வருகின்ற
வெள்ளையனின் ஆங்கிலத்தை மட்டும்
விரட்டாமல் வைத்திருக்கும் ...
ஏழாம்வகுப்பு சுப்பிரமணி வாத்தியார்!

"பேசாதீங்கடா
பேசாதீங்கடா" என்று
உயிர் கொடுத்து கத்தி

"கண்ணாடியை தூக்கி
எறிஞ்சிறுவேன்
பேசாதீங்கடா "

"நாலணா தரேண்டா
பேசாதீங்கடா"
என்று கெஞ்சி கெஞ்சி கோபப்படும்
எட்டாம் வகுப்பு இபுறாகீம் வாத்தியார்!

கொட்டாவி விட்டால்
கோபப்படுவார் எனத்தெரிந்தே..
கொட்டாவி விட்டுக்கொண்டே
நாங்கள் பாடம் கவனிக்க...
"கொட்டாவி ஒரு கெட்ட ஆவி" என
தத்துவம் உதிர்த்தபடியே...
பொறுமையாய் பாடம் நடத்திய
ஒன்பதாம் வகுப்பு சித்திக் வாத்தியார்!

நான்
செண்டம் வாங்குவேன் என நம்பியிருந்து
இடைத்தேர்வில் நான்
பூஜ்யம் எடுத்து..
தெண்டமாய் போய்விட்டதை
தாங்கமுடியாமல் தனியே அழைத்து
"யாரையாவது லவ் பண்றியா"
என்று உரிமையாய் கேட்ட
பத்தாம் வகுப்பு சகுந்தலா மிஸ்!

தத்து பித்து என்று
ஏதோ எழுதிக்கொடுத்ததை பார்த்து..
"இது கவிதை இல்லடா.."
இதுதான் கவிதை என்று
கம்பன் - பாரதி
இளங்கோவடிகள் கவிதைகளை
இலக்கியநயத்தோடு விவரித்த
பதினோராம் வகுப்பு பிரபாவதி மிஸ்!

"வேதிச்சமன்பாடு என்றால் என்ன?"

என்று கேள்விகள் கேட்டபடி
தனது கைக்குட்டையால்
உதடு துடைத்தபடி..
கீச்சுக்குரலில் பாடம் நடத்தும்
இரண்டு மாணவர்களை
காதல் கடிதம் கொடுக்கத் தூண்டிய அழகாய்
அந்த
பன்னிரெண்டாம் வகுப்பு
பிர்லா ஜெயந்தி மிஸ்!

இப்படி
எல்லோருமே ..
என் அறிவின் கூட்டுப்புழுக்கள்!

ஆசிரியர்களின்
ஆசிர்வாதம் இல்லாவிட்டால்
நான்
கவிதை எழுதியிருக்கமாட்டேன்!
பலசரக்கு கடையில்...
கணக்குதான் எழுதிகொண்டிருப்பேன்!

என் கவிதைகளில்
ஒவ்வொரு வரிகளிலும்..
ஒரு ஆசிரியர்
ஒளிந்திருக்கிறார்!

அவர்கள் மட்டும்
"அ" போட கற்றுத்தராவிட்டால்...
எல்லோரும் என்னை
"சீ" போட்டிருப்பார்கள்!

அவர்கள் இல்லையென்றால்..
நான்
ரசிகவும் ஆகியிருக்கமாட்டேன் - யாரும்
ரசிக்கும்படியும் ஆகியிருக்கமாட்டேன்!


இருந்தாலும்
மனசுக்குள்
நெருடிக்கொண்டேயிருக்கிறது.....


நாங்கள்
உலகமெல்லாம் சுற்றி
பயணித்து வந்தாலும்
உலகம் கற்றுகொடுத்த நீங்களோ
இன்னமும் அந்த
பள்ளி சுவர்களுக்குள்ளேயே...

"ஒரு இரண்டு இரண்டு
இரு ரெண்டு நாலு
மூவிரண்டு ஆறு
நாலிரண்டு எட்டு"

என்று
கத்திக்கொண்டிருப்பதை காணும்போதும்


"எம் பையனுக்கு
ஏதாவது
வேலை வாங்கி கொடுப்பா!"
என்று
எங்களிடமே கெஞ்சும்போதும்

சாலையில் எங்கேனும்
சந்தித்துக்கொள்ளும் போது
பைக்கில் இருந்துகொண்டே
நாங்கள் சொல்கின்ற
அலட்சியமான வணக்கத்திற்கும்
பதறிப்போய்
தனது சைக்கிள் விட்டு இறங்கி
பதில் சொல்லும் மரியாதையை
நினைக்கும்போதும்...

மனசுக்குள்
நெருடத்தான் செய்கிறது!
பால்கார பையனை
ஏக்கத்தோடு பார்க்கின்ற...
முதியோர் இல்லவாசிகள் போல...



நீங்களும் சட்டென்று கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யாராவது ஒருவரை நினைத்துக்கொள்ளுங்கள்.



- ரசிகவ் ஞானியார

Monday, September 04, 2006

இவர்கள் காதலித்தால் IV

அரசியல்வாதியின் காதல்கவிதை



என் தொகுதியைச் சார்ந்த
காதலியே!


என்னைக் காதலித்தால்

ஆயுள் முழுவதும்
அன்பை
இலவசமாக தருகின்றேன் ...

உனக்கு மட்டும்
எப்பொழுதும்
இதயத்தில் இட ஒதுக்கீடு ...


இது
தேர்தல் வாக்குறுதி அல்ல
ஒரு
தேவதைக்கான வாக்குறுதி !

நீ
பாட்டணியில் அரியர்ஸ் வைத்தாலும்
பரவாயில்லையடி !
நம்
கூட்டணியை மட்டும்
கலைத்துவிடாதே !

தோளோடு தோளிடித்து பழகிவிட்டு
வைகோவைப்போல..
விட்டுப்போய்விடாதே!

எதிர்கட்சியோடுயெல்லாம்
எதிர்த்துப்பேசுகின்றேன்
நீ
எதிரில் வந்தால்தான்
எதுவுமே பேசமுடிவதில்லை

தயவுசெய்து
சட்டசபையில் வந்து
எனக்கு முன்னால் அமருவாயா.. ?

நான் என்
காதலைச் சொல்கின்றேன்

- ரசிகவ் ஞானியார்

Friday, September 01, 2006

இவர்கள் காதலித்தால் III

இவர்கள் காதலித்தால் I

இவர்கள் காதலித்தால் II



கிரிக்கெட் வீரனின் காதல் கவிதை




நீ பார்வையாளராக
வந்தாலே போதுமடி எனக்கு
பார்வையே தேவையில்லை

உன்
காதலன் என்ற
கேப்டன் பொறுப்பை ஏற்றபிறகு
டார்லிங்கே நான்
டக்அவுட் ஆகிவிடுகின்றேன்

நன்றாக
கிரிக்கெட் விளையாடத் தெரிந்தாலும்
உன்
கண்கள் வீசும்
பந்து வீச்சில் மட்டும்
நான்
அவுட் ஆகிவிடுகின்றேனடி

உனது
ஒவ்வொரு சிரிப்புக்கும்
சதம் அடிப்பேன்..

நீ
பிரிந்துவிட்டால் என்னால்
4 கூட அடிக்கமுடியாது.

நம் காதலுக்கு
தடைபோடுவது உன்
தந்தையாக இருந்தாலும்
சிக்ஸர் அடித்துவிடுவேன்.


நம்
விழியிரண்டும்
விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது ,
நோபால் சொல்லி
நோகடித்த
உன் தந்தையென்ன
அம்பெயரா?

பெண்ணே
கிரிக்கெட் வீரனை
கிறுக்குபிடிக்க வைத்துவிடாதே!
மைதானத்தில் ஓடியவனை
மயானத்தில் படுக்க வைத்துவிடாதே!


என்னைக்
கழட்டிவிட்டுவிடாதே கண்ணே நான்
கங்குலி அல்ல..

ஒண்டே மேட்ச்சில்
தோற்றாலும் பரவாயில்லை
பெண்ணே கிடைக்குமா?
காதல் என்னும்
வேர்ல்டு கப்..



- ரசிகவ் ஞானியார்

Tuesday, August 29, 2006

இவர்கள் காதலித்தால் II

காவலரின் காதல் கவிதை



மாமூல் தராமலையே என்
மனசுக்குள் வந்தவளே!

எந்த
இன்ஸ்பெக்டரிடம் சொல்வேனடி நீ
இதயத்தை திருடியதை?

நான் உனைக்கண்டு
இளித்ததை
ஈவ்டீசிங் என்கிறாயே?

உன் கண்களில்
இதயம் அலைக்கழிக்கப்படுவதை
ஆடம்டீசிங் என்று
அறிவிக்கட்டுமா?


கைதியின் காதல் கவிதை



மத்திய அரசே! என்
மனசை நோகடித்த அவளுக்கும்
மரண தண்டனை கொடு

- ரசிகவ் ஞானியார்

Friday, August 25, 2006

இவர்கள் காதலித்தால்...

நான் ஏற்கனவே ஒவ்வொருவரின் கல்லறைகளிலும் ஒரு வாசம் எழுதினால் என்ன எழுதியிருப்பார்கள் என்று எழுதியிருந்தேன். அதுபோல ஒவ்வொருவரும் காதலித்தால் அவர்களின் துறைக்கு தகுந்தவாறு எவ்வாறு காதல் கவிதைகள் எழுதுவார்கள் என்ற ஒரு கற்பனை. முதன் முதலாக ஒரு மெடிக்கல் ரெப் பற்றிய காதல் கவிதை.

மெடிக்கல் ரெப்பின் காதல் கவிதை





எக்ஸ்ப்ரஸில் சென்றுவிட்ட
பருந்தே!
எக்ஸ்ப்யரி[Expiry] டேட்
முடிந்து போன மருந்தே!

கடைசிவரைக்கும்
புரியவேயில்லையடி
உனது காதல்
அந்த டாக்டரின் கையெழுத்துப்போலவே..


அடுத்து விவசாயியின் காதல் கவிதை. அவ்வப்போது நேரம் கிடைக்கும்பொழுது "இவர்கள் காதலித்தால்..." தொடர்ந்து கொண்டிருக்கும்.


விவசாயியின் காதல் கவிதை




என்னைப்
பேசவிடாமல் செய்த
அவள் கண்கள் ஒரு
பூச்சி கொல்லி மருந்து!
இல்லை இல்லை
பேச்சி கொல்லி மருந்து!

காத்திருடி!
அறுவடைக்காசிலே
அமெரிக்கா போவோம்..
இல்லை..இல்லை
உல்லாசமாய் போவோம்
உழவர்சந்தைக்கு!

பயிர் வாழ
நீர் தேவை - என்
உயிர் வாழ
நீ தேவை


உன்னுடைய
தற்காலிகப்பிரிவில்...
என் வயல்வெளிகள்
போக்ரானாய் மாறும்

ஆனால்
நிரந்தரமாய் பிரிந்துவிட்டால் என்
டெய்லி வாழ்க்கை
டெமக்ரானோடுதான்!

அய் ஆர் எட்டே! - நம்
காதலை எதிர்த்தால்
உன்
அய்யாவுக்கும் வெட்டே..


- ரசிகவ் ஞானியார்

Saturday, August 19, 2006

சிக்னலில் பெண் தேவதைகள்


திருநெல்வேலியில் எந்த சிக்னலில் வாகனங்கள் நின்றாலும் அங்கு ஒரு பெண் போலிஸார்களை பணியில் பார்க்கலாம்.. எல்லா வாகனங்களும் இவர்களின் கை அசைவுக்கு கட்டுப்படுகின்றன.


இன்று காலை 9மணிக்கு திருநெல்வேலி, பாளையங்கோட்டை இரயில்வேகேட் அருகே பெண் போக்குவரத்து போலிஸார்கள் இரண்டு பேர் ரெட் சிக்னல் கொடுக்க , நான் சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன் . அப்பொழுது பெண் போலிஸார்களை அலட்சியப்படுத்தி ஒரு நபர் கடந்து செல்ல அந்த பெண் போலிஸார்கள்: :ஹலோ சார் சார்;: என்று கத்த அந்த நபர் காதில் வாங்கிக்கொள்ளாமல் கடந்து சென்றார்.

நான் உடனே "ஹலோ வண்டி நம்பரை நோட் பண்ணுங்க.. "

"பார்த்துகிட்ட நிற்காதீங்க நம்பரை நோட் பண்ணுங்கம்மா" என்று அவர்களிடம் கூற

அந்த பெண் போலிஸில் ஒரு பெண், " ஹலோ எங்களுக்கு தெரியும்..நீங்க சொல்ல வேண்டாம்.. நாங்க நோட் பண்ணிக்கறோம்.. "என்க

அட நல்லதுக்கு சொன்னா புரிஞ்சுக்கமாட்டேங்கிறாங்களே என்று மனம் வருந்தியபடி அவர்களை நோக்கி திரும்பி ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு நான் வண்டியை சீறிக்கொண்டு வந்துவிட்டேன்.

அந்த பெண் போலிஸார்களின் இடத்தில் ஒரு ஆண் இருந்தால் என்ன ஆகியிருக்கும்? நினைத்துப்பாருங்கள்.

"டேய் டேய் நில்லுடா..சொல்லுறேன் போய்கிட்டே இருக்க..வண்டிய ஒதுக்குடா..வண்டிய ஒதுக்குடா" என்று தனக்குரிய வழக்கமான தினச்சம்பளத்தை வாங்கியிருப்பார்.

இப்பொழுது இந்தப்பணியில் அதிகமான பெண்போலிஸார்களை நியமனம் செய்திருக்கின்றார்கள். திருநெல்வேலியில் எந்த சிக்னலில் வந்து நின்றாலும் இந்தப் பெண் போலிஸார்கள்தான் பணியில் இருக்கின்றார்கள்.

சிக்கெடுத்த கூந்தலை
கிராப்பாக்கினாய்
சிக்குண்ட இதயத்தை
கிறுக்காக்கினாய்



சிக்னலில் நிற்பதற்கு
சிகப்பு விளக்கு தேவையில்லையடி
உன்
விழியின் வெளிச்சம் போதும்

ஒவ்வொரு சிகனலிலும்
யார் போட்டது
மனித வேகத்தடைகள்




இப்பொழுது திருநெல்வேலியின் ஒவ்வொரு சிக்னலிலும்; வாகனங்கள் அதிக நேரம் நின்று செல்வதாக தகவல். ஓருவேளை இவர்களை ரசித்து மெய்மறந்து நின்று விடுகின்றார்களோ? சரி அத விடுங்க..

இந்தப்பணியில் பெண்களை நியமிப்பதில் சாதகங்கள் மற்றும் பாதகங்களும் இருக்கின்றன


பெண் போலிஸார்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுகின்றார்கள். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அவ்வாறு இருக்க இயலாது. (சில சமயம் ஆண் போலிஸார்களின் அறிவுரைகளின் பேரில் இவர்களும் கண்ணியம் தவறி நடக்க ஆரம்பிக்கின்றார்கள்)

லாரியை மடக்கி லஞ்சம் வாங்குதல் - அப்பாவி பைக்வாதிகளிடம் தினக்கூலி பெறுதல் -தேவையில்லாமல் வண்டியை ஒதுக்குதல் - போன்றவை தவிர்க்கப்படுகிறது

ஆனால் அவர்களின் கண்ணியமான கட்டளைகளையே தங்களுக்கு சாதகமான எடுத்துக்கொண்டு பெண் போலிஸார்கள்தானே என்று அலட்சியமாய் பொதுமக்கள் எல்லை மீறுகின்றார்கள்

அது மட்டுமல்ல இரவில் இவர்களால் வெகு நேரம் நின்று கொண்டிருக்க முடியாது. அது இவர்களின் கற்புக்கும் கடமைக்கும் ஆபத்து

பெண் போலிஸாருடன் கள்ளக்காதல் - பெண் போலிஸாருடன் தகாத முறையில் நடந்த தலைமைக் காவலர் கைது. என்றெல்லாம் செய்திகள் பத்திரிக்கையில் வரும்பொழுதுதான் அவர்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கவலையாக இருக்கின்றது.




- ரசிகவ் ஞானியார்



Friday, August 18, 2006

என் இனிய கல்லூரி நண்பர்களே

கல்லூரியைப்பற்றி எழுதி நாளாகி விட்டதால் இன்று ஞாபகத்தை கல்லூரி வளாகத்திற்குள் கொண்டுபோகின்றேன்

எல்லா கல்லூரிகளிலும் கலை விழாக்களுக்கென்றே ஒரு கோஷ்டிகள் இருக்கும்.
அவர்களில் நடனம் ஆடுபவர்கள் - மிமிக்ரி செய்பவர்கள் - நாடகம் இயற்றி நடிக்க வைக்கும் மினி இயக்குனர்கள் - பாடல் பாடுபவர்கள் - பேச்சாளர்கள் -கவிதை எழுதுபவர்கள் என்று தனிப்பட்ட குழு இருக்கும்

எங்கள் கல்லூரியிலும் அப்படிப்பட்ட குழு இருந்தது. எனக்கு கவிதை மேடைகளில் அல்லது இலக்கிய சம்பந்தமான சபைகளில் மட்டும்தான் கவிதை பாடுவேன்.

கவிதை - பேச்சுகள் எல்லாம் எனக்கு போரடித்துப்போக நான் நாடகங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பக்கத்து கல்லூரிகளில் நடைக்கும் கலைவிழாக்களில் பங்கு பெறுவோம். அந்த நாட்கள் எல்லாம் மிகவும் ஜாலியாக இருக்கும். ஏனென்றால் கல்லூரிக்கும் போகத் தேவையில்லை வருகைப்பதிவும் கிடைத்துவிடும்.

மெடிக்கல் கல்லூரியில் ஒரு அனைத்துக் கல்லூரி கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் கல்லூரியில் இருந்தும் சென்றிருந்தோம்.

அனைத்து கல்லூரிகளில் இருந்தும் மாணவ - மாணவிகள் கலை நிகழ்ச்சிக்காக வருவார்கள்.

ஹாய் எப்படி இருக்கீங்க..

இன்னிக்கு என்ன புராகிராம் பண்றீங்க நீங்க..

உங்க பர்ண்ட் போன விழாவுக்கு வந்தாங்களே அவங்க வரலையா

ஐஸ்வர்யா ராய் வரைலயா..

ஹலோ என்ன கிண்டலா? இருங்க.. அவகிட்ட சொல்லி கொடுக்கிறேன்..

அவளுக்கு ப்ராக்டிகல் இருக்கு வரமுடியலையாம்..

இன்னிக்கு என்ன பாட்டு பாடுறீங்க நீங்க..

கிழக்குச்சீமையில படத்துல ஒயிலா பாடும் பாட்டு - பாடப்போறேன்..

என்று எங்கு பார்த்தாலும் வழியல்கள் - கொஞ்சல்கள் - ஜொள்ளுகள் கலந்து புகை மூட்டமாகவே இருக்கும். புகை மூட்டத்தில் எதிரில் வருகின்ற நண்பர்கள் கூட அடையாளம் தெரியாது. கடந்து சென்ற பிறகு திட்டிக்கொண்டு போவார்கள்

டேய் பிரபா..அவனைப்பாரேன் கடலை போட்டுகிட்டு இருந்தா கண்தெரியாதுன்னு நினைக்கிறேன்..கண்டுக்காம இருக்குறான் டா..

இருடா நமக்கு ஒரு நேரம் வராமையா போகும்..

பொருமிக்கொண்டே சென்றனர். நண்பர்களுக்குள் சிறு சிறு பகைமைகளும் வளர்க்கும் இந்தக் கடலை சாகுபடிகள்.

வௌ;வேறு கல்லூரிகளில் இருந்து வருகின்ற தேவதைகளை பின்தொடர்ந்தபடி சகாக்களின் கூட்டங்கள்.

நாய் துரத்தி வருவதைப்போல காதர் ஓடி வந்தான்

ஞானி ஞானி..உனக்கு மேட்டரு தெரியுமா..பிஏ தங்கத்துரை இருக்கான்ல ..அவன் அந்த ராணி அண்ணா காலேஜ் பொண்ணு இருக்குதுல..கவிதை நல்லா எழுதுமேடா..அந்த வெள்ளைக்காரி.. அவகிட்ட குட்மார்னிங்னு சொல்லியிருக்கான்..அவ மதிக்காம போய்ட்டா..இவன் மூஞ்சி போன போக்கை பார்க்கணுமே..

என்று அவன் அவமானப்பட்டதை சிரித்தபடி கூறினான்..

நானும் அவனுடன் சேர்ந்து சிரிக்க அதோ தங்கத்துரை போரில் கவசக்குண்டலம் பிடுங்கப்பட்டு நிராயுதபாணியாகி திரும்ப அனுப்பப்பட்ட மன்னனைப்போல வெறியோடு வந்து கொண்டிருந்தான்..

காதர்.. சிரிக்காதடா.. அவன் வர்றான்..

நாங்கள் சிரிப்பை அடக்கிக்கொள்ள அதனையும் மீறி வந்த புன்னகை நாங்கள் சிரித்துக்கொண்டிருந்தோம் என்பதை காட்டிக்கொடுத்தன.

நாயே..எல்லார்கிட்டேயும் பரப்பிட்டியா விசயத்தை..என்று காதரிடம் கேட்டான்

அவனோ இல்லைடா நான் சும்மா இவன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்..

எனக்கும் தெரியும்ல உன்னய பத்தி..என்று அவனைத் திட்டிவிட்டு சொல்லுகின்றான்
அவளுக்கு இன்னிக்கு ப்ரைஸ் கிடைக்கலைன்னு நினைக்கிறேன்..அதான் மூடு மாதிரியா போறாடா.. வேற ஒண்ணும் இல்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டு சென்றான்.

படிக்காதவன் படத்தில் என் தங்கச்சிய நாய் கடிச்சிட்டுப்பா என்று புலம்பும் ஜனகராஜ் போல அவன் மனசு புலம்பிக்கொண்டிருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும்..

என்ன தலைப்பு கவிதைப் போட்டிக்கு இதோ ஒரு எஸ்டிசி தேவதை வந்து என்னிடம் கேட்க

நானோ காதரிடம் டேய் என்ன தலைப்புடா..உனக்குத் தெரியுமா..

ஏதோ அக்கினின்னு ன்னு ஆரம்பிக்குடா..- காதர்

அக்கினியில் வெந்த அன்னங்கள் ன்னு நினைக்கிறேன்..ஏன் உங்களுக்கும் அதே தலைப்பா.. -

ம் உங்களுக்கும் அதே தலைப்பா..என்று நான்; கேட்க

அப்படித்தான் நினைக்கிறேன்..நீங்க எப்படி எழுதப்போறீங்க..

நான் பெண்களின் துயரங்கள் பற்றி எழுதலாமென இருக்கின்றேன்...

நீங்க..

அங்கு ஒரு கடலை சாகுபடி விதைக்கப்படுவதை உணர்ந்த காதரின் வயிற்றிலிருந்து வந்த எரிச்சல் என் கையை கிள்ளியது. எங்கள் நிகழச்சிக்கான ஒத்திகைக்காக நேரம் ஆகியதால் விடைபெற்று கிளம்பி விட்டோம்

நாங்கள் விளம்பரக் கிண்டல் என்ற ஒரு நிகழ்ச்சி செய்வதாக இருந்ததால் அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டோம்.

எங்களுக்கான நிகழ்ச்சி ஆரம்பமானது.. முதல் விளம்பரம் ஹமாம் சோப்புக்கான விளம்பரம்.. அந்த விளம்பரத்தைக் கிண்டலடித்தோம்

ஹமாம் சோப்பு விளம்பரம் ஒன்றை கவனித்திருப்பீர்கள்.

ஒரு ஆமை மெல்ல மெல்ல நகரும். அப்பொழுது ஒரு சிறுவன் அம்மாவிடம் அம்மா அம்மா கல் நகருது என்க அம்மாவோ அது கல்லு இல்லைப்பா அது இயற்கையோட படைப்பு..என்று விளக்குவார்கள். அப்படின்னா இயற்கை நமக்கு என்ன பண்ணிருக்கு என்று சிறுவன் கேட்க..அம்மாவோ இதோ ஹமாம் சோப்பு என்று சோப்பைக் காட்டுவார்கள்..பின் நேர்மைன்னா என்னம்மா என சிறுவன் கேட்க நேர்மைன்னா ஹமாம்..

அந்த விளம்பரத்தை கிண்டலடித்தோம். காதர் மைக்கைப்பிடித்தான் ..
"என் இனிய கல்லூரி நண்பர்களே" என ஆரம்பித்தான்.

ஓ ஓ ஓ பெரிய பாரதிராஜாஜாஜாஜா என்று கத்தினார்கள்.

எங்களுக்கும் அவன்தான் எப்போதும் பிண்ணணிககுரல் கொடுப்பான். நாங்கள் வாய் மட்டும்தான் அசைப்போம்..

சுடலை துள்ளிக்குதித்துக்கொண்டு வந்தான்..

அம்மா அம்மா அங்க பாரு கல்லு நகருது என்று ராஜாவைக் கை காட்டினான்.

அப்பொழுது ராஜா முதுகைக் குனிந்து முழங்காலை தரையில் ஊன்றி தவழ்ந்து தவழ்ந்து சென்றான்

அப்பொழுது சேலை அணிந்து கொண்டு அம்மா வேடத்தில் ஜோதி நின்று கொண்டிருந்தான்.

அது கல்லு இல்லைடா..உங்கப்பன்டா..சட்டையைக் கழட்டிப்போட்டு படுத்துக் கிடக்காருடா..

நேர்மைன்னா என்னம்மா?

அது உங்கப்பா பரம்பரையிலே இல்லைடா..

ஹமாம் சோப்பு.. என்று பிண்ணனியில் பலமாய் ஒலிக்கும்

பின் அஜால் குஜால் அல்வா..


ஒவ்வொரு ஆசிரியர்களும் நாங்கள் தயாரித்த அஜால் குஜால் அல்வாவை சோதனையிட வருகிறார்கள் என்ற காதர் சத்தம் போட்டு கூற

நான் மற்றும் ராஜா மற்றும் சுடலை ஆகியோர் ஆசிரியர்கள் போல் வேடமணிந்து அல்வாவை எடுத்து சாப்பிடுவது போல நடிக்கின்றோம்..

இப்பொழுது அல்வா எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமா..?

அல்வாவைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்க..எப்படியிருக்கு அல்வா.. என்று ஒவ்வொருவரிடமும் காதர் கேட்க நாங்கள் வாயைத்திறந்து சொல்ல முடியதது போலவும் வாய் திறக்கமுடியாமல் கஷ்டப்படுவதைப்போலவும் நடிக்க ஆரம்பித்தோம்.

உடனே காதர் ஆம் இதன் பெருமையை வாய் திறந்து சொல்ல முடியாது
பிகர்களுக்கு முன்னால் எக்ஸாம் மார்க்கை சொல்லுகின்ற ஆசிரியர்களை பழிவாங்க சரியாண தருணம் ..வாங்கிக்கோங்க மாணவர்களே அஜால் குஜால் அல்வா..என்று சொல்ல சரியான கைதட்டல்

கைதட்டல் சப்தத்திற்கிடையே

டேய் ஞானி அங்க பாருடா.அந்த ரைட் சைடுல..இங்கேடா.. மூணாவது வரிசை டா..
- காதர் பக்கத்தில் வந்து கிசுகிசுத்தான்

ம் ராணி அண்ணா காலேஜ் பொண்ணு..அதுக்கு என்ன இப்போ
- நான்

இல்லைடா.. எழுந்து நின்னு கைதட்டுது பாரு..
- காதர் சரியாக கவனித்துச் சொல்கின்றான்

அட நாயே இதெல்லாம் சரியா கவனிச்சு சொல்லு.. மைக்கை பிடிடா.. மைக்கை பிடிடா..

விளம்பரம் தொடர்கின்றது

காதலர்கள் பீச்சில் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருப்பது போல் ராஜாவும் சுடலையும் அமர- இந்த முறை ராஜாவுக்கு பெண் வேடம் ( கேட்டு வாங்கிக் கொண்டான் ) நான் அவர்கள் அருகே சென்று என்ன பண்றீங்க ரெண்டு பேரும் என்று கேட்க நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமலையே லவ் பண்றோம் என்று ராஜா குழைந்து பெண் போல சொல்ல

அப்படியா இந்தாங்க அஜால் குஜால் அல்வா சாப்பிடுங்க என்று நான் பெண் வேடத்தில் இருக்கும் ராஜாவிடம் கொடுக்க அவன் சாப்பிட்டு விட்டு என்னுடன் வந்து விடுகின்றான்.

ஆம் அஜால் குஜால் அல்வா காதலர்களையும் மாற்றிவிடும் உடனே வாங்கிக்கோங்க.. - காதர் பிண்ணனியில் எடுத்துவிட நான் வாய் அசைக்க..

கடைசி இருக்கையில் இருந்து விசில் பறக்கிறது .

அடுத்து பராசக்தி வசனம் போல நடித்துக் காட்டினோம். அந்தப்பதிவைக் கூட ஏற்கனவே பதிந்திருக்கின்றேன்.. எங்களுக்கு அடுத்தடுத்து ஜான்ஸ் மற்றும் பராசக்தி - எஸ்டிசி போன்று கல்லூரிகளிலிருந்தும் பல நிகழ்ச்சிகள் செய்வதற்கு ஆயத்தமாயினர்
நானும் இடையில் கவிதைப்போட்டிக்குச் சென்று அக்கினியில் வெந்த அன்னங்கள் என்ற கவிதையை எழுதிவிட்டு வந்தேன்.

அந்தக் கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

சீதை இனிமேல்
சிதைக்குச் செல்லமாட்டாள்
சந்தேகப்பட்டால்
இராமன் தீக்குளிக்கட்டும்

நாங்கள் காதர் சுடலை ராஜா மற்றும் எங்கள் கல்லூரி நண்பர்களோடு பார்வையாளர்கள் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டோம்.

ஆங்காங்கே கடலைகள் விசில் சப்தங்கள் என்று தூள் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு ராணி அண்ணா கல்லூரிப் பெண் ஒருத்தி ஏதோ ஒரு பாட்டு என்ற பாடலைப் பாட ஆரம்பிக்க தங்கத்துரை - நான் - ராஜா - சுடலை நான்கு பேரும் எழுந்து அமைதியாக முன்னால் சென்று தோப்புக்கரணம் போட எல்லாரும் ஓ வென கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

பின்னர் தமிழ் ஆசிரியர் தனியாக எங்களை அழைத்து கண்டிக்க ஆரம்பித்து விட்டார்

அந்தப்பொண்ணு பாடும்போது நீங்க போய் தோப்புக்கரணம் போட்டீங்களா..

இல்லை சார் சம்மா கேலிக்குத்தான்..

நம்ம காலேஜ் பற்றி தப்பா நினைக்க மாட்டாங்க.. ஏன் பேரைக்கெடுக்குறீங்க..ஜாலி பண்ண வேண்டியதுதான்..ஆனா மத்தவங்க மனச நோகடிக்க கூடாது..

சாரி சார்..

நான் ஒரு ப்ரண்டாத்தான் சொல்றேன்..புரிஞ்ச்சுக்கோங்க.. ன்னு சொல்லிவிட்டு போய்விட்டார்.

அறிவுரை வாங்கிவிட்டு வந்துகொண்டிருக்கின்றேன்..இங்க பாருங்கப்பா ராஜா பெஞ்சு மேல் ஏறி நின்று ஆடிக் கொண்டிருக்கின்றான்.. அட கிளம்பிட்டாங்களா மறுபடியும்..


இந்தப் பருவத்தில் என்ன சொன்னாலும் விளையாட்டாகத்தான் தோன்றும். மாணவப்பருவத்தில் கேட்ட அறிவுரைகளை நாங்கள் மற்றவர்களுக்கு சொல்லுகின்ற நிலைகள் வரும்பொழுதுதான் அந்த அறிவுரைகள் புரிய ஆரம்பிக்கும்.




-ரசிகவ் ஞானியார்

Saturday, August 12, 2006

சின்னச் சின்னச் சுவாரசியங்கள் - II

மனைவியுடன் கிண்டலாக விளையாடப்போய் உயிரை விட்ட ஒரு கணவனின் உண்மைக் கதை இது. 1985 ம் ஆண்டு மார்ச் 15 ம் நாள் யூகோஸ்லேவியாவைச்சேர்ந்த இளைஞன் ஒருவன் வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பும்பொழுது வழியில் ஒரு முகமூடி கடையைப் பார்த்தபொழுது அவனுக்குள் ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஆந்த முகமூடியை மாட்டிக்கொண்டு தனது மனைவியை பயமுறுத்திப் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டான்.

பயங்கரமான தோற்றமுடைய ஒரு முகமூடியை வாங்கிக்கொண்டு வீட்டை நெருங்கினாhன். அடிக்கடி வீட்டின் காலிங்பெல்லை அழுத்திவிட்டு வீட்டைச்சுற்றி அங்குமிங்கும் நடந்து கொண்டும் வீட்டைச் சுற்றி சுற்றியும் வந்தான்.

இதனைக்கண்ட அவனது மனைவி மிகவும் பயந்து விட்டாள் யாரோ ஒரு திருடன்தான் வீட்டை கொள்ளையடிக்க நோட்டமிடுகின்றான் என நினைத்துவிட்டாள். உடனே கைத்துப்பாக்கியை எடுத்து அந்த முகமூடிக்காரனை நோக்கி சுட்டாள்.. குண்டு தலையில் பாய்ந்து அவன் அதே இடத்தில் இறந்து போனான். பின் அந்த முகமுடிக்காரன்தான் தன் கணவன் என்று அவளுக்கு தெரிந்து கதறி அழ ஆரம்பித்தாள். ஆனால் அழுது என்ன பயன்..? அவன் போய் சேர்ந்திட்டானே..?

இது யார்மீது தவறு விளையாட நினைத்த கணவன் மீதா இல்லை விளையாட்டு எனத் தெரியாமல் சுட்டுக்கொன்ற மனைவி மீதா..? அதனால சொல்றேன்பா மனைவியை பயம் காட்டுறேன்னு சொல்லிகிட்டு கோமாளித்தனமா ஏதும் செய்திடாதீங்க..

___________________

செப்டம்பர் 11 - அமெரிக்காவில் நடைபெற்ற சம்பவம் அனைவருக்கும் தெரியும். ஆதேபோல 1911 ம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி நடைபெற்ற சம்பவம் உங்களுக்கு தெரியுமா..?


அமெரிக்காவில் நியுயார்க் மாநகரில் உள்ள மான் ஹாட்டனி;ல் ஒரு பத்து மாடிக்கட்டிடம் ஒன்றில் 8 மற்றும் 9 வது மாடியில் சட்டைகள் தைக்கும் நிறுவனம் ஒன்று இருந்தது.

1911 ல் மார்ச் 11 ம் தேதி திடீரென்று அங்கு தீப்பற்றிக்கொண்டது. அங்கு 145 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வந்தனர் இதில் பெருன்பான்மையானோர் 13 வயது முதல் 19 வயது வரை உள்ள இளம் பெண்கள். தீப்பிடித்ததும் அவர்களுக்கு என்ன செய்வதென்று எங்கு ஓடுவதென்று தெரியவில்லை.

சிலர் தீயிலிருந்து தப்பிக்க ஸன்னல் வழியாக 85 அடி உயரத்திலிருந்து குதிக்க ஆரம்பித்தனர். குதித்தவர்கள் அனைவருமே படுகாயமடைந்து இறந்து போயினர். பலர் புகை மூட்டத்தில் தட்டு தடுமாறி தீயில் அகப்பட்டுக் கொண்டு உடல் கருகி இறந்து போயினர்.

தீ விபத்து ஏற்பட்ட உடனையே தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களிடம் 10 வது மாடி வரை செல்ல ஏணிப்படிகளோ - நீர்ப்பீச்சுக்குழாயோ இல்லை. 18 நிமிடங்களில் 133 பேர் உயிரிழந்தனர். 12 பெண்கள் மட்டுமே உயிர்ப்பிழைத்தனர்.

___________________

இமெயில் இன்டர்நெட் வளர்ச்சிகளால் இப்பொழுதெல்லாம் கடிதப்போக்குவரத்துக்கள் பெரும்பாலும் குறைந்து விட்டன். வுருங்கால தலைமுறையினர்கள் தபால் என்றால் என்ன,? என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

கடிதம் அனுப்பிவிட்டு இரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரங்கள் அது போய்ச்சேரும் வரை கவலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். போராட்டங்கள் அல்லது சில எதிர்பாராத காரணங்களால் கடிதம் போய்ச்சேர தாமதமாகலாம்.

ஆனால் 219 ஆண்டுகள் கழித்து தாமதமாய் போய்ச்சேர்ந்த கடிதம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? 1761 ம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் 1980 ம் ஆண்டு போய்ச்சேர்ந்திருக்கின்றது. ஸ்வீடன் மன்னர் 12ம் சார்லஸின் படையைச் சார்ந்த ஒரு வீரர் டாமின். 1711 ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மெயர்ஸட்டா எனும் ஊரில் வசித்து வந்த தன் சகோதரி திருமதி நில்ஸ்டாட்டருக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் போட்டாhர்.

அந்தக் கடிதம் டென்மார்க்கிலுள்ள கோபன்ஹேகன் வந்து சேர்ந்தது. அப்போது டென்மார்க்- ஸ்வீடன் போர் நடந்து கொண்டிருந்தமையால் அந்தக் கடிதத்தை அவர்கள் அப்படியே நிறுத்தி வைத்துவிட்டார்கள்.

1980 ம் ஆண்டு பழைய பைல்களை நோண்டும்பொழுது இக்கடிதம் டென்மார்க் ஆவணக் காப்பகத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடனே அக்கடிதம் உரிய முகவரிக்கு அனுப்பப்பட்டது. அங்குள்ள தபால்காரர் அந்தக்கடிதத்தை சேர்க்க அந்தப்பெண்ணின் வாரிசுகளைத் தேடி அலையோ அலையோ என அலைந்திருக்கின்றார். அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பின்னர் அந்நகர நிர்வாகியிடம் அக்கடிதத்தை அந்த தபால் காரர் கொண்டு சேர்த்து விட்டார்.

ஆனால் நமது ஊரில் எல்லாம் இப்பொழுது கடிதங்களை உரிய நேரத்தில் சேர்த்துவிடுகிறார்கள் என்று கேள்வி.(?) தபால்துறை ஊழியர்கள் அந்த அளவிற்கு பொறுப்பாக வேலைபார்க்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.

___________________

Thursday, August 10, 2006

முதன் முதலாக அரசியல்வாதிகளுக்கு மத்தியில்

தமிழ்நாடு மருத்துவ சேவை சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்காக மாண்புமிகு அமைச்சர் டி. பி. ஏம் மைதீன்கான் அவர்களை அழைத்திருந்தார்கள். என்னையும் வாழ்த்துரை வழங்குவதற்காக அழைத்திருந்தார்கள்.

வாழ்த்துரைக்காக அமைச்சரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கவேண்டும் என்ற ஆவலோடு தகவல்களை சேகரித்து கிண்டலும் கேலியுமாக கவிதை நடையில் எழுதி வைத்திருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சந்திக்கின்ற மேடை இது.

இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அமைச்சர் பற்றிய தகவல்களை அவரது உறவினரும் எனது கல்லூரி நண்பருமான சித்திக் என்பவரிடம் தொலைபேசி செய்து சேகரித்து வைத்திருந்தேன்.

அரசியல் வேஷ்டிகளில் மட்டுமே
கறை உடையவர்
கட்சியிலும் வாழ்க்கைளில்
என்றும்
கறை படியும் என்ற கவலை இனி இல்லை

---
இவர் அடிப்படையில்
வேளாண்மைக் குடும்பத்திலிருந்து
வந்திருப்பவர்

---

சூரியன்
இவரது
வாழ்க்கையையும் உயர்த்தியிருக்கின்றது
விவசாயத்தையும் உயர்த்தியிருக்கின்றது

---

இறுதியாய் ஒரு செய்தி
அதிர்ச்சி அடைய வேண்டாம்
இவருக்கும் ஒரு பொடா சட்டம் …காத்துக்கொண்டிருக்கின்றது
ஆம்
மேலப்பாளைய மக்களின்
இதயங்களில் மாட்டிக்கொண்டு
எப்பொழுதுமே வெளிவரவே முடியாத
அன்பெனும் பொடா சட்டத்தில்
சிறைபட்டுக் கொண்டிருப்பார்

---

என்று வழக்கமான வஞ்சப்புகழ்ச்சி அணியில் சுமார் 4 பக்கத்திற்கு நகைச்சுவையாகவும் மக்கள் ரசிக்கும்படியாகவும் எழுதிய வைத்து விட்டு பேசுவதற்கான தருணத்திற்காக காத்திருந்தேன்..

பயமாக இருந்தது. ஏனென்றால் நான் கல்லூரி மேடைகளில்தான் அனைவரையும் கவருவதற்காகவும் - வெட்டி ஹீரொத்தனத்திலும் கிண்டலாக பேசியிருக்கின்றேன். ஆனால் இது அரசியல் மேடை இங்கு எனது பேச்சுக்கள் எடுபடுமா என்று தெரியவில்லை.

விழா அன்று காலை 11 மணிக்கு சென்று வந்திருந்த சில பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு முதல் வரிசையில் சென்று அமர்ந்தேன்.

பக்கத்தில் உள்ள ஓர் வக்கீல் அவருக்கு சம்பந்தா சம்பந்தா இல்லாமல் ஏதேதோ கேட்டார். நானும் சில மேடைகளில் பார்த்திருக்கின்றேன். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் தங்களை பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்காக பக்கத்தில் இருப்பவர்களின் காதினில் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருப்பார்கள். எல்லா மேடைகளிலும் இந்தச் செயல் வழக்கமாக நடைபெறுவதுண்டு.

அதுபோல சில தொழிலதிபர்கள் - சில அரசியல்வாதிகள் -உள்ளுர் பிரபலங்கள் என்று அறிமுகங்கள் கிடைத்தன.

குறிப்பிட்ட நேரத்திற்கு அமைச்சர் வந்துவிட எல்லாருக்கும் அவர் வணக்கம் சொல்லி கைகுலுக்கி விட்டு ; என்னடா அரசியல் மேடையில் டிசர்ட்டும் ஜுன்ஸ் பேண்ட்டோடு ஒரு இளைஞன் என்று என்னை ஆச்சர்pயமாக பார்த்தாhர். பின்னர் என்னிடமும் கைகுலுக்கி விட்டு போது பக்கத்தில் இருப்பவரிடம் என்னைப்பற்றி கேட்க - அவரோ நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள எனது பெயரை சுட்டிக்காட்டி இவர் பெயர் ரசிகவ் ஞானியார் என்று அறிமுகப்படுத்தினார்.

அமைச்சரின் பின் வரிசையில் நான் அமர்ந்திருந்தேன். வழக்கமான அரசியல் முலாம் பூசுதல்கள் ஆரம்பித்தது. இங்கிருந்து வந்திருக்கும் இவர்களே - அங்கிருந்து வந்திருக்கும் அவர்களே என்று அனைவரும் இதே பல்லவியைப்பாட எனக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வந்தது. அமைச்சருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

அவர் மேடையில் பேசுபவரைப் பார்த்து சரி சரி வரவேற்றது எல்லாம் போதும் விசயத்திற்கு வாங்கப்பா என்று கிண்டலோடு கூற கூட்டத்தில் சிறிய சிரிப்பலை. ஆனாலும் அந்த பேசிக்கொண்டிருந்து அந்த உள்ளுர் அரசியல்வாதி விடவில்லை. அமைச்சர் எரிச்சலாகி பின்னால் திரும்பி எங்களைப்பார்க்க நான் ஒரு புன்முறுவல் தந்தேன்.

பின் என்னிடம் ஏதோ கேட்க எனக்கு சரியாய் காதில் விழவில்லை. என்ன சார்..? என்ன சார்..? என்று எனது சீட்டில் இருந்தபடியே கேட்க - நான் இருந்த இடத்தில் இருந்தபடியே பதில்சொல்வதைக்கண்டு எரிச்சல் அடைந்த அமைச்சரின் பக்கத்தில் உள்ள ஒரு நபர் என்னைச் சைகையில் முன்னால் வரும்படி அன்பாய் எச்சரிக்க நான் முன்னால் சென்று அமைச்சர் அருகே குனிந்து என்ன சார் என்க..?

உங்களை புதுசாப் பார்க்குறேன் இங்க..? நோட்டீஸில் இளம்கவிஞர் ரசிகவ் ஞானியார்னு போட்டிருக்கே..? நீங்க கவிஞரா..?

ஆமா சார் அப்படித்தான் சொல்லிக்கிறாங்க..என்று நக்கலாய் பதில் அளிக்க அவர் புன்முறுவல் செய்தார்.

சரி ஞானியார்தான் உன்னுடைய உண்மையான பெயரா..? என்ன அர்த்தம்?

ஞானின்னா எல்லாம் அறிந்தவன்னு அர்த்தம் சார் - ஆனா என்னுடைய பெயர் மட்டும்தான் ஞானி..என்று நான் கூற

மறுபடியும் ஒரு சிறிய புன்னகையை வீசினார். சரி நீ ஏதோ புத்தகம் வெளியிட்டிருக்கிறதா சொன்னாங்க அந்தப்புத்தகம் இப்ப இருக்கா..

அய்யோ நான் கொண்டு வரலைங்க..நான் உங்களுக்கு அப்புறமா தரேன்..

சரி கண்டிப்பா தரணும் என்று அவர் கூற நான் என்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தேன்

அமைச்சரிடம் பேசிவிட்டு வந்ததால் ஏதோ தமிழ்நாட்டின் மாசுக்கட்டுப்பாட்டைபற்றி முழுமையாக நான் அமைச்சரிடம் விவாதித்ததைப்போன்ற எண்ணத்தில்
கூட்டத்தில் உள்ள எல்லாரும் என்னையே பார்ப்பது போன்ற உணர்வில் என்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

இதற்கிடையில் எனக்கு வரவேண்டிய தேநீர் என்னுடைய இருக்கையைத்தாண்டி சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் முழுவதும் வேண்டுமானாலும் தேநீர் குடித்துக்கொண்டே இருப்பேன் நான். அந்த அளவிற்கு தேநீர் பைத்தியம் நான். இப்படி இருக்கையில் என்னைக் கடந்து சென்றுவிட்டதே தேநீர் என்று கடுப்பில் இருந்தேன்.

மறுபடியும் கேட்பது நாகரீகமல்ல. அப்பொழுது திடீரென்று ஒரு பையன் வந்து என்னிடம் தேநீர் கோப்பையை நீட்ட - எனக்கு மகிழ்ச்சி கார்ப்பரேஷன் குழாய் காற்றைப்போல பீறிக்கொண்டு வந்தது.

ச்சே நம்ம ஊருப்பசங்க பாசக்காரனா இருக்காங்களாப்பா

அமைச்சர் மைதீன்கான் பேச ஆரம்பித்தார். ஆனைவரையும் வழக்கமான அரசியல் பாணியில் அவரும் வரவேற்று பேசும்பொழுது தம்பி ரசிகவ் ஞானியார் என்று கூற

அட அவர் வயசு என்ன?..என்னுடைய வயசு என்ன? தம்பின்னு சொல்லி அவருடைய வயசைக் குறைச்சிக்கிட்டாரே..

என்று எனக்குள் சின்ன பொறாமை.



மக்களுக்கு செய்த பணிகள் - குறை நிறைகள் - எதிர்காலத்திட்டங்கள் என்று நிறைய உபயோகமாகப் பேசினார்.

அப்பொழுது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் வந்து தம்பி பேசுவதற்குண்டான நேரம் குறைவாகத்தான் இருக்கின்றது. இன்னொரு அரசியல் பிரமுகர் ஒருவரும் பேசவேண்டியதிருக்கின்றது. நீங்களும் பேச வேண்டியதிருக்கிறது. ஆனால் நேரமில்லை. யாராவது ஒரு ஆள்தான் பேசமுடியும்.

அவரைப் பேச வைக்கலாமா..? மன்னிச்சுக்கோங்க..

சரி அந்த உள்ளுர் அரசியல் பிரமுகர் ஏதாவது முக்கியமாக பேசுவார் என்று நினைத்து சரிங்க பரவாயில்லை..அவர் பேசட்டும்.. என்று நான் பேச வைத்திருந்த காகிதத்தை மடித்து ஏமாற்றத்துடன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அடுத்து பேசுவதற்று அழைக்கப்பட்ட அந்த அரசியல்வாதியின் பேச்சை உற்று நோக்க ஆரம்பித்தேன்.


கடுமையான வேலைப்பணியிலும் வந்திருக்கும் அமைச்சர் மைதீன் கான் அவர்களே..

வக்கீல் திரு அபுபக்கர அவர்களே

நெல்லை பில்டர் அசோசியேசன் தலைவர் அமானுல்லா அவர்களே...

...
...

தம்பி; ரசிகவ் ஞானியார் அவர்களே ( நோட்டிஸில் உள்ளதை அப்படியே வாசித்தார் )

அனைவரையும் வரவேற்கின்றேன் என்று தனது நீண்ட கருத்துள்ள உரையை முடித்துவிட்டு அமர்ந்தார். ச்சே இப்படி இவர் பேசுவார்னு தெரிஞ்சா நாம பேசியிருக்கலாமே என்று நான் பட்ட வயிற்றெரிச்சலில் மைக்கில் புகை வந்ததை நானும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும்தான் கவனித்தோம்.


பின் விழாவிற்கு வந்தவர்களை கவுரவிக்கும் வண்ணம் போர்வை போடும் படலம் ஆரம்பித்தது.

இந்த பொன்னாடையை இவர் அவருக்குப் போடுவார்
அவர் இவருக்குப் போடுவார்
என்று சொல்லிக்கொண்டே மருத்துவச்சேவை சங்க உறுப்பினர் திரு..... அவர்கள் ரசிகவ் ஞானியார்க்கு போடுவார் என்று கூற ஆச்சர்யப்பட்டேன். அட நம்மையும் மதிச்சு போடுறாங்களேப்பா என்று எனக்குள் ஒரு கர்வம்.

இந்த பொன்னாடைன்னு சொல்லும்பொழுதுதான் ஞாபகம் வருது. காலேஜ்ல ஒருமுறை அப்படித்தான் மாணவர்ப்பேரவை செயலராக இருக்கும்பொழுது பொன்னாடையை எனக்கு போர்த்தினார்கள். நான் உடனே

பொன்னாடை என்று சொல்லிவிட்டு தள்ளுபடித்துண்டை போர்த்தியதற்கு நன்றி..நன்றி..நன்றி..என்று நான் மைக்கில் சொல்ல மாணவர்கள் உற்சாகத்தில் கைதட்ட பிரின்ஸ்பால் ஒரு முறை முறைச்சாரே பார்ப்போம்..அப்புறம் தனியா கூப்பிட்டு ரெய்டு விட்டதெல்லாம சொல்லமுடியாத கதைங்கோ..

சரி அத விடுங்க..இங்க இந்த விழாவுல அதே பொன்னாடைன்னு சொன்னதால எனக்கு அந்த காலேஜ் ஞாபகம் வந்திடுச்சு..


விழா முடிந்து அனைவரும் கிளம்புகின்ற சமயத்தில் அமைச்சரிடம் அனைவரும் கைகுலுக்கி விடைபெற நானும் அமைச்சரிடம் கைகுலுக்கி விடைபெறும் தருவாயில் அவரிடம் ஹேப்பி பர்த்டே சார் என்க..அவரோ ஆச்சர்யப்பட்டு எனக்கா பிறந்த நாளா என்க..

ஆமா சார் 19.07.1947 உங்க பிறந்த நாள்..இன்னும் 3 நாள் இருக்கு சார் என்க

எப்படித் தெரிஞ்சுது உங்களுக்கு என ஆச்சர்யமாய் கேட்க

இண்டர்நெட்ல இருந்து தகவல் சேகரித்து எடுத்தேன் சார்..பார்லிமெண்ட் புரொபைல்ல இப்படித்தான் இருக்கு..என்று நான் சீரியஸாய் கூற

ச்சோ அது சும்மா கொடுத்ததுப்பா என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றார்.

அட நடிகைகள் தான் வயச மறைப்பாங்கன்னு பார்த்தா..அரசியல்வாதிகளும் அப்படித்தானா..என்ற ஆச்சர்யத்தோடு நானும் விடைபெற்று கிளம்பிவிட்டேன்.

சும்மா சொல்லக்கூடாதுங்க மற்ற பந்தா காட்டுகின்ற அமைச்சர்களுக்கு மத்தியில் இவர் மிகவும் எளிமையாக நடந்து கொண்டது என்னை மட்டுமல்ல அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
இவர் தனது பேச்சில் கூட குறிப்பிட்டார்

கடுமையான பணிகளுக்கு மத்தியில் நான் வந்திருப்பதாக யாரோ கூறினார்கள்..ஆனா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க..சும்மா தான் இருந்தேன்..எந்த கடுமையான பணியும் இல்லை..யாருக்காக வரப்போகிறேன்.? மக்களுக்காகத்தானே..? நீங்க கொடுக்கிற கார் - நீங்க கொடுக்கிற பெட்ரோல் - நீங்க கொடுக்கிற பாதுகாப்பு-- நீங்க ஆணையிட்டா வந்து நிற்கப்போகிறேன்...

என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம் எந்த அமைச்சருக்கு வரும் சொல்லுங்க..


தொகுதியில் எந்தப்பிரச்சனை என்றாலும் தயக்கம் காட்டாமல் என்னை அணுகலாம் என்று வாக்களித்தார்.

அனைவரிடமுமு; பொறுமையாய் மனுக்களை வாங்கி எளிமையாக பழகிச்சென்ற அமைச்சர் மைதீன் கான் அவர்கள் எனக்கு மிகவும் வித்தியாசமான அமைச்சராகவே தெரிந்தார்.

அது மட்டுமல்ல திடீரென்று உள்ளுர் மருத்துவமனைக்கு சென்று விசிட் அடித்து அன்று சரியான காரணமில்லாமல் பணிக்கு வராமல் இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டுவிட்டு சென்றிருக்கின்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எந்த அளவிற்கு தொகுதி மக்கள் மீது அக்கறை செலுத்தியிருக்கின்றார் என்று.

இவரைப்பின்பற்றி மற்ற அரசியல்வாதிகளும் இருந்தால்; தொகுதிகள் மட்டுமல்ல தமிழ்நாடே முன்னேறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை..



- ரசிகவ் ஞானியார்

Tuesday, August 08, 2006

சின்னச்சின்னச் சுவாரசியங்கள் - I

குற்றால சீசன் களைக்கட்டி வருகின்றது. மக்கள் கோடையின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக குற்றால அருவிக்கு வந்து தங்களை நனைத்துக்கொள்கின்றனர். குற்றால அருவியானது ஏழைகளின் நயாகராவாகத் திகழ்கின்றது.

நான் சென்ற வருடத்தில் மட்டும் மூன்று முறை சென்று விட்டேன். எப்பொழுதும் ரசிக்க வைக்கும் யானை - கடல் - ரயில்களின் வரிசையில் இந்த அருவியையும் சேர்த்துக்கொள்ளலாம்..

இப்படி மக்கள் கூட்டம் கூட்டமாய் குளித்துக்கொண்டிருக்கும் குற்றால அருவியில் பிரிட்டிஷ் காலத்தில் நம் மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விசயம் யாருக்கேனும் தெரியுமா?

ஆங்கிலேயர்களைத் தவிர யாரும் அங்கே குளிக்கக் கூடாது என்று ஆங்கிலேயர்கள் அங்கு ஆணையிட்டனர். அதனால் அதனைச் சுற்றி உள்ள மக்கள் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாயினர். நம்முடைய நாட்டில் உள்ள அருவியில் குளிப்பதற்கு மண்ணின் மைந்தர்களான நமக்கே தடையா..? இது என்ன கொடுமை என்று சுற்று வட்டார மக்கள் கொதித்துப்போய் திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆந்த நீதிமன்றமோ ஆங்கிலேயர்க்ள குளிக்கும்பொழுது தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அருவிக்கு அருகே உள்ள ஆலயத்தில் வேண்டுமானால் ஆங்கிலேயர்களுக்கு தொந்தரவு இல்லாமல் வழிபாடுகள் செய்து கொள்ளலாம் என்று ஆணையிட்டது.

இந்தப்பதிலில் திருப்தியடையாத தென்காசி மற்றும் திருநெல்வேலி மக்கள் 1915 ம் ஆண்டு பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர்.. அங்குள்ள ஸர் அனல்ட் என்ற நீதிபதி அருவி என்பது பொதுவானது.

ஆகவே ஆங்கிலேயர்கள் அங்கு இரண்டு மணி நேரமே நீராடலாம் அது மட்டுமல்ல ஆங்கிலேயர்கள் திருவிழாக்காலங்களில் அங்கு குளிக்க கூடாது என்று தீர்ப்பளித்ததோடு இல்லாமல் ஹரிஜனமக்கள் தவிர யார் வேண்டுமானாலும் குளிக்கலாம் என்று ஆணையிட்டது.

பின்னர் 1938 ம் ஆண்டு ராஜாஜி சென்னை மாகாண பிரதமராக இருந்த காலத்தில் ஹரிஜனங்களும் இங்கே குளிக்கலாம் என்று தடையை நீக்கினார்.

நாம் உல்லாசமாய் குளித்து வருகின்ற இந்த அருவிக்குப்பின்னால் எத்தனை ரணங்கள் இருக்கிறது பார்த்தீர்களா?. ஆகவே இனிமேல் குற்றாலத்திற்கு சென்றால் உடலில் நீரை நனைத்துவிட்டு மனசில் ராஜாஜியையும் நினைத்துப் பாருங்களேன்

- ரசிகவ் ஞானியார்

குங்குமத்தில் எனது படைப்பு

இந்த வார குங்குமம் ( 13.08.06) பக்கம் 88 ல் என்னுடைய படைப்பு ஒன்று வந்திருக்கின்றது. நவரச சிறப்பிதழுக்காக நண்பர் பாலபாரதியும், விக்கி என்ற ப்ரியனும் குங்குமத்தில் உள்ள நண்பர் கேட்டதற்கிணங்க என்னிடம் ஏதாவது ஒரு நவரசத்தைப்பற்றி எழுதச்சொல்ல, நான் "காதலை பற்றி எழுதலாமா?" என்று அவரிடம் கேட்க

"யாரைக்கேட்டாலும் இதத்தான் சொல்றாங்க..வேற ஏதாவது தலைப்பை எடுங்கப்பா" என்று கூற

"தெரிஞ்சதைத்தானே எடுக்க முடியும்..சரி சோகம் பற்றி எழுதவா" என்க

"ம் எழுதுங்க எனக்கு நாளைக்கே வேணும்" என்று கண்டிப்பாய் கூறினார்.

குங்குமம் இதழில் நமது படைப்புகள் வருகிறது என்பது சாதாரண விசயமா..? எப்படியாவது எழுதிக் கொடுத்துவிடவேண்டும் என்ற ஆவலில் இன்றுவரை என்னைச்சுற்றி நடந்த சின்னச் சின்னச் சோகம் பற்றி எழுதலாம் என்று தீர்மானித்தேன்.

நான் துபாயில் இருக்கும்பொழுது என்னுடைய அலுவலகத்தில் வேலைபார்க்கும் நண்பர் ஒருவர், தனது தாயாரின் மரணத்திற்கு கூட செல்லமுடியாமல் தவித்ததைப்பற்றி எழுதினேன்.

சரி எதற்கும் மகிழ்ச்சியைப்பற்றியும் எழுதலாம் என்று தீர்மானித்து கல்லூரி நாட்களில் நடைபெற்ற ஏற்கனவே வலைப்பூவில் எழுதிய சில சுவாரசியமான கல்லூரிக் கிண்டல்களைப்பற்றி எழுதினேன்.

3 படைப்புகள் தயார் செய்து நண்பர் விக்கியின் மூலமாக பாலபாரதிக்கு அனுப்பி குங்குமம் நாளிதழுக்கு அனுப்பச்செய்தேன். அவர்கள் சோகத்தை விட்டுவிட்டு கல்லூரி நாட்களில் நடைபெற்ற கிண்டலான சம்பவத்தை தேர்ந்தெடுள்ளார்கள்.

எனது படைப்புகள் மட்டுமல்ல அன்புடன் குழுமத்தின் உறுப்பினர்களின் ( ரசிகவ் - விழியன்- ஜெஸிலா - ஜொள்ளுப்பாண்டி - நிலா )படைப்புகள் பெருன்பான்மையாக இடம் பெற்றுள்ளன.

தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்த நண்பர், குங்குமம்பொறுப்பாசிரியர் கௌதம் மற்றும் நண்பர் பாலபாரதி மற்றும் விக்கி அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதுபோன்று வலைப்பதிவாளர்களுக்கு குங்குமம் போன்ற பத்திரிக்கைகள் தருகின்ற ஆதரவுகளால் அவர்கள் மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமையும்.

இப்பொழுது வலைப்பதிவர்கள் மீதும் தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களின் பார்வை விழுந்துவிட்டது என்பதே வலைப்பதிவர்களின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

பத்திரிக்கைக்கு படைப்புகளை அனுப்பி திருப்பி அனுப்பப்பட்டு தங்களது திறமைகளை எந்த வகையிலாவது வெளிகொணர்ந்து விடமாட்டோமா என்று ஏங்கியவர்களுக்கு இந்த வலைப்பதிவுகள் ஒரு வடிகாலாக விளங்குகின்றது.

இப்பொழுது பத்திரிக்கைகளே வலைப்பதிவினரின் பதிவுகளை தேர்ந்தெடுத்து தங்களுடைய பத்திரிக்கையில் பிரசுரிக்கும் அளவிற்கு வலைப்பதிவினர் வளர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தனி மனித துவேசம் - மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற ஈனச்செயல்களை மட்டும் தவிர்த்துக்கொண்டால் வலைப்பதிவுகளின் வளர்ச்சிகள் பிரமிக்கவைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.



-ரசிகவ் ஞானியார்

Monday, July 24, 2006

எனக்காக ஒரு கடிதம்...

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. ஆகவே நிலவு நண்பனைக் காணவில்லை என்ற அறிவிப்புகள் வருவதற்கு முன் வந்து ஆஜராகி விடவேண்டும் என்ற அவசரத்தில் வந்திருக்கின்றேன், "எனக்கு ஒரு கவிதை எழுதி தாடா" என்று கேட்டகல்லூரி தோழிக்கு ( ? ) எழுதிய ஒரு பழைய கடிதத்தோடு. இனிமேல் பல சுவாரசியமான பதிவுகளோடு தொடர்ந்து சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு...



உனக்கே உனக்காக ...
ஒரு கவிதை!

உன்னைப்பற்றியா...? - இல்லை
உனக்காகவா?

உன்னைப்பற்றி
எழுதவேண்டுமானால்...
மன்னித்துக்கொள்ளடி!
எனக்கு
கவிதையைப்பற்றி
கவிதை எழுதத்தெரியாது... (! ...ஐஸ் )

உன்னைப்பற்றிய கவிதைகளில் -
சில உளறல்கள்...
சில நிஜங்களின் தடுமாற்றங்கள்;...
சில தயக்கம்...
வெளிவந்துவிடுமோ என்ற
அச்சத்தில்...
மொத்தத்தை சொல்லாமல்
மிச்சத்தை உளருகிறேன்
பெண்ணே!

உன் தலைக்கனம் பற்றி
கல்லூரியில் சிலர் கனைக்க
நானோ
ஆண்கள் செய்தால் கிண்டல்
பெண்கள் செய்தால் தலைக்கனமா?
என
பெண்ணுரிமை பேசிய - என்னை
சந்தேகமாய் பார்த்த
என் வகுப்பறை தோழிகள்...

எத்தனை பேருக்கு
வாய்த்துவிடப்போகிறது...?
தன்
கல்லூரி நண்பர்களோடு
கடைசிவரை பயணித்திட...
நண்பனாகவோ
அலுவலகத் துணையாகவோ..
பக்கத்துவீட்டுக்காரனாகவோ..
வாழ்க்கைத்துணையாகவோ (?)..

எனக்கும் வாய்க்கும்
என நம்பிக்கையிருக்கிறது..
நீ கடைசிவரை
ஒரு தோழியாக!
என் வாழ்க்கையில் கடைசிவரை

ஆரஞ்சு மிட்டாய்க்காக
ஆகஸ்டு 15 -ஐ எதிர்நோக்கும்
பள்ளிச்சிறுவனைப்போல...

ரமலான் முதல் நோன்பில்
நோன்பு திறக்கும் நேரம் காத்திருக்கும்
ஓரு முகம்மதியனைப்போல¸

சின்ன சின்ன
எதிர்பார்ப்புகள் ,
காத்திருப்புகள்,
எல்லாருடைய வாழ்க்கையிலும் உண்டு

ஆனால்
காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்..
கட்டபொம்மன் பேருந்து வரை!

உன்
துப்பட்டா பற்றி
தூர்தர்ஷனில் சொன்னார்களாமே?
அப்படியா ... ?

முதன்முதலில்
உன்னைப்பற்றிய
எதிர்பார்ப்புகளை கொடுத்ததே
உன் துப்பட்டாதான் தெரியுமா ?

துப்பட்டாவின் பின்புறம்
நீ இடுகின்ற முடிச்சில்
மாட்டிக்கொணட...
மாணவர்களில் நானும் ஒருவன்!

ஒற்றை இருமலை
இரட்டையாய் ( ? ) எதிரொலிக்கும்...
நம் கல்லூரி வராண்டா

மீசையில்லாத முகத்தோடு
உன் முன்
அசடு வழிந்தபடி நின்ற
மாடிப்படி ஏரியா,

கடந்து செல்லும்பொழுதெல்லாம்
உளவு பார்க்கத் தூண்டிய
கம்ப்யூட்டர் லேப்,

உன்
நோட்டுப்புத்தகத்திலிருந்து
காகிதம் வலிக்காமல்
கிழித்தெடுத்த
கண்ணதாசன் கவிதை...,

கொடுத்து அனுப்புவதில் நேசமல்ல - என்று
நான் திருப்பி அனுப்பிய
வாழ்த்து அட்டையை
நேரில் கொடுத்து
நேசமுணர்த்திய நாட்கள்,

இப்படி உன்னை ஞாபகப்படுத்துகின்ற....

துப்பட்டா..
கல்லூரி வராண்டா..
மாடிப்படி ஏரியா..
கம்ப்யுட்டர் லேப்..
கிழித்த கவிதை..
வாழ்த்து அட்டை..

என
உயிறற்றவைகளை கூட...
மறக்கமுடியவில்லை!

உன் முகம் மறந்திடுவேனென்று...
புகைப்படம் அனுப்பி
புண்படுத்திவிட்டாயடி!

ஆகவே
திருப்பித்தர மாட்டேன்
உன் புகைப்படத்தையும்
அந்த நினைவுகளையும்!

மழைவிட்ட பிறகும்
சூரியன் வரும்வரை
தூறலாய் விழுந்துகொண்டிருக்கும்...
இலைத்துளி சாரல்போல்,

உயிர் மறையும்வரை...
சொட்டுசொட்டாய்
வழிந்துகொண்டேயிருக்கும் ...
உன் நினைவுகள் !

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு