Thursday, August 30, 2007

வலைப்பதிவர்களுக்கு ஒரு போட்டி

Photo Sharing and Video Hosting at Photobucket

2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ம் தேதி உலகத்திற்கே விடுமுறை நாள். அன்று பூமியை மிகப்பெரிய விண்கல் ஒன்று தாக்கப் போகின்றது. இதுபோன்ற ஒரு விண்கல்லின் தாக்குதலினால்தான் உலகம் முன்பு டைனோசர் என்ற உயிரினங்களை இழந்தது. இப்பொழுது விழப்போகின்ற இந்தகல் பூமிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தப்போகின்றது என்ற நாசாவின் மிரட்டும் மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கின்றது.

ந்த விண்கல்லானது பூமியை இதோ இப்படித்தான் வந்து தாக்கப்போகின்றதாம்.

Photo Sharing and Video Hosting at Photobucket

து போன்ற ஒரு புரளி முன்பு தோன்றியது. 2000 ம் ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்று. அதற்கு முந்தைய நாள் ஒரு கிராமமே பிரியாணி போட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தது என்று பத்திரிக்கை செய்தியில் படிக்க நேர்ந்தது. அடப்பாவிகளா சாகப்போறதுக்கு முந்தைய நாள் பிரியாணிதான் தங்களின் கடைசி லட்சியமா..?

னால் நமக்கு அப்படிப்பட்ட விண்கலத்தினால் பாதிப்பு இல்லை ..ஏன்னா கண்ணா இப்படிச் ஜுடு..


Photo Sharing and Video Hosting at Photobucket

து உண்மையா பொய்யா என்று ஆராய்வதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை. சும்மா ஒரு கற்பனைக்காக உண்மையிலையே 2019 ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி உலகம் அழியத்தான் போகின்றது என்று எல்லா நாட்டு விஞ்ஞானிகளும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் என்னவெல்லாம் செய்யக்கூடும்.? உலகம் அழியப்போவதற்குள் இதையெல்லாம் செய்து விடுவேன் என்று மனதில் தேங்கிய எண்ணங்களையெல்லாம் நிறைவேற்றுவீர்களா..? தாங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் ? தங்களின் ஆசைகள் என்னென்ன என்பதை சுவாரசியமாக எழுதுங்களேன். யாருடையது ரசிக்கத்தக்கதாக இருக்கின்றதோ அவர்களுக்கு 500 ரூ மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்;.

போட்டியின் விதிகள் :

1. த்தனை வரிகளுக்குள் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம்
இல்லை. ஒரு வரியிலும் இருக்கலாம் ஒரு பத்தியாகவும் இருக்கலாம்.
ஆனால் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் இருந்தால் நல்லது.

2. போட்டியில் பங்கு பெறுபவர்கள் எந்த நாட்டிலும் இருக்கலாம் ஆனால்
பரிசு தமிழ்நாட்டிற்குள் இருக்கும் அவர்கள்; பரிந்துரைக்கும் ஒருவருக்கு
வழங்கப்படும்.

3. கடைசிதேதி மற்றும் நேரம் : 03-09-07 - இந்திய நேரம் : இரவு 12 மணி


ப்ப நீங்க ஆரம்பியுங்க...ம் ஸ்டார்ட் மியுஸிக்..


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Monday, August 27, 2007

ஒரு கிலோ செய்தி எவ்வளவு ரூ?

ஒரு நாள் பத்திரிக்கை படிக்காவிட்டாலும் அன்றைய பொழுதே விடியாதது போல நினைக்கின்ற அளவுக்கு பத்திரிக்கை ஆர்வலர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். காலையில் பத்திரிக்கை படிக்காவிட்டால் பலருக்கு அலுவலகத்தில் வேலை ஓடாது.

எனக்கும் அப்படித்தான் ஒருநாள் பத்திரிக்கை படிக்கவில்லையென்றால் கூட ஏதோ உலகத்தொடர்பை துண்டித்துவிட்டு நாம் இருக்கின்றோமோ என்ற உணர்வு ஏற்படும்.நம்மில் நிறைய பேருக்கு அப்படியே.

ஆனால் அந்தப் பத்திரிக்கைகள் நியாயமான முறையில்தான் செய்திகளை வெளியிடுகின்றார்களா? ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் பத்திரிக்கைத் துறையும் ஒன்று. அப்படிப்பட்ட துறை கறை படிந்து இருக்கலாமா..? எத்துணை பொறுப்பாய் செய்திகளை வெளியிடுவேண்டும். அப்படித்தான் நடக்கின்றதா இப்பொழுது? சமூக அக்கறையோடுதான் பத்திரிக்கைத் துறை இருக்கின்றதா..?

எனக்குத் தெரிந்து பெருன்பான்மையான பத்திரிக்கைகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனரே தவிர சமூகஅக்கறை என்பது துளி கூட இல்லை.

கல்லூரிக் காலத்தில் நான் பத்திரிக்கை ஒன்றிற்கு நேர்முகத்தேர்வு செல்ல நேரிட்டது. என்னிடம் கேட்கப்பட் கேள்வி ஒன்று

"சாலையில் ஒரு பெண் சென்றுகொண்டிருக்கின்றாள் அப்பொழுது பேருந்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் அந்தப் பெண் மீது எச்சில் துப்பி விடுகின்றார். அதனால் அந்தப்பெண் கோபமடைந்து பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றாள். இதனால் அந்தச் சாலையில் பரபரபரப்பு ஏற்பட்டது."


"இதுதான் சம்பவம். இந்தச் சம்பவத்திற்கு எப்படி தலைப்பு கொடுப்பீர்கள் ?" என்றார்


"பெண்ணின் மீது எச்சில் துப்பிய வாலிபருடன் சண்டை – போக்குவரத்து பாதிப்பு என்று எழுதுவேன் சார்"


அந்த அதிகாரி சிரிக்க ஆரம்பித்து," அப்படி எழுதினால் சாதாரணமாகிவிடும். எப்படி எழுதவேண்டும் தெரியுமா?" என்று அவர் அந்த தலைப்பை கூறினார்.

"பட்டப்பகலில் பருவப்பெண் பாவாடையில் எச்சில் துப்பிய வாலிபர்"

மிகப் பிரபலமான பத்திரிக்கையில் பெரிய பொறுப்பில் இருக்கின்ற அவரே அப்படி கூறியது எனக்கு மிகவும் வேதனையாகிவிட்டது. தகவல்கள் சரியாக நியாயமாக மக்களிடம் சென்று சேரவேண்டும். இதுதான் பத்திரிக்கைகளின் பொறுப்பு. ஆனால் மக்களை கிளுகிளுப்புண்டாக்கி அதன் மூலம் சம்பாதிக்கும் இதுபோன்ற பத்திரிக்கைகள என்ன செய்வதாம்?

தகவல்கள் சரியாகத் தருவது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் மக்கள் வாங்கவேண்டும் என்பதற்காக தகவல்களை குழப்பி உண்மையை திரித்து கூறுகின்ற பத்திரிக்கைகள் ஏராளம்.

பத்திரிக்கைகள் சாதி மதம் சாராமல் அரசியலைச் சாராமல் இருக்கவேண்டும். இல்லையெனில்; தகவல்கள் முழுமையாகவும் உண்மையாகவும் மக்களைப் போய் சேராது.

தாங்கள் இருக்கின்ற இனத்தை – அல்லது அரசியல் கட்சியைப் பற்றி உயர்வாகவே எழுதுவார்களே தவிர அதிலுள்ள குறை எழுதுவதற்கு இன்னொரு பத்திரிக்கைதான் வரவேண்டும்.

அரசாங்கமும், பத்திரிக்கைகள் தொடங்குவதற்கு அல்லது இப்பொழுது வைத்திருப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும்.

எந்தச் செய்திகளையும் வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தவறான தகவல்களை வெளியிடுகின்றது என்றால் அந்தப் பத்திரிக்கையின் உரிமையாளருக்கு மற்றவர்களுக்கு பாடம் தருகின்ற அளவுக்கு தண்டனை தரப்படவேண்டும்.

சமீபத்தில் இங்குள்ள ஒரு கல்லூரியில் மாணவ மாணவிகளை அதிகமாக ஏற்றி சென்ற கல்லூரிப்பேருந்து ஒன்றுக்கொன்று மோதியதால் சில மாணவிகள் மாணவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஒரு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் செய்தி சில மாணவர்கள் மூலம் பத்திரிக்கைக்கு கிடைக்கின்றது. ஆனால் அந்தக் கல்லூரியின் உரிமையாளரோ தன்னுடைய கல்லூரியின் பெயர் பத்திரிக்கையில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பணம் கொடுத்து காவலர்களின் மற்றும் பத்திரிக்கைகளின் கைகளை கட்டிப்போட்டுவிடுகின்றார். அந்தச் செய்தி எந்தப்பத்திரிக்கைகளிலுமே வரவில்லை.


பின் 3 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் தருவதாக கூறிய பணம் முழுமையாக தரப்படவில்லை என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தபொழுதுதான் பொதுமக்களுக்கு செய்தி தெரியவருகின்றது. இனிமேலும் செய்தி வெளியிடாவிட்டால் பத்திரிக்கை பெயர் கெட்டுவிடும் என்று பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட ஆரம்பித்தது.

செய்திகளே விலைக்கு வாங்கப்படும்பொழுது எப்படி அவர்கள் பத்திரிக்கைகளை நாம் வாங்குவது. ? எப்படி அவர்கள் வெளியிடுகின்ற செய்திகளை நம்பி படிப்பதாம்? இது போன்ற காசுக்கு மாரடிக்கும் கூட்டங்களை எல்லாம் அடையாளம் கண்டு அகற்றிவிடவேண்டும். இல்லையென்றால் செய்திகளும் விளம்பரகள் போல ஆகிவிடும்.

சில மாலைப் பத்திரிக்கைகள் மிகவும் மோசமாக தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன. கிளுகிளுப்புக்காகவே வார்த்தைகள் மோசமாக பயன்படுத்தப்படுகின்றன. என் நண்பர் ஒருவர் இதுபோன்ற ஒரு பத்திரிக்கைக்கு மஞ்சள் பத்திரிக்கை என்றே பெயர் வைத்திருக்கின்றார்.

பெரும்பாலும் அந்தப் பத்திரிக்கைகளில் கற்பழிப்பு, பாலியல் சம்பந்தமான செய்திகளையே தலைப்பில் போட்டு விளம்பரப்படுத்தி பத்திரிக்கைளை விற்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இந்தச் செய்திகளை படிக்கும்பொழுது மிகவும் மனவேதனை படும் அளவிற்கு அவர்களின் விவரிப்புகளும் கற்பனைகளும் ஊறிப்போய்கிடக்கும்.

ஒருவேளை சூடான செய்திகள் என்று அவர்கள் சொல்வது இதற்காகத்தானோ?

அதுவும் பாலியல், கற்பழிப்பு சம்பந்தமான செய்திகளை வெளியிடும்பொழுது பெண்களின் முகத்தை அப்பட்டமாக வெளியிடுவது அந்தப் பெண்களின் எதிர்காலத்தை பாதிக்கின்ற செயல். அந்த நேரத்தில் அந்தப் பத்திரிக்கைக்கு செய்திகள் கிடைத்தால் போதும். ஆனால் அந்தப் பெண்களின் நிலைமையை யோசித்துப் பார்த்தார்களா? தங்கள் குடும்பப் பெண்கள் பாதிக்கப்படும்பொழுது இதுபோன்று வெளியிடுவதற்கு அவர்களுக்கு தைரியம் வருமா?

காந்தியடிகள் சொன்னது போல, பிறருடைய துன்பத்தை அவர்களுடைய மனநிலையில் இருந்து பார்த்தால்தான் அதனுடைய ஆழமும் வேதனையும் தெரியும் என்பதுபோல பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்து பார்க்கவேண்டும்.


பத்திரிக்கைகளின் இதுபோன்ற கிளுகிளுப்பான தலைப்புகளைப் பார்த்து அந்தப் பத்திரிக்கைகளை வாங்குகின்ற மக்கள் இருக்கின்ற வரை பத்திரிக்கைகளும் தங்களை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.


பெங்களுரில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி பிரபல மாலை நாளிதழ் நேற்று ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது எப்படி தெரியுமா..?


பெங்களுர் குண்டு வெடிப்பு விஷேஷ படங்கள்

பார்த்துவிட்டு அதிர்ந்தேன். குண்டுவெடித்ததில் அப்படியென்ன விஷேஷத்தை கண்டுவிட்டார்களோ இவர்கள்..? இதுபோன்ற சோகமான நிகழ்வுகள்தான் விஷேஷம் என்ற அர்த்தத்தில் தமிழில் வருகின்றதா..?

சக மனிதர்கள் மரணங்கள் - அழுகுரல்கள் - ஓலங்கள் - கண்ணீர்கள் இவர்களுக்கு எப்படி விஷேஷமாக தெரிகின்றது? மனசாட்சியே இல்லாமல் எப்படி இவர்களால் இப்படி தலைப்பிட முடிகின்றது? இந்த தலைப்பினை படிக்கின்ற பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

குண்டுவெடிப்பு சோகப்படங்கள் - துயரக் காட்சிகள் என்று எழுதப்பட்டிருந்தால் இவர்கள் சமூக அக்கறை உள்ள பத்திரிக்கைகள் என்று சொல்லலாம்.

ஆனால் சமூக அக்கறையாவது, விளக்கெண்ணையாவது என்று அலட்சியம் செய்துவிட்டு பணத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு திரிகின்ற இதுபோன்றவர்கள் சமூகத்தில் இருந்து களையப்படவேண்டியவர்கள்.

அரசாங்கம் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு இதுபோன்ற சமூக அக்கறையற்ற பத்த்திரிக்கைளின் போக்கை கண்டிக்க வேண்டும். உடனே எழுத்துச் சுதந்திரம் - பத்திரிக்கை சுதந்திரம் என்று கொடிபிடிக்கின்ற அவர்களுக்கு அவர்களின் பொறுப்பை –- இந்திய ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான அவர்களின்; சேவை சார்ந்த முக்கிய பணிகளை – பத்திரிக்கைத் துறையின் தர்மத்தை எடுத்துரைப்பது மிக அவசியமான ஒன்றாகும்.


- ரசிகவ் ஞானியார்

Thursday, August 23, 2007

துபாயா.. அபிதாபியா.. சார்ஜாவா..

Photo Sharing and Video Hosting at Photobucket


வெற்றிக்கொடி கட்டு படத்துல வடிவேலுவை வைத்து சேரன் துபாய் காமெடி பண்ணியிருப்பாரு பார்த்தீங்களா..? அவர் எந்த அனுபவத்துல அப்படி காமெடி வச்சாருன்னு தெரியல? ஆனா நிஜமாகவே இதுபோன்ற அலட்டல்கள் முன்பு எங்கள் ஊரில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் செய்வதுண்டு.

சிறுவயதில் எனக்குத் தெரிந்து வெளிநாடு சென்றுவிட்டு எளிமையாக வந்தவர் எனது நண்பரின் தந்தை ஒருவர் . அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டு ஒவ்வொரு 3 அல்லது 4 வருட இடைவெளியிலும் வருவார். அவர் வந்துவிட்டால் புது டேப் - வெளியில் அலரும் ஸ்பீக்கர் - செண்ட் வாசனை என்று கமகமக்கும். ஆனால் சென்று விட்டு வந்த எனது நண்பனின் தந்தையை விடவும் அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் அலட்டல் சில சமயம் தாங்க முடியாது. புதிய டேப்பில் சத்தம் அதிகம் வைப்பது – டிவி டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து படம் போடுவது என்று அலட்டல்கள் ஆரம்பித்துவிடும்.

ம்ம துபாய்காரங்க என்ன அவுகளுக்கு குறைச்சலா என்ன..? எனது ஊரில் உள்ள பல இளைஞர்கள் துபாய் சென்றுவிட்ட வந்தவர்களின் அலட்டலுக்காகவே துபாய் செல்ல விரும்புவார்கள். அந்த அளவுக்கு அலட்டல்ங்க.

துபாயிலிருந்து அந்த இளைஞர் இந்த தேதிக்கு வருகிறேன் என்று தொலைபேசி வந்தவுடனையே இவர்கள் குடும்பத்தோடு விமான நிலையம் செல்ல தீர்மானித்துவிடுவார்கள். இதில் சொந்தக்காரர்களில் , அவர்களை கூப்பிடவில்லை , இவர்களைக் கூப்பிடவில்லை என்று குறைவேறு.

துபாயிலிருந்து வருகிறவர்களுக்கே இடம் இல்லாதபடிக்கு ஆட்களை அதிகமாக வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.

அட அந்த திருவனந்தபுரம் செல்லும் சாலை மிக மோசமான சாலை. அடிக்கடி விபத்து நேரிடும் பகுதி..அதில இப்படி அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகணுமா..? யாராவது ரெண்டு பேர் மட்டும் போனா பத்தாதா..? சொன்னா கேக்குறாங்களா..? சரி விமான நிலையத்தை பார்க்கிற ஆசையில இருக்கலாம்.

துபாயிலிருந்து வருகிறவர் விமானநிலையத்தில் கொண்டு வந்த சொர்ணத்தை காப்பாற்றி எலெக்ட்ரானிக் அயிட்டங்ளை சுற்றி சாக்லேட் ,சோப்பு, துணிமணிகள் வைத்து சுற்றி பெட்டிக் கட்டிக்கொண்டு வருவார்.
துணியை வைத்து சுத்துனா ஸ்கேன்ல தெரியாமலா போகும்…? என்ன ஆளுங்கய்யா..?

ஸ்டம்ஸில் கஷ்டப்பட்டு எதுவுமே இல்லைங்க வெறும் சாக்லேட் துணிமணிகள்தான் என்று பொய் ஒன்றைச் சொல்லி ,பெட்டியை இழுத்து வருவதற்குள் அவருக்கு போதும் போதும் ஆகிவிடும்.

னால் வெளியில் உள்ளவங்களுக்கு இது தெரியுமா..? "விமானம் வந்து எவ்வளவு நேரமாச்சு.? இன்னும் வரக்காணோம்..முதல் ஆளா வரவேண்டடியதுதானே..?" என்று எரிச்சல்படுவார்கள்.
அட இதென்ன திருநெல்வேலி பேருந்து நிலையமா? விட்டவுடன் நேரா வெளியே வர்றதுக்கு..விமான நிலையம்பா..

வர் வெளியே வந்தவுடன் நேராக ஓடிப்போய்….........

கட்டித்தழுவுவாங்கன்னு பார்த்தீங்களா.? இல்லைங்க அவரு கொண்டு வர்ற பெட்டியை வாங்கிக்குவாங்க..

செண்டிமெண்ட் பேத்தல்கள் கொஞ்சநேரம் நடக்கும். அப்புறம் வேனில் வரும்பொழுதே அவர் இல்லாமல் இருக்கும்பொழுது, ஊரில் நடந்தவைகள் அனைத்து தேதிவாரியாக உறவினர்கள் சொல்லிவிடுவார்கள்.

வர் ஊரில் வந்து இறங்கியவுடனையே அலட்டல்களின் காட்சிகள் அரங்கேறிவிடும். அவரு கொண்டு வந்த பெட்டியை அவரு சீக்கிரம் திறந்து விடக்கூடாது. அட அவரு கஷ்டப்பட்டு சம்பாதிச்சுட்டு வர்றாரு அவரு திறக்க கூடாதாங்க? சரி அவங்க அம்மா, அப்பா யாராச்சும் திறக்கலாம். ஆனா திறக்க கூடாதாம். சொந்தக்காரர்களில் அவங்க வரலை,இவங்க வரலை,எல்லாரும் வந்தவுடன்தான் பெட்டியை திறக்கணுங்கிற கூத்து நடக்கும் பாருங்க எங்க ஊர்ல..வேடிக்கைதான்..

வரு என்ன பெட்டிக்கடையா திறக்கப்போறாரு..? பெட்டியைத்தானே திறக்க போறாரு.. அதுக்கு ஏங்க சொந்தக்காரங்க எல்லாரும் வரணும்..? யாராச்சும் சொந்தக்காரங்கல விட்டுட்டு திறந்திட்டார்னு அந்த சொந்தக்காரர் கோவப்பட்டுட்டு வீட்டுக்கு வரமாட்டாராம். "அவன் என்ன மதிக்கலை..நான் அவனுக்கு எவ்வளவு செஞ்சிருப்பேன்னு " சண்டை போட ஆரம்பிச்சுறுவாங்க.. ஆமாங்க இது உண்மைதான் எங்க ஊர்ல இதனால் மனக்கசப்பானவங்க நிறைய பேர் இருக்காங்க தெரியுமா..?

ரி எப்படியோ பெட்டிக்கு திறப்பு விழா பண்ணியாச்சா..? அப்புறம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு துணிமணிகள் - நறுமணப்பொருட்கள் - எலக்ட்ரானிக் சாதனங்கள் - குழந்தைகளுக்கு பொம்மைகள் - சாக்லேட் - சொர்ணம் - சோப்புகள் - சப்பு சவரு என்று எடுத்து பிரித்து வைத்துவிடுவார்கள்.

ல்லா நண்பர்களுக்கும் வாங்கி வர முடியாவிட்டாலும் உயிர் நண்பர்களுக்காகவாவது ஏதாச்சும் வாங்கி வரணுமே? துபாய்ல ஈரானிய மார்க்கெட்டில் இரண்டு திர்ஹமுக்கு அள்ளி வரலாம் பொருட்களை . பார்ப்பதற்கு விலை உயர்ந்த பொருள் போலவே இருக்கும். ஆனா விலை கம்மி தரமும்தான். அங்கபோய் உயிர் நண்பர்களுக்கெல்லாம் ஒவ்வொரு பொருள் வாங்கிப் போட்டிருப்பாங்க..அதை எடுத்து கொடுத்திருவாங்க..

ந்த ஆளு துபாய்ல இருந்து வந்துட்டாருங்கிறதை மறுநாள் காலையில் அவர்கள் வீட்டில் இருந்து அலருகிற சத்தத்தில் வருகிற இந்திப் பாடலை வைத்து புரிந்து கொள்ளலாம்.

ப்புறம் இவரு ஊர்ல இருக்கிற நாள் வரையிலும் நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றால் இவர்தான் டிக்கெட் எடுப்பாராம்…மத்தவங்க பணம் கொடுக்குறேன்னு சொன்னாலும்..

"டேய் டிக்கெட் 30 ரூ தானே..அங்க எனக்கு வெறும் 3 திர்ஹம்தாண்டா.. என்று திர்ஹம் - ரூ கதையளப்பார்கள்."

(அங்க அவனுங்க 1 திர்ஹமுக்கு அழுவாங்க)

னது நண்பன் ஒருவன் ஊரில் பிச்சைகாரியிடம் 5 ரூ போட்டுவிட்டு பெருமையாகச் சொன்னான். "துபாய்ல வெறும் ½ பில்ஸ்தானடா" என்று.

னா இவனுங்க விடுமுறை முடியும் பொழுது தான் தெரியும் உண்மையான நிலைமை..முதலில் தாம் தூம்னு செலவழிக்கிறவனுங்க..திரும்பவும் துபாய்க்கு செல்கிற நாட்கள் வரும்பொழுது அப்படியே கமுக்கமா அடக்கி வாசிப்பாங்க..பின்னே கொண்டு வந்த காசெல்லாம் செலவழிச்சிடுவாங்க.. யார்கிட்ட காசு கேட்டாலும் கவுரவம் போயிடும்.. அதனால வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க..

வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றில் குளிக்கப்போகிற பொழுது சைக்கிளின் பின்புறம் துபாய்ல இருந்து கொண்டு வந்த பூப்போட்ட துண்டுக்கு (ஈரானி மார்க்கெட்ல 2 திர்ஹம் துண்டுதான்) நடுவுல அரபு எழுத்துக்கள் வெளியே தெரிகிறது போல உள்ள சோப்பினை வைத்துகொண்டு செல்வார்கள். அந்த அரபு எழுத்து பதிந்த சோப்பினை காண்கிறவர்கள் தலைவரை துபாய் பார்ட்டின்னு நினைப்பாங்களே… அதுக்குத்தான்..

ப்புறம் துபாய் தமிழ் பஜார்ல மொலினா என்கிற சிங்கப்பூர் கடையில் வாங்கிய சிங்கப்பூர் வேஷ்டியை உடுத்துட்டுதான் வலம் வருவாங்க..அதுதான் தலைவரு துபாய் பார்ட்டின்னு பளிச்சினு காட்டிக்கொடுக்கும்..

செண்ட் அடிக்காம வெளியே வந்திறமாட்டாறு தலைவரு.. அப்படி அடிச்ச செண்ட்ல மயங்குன கூட்டம்தான்ங்க, இதுபோல நாமும் செண்ட் அடிக்கணும்னு பறந்து இப்போ துபாய்ல சுத்திகிட்டு இருக்காங்க..

துபாய் பற்றியோ, அரபு நாடுகள் பற்றியோ, வெளிநாடு அனுபவம் சற்றும் இல்லாத நண்பர்களை கூட்டி வச்சிட்டு அடிக்கிற அரட்டைதாங்க தாங்க முடியாது.

"இங்க இருக்கிற எல் ஐ சி எல்லாம் என்ன கட்டிடம்..அங்க வந்து பாருங்க ஒரு தெருவுல போனோம்னா தலையை உயர்த்திக்கிட்டேதான் போகணும்.. அந்த அளவுக்கு உயரமான கட்டிடங்களை பார்க்கலாம்..அது மாதிரி ஒரு கட்டிடத்திலதான் நான் தங்கியிருக்கேன்.."

"அங்கல்லாம் லிப்ட் நாமாத்தான் பட்டனை அழுத்தணும்..போத்தீஸ்ல மாதிரி ஆட்கள் எல்லாம் இருக்கமாட்டாங்க.. நான் தினமும் லிப்ட்ல நானாக ஏறி நானாக இறங்கிவேன் தெரியுமா?"

"நைட்ல எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் சுத்தலாம் தெரியுமா..? வியாழக்கிழமை இரவுல நண்பர்கள் எல்லாம் ஒன்று கூடி பீச்சுக்கு போய்ட்டு வருவோம்..கிரிக்கெட் விளையாடுவோம்.."

"ஒரு கார்டு கொடுப்பாங்க அந்த கார்டை வச்சிக்கிட்டுதான் நாம எங்கே வேண்டுமானாலும் போகணும். கார்டை தொலைச்சோம்னா அவ்வளவுதான் ஜெயில்ல போட்டுறுவாங்க.."

"வெள்ளிக்கிழமையானா போதும் தமிழர்கள் எல்லாம் ஒண்ணா ஒரு இடத்துல கூடுவோம். "
(உண்மையில வெள்ளிக்கிழமைதான் நல்லா தூங்குவாங்க)..

"டேய் இந்திலாம் தெரியுமாடா உனக்கு? " என்று எந்த அப்பாவியாவது கேட்டுவிட்டால் போதும்

"தெரியுமாவா..? கான காயா..? ஆப் கா நாம் கியா ஹே? தும் பாகல்..? "என்று தமக்குத் தெரிந்த லோக்கல் இந்தியை நண்பர்களுக்கு மத்தியில் அவிழ்த்து விடுவார்கள்..

"அங்க இந்தி தெரியலைன்னா அவ்வளவுதான்.. நாங்க ஆபிஸ்ல இந்திதான் பேசுவோம் தெரியமா.. சும்மா சரளமா பேசுவோம்.."

( ஆனா அங்க போனாதான் தெரியும் இவங்க பேசுற இந்தியோட லட்சணம்… இந்தி தெரிஞ்சவன் எவனாவது கேட்டான்னா காறித் துப்பிடுவான்..அந்த அளவுக்கு இந்தி மோசமாக இருக்கும்)

"ஒரு டிவி 150 திர்ஹம்தான்…

1 திர்ஹம் கொடுத்தா 1 பெப்சி டின் வாங்கிடலாம்…

நான் தினமும் பெப்ஸிதான் குடிப்பேன்.."

( ஆமா சாப்பாட்டுக் காசை மிச்சப்படுத்தி பெப்ஸி மட்டும்தான் குடிப்பாரு இவரு :) )

ப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நிறைய இளைஞர்களை துபாய் கொண்டு தள்ளிய புண்ணியம் இதுபோன்ற எங்களின் முன்னோடி இளைஞர்கள் பலரைச் சாரும். அவர்கள் மட்டும் அலட்டல் காட்டாமல் இருந்தாங்கன்னா நிறைய பேருக்கு வெளிநாடு மோகமே இருந்திருக்காது..

நானும் துபாய் அப்படி இப்படி என்று நண்பர்களிடம் கதையளக்கலாம் என்று வந்தால் எல்லாப் பயலுவலுமே துபாய்க்கு வந்துட்டானுங்க..என்ன பண்றது..? பார்க்கலாம் யாராவது ஒரு அப்பாவியாவது துபாய் பற்றி கேக்காமலா போகப்போறான் ? அவன்கிட்ட வச்சுக்கறேன் என்னுடைய பீலாவை.. இதைப் படிக்கிற யாராச்சும் கேப்பீங்களாங்க..?

ப்படி நிறைய பேர் இருக்காங்க அலட்டல்வாதிகள். வெளிநாடு சென்றுவிட்டு அதனைப் பற்றிய நன்மை/தீமைகளை மற்றவர்களுக்கு விளக்கி சொல்வதை விட்டுவிட்டு, இப்படி அலட்டியதனால்தான் நிறைய இளைஞர்கள் நாமளும் போய்ட்டு வந்தா இப்படி ஆடம்பரமா இருக்கலாம்னு வீட்டை விற்று ,நகையை விற்று, வட்டிக்கு வாங்கி, வெளிநாடு போய்ட்டு கடைசியில இங்கே இருக்கிற ஆடம்பரத்தையும் இழந்து, ஏழைகளாக திரும்பிவருகின்றார்கள்.

நான் நகைச்சுவையாக அவர்களைப் பற்றி எழுதினாலும் நிஜமாகவே அவர்களைப் பற்றி நினைக்கும்பொழுது மனம் கனத்துப் போகிறது என்பதுதான் உண்மை.


- ரசிகவ் ஞானியார்

Wednesday, August 22, 2007

சென்னை: ரஜினிகாந்த சாதாரணமா நடந்து போனார்..


Photo Sharing and Video Hosting at Photobucket

சென்னையைப் பற்றி தனது ஞாபகங்களை எழுதிய அகிலனின் பதிவுகள் எனக்குள்ளும் சென்னை ஞாபகங்களை தூண்டிவிட்டது. சென்னை என்ற வார்த்தைக்கு எப்பொழுதுமே ஒரு பிரமாண்டம் இருக்கத்தான் செய்கின்றது.

லைநகரம் என்பதால் மட்டுமல்ல நடிகர்களின் கோட்டை என்பதால் சென்னைக்கு எப்பொழுதுமே மவுசுதான். இளவயதில் சென்னை என்றாலே அது பணக்காரர்களுக்கு மட்டும்தானோ என்று எண்ணத்தோன்றியது.

சென்னையிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்துசெல்லும் எனது சொந்தங்களை விண்ணிலிருந்து வருபவர்களைப் போல வியந்து பார்த்திருக்கின்றேன். சென்னைப் பலகாரம் - சென்னை சாக்லேட் என்று ஒவ்வொரு முறையும் அவர்கள் கொண்டு வருவதால் சென்னையைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவல் எனக்கு அதிகம் ஏற்பட்டது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுதுதான் எனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக முதன்முதலில் சென்னையை எட்டிப்பார்த்தேன். மெரினா பீச் - கலங்கரை விளக்கம் மாமல்லபுரம் என்று செம குஷியாக சுத்தினேன்.

ப்பல்கள் வழிதவறிச் செல்லாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தில் நான் வழிதவறிச் சென்றுவிட்டேன். சில அடி தூரம் சென்று விட்டு திரும்பி பார்த்தால் என்னை கைபிடித்து அழைத்து வந்த அம்மாவையோ உறவினர்களையோ அந்தக் கூட்டத்தில் என்னால் காண முடியவில்லை.

ழுகை வேறு முட்டிக்கொண்டு வருகின்றது. பின் அங்கேயே சில நிமிடங்கள் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டேன். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் நான் காணாமல் போனதோ பின் மீண்டும் இணைந்ததோ அவர்களுக்கு எதுவும் தெரியாது..


ங்களது நண்பன் ஒருவன் சிறுவயதிலையே வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உறவினர்களுடன் வியாபாரத்தை கவனித்து வந்தான். அவன் ஒவ்வொரு முறை சென்னையில் இருந்து வரும்பொழுதும் அவனைச்சுற்றி ஒரு கூட்டம்தான்.

"நான் டீ குடிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ ரஜினிகாந்த் சாதாரணமா நடந்து போவார்..நாங்க கண்டுக்கவே மாட்டோம்.."

"விஜயகாந்த் பக்கத்துல நின்று புகைப்படம் எடுத்திருக்கேன் தெரியுமா.."

"தினமும் எங்க கடைக்கு முன்னாலதான் சினிமா சூட்டிங் நடக்கும்..எங்களுக்கு அது பழகிப்போச்சு யாருமே பார்க்க மாட்டோம்.."

"ஒருநாள் எங்க கடைக்கு நடிகர் செந்தாமரை வந்தார் தெரியுமா..?"

என்று அவன் கதையளந்து கொண்டே செல்வான். அது உண்மையோ பொய்யோ சோதித்து பார்க்கின்ற வயது இல்லை. அப்படியே நம்பிவிடுவோம்.

நாங்கள் நடிகர்களை என்றாவது ஒருநாள் பார்க்க மாட்டோமா? சினிமா சூட்டிங் எப்படி நடக்கிறது என்று காண்போமா? என்ற ஆவலில் இருக்கின்றோம் ஆனால் இவன் என்னடா வென்றால் இவற்றைச் சுற்றியே வாழ்ந்து வருகின்றான். நடிகர்களை பார்த்தும் இவ்வளவு அலட்சியமாய் இருக்கின்றான் என்று அவன் மீது பொறாமைப் படுவோம். இதற்காகவேனும் சென்னையில் பிறந்தோமா என்று தோன்றும்.

அது மட்டுமல்ல,

"மெட்ராஸ்ல பேருந்தில் பெண்கள் பக்கத்துல உட்கார்ந்தாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க தெரியுமா? "

என்று சென்னைப் பெண்களின் நாகரீகம் பற்றி அதிகமாய் பேசுவான். அதில் மயங்கி சென்னைக்கு செல்லத் துடித்தவர்கள் பலபேர்

"நான் பைக்கை எடுத்தேன்னா சும்மா 100ல தான் பறப்பேன். அப்படியே ரவுண்டு அடிச்சிதான் பைக்கை எடுப்பேன். பைக் சும்மா ப்ளைட் மாதிரி பறக்கும் தெரியுமா?" என்று தன்னைப் பற்றியும் அடிக்கடி அவன் பாடிய சுயபுராணம் ஒருநாள் உடைந்தது.

ங்கள் நண்பன் ஒருவனின் பைக்கை ஒருநாள் கொடுத்து அவன் சொன்ன ஹீரோத்தனத்தை செய்யச்சொன்னோம். அவன் முதலில் தயங்கினான். பின் தன் ஹீரோயிஸம் கெட்டுவிடக்கூடாதே என்று பைக்கை எடுத்தான். அவ்வளவுதான் எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்துவிட்டது. ஆமாங்க பைக்கை ஓட்டவே தெரியலை..தடுமாறி தடுமாறி சென்றான்.

ப்புறம் வந்து, "இந்த மண்சாலைக்கெல்லாம் இந்த பைக் சரிப்படாது" என்று மழுப்ப ஆரம்பித்தான். இப்படி சென்னை சென்று விட்டு வருபவர்களின் ஹீரோயிஸமும் சென்னையைப் பற்றிய ஆவலை அதிகப்படுத்தியது.

பின் படிப்பு சம்பந்தமாக வேலை சம்பந்தமாக சென்னைக்கு அடிக்கடி செல்ல நேரிட்டது. ஒவ்வொரு சம்பவங்களையும் சொல்ல ஆரம்பித்தால் இந்த ஒரு பதிவு போதாது. கன்னித்தீவு கதை போல நீண்டு கொண்டே இருக்கும்.

னால் அந்த சிறு வயது ஆவல் இப்பொழுது துளி கூட இல்லை. எல்லாம் போலித்தனமான நகர வாழ்க்கையாக மாறிவிட்டது.

ரு பக்கம் பார்த்தால் பிரமாண்டம் பிரமாண்டம் பிரமாண்டமான வளர்ச்சி. மறுபக்கம் பார்த்தால் 3 வேளை உணவு முறையை 1 வேளையாக மாற்றிக்கொண்டு திரிகின்றவர்கள்.

கைநிறைய பணம் இருந்தும் செலவழிக்கத் தெரியாத / வீண் விரயம் செய்கின்ற இளைஞர்கள் இருக்கின்ற இதே சென்னையில்தான் இன்னமும் காலையில் நாஷ்டாவுக்கு வழியில்லாவிட்டாலும், மடிப்பு கலையாத ஆடையில் பசியோடு நேர்முகத்தேர்வுக்கு சென்று கொண்டிருக்கும் இளைஞர்களும் இருக்கின்றார்கள்.

- ரசிகவ் ஞானியார்

Saturday, August 11, 2007

பிணத்தோடு விளையாடி.. பிணத்தோடு உறவாடி..



செத்த பிணத்தைச் சுற்றி
அழுதபடி
சாகப்போகின்ற பிணங்கள்


- யாரோ


இக்கவிதையின் அர்த்தங்களை அவ்வளவு எளிதாய் நாம் அலட்சியம் செய்ய முடியாது. மரணம் நமக்கு நெருக்கமானவர்களுக்கு வரும்பொழுதுதான் நாம் உணர ஆரம்பிக்கின்றோம் நமக்கும் ஒருநாள் வந்திடுமோ என்று?

தினம் தினம் செத்த பிணத்தை சுற்றி நிற்கின்ற சாகப்போகின்ற பிணங்களைப் பார்த்து அதிர்ச்சியில் வந்திருக்கின்றேன்..

ம்....மருத்துவக்கல்லூரியில் பிணங்களோடு தங்கள் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கும் பிணவறைப்பகுதி ஊழியர்களையும் மருத்துவர்களை பற்றியும்தான் குறிப்பிடுகின்றேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

சென்ற மாதம் (15-07-07) திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பிணவறைப்பகுதியில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரின் கணிப்பொறியை சரிசெய்வதற்காக நண்பருடன் சென்றிருந்தேன். அரசாங்க மருத்துவமனை என்றாலே உள்ளே செல்வதற்கு ஒரு தயக்கம் இருக்கும். அதுவும் பிணவறைப்பகுதி என்றால் கேட்கவா வேண்டும்.

Photo Sharing and Video Hosting at Photobucket

எத்தனையோ அழுகுரல்களையும், சோக ஓலங்களையும் கேட்டு சலித்துப்போன அந்தக் கட்டிடம் அமைதியாக காட்சியளித்தது. இரயில் மோதி விபத்துக்குள்ளான உடல்கள் - பேருந்தில் நசுங்கிய மனிதர்கள் - தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று எத்தனையோ பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பிணவறையை மெல்ல எட்டிப்பார்த்தபடி பயத்தோடும் திகிலோடும் கடந்தேன். உடல் லேசாய் சிலிர்த்துக் கொண்டது.
பிணங்கள் ஏதேனும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? என்று லேசாய் எட்டிப்பார்த்தேன் நல்லவேளை எதுவுமில்லை.. இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் பிணத்திற்கும் விடுமுறையோ?

அந்தக் கட்டிடத்தின் முன்னால் வந்து நிற்கும்பொழுதே பைக் - கைகள் - இதயம் என்று அனைத்துமே நடுங்க ஆரம்பிக்கின்றது. உள்ளே செல்வதற்கு 1 சதவிகிதம் கூட தைரியமில்லாமல் அந்த இடத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டே தயங்கி தயங்கிதான் சென்றேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

நான் கல்லூரியில் படிக்கும்பொழுது இந்தச் சாலை வழியாகத்தான் கிண்டலடித்தபடி செல்லுவோம். ஆனால் இந்த பிணவறைப்பகுதியை கடக்கும்பொழுது மட்டும் அனைவருமே தன்னிச்சையாக மௌனமாகிவிடுவோம். எப்பொழுதும் வாயிலில் யாராவது ஒருவரோ அல்லது ஒரு சிறு கூட்டமோ தங்கள் உறவினர்களை, பிரியமானவர்களை இழந்து சோகத்துடன் பரிதவித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் பரிட்சை நேரத்தில் இந்த இடம் வழியாக கடந்து சென்றபொழுது ஒரு பெண்மணியின் பயங்கற கதறல் ஆர்ப்பாட்டம். யாரையோ இழந்து ஓலமிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியை கண்டு மனசு உறைந்து விட்டது. பரிட்சை அறையிலும் அந்தக் காட்சியே திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்க எதையும் எழுத பிடிக்காமல் ஆசிரியரிடம் நிலைமையைச் சொல்லி அப்படியே பேபப்ரை மடித்து கொடுத்தேன். அந்த ஆசிரியரோ, பரிட்சை எழுதாததற்கு நான் கூறிய வித்தியாசமான காரணத்தை ஆச்சர்யமாய் பார்த்தபடி சரி அதுக்கென்ன அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம்" என்று கூறிவிட்டார். என் நிலைமைய புரிந்து கொண்ட அந்த ஆசிரியருக்கு நன்றிகள் .

அதன்பிறகு அந்த வழியாக செல்வதை பெரும்பாலும் தவிர்த்துக்கொள்வேன். எதற்காக அந்தச் சம்பவத்தை சொல்கிறேனென்றால் சாதாரணமாக கடந்து சென்றதற்கே மனதில் இத்தனை ரணங்கள் என்றால் அங்கேயே பிணவறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எப்படி இருக்கும்?. எனக்கு சென்றுவிட்டு வந்த நிமிடத்திலிருந்து பித்து பிடித்தது போல இருக்கின்றது. எதையும் சாப்பிடத் தோன்றவில்லை

Photo Sharing and Video Hosting at Photobucket

மூளை ,எலும்பு, கை, கால், தலை என்ற வார்த்தைகளை நாம் கசாப்புக் கடைகளில்தான் உபயோகிப்போம் ஆனால் தினம் தினம் இந்த வார்த்தைகளை மனித உறுப்புகளோடு ஒப்பிட்டு மனிதர்களிடமிருந்து பிரித்தெடுத்து ஒட்டி.. .....ச்சே கேட்கும்பொழுதே ஜீரணிக்க முடியவில்லை..

நீங்கள் எப்பொழுதேனும் கோழிக்கறி வாங்குவதற்கு கோழிக்கடைக்குச் சென்றிருக்கின்றீர்களா? சென்றால் கண்டிருக்க கூடும். கோழிகள் மொத்தமாக அடைபட்டிருக்கும்.
கடைக்காரன் ஏதாவது ஒரு கோழியை எடுக்க முற்படும்பொழுது எல்லாக் கோழிகளும் அப்படியே பதுங்கி பயந்து மூலையில் சென்று ஒட்டிக்கொள்ளும். அவற்றில் ஒன்றைப் பிடித்து மற்ற கோழிகளின் கண்முன்னாலையே அதனை அறுத்து பல பாகங்களாக பிரித்தெடுக்கும்பொழுது அந்தக் கோழிகளுக்கு எவ்வளவு மிரட்சி கண்களில் தெரியும் தெரியுமா..? நான் பலமுறை கவனித்திருக்கின்றேன். அறுக்கப்பட்ட கோழியின் வலியை விடவும் அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் மற்ற கோழிகளுக்குத்தான் வலிகள் அதிகம்

இதே நிலைமைதான் இந்தப் பிணவறையில் வேலைபார்ப்பவர்களுக்கும். தினம் தினம் ஏதாவது ஒரு பிணத்தைப் பிரித்தெடுத்து தைக்கும்பொழுது தான் வாழ்கின்ற நாட்களில் இவ்வளவு ஆட்டம் போடுகின்றோமே? நமக்குள் இருப்பதும் இதுபோன்ற வெற்று எலும்புகள் ,சதைகள் , இரத்தப் பிடிப்புகள்தானே என்று உணர்ந்துகொள்வார்கள்.

அங்குள்ள ஊழியர் ஒருவர் கூறினார்

"தம்பி! நேத்து ஒரு பிணம் வந்துச்சு ஆளைப்பார்த்தா முறுக்கு மீசையோடு சும்மா திடகாத்திரமா இருந்தார். ஆனால் சாதாரணமாக நாங்கள் கிழித்து தைத்துக்கொண்டிருந்தோம். வாழும்பொழுதுதான் நீ நான் என்று மல்லுக் கட்டிக்கொண்டு நிற்கின்றோம். ஆனால் இப்ப பாருங்க எல்லாருக்கும் இந்த நிலைமைதான்" என்று அவர் சாதாரணமாக சொன்னாலும் அவருடைய பேச்சில் நிறைய பக்குவம் தெரிந்தது.

"ச்சே என்ன வாழ்க்கைப்பா இது" என்று சலித்துக்கொண்டார். .

1 கிலோ சர்க்கரை, அரை கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய் என்று பட்டியலிடுவது போல இங்கேயும் பட்டியலிட்டுக்கொண்டிருக்கிறார்கள் எப்படி தெரியுமா?

------------------------------------ஜனவரி-- பிப்ரவரி-- மார்ச்-- ஏப்ரல்

விபத்து ------------------------5------------ 1------------2----------- 3

தூக்கு -----------------------1------------- 3 - - -------NIL----------7

விஷம் ---------------------- 4

எரிந்தவர்கள் ------------------4--------------3 -

கொலை ---------------------------------------1---------- - 2


இப்படி பட்டியலிட்டிருக்கின்றார்கள். பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டேன். இதில் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒரு நிஜ படத்தை தொங்கவிட்டிருக்கின்றார்கள். சென்ற வருடம் மட்டும் 800 க்கும் மேற்பட்ட பிணங்கள் வந்தது. இந்த வருடம் இப்பொழுதே அந்த எண்ணிக்கை வந்துவிட்டது என்று வளர்ச்சி விகிதத்தை பட்டியலிடுகின்றார்.

வருடங்கள் வாரியாக, மாதங்கள் வாரியாக எழுதப்பட்டிருந்தது செத்தவர்களின் எண்ணிக்கையையை.
சாதிக்கலவரம், மதக்கலவரம், காதல்தோல்வி, விபத்து, வரதட்சணை கொடுமை ,பழிக்குப் பழி என்று எத்தனையோ காரணங்கள் அங்கே. ஆனால் இறந்தவர்களின் மதங்கள், சாதிகள், எல்லாம் எழுதப்படவில்லை வெறுமனே பிணம் அவ்வளவுதான்..


சாலையில் எங்கேனும் விபத்தைக் காண நேர்ந்தாலே அது ஜீரணமாக 1 நாள் ஆகின்றது.

பிணத்தோடு விளையாடி
பிணத்தோடு உறவாடி
பிணத்தோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே


என்று பிணங்களோடு வாழ்நாளைக் கழிக்கின்ற அந்த ஊழியர்களை நினைத்து பரிதாபப்படத்தான் தோன்றுகின்றது. ஆனால் பிணத்தோடு பணிபுரிந்து சிலருக்கு இதயம் மரத்துப் போகின்றது. பிணம் வாங்க வருபவர்களிடம் அவர்களின் துக்கத்தை அலட்சியப்படுத்திவிட்டு பணத்தையே முதன்மையாக கருதும் சில ஊழியர்களைத் தவிர மற்றவர்கள் பார்ப்பது தொழில் அல்ல தியாகம் எனலாம்..

- ரசிகவ் ஞானியார்

Tuesday, August 07, 2007

படிக்காமல் விட்டுவிடாதீர்கள்

" என்னடா வாழ்க்கை இது" என்று சலித்துக் கொண்டு வாழ்க்கையை வீணடிப்பவர்களுக்கும் , நம்பிக்கையை இழந்து தவிக்கின்ற இளைஞர்களுக்கும் பேராசிரியர் தஸ்தகீரின் இந்தக் கல்விப் பயணம் சிறந்த வழிகாட்டியாக இருக்கின்றது

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Friday, August 03, 2007

என்றும் துணையிருப்போம் ஆசிப்...

Photo Sharing and Video Hosting at Photobucket

"நண்பர் ஆசிப் மீரானின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார்கள்" என்ற செய்தி வலைப்பதிவர்கள் பலருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிப் மீரானுக்கு எங்களது ஆறுதல்கள் என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு செல்ல முடியவில்லை. கனவுகளோடு விடுமுறைக்கு வந்துவிட்டு இனிமையான நினைவுகளோடு திரும்பிச் செல்ல நினைத்திருப்பார். ஆனால் இப்படி சோகமயமாகிவிட்டது.

ஆசிப்மீரானின் தந்தை திரு அப்துல் ஜப்பார் அவர்கள் தனது மறு-மகளைப் பற்றி எழுதியுள்ளது இன்னமும் மனதை சோகமயமாக்குகின்றது.

"இந்தப் பூப்பந்தில் வதியும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் அவளும் ஒருத்தி. ஆனால் நிச்சயம் லட்சத்தில் ஒரு பெண். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ஓர் இனிய தேவதை. "

"எங்கள் வீட்டில் விருந்தாளியாகத் தங்கிச்சென்ற ஒரு பிரபல கவிஞர், " இறைவனுக்கு இணை வைப்பது பாவமில்லை எனில் இவளை நான் தெய்வம் என்பேன்" அன்று கவிதை நயத்தோடு சொல்லிச் சென்றார். "

"பெரியவர்களிடம் காட்டும் பண்பும் - பணிவும், கணவனிடம் காட்டும் அன்பும் - பரிவும், குழந்தைகளிடம் காட்டும் பாசமும் - நேசமும், குடும்பத்தினரிடம் காட்டும் கனிவும் - கருணையும், சமூகத்தில் நடந்து கொண்ட கண்ணியமும் - கௌரவமும் யாஸ்மினை ஒரு தனிப்பிறவி என்றே சொல்ல வைத்தன. "

"இரவு பதினொன்றரை மணிக்கு மனசாட்சியே இல்லாததா மருத்துவ உலகம் என்று எண்ணுமளவுக்கு அந்த இரக்கமற்ற இடிச் செய்தியை எங்கள் தலைகளில் இறக்குகிறார்கள் --- யாஸ்மின் இறந்து விட்டாள். "

அப்துல் ஜப்பாரின் இந்த எழுத்துக்கள் ஆசிப்பின் துணைவியாரைப் பற்றி அறியாதவர்களையும் கண்ணீர் விட வைத்துவிடுகின்றது.

இந்த இழப்பிற்கு எந்த நிகழ்வுகளாலும் ஈடு செய்யவே முடியாது எனினும், இந்த இழப்பின் சக்தியை தாங்கும் மனவலிமையை ஆசிப்பிற்கும் அவர்களது குடும்பத்திற்கும் இறைவன் வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் துணையிருப்போம் ஆசிப்... இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சாந்தியும் சமாதானமும் தருவானாக...


- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு